Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Wednesday, June 8, 2011

மதத்தில் அறிவியல் எப்படி யார் கொண்டு வருகிறார்கள்?.



"மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை விடுவதில்லை".

மத புத்தக்த்தில் அறிவியல் என்று சொல்லும் பல விஷயங்கள் தவறு என்று நம்முடைய பதிவுகளில் சுட்டி காட்டி இருக்கிறோம்.இப்பதிவில் இந்த கருத்தாக்கம் எப்படி ,யாரால் பிரச்சாரம் செய்யப் படுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

மதம் என்பது நம்பிக்கை என்னும் விஷயத்தை மட்டுமே ஆதாரமாக் கொண்ட விஷயம். அனைத்து மதங்களும் உருவாகும் போது இருக்கும் கொள்கையாக்கம் நாளடைவில பரிணாம வளர்ச்சி பெற்றே முழுமை பெறுகின்றது. எந்த மதமும் அது சொல்லும் அனைத்து விஷயங்களும் உண்மை என்று நிரூபிக்க முடியாது. இதில் சில் இஸ்லாமிய நண்பர்கள் மத பதிவுகள் எழுதுவதும்,மத புத்தக்த்தில் அனித்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என‌ சொல்வதும் அனைவரும் அறிந்ததே. அந்த பதிவுகளின் மீதான விமர்சன‌ம் எழுதும் போது நேருக்கு நேர் விவாதம் வருகிறாயா எங்கள "அஆஇஈ" உடன் விவாதம் செய்ய தயாரா என்பதும் வழக்கமான நகைசுவை செய்திகளே என்றாலும் .இன்னும் சில மத வி(அ)ஞ்ஞானிகளின் பெயர் கிடைத்ததால் நமக்கு மிக்க மகிழ்ச்சி.ஒரு விவாதத்தில் கடவுள்,மத புத்தகத்தை புரிய வைப்பது என்றால் இவர்களை கல்லூரி பேராசிரியர்கள் ஆக்கினால் நாடு எங்கோ போய்விடும்.

இந்த மத வி(அ)ஞ்ஞானிகள் என்றதுமே இவர்களுக்கு மதங்கள் பற்றி கருத்து கூற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி வருவது இயல்பாக‌. இருந்தாலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அறிவியலில் பின் தங்கி இருப்பதும் ஒரு நகை முரணே.இந்த வி(அ)ஞ்ஞானிகள் அனைவருமே ஏதோ ஒரு மத்திய கிழக்கில் நாடுகளீல் நடைபெறும் ஒரு குரானிய அறிவியல் கருத்தரங்கிலேயே இவ்விஷயங்களை பேசியுள்ளார்கள்.இத்னை ஒலி,ஒளி பதிவு செய்து யு ட்யூப் முதலான தளங்களில் இட்டு பிரச்சாரம் செய்கின்றார்.அந்த காணொளிகளை இட்டவர்கள் இது எங்கே ,எப்போது எதற்காக சொல்லப் பட்டது போன்ற எந்த விவரங்களையும் சொல்ல மாட்டார்கள்.. இந்த குரானிய அறிவியல் கருத்தரங்குகளை நடத்துபவர்கள் யார்?.அப்படி நடத்தும் ஒரு அமைப்பை பற்றி தெரிந்து கொள்வோம்.

குரான் மற்றும் சுன்னாவில அறிவியல் குறியீடுகள் அமைப்பு[he International Commission on Scientific Signs in the Qur’an and Sunnah (ICSSQS) ] 1984ல் சவுதி அரேபியாவில் ஷேக் அப்துல் மஜீத் அல் ஜிந்தனி என்னும் யேமன் நாட்டை சேர்ந்தவரால் உலக முஸ்லிம் கூட்டமைப்பு உதவியுடன் ஆரம்பிக்கப் பட்டது.குரான் மற்றும் சுன்னவில் அறியல் குறியீடுகளை கண்டறிந்து சொல்லும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதே இத‌ன் நோக்கமாகும். இவர் யமன் நாட்டு இஸ்லாமிய சகோதர்த்துவ கட்சியின் த்லைவர்,யேமனின் அல் இமான் மத பல்கலைகழகத்தின் ஸ்தாபகர்.அமெரிக்க அரசால அமெரிக்கா வராமல் தடுக்கப் பட்ட‌ ஒரு முக்கியஸ்தர். எய்ட்ஸ்க்கு மருந்து கண்டு பிடித்தாகவும் இவர் கூறியுள்ளர்.அது எங்கிருந்து என்று தகவல் இல்லை.இவர் பற்றிய விக்கிபிடியாவில அண்ணன் பற்றி பல குறிப்பிடத் தக்க விஷயங்கள் உண்டு.(Intersting person!!!!!!!!!!!!!).

இந்த கருத்தாக்க்ங்களின் பிதாகமர் மௌரிஸ் புகைல் என்றால் மிகையாகாது .இதுவரை இம்மாதிரி 8 ஆய்வரங்குகளை நட்த்தியுள்ளார்கள்.
1)1987 இஸ்லாமாபாத்
..
..
7) 2007 துபாய்
8) குவைத் (இதில் எய்ட்ஸ்க்கு மருந்து சுன்னாவில் கூறப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த கருத்தரங்குக‌ளின் சாராம்சத்தை ஒரு என்சைக்ளோப்பிடியா ஆக்குவ்தற்கான முயற்சிகள் அதிக பொருள் செலவில் முன்னெடுக்கப் படுகின்றது.  
அது குறித்த செய்தி இது.
______________
Online Project Spotlights Science in Qur’an, Sunnah
K.S. Ramkumar, Arab News

JEDDAH, 9 May 2006 — The International Commission on Scientific Signs in the Qur’an and Sunnah (ICSSQS) signed an agreement with the Harf, a leading IT company, Sunday night to produce an online scientific encyclopedia based on Islamic holy books.

Abdullah ibn Abdul Aziz Al-Musleh, secretary-general of the ICSSQS, told a press conference after the signing ceremony that the encyclopedia, which will contain all the scientific information referred to in the Qur’an and the Sunnah (Traditions of the Prophet, peace be upon him), aims to serve as a comprehensive reference work fulfilling the increasing demand from researchers the world over for documented information on the scientific information contained in the Qur’an and Sunnah.

“When completed the encyclopedia will be the greatest reference work on Islam from the angle of modern science,” Al-Musleh said. The encyclopedia will be distributed on CD and a website will be available both in English and Arabic.

The encyclopedia containing 8,000 pages apart from pictures and video clips will cover all the Qur’anic verses referring to scientific facts with their explanations. A team of scientists and experts in the religious studies are working on the project.

The SR2.1-million agreement stipulates that the IT company prepare 50,000 CDs of the encyclopedia and a website linked to the commission’s site www.nooran.com in addition to a print edition in 14 volumes.

The new project is part of the commission’s bid to present the shining picture of Islam to the world at large as a religion that promotes scientific research leading to contemplation about the signs of God. It also aims at familiarizing the amazing ocean of information that the Quran and Sunnah contain.

Kuwait’s Ministry of Endowments and Islamic Affairs has sponsored the project.
______________
இந்த அமைப்பின் இணைய தளம்

 இந்த கருத்தரங்கில் கட்டுரையிட்டு உரையாற்ற கீழ்க்கண்ட விதிகள் பின்பற்றப் படவேண்டும்.

