Wednesday, June 8, 2011

மதத்தில் அறிவியல் எப்படி யார் கொண்டு வருகிறார்கள்?.



"மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை விடுவதில்லை".

மத புத்தக்த்தில் அறிவியல் என்று சொல்லும் பல விஷயங்கள் தவறு என்று நம்முடைய பதிவுகளில் சுட்டி காட்டி இருக்கிறோம்.இப்பதிவில் இந்த கருத்தாக்கம் எப்படி ,யாரால் பிரச்சாரம் செய்யப் படுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

மதம் என்பது நம்பிக்கை என்னும் விஷயத்தை மட்டுமே ஆதாரமாக் கொண்ட விஷயம். அனைத்து மதங்களும் உருவாகும் போது இருக்கும் கொள்கையாக்கம் நாளடைவில பரிணாம வளர்ச்சி பெற்றே முழுமை பெறுகின்றது. எந்த மதமும் அது சொல்லும் அனைத்து விஷயங்களும் உண்மை என்று நிரூபிக்க முடியாது. இதில் சில் இஸ்லாமிய நண்பர்கள் மத பதிவுகள் எழுதுவதும்,மத புத்தக்த்தில் அனித்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என‌ சொல்வதும் அனைவரும் அறிந்ததே. அந்த பதிவுகளின் மீதான விமர்சன‌ம் எழுதும் போது நேருக்கு நேர் விவாதம் வருகிறாயா எங்கள "அஆஇஈ" உடன் விவாதம் செய்ய தயாரா என்பதும் வழக்கமான நகைசுவை செய்திகளே என்றாலும் .இன்னும் சில மத வி(அ)ஞ்ஞானிகளின் பெயர் கிடைத்ததால் நமக்கு மிக்க மகிழ்ச்சி.ஒரு விவாதத்தில் கடவுள்,மத புத்தகத்தை புரிய வைப்பது என்றால் இவர்களை கல்லூரி பேராசிரியர்கள் ஆக்கினால் நாடு எங்கோ போய்விடும்.

இந்த மத வி(அ)ஞ்ஞானிகள் என்றதுமே இவர்களுக்கு மதங்கள் பற்றி கருத்து கூற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி வருவது இயல்பாக‌. இருந்தாலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அறிவியலில் பின் தங்கி இருப்பதும் ஒரு நகை முரணே.இந்த வி(அ)ஞ்ஞானிகள் அனைவருமே ஏதோ ஒரு மத்திய கிழக்கில் நாடுகளீல் நடைபெறும் ஒரு குரானிய அறிவியல் கருத்தரங்கிலேயே இவ்விஷயங்களை பேசியுள்ளார்கள்.இத்னை ஒலி,ஒளி பதிவு செய்து யு ட்யூப் முதலான தளங்களில் இட்டு பிரச்சாரம் செய்கின்றார்.அந்த காணொளிகளை இட்டவர்கள் இது எங்கே ,எப்போது எதற்காக சொல்லப் பட்டது போன்ற எந்த விவரங்களையும் சொல்ல மாட்டார்கள்.. இந்த குரானிய அறிவியல் கருத்தரங்குகளை நடத்துபவர்கள் யார்?.அப்படி நடத்தும் ஒரு அமைப்பை பற்றி தெரிந்து கொள்வோம்.

குரான் மற்றும் சுன்னாவில அறிவியல் குறியீடுகள் அமைப்பு[he International Commission on Scientific Signs in the Qur’an and Sunnah (ICSSQS) ] 1984ல் சவுதி அரேபியாவில் ஷேக் அப்துல் மஜீத் அல் ஜிந்தனி என்னும் யேமன் நாட்டை சேர்ந்தவரால் உலக முஸ்லிம் கூட்டமைப்பு உதவியுடன் ஆரம்பிக்கப் பட்டது.குரான் மற்றும் சுன்னவில் அறியல் குறியீடுகளை கண்டறிந்து சொல்லும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதே இத‌ன் நோக்கமாகும். இவர் யமன் நாட்டு இஸ்லாமிய சகோதர்த்துவ கட்சியின் த்லைவர்,யேமனின் அல் இமான் மத பல்கலைகழகத்தின் ஸ்தாபகர்.அமெரிக்க அரசால அமெரிக்கா வராமல் தடுக்கப் பட்ட‌ ஒரு முக்கியஸ்தர். எய்ட்ஸ்க்கு மருந்து கண்டு பிடித்தாகவும் இவர் கூறியுள்ளர்.அது எங்கிருந்து என்று தகவல் இல்லை.இவர் பற்றிய விக்கிபிடியாவில அண்ணன் பற்றி பல குறிப்பிடத் தக்க விஷயங்கள் உண்டு.(Intersting person!!!!!!!!!!!!!).

