Monday, June 20, 2011

நியாண்டர்தால்:வரலாற்று காணொளி

பரிணாமம் கற்பவர்கள் ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தால் புரிவது எளிதாக இருக்கும்.அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த ஃபாசில் படிமங்களுக்கு விளக்க்ம தர முயற்சித்த கொள்கைகளுள் டார்வின் அளித்த இயற்கை தேர்வு தரமான விளக்க்ம் அளித்தது.. பரிணாம மரம்[evolution tree] வடிவமைக்கப் பட்டது.பிறகு டி.என்.ஏ,மற்றும் கணிப்பொறி உயிரியல்[computational biology] போன்றவை கொண்டு நிரூபிக்கப் பட்டது.முந்தைய காணொளிகளில் இதனை பார்த்தோம். இப்பதிவில் நியாண்டர்தால் பற்றிய காணொளி பார்ப்போம்.

பரிணாம கொள்கையின் முக்கியமான கண்டுபிடிப்பு நியாண்டர்தால் எனப்படும் மனிதன் போன்ற இன்னொரு இனமாகும்.ஹோமோ சேஃபியன் எனப்படும் மனித இனம் கிழக்கு அப்பிரிக்காவில் தோன்றியது என்றால்,இந்த நியாண்டர்தால்கள் மேற்கு ஐரோப்பாவில் தோன்றியது.இது பற்றிய ஒரு காணொளி.



6 comments:

  1. ஐயா, தொடர்ச்சியாக பதிவுகள் போட்டு திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள். எல்லாவற்றையும் படித்துக்கொண்டு, உள்வாங்கிக் கொண்டு புரிந்துக் கொண்டு இருக்கிறேன்.

    நேராக இந்தப் பதிவுக்கு வந்த காரணம், சில வருடங்களுக்கு முன் டிஸ்கவரி தொலைக்காட்சியில் neanderthal பற்றி ஆவண படம் போட்டார்கள். அதைப் பார்த்து முடித்ததும் சிறிது நேரத்துக்கு வீட்டில் ஒரு வித அமைதி, ஒரு வித குற்ற உணர்வு, ஒரு வித சோகம் ஏற்ப்பட்டது. அந்த ஆவணப் படத்தின் லிங்க் கீழே தந்துள்ளேன். தொலைக்காட்சியில் பார்த்தால் அதன் பாதிப்பு தாக்கம் அதிகமாக இருக்கும்.

    http://www.youtube.com/watch?v=Q2mItIunqr4

    ReplyDelete
  2. வணக்கம் நரென்
    நியாண்டர்தால்களின் இழப்பு மிகப் பெரிய ஒன்று.ஒரு வேளை அவைகளும் இப்போது வாழ்ந்து கொண்டிருந்தால் இம்மாதிரி இல்லாமல் அவர்களையும் இணைத்து அல்லது எதிர்க்கும் வண்ணம் மதங்கள் உருவாகி இருக்கும்.இப்போதைய மதங்களில் நியாண்டர்தாலுக்கு இடம் உண்ட என்பதும்நல்ல கெள்வி,
    அற்வியல் இயற்கை நிகழ்வுகளுக்கு,ஆதாரங்களுக்கு விளக்கம் அளிகிறது,அந்த விளக்க்த்தை அளிப்பதில் பலர் முயல்வதால் அவ்விளக்கங்கள் பரிணமித்து, ஆய்வு மூலம் மெய்ப்பிக்கப் பட்டே கூற்று ஆகிறது.
    மத புத்தத்தில் கூற்றுகள் இருக்கின்றன,அதற்கு பலர் பல்வாறு விளக்கம் அளித்து இருக்கும் ஆதாரங்களை அதனிடன் பொருத்த முயல்கிறார்கள்.
    இதுதான் பிரச்சிஅனை
    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.

    ReplyDelete
  3. @ சார்வாகன் - நியாண்டர்தல்கள் குறித்து பலக் கட்டுரைகள் படித்துள்ளேன். இந்தக் காணொளி பலருக்கு பயனுடையதாக இருக்கும். நிச்சயமாக பல்கலைக் கழகத்தில் இடம் கிட்டுமாயின் மானுடவியலில் நியாண்டர்தல் குறித்தே எனக்கு படிக்க பெரும் ஆசை இருந்தது .... ஏனெனில் சில அறிஞர்களின் கூற்றுப்படி நியாண்டர்தல்கள் மனிதர்களோடு கலந்தார்கள் எனக் கூறுகின்றார்கள்.. ஆனால் அவர்கள் கலக்கவில்லை என்னும் கருத்தும் உள்ளது.

    கடவுள் மனிதனைப் படைத்தார் எனக் கூறுவோருக்கு, அந்த முதல் மனிதன் ஹோமோ சாப்பியன்ஸா, நியாண்டர்தல்களா என கூறுவதில்லை .. ஏனெனில் அப்படி ஒன்று இருந்ததே பலருக்கு தெரியாது .. ஹிஹி !!!

    ReplyDelete
  4. தளத்தின் அழகு மிளிர்கின்றது. நன்றிகள் சகோ

    ReplyDelete
  5. நியாண்டர்தால் படிமங்கள் எங்கே அதிகம் கண்டு பிடிக்கப் பட்டதோ அங்கே ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளார்கள் ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் முடிந்தால் அவசியம் ஒருமுறை பார்த்து வரலாம்.

    Neanderthal Museum
    Talstraße 300
    40822 Mettmann
    Germany
    http://www.neanderthal.de/en/index.html

    ReplyDelete