1.தோராய கருத்தில்(hypothesis) இருந்து கோட்பாடாக்கப் பட்டு மிக சரியாக நிரூபிக்கப் பட்ட அறிவியல் உண்மைகள்(facts) மட்டுமே ஏற்றுக் கொள்ளப் படும்.இந்த அறிவியல் உண்மைகள் தவறென்றோ,மறுதலாகவோ ஆக்கப் படாதவையாக இருக்க வேண்டும்.(சிரிப்பு வந்தால் நான் பொறுப்பல்ல,எல்லா புகழும் இந்த விதிகளை வடிவமைத்தவருக்கே)

2.இந்த அறிவியல் உண்மை குரானிலோ அல்லது அனுமதிக்கப் பட்ட தூதர் மொழிகளில் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது என்று சான்றளிக்கப்படவேண்டும். 

3.. மேற்கூறிய இரண்டு விவரங்களுக்கும் எளிய முறையில் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்.

4. குரான் ,ஹதித் விளக்கமானது அராபியர்களின் பயன்பாட்டில் உள்ளபடி இருக்க வேண்டும்.ஏனெனில் அராபியர்களின் மொழியிலேயே குரான் இறங்கியது.

5.மறை பொருளாக இருந்து இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை கூற வேண்டாம்.(குரானில் மறை பொருள் எனில் விளங்க இயலாத வசன‌ங்கள்).

6.குரான் வசனம் பிற குரான் வசனங்களாலோ,நபி மொழிகளாலோ விளக்கி அரபி மூல வார்த்தைகளின் அர்த்தம் காணப்பட வேண்டும்.

இந்த ஆய்வரங்குகளில் கட்டுரை இட வேண்டுமெனில் குரான்,ஹதிது,அரபி புல்மை அவசியம் என்பது புரிகிறது. இந்த வி(அ)ஞ்ஞானிகள் அனைவருக்கும் இவை இருக்குமா?

இப்படித்தான் குரானில் அறிவியல் என்றா கருத்தாக்கம் வளர்த்த்டுக்கப் பட்டு உலக்மெங்கும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது.அறிவியலால் மதத்தை தாங்கி பிடிப்பதென்றால் அறிவியல் மதத்தை விட பெரியதென்று ஒத்துக் கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.அரபி பிரச்சாரகர்கள் கூட இந்த மத புத்தக்த்தில் அறிவியல் என்னும் விஷயத்தை மிகவும் ஜாக்கிரதையாக கையாளுவதை (மேற்கூறிய விதிகள்) பாருங்கள்.). ஆனால் நம்மவர்களோ அனைத்தும் தெரிந்து புரிந்தவர்கள் போல் உதார் விடுவது நகைச்சுவையே.இந்த மத அறிவியல் அமைப்பு மேற்கத்திய நாடுகளை சேர்ந்த , நிறைய படித்த,நல்ல பதவியில் இருக்கும் பிரபலமான் ,பல்கலை கழக ஆசிரியர்கள் போன்றவர்களையே தேர்ந்தெடுத்து இவ்வாறு கட்டுரை வாங்குவதும் ஒரு ஆச்சரியமான் விஷயம்தான்.

இந்த இணைய தளத்தில் இம்மாதிரி ஆட்கள் அனைவரையும் வைத்து பிரச்சாரம் செய்வதை பாருங்கள்.இது ஒரு மத பிரச்சார உத்தி மட்டுமே.
______________


இதற்கு செலவு செய்யும் பொருளில் பின் தங்கிய நாடுகளில் கல்வி,சுகாதாரம் போன்ற விஷயங்களுக்கு செலவிட்டால் நலம் பயக்குமே. 

மதவாதத்தால் மட்டும்தான் போர்கள்,வன்முறை வெடிக்கிறதா கம்யுனிஸ்டுகள் போன்ற நாத்திகர்கள் கூட பல போர்கள்,கொலைகள் புரிந்துள்ளனரே என்று கேட்கும் மத பிடிப்புள்ள நண்பர்களே.கம்யூனிசம் என்பது மனிதனால் உருவாக்கப் பட்ட ஒரு வாழ்வு,அரசமைப்பு முறை,அது தவறென்றால் மாற்றப் படும்,தூக்கி எறியப் படும்.இப்போது நடைமுறையில் கம்யுனிசத்தின் தாக்கம் என்ன? Almost Nil!!!!!!!!!!!!!


ஆனால் மதத்தின் எந்த தவறுமே நியாயப் படுத்தப் படும்.இப்போதைய உலகில் மூன்றாம் உலகப் போர் என்பது மத அடிப்படையில் அமையலாம் என்று பல அனுமானங்கள் கூறுகின்றன. என் மதமே சரியானது , பிற மதங்கள் அனைத்தும் தவறு என்பது நிச்சயமாக மனித நேயத்தை வளர்க்காது.மத ரீதியான சட்டங்களும்,பிற‌ மதத்தினரை கட்டுப் படுத்தி ஆள்வதுமே பல பிரசினைகளின் சிக்கல்கள். மத ரீதியான உணர்வுகள் கட்டுக்குள் இருக்க அதன் எல்லைகளை புரிந்து கொள்ளுதல் அவசியம். மத நம்பிக்கைக்கு எல்லை உண்டு.நம்ப முடியும் ஆனால் விளக்க முடியாது.

மதம் பிடித்தால் பின்பற்றுங்கள்,மத ரீதியான நடைமுறைகளில் காலத்திற்கேற்றபடி மாறுதல்கள் கொண்டு வருவது அந்த சமுதாயத்திற்கு நல்லது.பல எடுத்துக் காட்டுகள் தர இயலும்.வேண்டுமென்றே தவிர்க்கிறேன்.மதத்தில் அறிவியல் என்பது வார்த்தை விளையாட்டு மட்டுமே.மதத்தின் பயன்பாட்டில் ,மனிதம் வளருங்கள் மதம் தானாய் வளரும். 

<Western Scientists Comment on their alleged Support for Scientific Miracles in Koran

Friday, May 13, 2011

கடல் நீர் எரிபொருள் ஆகுமா? கடல் தீப்பற்றி எரியுமா?












எரிபொருள் என்பது நவீன உலகில் மிக அதிகமாக தேவைப்படும்,பயன் படுத்தப்படும் ஒன்றாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.எண்ணெய் என்பதே முக்கியமான் எரிபொருள் ஆக இருப்பதால் ,இவ்வளம் பொருந்திய நாடுகள் சார்ந்த அரசியல் உலகில் முக்கிய இடம் வகிக்கிறது.உலகின் எண்ணெய் இருப்பு சுமார் 1.2 ட்ரில்லியன் பேரல் ஆகும்.தினமும் சுமார் 80_90 மில்லியன் பேரல் எண்ணெய் எடுக்கப்படுகிறது.இந்த எண்ணெய் வளம் 40_50 வருடம் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது எப்படி எனில் சின்ன கணக்குதான்!!!