இந்த கருத்தாக்க்ங்களின் பிதாகமர் மௌரிஸ் புகைல் என்றால் மிகையாகாது .இதுவரை இம்மாதிரி 8 ஆய்வரங்குகளை நட்த்தியுள்ளார்கள்.
1)1987 இஸ்லாமாபாத்
..
..
7) 2007 துபாய்
8) குவைத் (இதில் எய்ட்ஸ்க்கு மருந்து சுன்னாவில் கூறப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த கருத்தரங்குக‌ளின் சாராம்சத்தை ஒரு என்சைக்ளோப்பிடியா ஆக்குவ்தற்கான முயற்சிகள் அதிக பொருள் செலவில் முன்னெடுக்கப் படுகின்றது.  
அது குறித்த செய்தி இது.
______________
Online Project Spotlights Science in Qur’an, Sunnah
K.S. Ramkumar, Arab News

JEDDAH, 9 May 2006 — The International Commission on Scientific Signs in the Qur’an and Sunnah (ICSSQS) signed an agreement with the Harf, a leading IT company, Sunday night to produce an online scientific encyclopedia based on Islamic holy books.

Abdullah ibn Abdul Aziz Al-Musleh, secretary-general of the ICSSQS, told a press conference after the signing ceremony that the encyclopedia, which will contain all the scientific information referred to in the Qur’an and the Sunnah (Traditions of the Prophet, peace be upon him), aims to serve as a comprehensive reference work fulfilling the increasing demand from researchers the world over for documented information on the scientific information contained in the Qur’an and Sunnah.

“When completed the encyclopedia will be the greatest reference work on Islam from the angle of modern science,” Al-Musleh said. The encyclopedia will be distributed on CD and a website will be available both in English and Arabic.

The encyclopedia containing 8,000 pages apart from pictures and video clips will cover all the Qur’anic verses referring to scientific facts with their explanations. A team of scientists and experts in the religious studies are working on the project.

The SR2.1-million agreement stipulates that the IT company prepare 50,000 CDs of the encyclopedia and a website linked to the commission’s site www.nooran.com in addition to a print edition in 14 volumes.

The new project is part of the commission’s bid to present the shining picture of Islam to the world at large as a religion that promotes scientific research leading to contemplation about the signs of God. It also aims at familiarizing the amazing ocean of information that the Quran and Sunnah contain.

Kuwait’s Ministry of Endowments and Islamic Affairs has sponsored the project.
______________
இந்த அமைப்பின் இணைய தளம்

 இந்த கருத்தரங்கில் கட்டுரையிட்டு உரையாற்ற கீழ்க்கண்ட விதிகள் பின்பற்றப் படவேண்டும்.

1.தோராய கருத்தில்(hypothesis) இருந்து கோட்பாடாக்கப் பட்டு மிக சரியாக நிரூபிக்கப் பட்ட அறிவியல் உண்மைகள்(facts) மட்டுமே ஏற்றுக் கொள்ளப் படும்.இந்த அறிவியல் உண்மைகள் தவறென்றோ,மறுதலாகவோ ஆக்கப் படாதவையாக இருக்க வேண்டும்.(சிரிப்பு வந்தால் நான் பொறுப்பல்ல,எல்லா புகழும் இந்த விதிகளை வடிவமைத்தவருக்கே)

2.இந்த அறிவியல் உண்மை குரானிலோ அல்லது அனுமதிக்கப் பட்ட தூதர் மொழிகளில் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது என்று சான்றளிக்கப்படவேண்டும். 

3.. மேற்கூறிய இரண்டு விவரங்களுக்கும் எளிய முறையில் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்.

4. குரான் ,ஹதித் விளக்கமானது அராபியர்களின் பயன்பாட்டில் உள்ளபடி இருக்க வேண்டும்.ஏனெனில் அராபியர்களின் மொழியிலேயே குரான் இறங்கியது.

5.மறை பொருளாக இருந்து இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை கூற வேண்டாம்.(குரானில் மறை பொருள் எனில் விளங்க இயலாத வசன‌ங்கள்).

6.குரான் வசனம் பிற குரான் வசனங்களாலோ,நபி மொழிகளாலோ விளக்கி அரபி மூல வார்த்தைகளின் அர்த்தம் காணப்பட வேண்டும்.

இந்த ஆய்வரங்குகளில் கட்டுரை இட வேண்டுமெனில் குரான்,ஹதிது,அரபி புல்மை அவசியம் என்பது புரிகிறது. இந்த வி(அ)ஞ்ஞானிகள் அனைவருக்கும் இவை இருக்குமா?

இப்படித்தான் குரானில் அறிவியல் என்றா கருத்தாக்கம் வளர்த்த்டுக்கப் பட்டு உலக்மெங்கும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது.அறிவியலால் மதத்தை தாங்கி பிடிப்பதென்றால் அறிவியல் மதத்தை விட பெரியதென்று ஒத்துக் கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.அரபி பிரச்சாரகர்கள் கூட இந்த மத புத்தக்த்தில் அறிவியல் என்னும் விஷயத்தை மிகவும் ஜாக்கிரதையாக கையாளுவதை (மேற்கூறிய விதிகள்) பாருங்கள்.). ஆனால் நம்மவர்களோ அனைத்தும் தெரிந்து புரிந்தவர்கள் போல் உதார் விடுவது நகைச்சுவையே.இந்த மத அறிவியல் அமைப்பு மேற்கத்திய நாடுகளை சேர்ந்த , நிறைய படித்த,நல்ல பதவியில் இருக்கும் பிரபலமான் ,பல்கலை கழக ஆசிரியர்கள் போன்றவர்களையே தேர்ந்தெடுத்து இவ்வாறு கட்டுரை வாங்குவதும் ஒரு ஆச்சரியமான் விஷயம்தான்.

இந்த இணைய தளத்தில் இம்மாதிரி ஆட்கள் அனைவரையும் வைத்து பிரச்சாரம் செய்வதை பாருங்கள்.இது ஒரு மத பிரச்சார உத்தி மட்டுமே.
______________


இதற்கு செலவு செய்யும் பொருளில் பின் தங்கிய நாடுகளில் கல்வி,சுகாதாரம் போன்ற விஷயங்களுக்கு செலவிட்டால் நலம் பயக்குமே. 

மதவாதத்தால் மட்டும்தான் போர்கள்,வன்முறை வெடிக்கிறதா கம்யுனிஸ்டுகள் போன்ற நாத்திகர்கள் கூட பல போர்கள்,கொலைகள் புரிந்துள்ளனரே என்று கேட்கும் மத பிடிப்புள்ள நண்பர்களே.கம்யூனிசம் என்பது மனிதனால் உருவாக்கப் பட்ட ஒரு வாழ்வு,அரசமைப்பு முறை,அது தவறென்றால் மாற்றப் படும்,தூக்கி எறியப் படும்.இப்போது நடைமுறையில் கம்யுனிசத்தின் தாக்கம் என்ன? Almost Nil!!!!!!!!!!!!!


ஆனால் மதத்தின் எந்த தவறுமே நியாயப் படுத்தப் படும்.இப்போதைய உலகில் மூன்றாம் உலகப் போர் என்பது மத அடிப்படையில் அமையலாம் என்று பல அனுமானங்கள் கூறுகின்றன. என் மதமே சரியானது , பிற மதங்கள் அனைத்தும் தவறு என்பது நிச்சயமாக மனித நேயத்தை வளர்க்காது.மத ரீதியான சட்டங்களும்,பிற‌ மதத்தினரை கட்டுப் படுத்தி ஆள்வதுமே பல பிரசினைகளின் சிக்கல்கள். மத ரீதியான உணர்வுகள் கட்டுக்குள் இருக்க அதன் எல்லைகளை புரிந்து கொள்ளுதல் அவசியம். மத நம்பிக்கைக்கு எல்லை உண்டு.நம்ப முடியும் ஆனால் விளக்க முடியாது.

மதம் பிடித்தால் பின்பற்றுங்கள்,மத ரீதியான நடைமுறைகளில் காலத்திற்கேற்றபடி மாறுதல்கள் கொண்டு வருவது அந்த சமுதாயத்திற்கு நல்லது.பல எடுத்துக் காட்டுகள் தர இயலும்.வேண்டுமென்றே தவிர்க்கிறேன்.மதத்தில் அறிவியல் என்பது வார்த்தை விளையாட்டு மட்டுமே.மதத்தின் பயன்பாட்டில் ,மனிதம் வளருங்கள் மதம் தானாய் வளரும். 