1.2*1000*1000/(80*365)=41 வருடம்==15000 நாட்கள்

இச்சூழ்நிலையில் ஒரு தமிழ் பதிவு படிக்க நேர்ந்தது. அதில் கடல் நீரை எரிபொருளாக மாற்றும் முறையை ஒரு பொறியாளர் கண்டுபிடித்தார் என்றும், வழக்கம் போல் இது அன்றே எங்கள் மத புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்ற பல்லவி பாடப்ப்ட்டும் இருந்தது..
அந்த பொறியாளர் பற்றியும்,அந்த முறை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
திரு ஜான் கான்ஞியஸ்( அமெரிக்கவில் உள்ள ஃப்ளோரிடா மநிலத்தை சேர்ந்தவர்.மார்ச் 1,1944ல் பிறந்த்வர்.மிண்ணனுவிய்ல் பொறியாளரான இவர்  மின் காந்த அலைகள் மூலம் கேன்சரை குணப்படுத்தும் முறை ஒன்றை கண்டு பிடித்ததாக கூறப்படுகின்றது. கேன்சர் என்றால் கட்டுப்பாடற்ற‌,தேவையற்ற உடல் செல் வளர்ச்சி[uncontrolled growth of abnormal cells] என்று வரையறுக்கலாம்.இவர் வடிவமைத்த கருவி மூலம் மி.கா அலைகளை உருவாக்கி அதனை கேன்சர் உள்ள உடல் பகுதியின் மீது செலுத்தும் போது அச்செல்கள் இறந்து விடும் என்பது இவருடைய கண்டு பிடிப்பு.இதற்கு காப்புரிமை பெற்றுள்ளார்.இதன் பயன் பாடுகள் குறித்து விவாதிக்காமல் இந்த கருவியின் இன்னொரு பயன்பாடான கடல் நீரை எரிபொருள் ஆக மாற்றும் முறை பற்றியே விவாதிப்போம்..
இக்காணொளி பாருங்கள்!!!!



இந்த மின் காந்த அலைகலை கடல்நீரின் மீது செலுத்தினால் அது எரிபொருள் ஆகிறது என்பதே இவரின் கண்டுபிடிப்பு.உண்மையில் இவருடைய கண்டுபிடிப்பு உப்பு நீர் எரிபொருளாக் மாறுவதை கூறுகின்றது ,அத்னை  ஊடகங்கள் கடல் நீர் என்று கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிவிட்டன.இதுவும் சரிதான் என்பதால் கடல் நீர் மட்டுமல்ல உப்பு நீரும் எரிபொருளாக மாற்ற முடியும் என்பதே திரு கான்ஞியஸின் கண்டுபிடிப்பு ஆகும்.


அது எப்படி மின் காந்த அலைகளை உப்புநீரில் செலுத்தினால் எரிபொருள் ஆகும் என்று கேட்கிறீர்கள்.நல்லது. அறீவியலில்(மின் வேதியியல்) மின் பகுப்பு என்று ஒரு செயல் பற்றி படித்ததை நினைவு கூறுவோம். நீரில் இரு மின் முனைகள்(Electrodes) இட்டு அதில் முறையே நேர்,எதிர் மின்னூட்டங்க்களை செலுத்தினால் நீரானது ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன் ஆக பிரியும் என்பதுதான் மின் பகுப்பு எனப்படுகிறது. இது நீருக்கு மட்டுமல்ல எந்த ஒரு கரைசலுக்கும் பயன்படுத்த முடியும் என்றாலும் அது இப்பதிவிற்கு தேவையற்றது என்பதால் நீரை மின் பகுப்பு செய்தால் கிரடைக்கும் ஹைட்ரஜன் ஒரு எரிபொருள் ஆகும் என்பதையே விவாதிப்போம்..
இந்த மின் பகுப்பின் எதிர்வினைஃபுயல் செல்(Fuel cell) என்படும் மின் வேதி மாற்றம் ஆகும்.அதாவது ஹைட்ரஜனையும்,ஆக்ஸிஜையும் சரியான விகிதத்தில் கல்ந்து ,சில வினைகளுக்கு உட்படுத்தினால் மின்சாரமும்,(தூய்மையான்) நீரும் கிடைக்கும்.ஆஆக்வேதான் ஹைரட்ரஜன் தயாரிக்க அறிவியலாளர்கள் அரும்பாடு படுகிறார்கள்.ஆகவே கடல் நீரில் இருந்து ஹைட்ரஜன்(எரிபொருள்) என்பது ஒரு கல் இரு மாங்காய் (மின்சாரம்+குடி நீர்).
இப்போது மின்பகுப்பு மூலம் கடல்நீரை பிரித்து ஹைடரஜன் தயாரித்தால் போகிறது என்று சொல்கிறீர்களா? அப்புறம் ஒரு கல் இரண்டு மாங்காய் எளிதில் அடிக்கலாம் என்றா?.
Life is not that much simple!!!!!!!!!
 10 யூனிட் மின்சாரம் செலவு செய்து மிபகுப்பினால் ‘X’ அளவு ஹைட்ரஜன் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அந்த “X” அளவு ஹைட்ரஜனை கொண்டு ஃப்யல் செல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பொது 10 யூனிட்டை விட அதிகமாக மின்சாரமும், அந்த உபரி அளவு இந்த முறைக்கான செலவை எவ்வளவு வருடங்களில் ஈட்டும் என்பதே பிரச்சினை.
இதுவரைக்கும் திருப்தியான முடிவு எட்டப்படவில்லை என்பதே உண்மை.ஆகவே ஹைட்ரஜனை மின் பகுப்பு அல்லாமல் வேறு முறைகளில் குறைந்த செலவில் தயாரிக்க ஆய்வுகள் உலகெங்கும் நடை பெறுகிறது.
இப்போது திரு கான்ஞியஸ் கூறுவது என்ன?


உப்பு நீரில் மின்காந்த அலைகளை செலுத்தினால் எரிபொருள் உண்டாகும் (மைக்ரோ வேவ் ஓவன் மாதிரியா!!!) என்று.அவர் அவருடைய முறையை சரியாக விளக்கவில்லை.எரிபொருள் என்பது ஹைட்ரஜன் மட்டுமே வாய்ப்பு உண்டு.நேரடியாக மின்சரம்(மின் பகுப்பு) இல்லாமல் மின்காந்த அலைகளாக மாற்றி உப்பு நீரில் செலுத்தும் போதும் ஹைட்ரஜனாக மாறலாம்,அது எரியவும் செய்யலாம்.ஹைட்ரஜன் இலேசாக இருப்பதால் அவர் பயன் படுத்திய சோத்னைக் குழாயின் மேல் பகுதிக்கு வந்து எரிவது நம்ம எரிவாயு அடுப்பு மாதிரிதான்.
இங்கும் அவருடைய கருவிக்கு பயன் படுத்தப்படும் மின்சாரத்தின் அள்வுக்கும்,ஹைட்ரஜன் தயாரிப்புக்கும் என்ன விகிதமோ,அது சாதாரண மின்பகுப்பு முறையை விட அதிகமாக இருந்தால் மட்டுமே பலன்.
முடிவுரை
1.நிச்சயமாக இலாபகரமாக்(efficient) இருக்காது என்று ஒரு மின்னியல் பொறியாளனாக என்னால் கூற முடியும்.எப்படி என்று விவாதிக்கும் நண்பர்களுக்கு கூறுகிறேன்.
2. இதன் மூலம் பெரிய அளவில் ஹைட்ரஜன் தயாரிக்க முடியாது.மின் காந்த அலைகளின்மின் சக்தி எவ்வளவு என்று யோசித்தால் உங்களுக்கு இது புரிந்து விடும்.
3.ஆகவே இது கொஞ்சம் சோத்னை குழாயில்(சரி போனால் போகுது ஒரு பெரிய பீப்பாய்) நீரை எடுத்து ஹைட்ரஜனாக மாற்றி எரித்து விளையாட்டு காட்ட முடியுமே தவிர பெரிய அளவில கடலையே மின் காந்த அலைகளால் பகுத்து எரிபொருளாக மாறி எரிய வைக்க முடியுமா என்று யோசித்து கொள்ளுங்கள்.இந்த செயல்ஒரு மூடப்பட்ட கொள்கலனில் மட்டுமே நடத்த முடியும் திறந்த கடல் பரப்பின் மீது மி.கா அலைகளை செலுத்தி ஹைட்ரஜன் உருவாக்க‌ முடியுமா என்றுகான்ஞியஸ் கூறவேயில்லை.இது மிகைபடுத்தப்பட்ட மத வி(அ)ஞ்ஞான கற்பனை.ஏன் இப்படி அபசகுனமாய் பேசுகிறீர்கள் ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பையே மறுக்கிறீர்களே என்கிறீர்களா.!!!!.