<Western Scientists Comment on their alleged Support for Scientific Miracles in Koran

9 comments:

  1. உங்களின் இடுக்கைக்கு இன்றுதான் வந்தேன் பாராட்டுகள் இன்று மதம் என்று உலகெங்கும் கூறி வன்முறையை தூவி மனிதத்தை அழித்து வருகிறது அது எல்லா மதங்களுமே இல்லை என்றால் இந்த உலகபந்தில் வன்முறையும் அரச பயன்கரவதங்களும் இருக்க வாய்பில்லை மதம் பிடித்து இருந்தால் அவன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை ஏன் எனில் சக மனிதனை மதத்தோடு இணைத்தே பார்க்கவைக்கபடுகிறது மதம் என்று சொல்லி எவனும் அமைதியாகவும் சண்டையிடமலும் இருப்பதில்லை .

    ReplyDelete
  2. ayya... Neengal quranai,
    30 nalil mudali aavadu eppadi!.. Appdingara kannotatula vachi peasikittu irukinga.
    Edaum vimarsanam pannuraduku munnadi adu patri oralavavadu padika venum.
    Nadu nilayodu sindika vendum. Quranil ippadi iruke? idu eppadi eatru kolla mudium. Idu poi.
    endru kurippitu kurungal.
    Ada vittu summa jenious madiri adichi vida kudathu.
    Oru karutula udanpadu illana peasi than tearkanum. Aduku than vivadam.
    Oru visayathai vivadam panna vara mudiyaduna appuram eauku edayo meanjitu inga vandu vaandi edukure.
    Oru visaytha patri teriyala na vituranum. Anga avaru karutarangam vaikiraru.
    Inga ivaru ariviyal manadu poaduraru nu international leval la pesakudathu.
    Islam ulaga alavula inaiku vehama valaruduna aduku karanam adil irukura satiyam.idu porukama vaiterichal vanda taniya kudi.
    Ada vittutu nanum rowdy... Nanum rowdy nu katha kudathu. Ungaluku edavadu quranai patri teriyanumuna ada padichi parunga appuqam peasunga.

    Allah ungaluku nal arul purivanaha.

    ReplyDelete
  3. ayya... Neengal quranai,
    30 nalil mudali aavadu eppadi!.. Appdingara kannotatula vachi peasikittu irukinga.
    Edaum vimarsanam pannuraduku munnadi adu patri oralavavadu padika venum.
    Nadu nilayodu sindika vendum. Quranil ippadi iruke? idu eppadi eatru kolla mudium. Idu poi.
    endru kurippitu kurungal.
    Ada vittu summa jenious madiri adichi vida kudathu.
    Oru karutula udanpadu illana peasi than tearkanum. Aduku than vivadam.
    Oru visayathai vivadam panna vara mudiyaduna appuram eauku edayo meanjitu inga vandu vaandi edukure.
    Oru visaytha patri teriyala na vituranum. Anga avaru karutarangam vaikiraru.
    Inga ivaru ariviyal manadu poaduraru nu international leval la pesakudathu.
    Islam ulaga alavula inaiku vehama valaruduna aduku karanam adil irukura satiyam.idu porukama vaiterichal vanda taniya kudi.
    Ada vittutu nanum rowdy... Nanum rowdy nu katha kudathu. Ungaluku edavadu quranai patri teriyanumuna ada padichi parunga appuqam peasunga.

    Allah ungaluku nal arul purivanaha.

    ReplyDelete
  4. வணக்கம் ச்கோ மாலதி,
    /மதம் என்று சொல்லி எவனும் அமைதியாகவும் சண்டையிடமலும் இருப்பதில்லை ./
    மத நம்பிக்கை என்பது ஒரு முடிவற்ற தேடல் என்பதை உணர்ந்தால் ,மதம் குறித்த பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று நம்புகிறேன்.
    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர் அஹம்து,
    //ayya... Neengal quranai,
    30 nalil mudali aavadu eppadi!.. Appdingara kannotatula vachi peasikittu irukinga.//