இந்த செய்தியை பாருங்கள்.கான்ஞியஸ் அவர் கண்டுபிடிப்பை பற்றி என்ன கூறுகிறார்?


http://www.waterfuelcarengine.com/john-kanzius.html



Water Fuel Related Discovery:
Kanzius, later that year, stated that the same RF transmitter has the ability to actually make salt water catch fire. This revelation took place accidentally while he was trying to know if these radio waves can be used to desalinize water. He said that they were experimenting for something that might desalinize saltwater rather than an energy source, and the more they try, the saltwater gets hotter until it caught fire. At that point, this method can't be used as an energy source because it used more energy to generate the waves than the energy of the burning gas.
He didn't say that his finding would replace oil as an energy source and only described it as “interesting“. The tell tails of his process are still not published until it's patented. He explains that the energy from radio waves absorbed by the water weakens the convalent bond between oxygen and hydrogen to an extent that pairs of both hydrogen and oxygen are created, producing dihydrogen and dioxygen molecules. These newly formed molecules are also affected by the energy of the radio waves which causes them to get in a relatively close proximity in a process called reunification causing them to react together forming water molecules once again and releacing energy in the form of a flame. In other words, this process simply converts radio energy to heat and light form.

Rustum Roy, a materials scientist at Pennsylvania State University confirmed Kanzius experiment in front of the Material Science faculty using the same RF transceiver which he took from Kanzuis lab to be returned the next day. He also stated on his website that Mr. Kanzius was able to show the possibility of producing hydrogen and oxygen from saltwater with the same salt concentration of normal sea water.
He also said that the saltwater itself isn't burning as one might think. The fact is, the RF waves weakens the bonds of saltwater molecules releasing hydrogen in the process, and that what's catches fire and it will keep burning as long as the saltwater sample is exposed to these radio waves with flames varying in colors and temperature, depending on the solutions and concentration.
Philip Ball, the author of "H2O: A Biography of Water" and a consulting editor at Nature, disapproved the idea of water being used as a fuel. Even though he said that kanzius' revelation needs verification through further experiments, he is sure that water can't be a fuel and doesn't burn, and added that it's impossible to harness energy by burning hydrogen extracted from water and based his words on the laws of thermodynamics, as it would be the foundation of a never-ending cycle of motion. He also referred to the lack of information in the media when reporting about unreal science.

இக்கட சூடண்டி!!!!!!!!!!!!!!

அ) இம்முறைக்கு இதுவரை காப்புரிமை கிட்டவில்லை..

ஆ) இனியும் கிட்டாது..மதிப்பிற்குறிய‌ கான்ஞியஸ் கடந்த பிரவரி 18/2009 அன்றே இறந்துவிட்டார்.அவருடையஆய்வுகூட இணைய தளத்தில் இம்முறை பற்றி இப்போது எந்த செய்தியும் இல்லை.

மதவாதிகள் இவர் இறந்த விஷயம் கூட சொல்லாமல் கண்டுபிடிப்பின் மிகைப் ப‌டுத்தப்பட்ட செயலை ஏற்கெனவே மத புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

சரி இவர்களுக்கு உதவியாக ஏதோ செய்துவிட்டு போன அண்ணன் கான்ஞியஸ் க்காக ஒரு பிரார்த்தனை செய்தார்களா? செய்யவில்லை என்றால்  அவர்கள் மத புத்தகத்தின் பெருமை கூற உதவிய அண்ணன் கான்ஞியஸை நினைவு கூற வலியுறுத்துகிறோம்.

Friday, April 29, 2011

குரான் 4.34 வசனம் மனைவியை அடிக்க சொல்கிறதா?

குரான் 4.34 வசனம்


(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

__________




இதனை நண்பர் இக்பால் செல்வன் மனைவியை அடி - ஆண்களுக்கு இஸ்லாம் தரும் உரிமை என்ற பதிவு இட்டு இருந்தார் அதில் ஒரு இஸ்லாமிய நண்பர் அளித்த விளக்கத்தை கீழே தருகிறேன்.


Saha, Chennai said...

ஐயா வணக்கம்.

நல்லா படிச்சிட்டு யோசிங்க ஐயா. நல்லொழுக்கமுடைய பெண்ணை அடிக்க சொல்லலை, கணவனுக்கு துரோகம் செய்யும், தாம்பத்யத்துக்கு துரோகம் செய்யும் பெண்ணை அவள் திருந்தாத பட்சத்தில்தான் அடிக்க சொல்லியிருக்கு. இஸ்லாத்தில் நம் அனைத்து செயல்களுக்கும், அனைத்து சந்தேகங்களுக்கும், அனைத்து தேவைகளுக்கும் பதில் இருக்கின்ற நிலையில், தனக்கு துரோகம் செய்யும் மனைவியை எப்படி Handle செய்வது என்றுதான் சொல்லிக்காட்டப்பட்டிருக்கு. இந்த சூழ்நிலை பற்றி முறையான விளக்கங்கள் கிடைக்காத நிலையில்தான் கொலை செய்ய எத்தனிக்கும் மனிதர்களை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.வேற எதுவும் (கொலை) செஞ்சுடாதீங்கனு சொன்னா தப்பா?


அய்யா, குருடன் யானையை தடவிப்பார்த்து அதை வர்ணிப்பதைபோல உள்ளது உங்களின் இஸ்லாத்தின் மீதான பார்வை.

நல்ல தலைப்பு வைச்சீங்க போங்க, தலைப்பை வேணா இப்படி மாத்துங்களே. " துரோகம் செய்யும் மனைவியை அடித்தாவது திருத்துங்கள், ஆனால் கொலை செய்து விடாதீர்கள்.- இஸ்லாம் " (இத தான் சொல்லிருக்கு.) (அதுக்கும் நெறைய ஹிட் கெடைக்கும்.)
_______________
நண்பர் சாஹாவின் கூற்றுப்படி கணவனுக்கு துரோகம் செய்யும் கள்ளத்தொடர்பு உள்ள மனைவியை மட்டுமே அடிக்க சொல்வதாக கூறுகிறார்.இது சரியா என்று பார்ப்பது நமது கடமை.இந்த முறையில் அவருடைய கூற்றை ஆய்வோம்


இங்கு ஒரு மத குரு என்ன்மோ சொல்ராக,அதனை கேட்டாலே யாரை அடிப்பது என்று புரிந்து விடும்..




PART(A)

நம் எப்போதும் ஒரு குரான் வசனத்திற்கு பொருள் கொள்ளும் போது தமிழ் மொழி பெயர்ப்பு இரண்டும்(டான்சில்.இன்ஃபோ,பி.ஜே) ஆங்கில மொழி பெயர்ப்பு இரண்டு(ஃபித்கல்,யூசுஃப்ஃ அலி) அவசியம் பார்த்து விடுதல் வழக்கம்.
1.
_____________
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
______________
2.பி.ஜேவின் மொ.பெ
34. சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவான வற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.[திரு பி.ஜேவின் விளக்கம் 66]

3.ஃபித்கல்
4.34
Pickthall: Men are in charge of women, because Allah hath made the one of them to excel the other, and because they spend of their property (for the support of women). So good women are the obedient, guarding in secret that which Allah hath guarded. As for those from whom ye fear
rebellion, admonish them and banish them to beds apart, and scourge them. Then if they obey you, seek not a way against them. Lo! Allah is ever High, Exalted, Great.

4.,யூசுஃப்ஃ அலி
4.34
Yusuf Ali: Men are the protectors and maintainers of women, because Allah has given the one more (strength) than the other, and because they support them from their means. Therefore the righteous women are devoutly obedient, and guard in (the husband's) absence what Allah would have them guard. As to those women on whose part ye fear
disloyalty and ill-conduct, admonish them (first), (Next), refuse to share their beds, (And last) beat them (lightly); but if they return to obedience, seek not against them Means (of annoyance): For Allah is Most High, great (above you all).


இப்போது முதல் பகுதி முடிந்தது பி.ஜேவின் மொழி பெயர்ப்பு விளக்கத்தை பார்த்தாலே இது கருத்து வேறுபாட்டை பற்றி கூறுவதையும்,அத்னை தீர்ப்பது பற்றி கூறுவஹை காண்லாம்.

ஃபித்கல் கணவ‌னுக்கு மனைவின் எதிர்ப்பு( rebellion,) என்கிறார், யூசுஃப்ஃப் அலி விசுவாயமின்மை,மோசமான நடத்தை(disloyalty and ill-conduct,
) என்கிறார்.

இரு வசனங்களும் அடிக்க தகுந்த மனைவியின் செயலில் வேறு படுகின்றன.

முதல் பகுதியில் முடிவு

இப்படி மொழி பெயர்ப்புகள் எதிரான பொருள் தந்தால் பல பொருள் கொள்ள இயலும். இதில் ஏற்படும் குழப்பத்தை தீர்க்க இரண்டாம் பகுதிக்கு செல்வோம்.அதற்கு முன் கட்டார் தொலைக்காட்சியில் அரபியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் நிகழ்ந்த காணொளி பாருங்கள்.இங்கு மனைவின் பணிய மறுபு (Disobedience) என்பதே அடிக்கும் காரணமாக கூறப்படுகிறது.


*                           *                         *

PART(B)


இந்த பகுதியில் மூல‌ அரபிவார்த்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.இதில் முக்கியமாக இரு அரபி வார்த்தைகளே இவசனத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.,
முதல் வார்தை மட்டும் இப்பகுதியில் பார்ப்போம்.
I)
(4:34:24)nushūzahunna=their ill-conduct,"Rise up((58:11:16),desertion(4:128:6) .துர் நடத்தை,எதிர்த்தல்,விட்டு பிரிதல்

குரான் 4.128 லும் இதே வார்த்தை ஒரு ஆண் பெண்னை விட்டு பிரிந்தால் என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறது.

1.டான்சில்.இன்ஃபோ
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

2.பி.ஜேவின் மொ.பெ
128. தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத் தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

3.ஃபித்கல்

Pickthall: If a woman feareth ill treatment from her husband, or desertion, it is no sin for them twain if they make terms of peace between themselves. Peace is better. But greed hath been made present in the minds (of men). If ye do good and keep from evil, lo! Allah is ever Informed of what ye do.

4.,யூசுஃப்ஃ அலி
Yusuf Ali: If a wife fears cruelty or desertion on her husband's part, there is no blame on them if they arrange an amicable settlement between themselves; and such settlement is best; even though men's souls are swayed by greed. But if ye do good and practise self-restraint, Allah is well-acquainted with all that ye do.

(4:128:6) nushūzan=ill-conduct,ill treatment,cruelty or desertion,பிணக்கு, புறக்கணிப்பு

ஆணுக்கு என்று வரும்போது பிரிதல் ,புறக்கணிப்பே மொழியாகக்ங்களில் பயன் படுத்தப் படுவதால் குரான் 4.34லும் இதே அர்த்தம் பயன் படுத்தப் படவேண்டுமென்று விளங்கும்.
மனைவிய அடிபதற்காக காரணம்
அ) மனைவி கணவனை வெறுத்து ஒதுக்கினால்
ஆ)கொடுமை படுத்தினால்
இ) மோசமான நடத்தை(என்ன என்று சரியாக கூற முடியாது)

குரான் த்வறான பாலுறவுகளுக்கு பல தண்டனைகளை வழங்குகிறது

விபசாரத்திற்கான தண்டனை

24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

__________

ஒரு பெண்ணின் மீது அபாண்டமாக குற்றம் சொல்பவருக்கு என்ன தண்டனை?



குரான் 24.4

24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

_____________

கணவன் சந்தேகப் படுகிறான் ஆனால் சாட்சி இல்லை என்ன செய்வது?


24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:

24:7. ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).

24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
24:9. ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
____________



குரான் என்பது ஆறாம் நூற்றாண்டு மனிதர்களின் வாழ்வுக்கு எளிதாக புரியும் வகையில் சில தீர்வுகளை கூறுகின்றது.அத்னை மதவாதிகள்

எக்காலத்திற்கும் பொருந்துவது என்று ஏமாற்றுவதுதான் பிரச்சினை.இது அக்காலத்திற்கு மட்டும்,இப்போது இல்லை.


அதுவும் சிறு தவறுக்கு கடைசி வாய்ப்பாக சொல்லி இருக்கிறது,இப்போதைய நாகரிக உலகில் இதனை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினால் பரவாயில்லை.


இரண்டாம் பகுதி முடிந்தது.அதாவது பெண்ணை அடிக்க சொல்வது அவள் பணிவின்மை அல்லது கணவனை வெறுத்து ஒதுக்குவதற்காக மட்டுமே,ஒருவேளை அவள் துரோகம் செய்தால் குரான் அளிக்கும் தண்டனை வேறு ஆகும்
இன்னும் ஒரு எடுத்துக் காட்டாக ஒரு ஹதிது பாருங்கள்.
5825. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 
(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மைஅடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார். 
-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி 
(நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார். 
அப்பெண்மணி, '(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், 'பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்' என்றார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' அல்லள்' என்றார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களின் இரண்டு மகன்களையும் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். 'இவர்கள் உங்கள் புதல்வர்களா?' என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்' என்றார்கள்.45 
Volume :6 Book :77.
*                *                *

PART(C)

அவ்வள‌வுதான் முடிந்தா என்கிறீர்களா,யாரை அடிக்க சொல்கிறது என்பதைதான் பார்த்தோம்.இப்போது உண்மையிலேயே அடிக்கத்தான் சொல்கிறதா என்பதையும் பார்த்து விடுவோம்.

நான் சொல்ல நினைத்தது எல்லாவற்றையுமிக்காணொளியில் ஒரு நண்பர் மிக அருமையாக கூறியுள்ளார். நான் சொல்வதற்கு ஏதுமில்லை.




இப்போது சொல்லுங்கள் குரான் மனைவியை அடிக்க சொல்லி இருக்கிறதா?

Monday, April 11, 2011

ஃப்ரான்ஸின் முகத்திரை தடை பற்றிய விவாதம்


இன்று(11/4/2011) முதம் ஃப்ராஸ் நாட்டில் பெண்கள் முகத்திரை அணிய தடை விதிக்கப் பட்ட்டுள்ளது.அப்படி அணிபவர்கள் 150$ அபராதம் எனவும் அரசாங்க அறிவிப்பு கூறுகிறது.







ஃப்ரான்ஸில் சுமார் 50  இலட்சம்(5%) இஸ்லாமியர்கள்  வசிக்கின்ற்னர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டாம் உலக்ப் போருக்கு பின் வட ஆப்பிரிக்க நாடுகள்,ஃப்ரான்ஸின் முந்தைய காலனி நாடுகளில் இருந்து வேலை வாய்ப்புகளுக்காக புலம் பெயர்ந்த‌வர்கள்.. ஐரோப்பாவில அதிக சதவீத இஸ்லாமிய மக்களை கொண்ட நாடுகளில் ஃப்ரான்ஸும் ஒன்று.
_____________________________

Algeria                                   1,550,000
Morocco                               1,000,000
Tunisia                                     350,000
Turkey                                    315,000
Sub-Saharan Africa                250,000
Middle East                           100,000
Asians                                   100,000 (mostly from Pakistan and Bangladesh)
Converts                                 40,000
illegal immigrants or 
awaiting regularisation  350,000
Other                                  100,000
___________________________
Total                                4,155,00
____________________________


இப்போது ஃப்ரான்ஸ் அரசாங்கம் தடை விதிப்பதை எதிர்த்து மத வாதிகள் என்ன கூறுவார்கள்?

இது எங்கள் மத கடமை.இதில் அரசு தலையிடக் கூடாது என்பார்கள்.இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக் வசிக்கும் பல நாடுகளில் இந்த முகத்திரை என்பது தனிப்பட்ட விருப்பமாகவே இருக்கிறது. சவுதியில் கூட முகத்தை மறைக்கும் திரை பெண்கள் அணிவது விருப்பம் சார்ந்தது.நாங்கள் விரும்பி அணியும் ஆடை,இதை தடை செய்வது மனித விரோதம்.

ஃப்ரான்ஸ் அரசாங்கம் என்ன கூறுகிறது?

பொது இடங்களில் முகத்தை மறைக்கும் திரை அணிவது பெண் அடிமைத்தனமாகவும்,பாதுகாப்புக்கு இடையூறாகவும் இருப்பதால் தடை செய்தோம்.
________________________
சரி இதில் என்ன உண்மையில் நடக்கிறது?

மீண்டும் பதிவின் முதல் பகுதியை படிக்கவும். ஃப்ரான்ஸின் மக்கள் தொகையில் 5% இஸ்லமியர். அபோது சுமார் 2.5 % பெண்கள்.  ப்ரான்ஸில் வசிக்கும் இஸ்லாமியர்கள் பல்வேறு நாடுகளை சேர்தவர்கள் என்று பார்தோம். ஒவ்வொரு நாட்டிலும் பல விதமான ஆடைகளை மத சம்பிரதாயமாக் பயன் படுத்துகின்றன்ர்.பணி புரியும்,படிக்கும் பெண்களில் முகத்தை மறைக்கும் திரை அணிபவ‌ர்கள்  சுமார் 1% என்று கொள்ளலாம்.

1%( 5 லட்சம்) பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்று கொண்டால் அது அரசுக்கு பிரச்சினை இல்லையே!!!!.

பிறகு ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சட்டம் இயற்ற‌ வேண்டும்?

மீண்டும் அந்த மக்கள் தொகை விவரங்களை பார்க்கவும்.

1. ஃப்ரான்ஸில் இரண்டாம் உலக்ப் போருக்கு பின் மீள் கட்டமைப்பிற்கு குறைந்த கூலியில் ஆட்கள் தேவைப் பட்டதால் மட்டுமே இஸ்லாமியர் உட்பட பல்ருக்கு குடியுரிமை வழங்கப் பட்டது.

2.குடியுரிமை வழங்கப் பட்டால் அவர்களின் வருமானம் நாட்டிற்கு உள்ளேயே செலவு செய்யப் படும்.பொருளாதாரம் பாதிக்காது.

3. இப்போது வேலை வாய்ய்ப்பும்,பொருளாதாரமும் மந்த நிலை காணப் படுவதால் அனைத்து ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளும் குடியுரிமை வழங்குதல் விதிகளை கடுமை யாக்கி வருகின்றன.இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிவேகத்தில் அதிகரிப்பதாகவும்,ஐரோப்பா அமெரிக்கா இஸ்லாமிய நடுகள் ஆகிவிடும் என்ற பரப்புரைகளும் திட்டமிட்டு அரங்கேற்றப் படுகின்றன



.4.இப்போது இத்தடை மூலம் எதிர்ப்பு வலுக்க வேண்டும் என்றே ஃப்ரான்ஸ் அரசு விரும்புகிறது.அதன் மூலம் பலரை வெளியேற்றலாம்.சில வசதி உள்ளவர்கள்(அரபு) இஸ்லாமியர்கள் புலம் பெயர்ந்து தங்கள் நாட்டுக்கே செல்லலாம்..

5. சரியான விசா இல்லாதவர்களை மதவாத முத்திரை குத்தி எளிதாக நாடுகடத்தலாம்..மனித உரிமை மீறல் பிரசினையாக அல்லாமல் மதவாததிற்கு எதிரான போராட்டமாக் சொல்லிக் கொள்ளலாம்.

6.எதிர்கால இஸ்லாமிய குடியேற்றங்கள் தடுக்கப் படும்.ஃப்ரான்ஸ் ஒரு தொடக்கமே.எல்லா ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுமே இப்போக்கை கடைப் பிடித்தால் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
___________________


இந்த மதவாதிகள் இந்த மாதிரி மத விஷயங்களுக்கு பொங்கி எழுந்துபோராடும் அளவிற்கு,இஸ்லாமியர்களின் ஜன்நாயக,கல்வி ,பொருளாதார,வேலை வாய்ப்பு பிரச்சிகளை கண்ர்டு கொள்ள‌ மாட்டார்கள்.

ஃப்ரான்ஸ் அரசு மதவாதிகளை மலை போல் நம்பியே இத்தடையை கொண்டு வந்திருக்கிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த முகத்திரை பற்றி ஒரு விவாதம் இதையும் பாருங்கள்.




Saturday, April 9, 2011

மோஸஸ் கதை வரலாறா?




பைபிளின் யாத்திராகமத்தில் வரும் மோஸஸ் யூதர்களை எகிப்தில் இருந்து இப்போதைய பாலஸ்தீனம்(இஸ்ரேல்) நாட்டுக்கு அழைத்து வந்த சாகசக் கதை  அனைவரும் அறிந்ததே.இக்கதை தோரா,பைபிள், மற்றும் குரானிலும் கூறப்ப்டகிறது. எகிப்து மக்களை பலவிதங்களில் வாட்டி வதைத்து கடவுள் அவர்களிடமிருந்து யூதர்களை மோஸஸ் தலைமையில் 40 வருடம் வழி காட்டி(??) ஒருவழியாக பாலச்தீனம் வந்து அங்கிருந்த மக்களை கொலவதற்கு உதவி ,அந்த நாட்டை அளிக்கிறார்.
இக்கதை உண்மையிலேயே நடந்ததா,வரலாற்றில் இதற்கு சான்றுகள் உண்டா இந்த ஆவணப் படத்தில் கொஞ்சம் அலசி இருக்கிறார்கள்.
கண்டு மகிழுங்கள்
                                                                                Part 1

Part 2

Part 3


Part 4


Part 5


குரான் ஹதித் கதைகள் எங்கிருந்து வந்தது?




பைபிளில் பல கதைகள் உண்டு.குரானிலும் சில கதைகள் அதே விதமாகவோ அல்லது மாற்றமாக்வோ கூறப்படுவது உண்டு.பைபிள் என்பது பழங்கால்த்தில் வழங்கி வந்த பல் நூல்களில் ஒரு பகுதியை தொகுத்தே இப்போதைய பைபிள் தொகுக்கப்பட்டது என்பதை காயீனின் மனைவி பதிவில் கூறியதை ஞாபகப் படுத்திக் கொள்ளவும்.

அது போலவே ஒவ்வொரு குரான் உள்ள பல் கதைகளை அப்புத்தகங்கள்  ஏதாவது ஒன்றில் அப்படியே காட்ட முடியும் என்றால் எப்படி இருக்கும்?

இந்த் காணொளியில் நன்றாக விளக்கி இருக்க்கிறார்கள்.ஏதாவது விளக்கம் வேண்டுமானால் அளிக்கிறேன்.  இபதிவில் சொல்லாத வேறு எங்குமே காட்ட முடியாத குரான் கதை உண்டா என்று தேடிக் கொண்டு இருக்கிறேன்.நண்பர்கள் உதவலாம்.கண்டு மகிழுங்கள்.


Tuesday, March 29, 2011

மதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?.



இப்போது இணையத்திலும்,தொலைக்காட்சியிலும் எங்கள் மத புத்தகத்தில் அறிவியல் கோட்பாடுகள் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை  அனைவ்ரும் அறிவோம்.இதில் ஆபிரஹாமிய மதங்களே இப்படிமத பரப்புரையில் ஈடுபடுகின்ற்ன. தமிழர்களில் கிறித்தவ,இஸ்லாமிய மதத்தவர் இக்கூற்றுகளை தமிழில் பரப்பி வருகின்றனர்..கிறித்தவர்களின் வேத தமிழ் மொழி பெயர்ப்பை படித்தாலே அவர்கள் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதை எளிதாக சரிபார்க்கலாம்.

குரான் அரபியில் இருப்பதாலும்,மொழி பெயர்ப்புகள் வித்தியாசமாகவும்  குழப்பமாகவும் இருப்பதாலும் குரானில் குறிப்பிடப்படும் பல விஷயங்கள் யார் எங்கே ,எப்போது என்று அறுதியிட்டு கூறவே முடியாது குரான்,இஸ்லாம் விமர்சிக்க படுவது அதுவே இறுதி உண்மையான நெறி(மத வாதிகளின் கூற்று) ,பிற மதத்தினரின் சதி என்பது தவறு.இஸ்லமை ஆன்மீக கொள்கையாக கொண்டு மர‌ணத்திற்கு பின் அழிவற்ற வாழ்க்கையும், எல்லையற்ற பேரின்பமும் அடைய விரும்பினால் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

ஆனால் இஸ்லாமின் மத அடிப்படைவாத சட்டமான் ஷாரியா,இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தவர் நிலைமை, மற்றும் உலகம் முழுதும் இஸ்லாமிய அரசு அமைத்தல் என்ற விஷயங்க்ளே இஸ்லாமை,முஸ்லிம்களை பிற மதத்தவரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.நமது சகோதர நாடான பாகிஸ்தான்,பங்களா தேஷ் ஆகியவ்ற்றில் நடைபெறும் நிலையற்ற ஆட்சி,மனித உரிமை மீறல்கள் அனைத்துமே மத ரீதியான ஆட்சியால் இந்த் கால கட்டத்திற்கு பொருந்தக்கூடிய ஆட்சிமுறையை வழங்க முடியாது என்பதையே காட்டுகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் மக்கள் எழுச்சியும் கூட ஜனநாயகத்தை நோக்கிய ஒரு போராட்டமே.மத ரீதியான ஆட்சி நடத்துதுவதாக காட்டிக் கொள்ளும் அரசர்கள் ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதிகளாக நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க உதவுவதும்,இதனை மறைக்க மத பிரச்சாரங்களுக்கு பொருளுதவி செய்வதும்,உலகளாவிய மத தலைவராக முயல்வதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும்.

இந்த மத பரப்புரைகள் எந்த சூழ்நிலையில் வளரும் நாடுகளில் உள்ள மக்களை நோக்கி செய்யப்படுகின்றன என்பதை பார்த்தோம். மதம் ஆன்மீகமாக இல்லாமல் சர்வ ரோஹ நிவாரணி என்னும் மாயவலையில் ம்தத்திற்காக எதையும் செய்ய வேண்டுமென்ற மன்நிலைக்கு ஒரு சாதாரண மனிதனை ஆளாக்க கூடாது.இந்தியாவில்,பிற மத நாடுகளில் மட்டும் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்றால் பிற மத நாடுகளில் பேரளவிலாவது ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயகம்,மதமற்ற அரசியல் போன்றவை இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் மிக அரிது.ஒன்ற்ரண்டு விதி விலக்குகள் இந்தோநேசியா,மலேசியா போன்ற நாடுகள் இருக்கலாம். அவையும் இந்த பரப்புரையில் விழுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஆட்சி மாற்ற‌த்திற்கு மனித உயிர்கள் பலையாவதும் மத்திய கிழக்கில் வழக்கமான் செயல் ஆகிவிட்டது.  மதத்தின் ஒரு குறிப்பிட்ட ரீதியான விளக்கம்,மதம் சார்ந்த்த அரசியல் என்பதே இப்பரப்புரைகளின் நோக்கமாகும் என்பதில் ஐயம் இருந்தால் இந்த பரப்புரையாளர்களிடம் ஷாரியா சட்டம் இல்லாமல் இஸ்லாம் இருக்க முடியுமா என்று கேளுங்கள்.ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அப்படி அவர்கள் ஷாரியாவின் மீதான இஸ்லாமிய அரசு இப்போதைய சட்டங்களை விட எப்படி சிறந்தது என்று சொல்ல மாட்டார்கள்,அதை விவாதிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக குரானில் அறிவியல் உள்ளது ஆகவே இது இறைவனின் வார்த்தை ,ஷாரியாவும்,இஸ்லாமிய அரசும் இறைவனின் கட்டளைகள் என்று மெதுவாக கருத்தாக்கம் செய்வார்கள். இஸ்லாமிய நாடுகளின் கல்லெறிந்து கொல்லுதல்,சவுக்கடி,கையை வெட்டுதல் என்பதெல்லாம் பிற நாடுகளில் மனித உரிமை மீறலாக கருதப்படுவதும் அறிந்ததே. இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தினர் மட்டுமல்ல,பிற் பிரிவு இஸ்லாமியர்,நடு நிலைமையான இஸ்லாமியர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மாற்றுக் கருத்தானது வன்முறை கொண்டே எதிர்க்கப்படுகின்றது.பதிவை படிக்கும் நண்பர்கள் இது மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கத்திற்கு எதிரானது மட்டுமே,தனிப்பட்ட தமிழ்(இந்திய) இஸ்லாமியர்களின் மதம்,ஆன்மீகத்தில் இருந்து தொடர்பு அற்றது என்பதை அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். 

இஸ்லாமிய மத பரப்புரைகளை எப்படி சரி பார்ப்பது,அவர்களின் கூற்றுகளை எப்படி மறுப்பது என்பதற்காக இந்த பதிவு.

குரானே தன்னிடத்தில் புரியாத வசனங்கள் உண்டு என்றே கூறுகிறது.

3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

Yusuf Ali: He it is Who has sent down to thee the Book: In it are verses basic or fundamental (of established meaning); they are the foundation of the Book: others are allegorical. But those in whose hearts is perversity follow the part thereof that is allegorical, seeking discord, and searching for its hidden meanings, but no one knows its hidden meanings except Allah. And those who are firmly grounded in knowledge say: "We believe in the Book; the whole of it is from our Lord:" and none will grasp the Message except men of understanding.

_______________

இப்பதிவில் உலகம் உருண்டை என்று எங்கள் புத்தகத்தில் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை எடுத்துக் கொள்வோம்.







இந்த யு டியூபிலும் இந்த பரப்புரைகள் அதிகமாக கிடக்கின்றன.இந்த காணொளியில் குரான் 79.30 ல் பூமி நெருப்புக் கோழி முட்டை போல் உள்ளது என்று கூறுவதை கேளுங்கள்.

1.முதலில் யாரேனுமிந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்று கூறினால் உடனே அவ்வசனத்தை குறித்து கொள்ளுங்கள்..

அவ்வசனத்தை தமிழிலும்,ஆங்கிலத்திலும்,வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பில் பார்த்தால் ஒரு அளவிற்கு அந்த வசனம் என்ன கூறுகிறது என்று புரியும். குரான் வசனம் சரிபார்க்க  இந்த தளத்தில் பார்க்கவும்.ஆங்கில மொழி பெயர்ப்பில் திரு பித்கல்,யூசுஃப் அலி(இவர் இந்திய போஹ்ரா பிரிவு இஸ்லாமியர்) எளிதாக இருக்கும்..ஆனால் யூசுஃப் அலி மொழி பெயர்ப்பில் எப்போதும் அறிவியலை ஒத்து வருமாறே மொழி பெயர்ப்பார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.



79:30 இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.


Sahih International: And after that He spread the earth.


Pickthall: And after that He spread the earth,


Yusuf Ali: And the earth, moreover, hath He extended (to a wide expanse);


Shakir: And the earth, He expanded it after that.


Muhammad Sarwar: After this, He spread out the earth,


Mohsin Khan: And after that He spread the earth;


Arberry: and the earth-after that He spread it out,

Waalarda baAAda thalika dahaha


வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு வேண்டுமெனில் இத்தளத்தில் கிடைக்கும்.
http://corpus.quran.com/


Waalarda -And the earth
baAAda -after
thalika -that
dahaha-He spread it.

இந்த வசனத்தை பார்த்தாலே நெருப்புக் கோழி முட்டை என்பது குறிப்பிடப்படவில்லை என்பது தெரியும்.இபோது இரண்டாவ்து கட்டத்திற்கு செல்வோம்.

2.குரான் என்பது 1400 வருடங்களுக்கு முந்தைய புத்தகம்.அது அப்போது எப்படி அர்த்தம் கொள்ளப்பட்டதோ, விளங்கப்பட்டதோ அப்படியே இப்போதும் சொல்லப்பட்டால் மட்டுமே அது உண்மையான விளக்கம். 


இதற்கு பல குரான் விளக்கங்கள்(தஃப்சீர்) உண்டு.இதில் இபின் அப்பாஸ்(முகமதுவின் உறவினர் 618_678),அல் சுயுட்டி போன்றவர்களின் விளக்கங்கள் ஒரு அளவிற்கு இந்த வசனங்கள் 6ஆல் நூற்றாண்டில் எப்படி பொருள் கொள்ளப்பட்டதோ அது போலவே இருக்கும். இந்த வசனத்தின் விளக்கத்தை பார்ப்போம்.

anwîr al-Miqbâs min Tafsîr Ibn ‘Abbâs 
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }

(And after that He spread the earth) even then He spread it on the water; it is also said: 2,000 years after that He spread it on the water,


* تفسير Tafsir al-Jalalayn 
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }

and after that He spread out the earth: He made it flat, for it had been created before the heaven, but without having been spread out;

படித்தால் பூமி தட்டை என்று சொல்வது போல் இருக்கிறதே என்றால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

3.மேற்கூறிய இரு செயல்களை கொண்டு இந்த பரப்புரைகளை எளிதில் மறுக்கலாம். விவாதிக்க அவசியம் இல்லையென்று நினைத்தாலும் சரி பார்த்தோம் என்ற ஒரு திருப்தி வரும். பல நண்பர்கள் யு டியூபிலும் இந்த பரப்புரைகளை மறுத்து காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள்.இந்த காணொளியில் நாம் சொன்ன விஷயங்கள் அனைத்தும் செய்முறை விளக்கமாக காட்டப்பட்டுள்ளது. பாருங்கள். தெளிவு பெருங்கள்.








குரானின் பல வார்த்தைகளுக்கு பல பொருள் கூற முடியும்.அதில் ஏதாவது ஒன்றை அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்ற மாதிரி காட்ட முடியும்.இதில் என்ன ஏமாற்று வேலை என்றால் ஏற்கெனவே இல்லாத அர்த்தம் எல்லாம் புதிதாக க‌ண்டுபிடித்தல், அதாவது இந்த டஹாஹ[dahaha] என்ற வார்த்தைக்கு புதிதாக நெருப்புக் கோழி முட்டை என்று ஒரு அர்த்தம் புதிதாக கண்டு பிடித்து பாருங்கள் அறிவியலை என்று கூறுவதில் இருந்து படிக்கும் நண்பர்கள் இந்த மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.ஜாகிர் நாயக்கின் விளக்கத்தில் இருந்து அது நன்றாக விளங்கும்.