    30 நாளில் குரானை படித்து,கருத்திடுகிறேன் என்று கூறுகிறீர்கள். முதல் பதிவு இட்டது ஜன்வரி 11,2011. ஆகவே கணக்கு உதைக்கிறது. எவ்வளவு நாள் எப்படி படிக்க வேண்டுமென்று உங்கள் அனுபவத்தில் இருந்து ஆலோசனை கூறுங்கள்.
    * * *
    /Edaum vimarsanam pannuraduku munnadi adu patri oralavavadu padika venum.
    Nadu nilayodu sindika vendum. Quranil ippadi iruke? idu eppadi eatru kolla mudium. Idu poi.
    endru kurippitu kurungal./
    நான் குரானை எப்படி படித்தேன்,ஆய்வு செய்கிறேன் என்பதை அறிய வேண்டுமானால் தனி பதிவு இடுகிறேன்.இப்போது என்னுடைய எந்த விமர்சனம் தவறு என்று குறிப்பிட்டு கூறினால் சரி பார்க்கிறேன்.இந்த பதிவில் குரானில் அறிவியல் என்ற பெயரின் கருத்தரங்குகளை நடத்துபவர்கள் யார் என்று பதிவிட்டு இருக்கிறேன்.அவ்வளவுதான்.
    * * *
    /Ada vittu summa jenious madiri adichi vida kudathu.
    Oru karutula udanpadu illana peasi than tearkanum. Aduku than vivadam.Oru visayathai vivadam panna vara mudiyaduna appuram eauku edayo meanjitu inga vandu vaandi edukure.
    Oru visaytha patri teriyala na vituranum. Anga avaru karutarangam vaikiraru.
    Inga ivaru ariviyal manadu poaduraru nu international leval la pesakudathu./
    குரானை பேசித்தான் விளங்க முடியும் எழுதி விளங்க முடியாது என்பது உங்கள் கருத்தா? அதுவும் தலைவர் 'அஆஇஈ' மட்டும்தான் விளக்க முடியுமா?
    * * *
    Islam ulaga alavula inaiku vehama valaruduna aduku karanam adil irukura satiyam.idu porukama vaiterichal vanda taniya kudi.
    நான் விமர்சிப்பதால் வளர்ச்சி நின்று விடுமா?.இஸ்லாமிய பிரச்சாரமும் விவாதிற்குற்பட்டதே.நான் சொலவ்து தவறு என்று பட்டால் சுட்டி காட்டுங்கள்.பெரும்பாலும் எதிர்கருத்துகளை அப்ப்டியே வெளியிடுகிறேன். படிப்பவர்களுக்கு அனைத்து கருத்துகளும் சேர வேண்டும்.
    * * *
    /Ada vittutu nanum rowdy... Nanum rowdy nu katha kudathu. Ungaluku edavadu quranai patri teriyanumuna ada padichi parunga appuqam peasunga./
    இஸ்லாமிய பிரச்சாரங்களுக்கு எதிர்வினையே என்பதிவு.பிரச்சாரகர்கள் எப்படியோ எதிர் விமர்சகனும் அப்படியே.உங்களின் கருத்துப் படி நானும் மதம் ஆய்வு செய்யும் இரவுடிகளில் ஒருவன்.ஆய்வு செய்கிறேன் என்று ஆதரவாக பதிவிட்டால் பிரச்சினை இல்லை,விமர்சித்தால் த்வறா?.இம்மாதிரி நீங்கள் சொல்லும் போது அதிக பதிவுகள் இட உறசாகம் பிறக்கிறது.அவ்சியம் பதில் இடுங்கள்.அடிக்கடி வாருங்கள் கருத்துகளை பதியுங்கள்.நன்றி

    ReplyDelete
  6. சார்வாகன்!

    பல ஆய்வுகளை நீங்கள் வெளியிட வேண்டும். ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. /சார்வாகன்!

    பல ஆய்வுகளை நீங்கள் வெளியிட வேண்டும். ஆர்வமுடன் காத்திருக்கிறேன்./
    நண்பருக்கு வணக்கம்
    இது நாயர் பிடித்த புலிவால் போன்றாகி விட்டது.
    எனக்கு பதிவிடுவதை விட விவாதிப்பதே பிடிக்கும்.அதில் சொல்வது சரியான‌தா என்று பார்த்து அவசியம் என்றால் மட்டுமே பதிவிடுகிறேன்.படிப்பதில் உள்ள ஆர்வம் பதிவிடுவதற்கு சோம்பலாக மாறுகின்றது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. @ சுவனப்பிரியன் - பல நல்ல பதிவுகள் ! இன்று தான் பார்க்கின்றேன் . ஏன் தாங்கள் இன்ட்லியில் இணைப்பதில்லையா ? அதனால் பலருக்கு இத்தளம் சென்றடையும். அதே போல கருத்துக்களை உடனடியாக வெளியிடுவதனால் - தமிழ்மணம் வலது ஒரங்களில் கருத்திட கருத்திட பட்டியலில் இருந்துவரும் பலர் கண்களுக்கு அது படும் ... சிறிய பகிர்தல் அவ்வளவே !

    //ஆனால் நம்மவர்களோ அனைத்தும் தெரிந்து புரிந்தவர்கள் போல் உதார் விடுவது நகைச்சுவையே

    //

    காரணம் மூல மொழியில் படித்துப் பார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைத் தான் ..ஹிஹி !!! சொன்னதை நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம் தான்.

    ReplyDelete
  9. @இக்பால் செல்வன்
    ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete