Tuesday, March 29, 2011

மதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?.



இப்போது இணையத்திலும்,தொலைக்காட்சியிலும் எங்கள் மத புத்தகத்தில் அறிவியல் கோட்பாடுகள் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை  அனைவ்ரும் அறிவோம்.இதில் ஆபிரஹாமிய மதங்களே இப்படிமத பரப்புரையில் ஈடுபடுகின்ற்ன. தமிழர்களில் கிறித்தவ,இஸ்லாமிய மதத்தவர் இக்கூற்றுகளை தமிழில் பரப்பி வருகின்றனர்..கிறித்தவர்களின் வேத தமிழ் மொழி பெயர்ப்பை படித்தாலே அவர்கள் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதை எளிதாக சரிபார்க்கலாம்.

குரான் அரபியில் இருப்பதாலும்,மொழி பெயர்ப்புகள் வித்தியாசமாகவும்  குழப்பமாகவும் இருப்பதாலும் குரானில் குறிப்பிடப்படும் பல விஷயங்கள் யார் எங்கே ,எப்போது என்று அறுதியிட்டு கூறவே முடியாது குரான்,இஸ்லாம் விமர்சிக்க படுவது அதுவே இறுதி உண்மையான நெறி(மத வாதிகளின் கூற்று) ,பிற மதத்தினரின் சதி என்பது தவறு.இஸ்லமை ஆன்மீக கொள்கையாக கொண்டு மர‌ணத்திற்கு பின் அழிவற்ற வாழ்க்கையும், எல்லையற்ற பேரின்பமும் அடைய விரும்பினால் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

ஆனால் இஸ்லாமின் மத அடிப்படைவாத சட்டமான் ஷாரியா,இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தவர் நிலைமை, மற்றும் உலகம் முழுதும் இஸ்லாமிய அரசு அமைத்தல் என்ற விஷயங்க்ளே இஸ்லாமை,முஸ்லிம்களை பிற மதத்தவரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.நமது சகோதர நாடான பாகிஸ்தான்,பங்களா தேஷ் ஆகியவ்ற்றில் நடைபெறும் நிலையற்ற ஆட்சி,மனித உரிமை மீறல்கள் அனைத்துமே மத ரீதியான ஆட்சியால் இந்த் கால கட்டத்திற்கு பொருந்தக்கூடிய ஆட்சிமுறையை வழங்க முடியாது என்பதையே காட்டுகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் மக்கள் எழுச்சியும் கூட ஜனநாயகத்தை நோக்கிய ஒரு போராட்டமே.மத ரீதியான ஆட்சி நடத்துதுவதாக காட்டிக் கொள்ளும் அரசர்கள் ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதிகளாக நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க உதவுவதும்,இதனை மறைக்க மத பிரச்சாரங்களுக்கு பொருளுதவி செய்வதும்,உலகளாவிய மத தலைவராக முயல்வதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும்.

இந்த மத பரப்புரைகள் எந்த சூழ்நிலையில் வளரும் நாடுகளில் உள்ள மக்களை நோக்கி செய்யப்படுகின்றன என்பதை பார்த்தோம். மதம் ஆன்மீகமாக இல்லாமல் சர்வ ரோஹ நிவாரணி என்னும் மாயவலையில் ம்தத்திற்காக எதையும் செய்ய வேண்டுமென்ற மன்நிலைக்கு ஒரு சாதாரண மனிதனை ஆளாக்க கூடாது.இந்தியாவில்,பிற மத நாடுகளில் மட்டும் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்றால் பிற மத நாடுகளில் பேரளவிலாவது ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயகம்,மதமற்ற அரசியல் போன்றவை இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் மிக அரிது.ஒன்ற்ரண்டு விதி விலக்குகள் இந்தோநேசியா,மலேசியா போன்ற நாடுகள் இருக்கலாம். அவையும் இந்த பரப்புரையில் விழுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஆட்சி மாற்ற‌த்திற்கு மனித உயிர்கள் பலையாவதும் மத்திய கிழக்கில் வழக்கமான் செயல் ஆகிவிட்டது.  மதத்தின் ஒரு குறிப்பிட்ட ரீதியான விளக்கம்,மதம் சார்ந்த்த அரசியல் என்பதே இப்பரப்புரைகளின் நோக்கமாகும் என்பதில் ஐயம் இருந்தால் இந்த பரப்புரையாளர்களிடம் ஷாரியா சட்டம் இல்லாமல் இஸ்லாம் இருக்க முடியுமா என்று கேளுங்கள்.ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அப்படி அவர்கள் ஷாரியாவின் மீதான இஸ்லாமிய அரசு இப்போதைய சட்டங்களை விட எப்படி சிறந்தது என்று சொல்ல மாட்டார்கள்,அதை விவாதிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக குரானில் அறிவியல் உள்ளது ஆகவே இது இறைவனின் வார்த்தை ,ஷாரியாவும்,இஸ்லாமிய அரசும் இறைவனின் கட்டளைகள் என்று மெதுவாக கருத்தாக்கம் செய்வார்கள். இஸ்லாமிய நாடுகளின் கல்லெறிந்து கொல்லுதல்,சவுக்கடி,கையை வெட்டுதல் என்பதெல்லாம் பிற நாடுகளில் மனித உரிமை மீறலாக கருதப்படுவதும் அறிந்ததே. இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தினர் மட்டுமல்ல,பிற் பிரிவு இஸ்லாமியர்,நடு நிலைமையான இஸ்லாமியர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மாற்றுக் கருத்தானது வன்முறை கொண்டே எதிர்க்கப்படுகின்றது.பதிவை படிக்கும் நண்பர்கள் இது மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கத்திற்கு எதிரானது மட்டுமே,தனிப்பட்ட தமிழ்(இந்திய) இஸ்லாமியர்களின் மதம்,ஆன்மீகத்தில் இருந்து தொடர்பு அற்றது என்பதை அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். 

இஸ்லாமிய மத பரப்புரைகளை எப்படி சரி பார்ப்பது,அவர்களின் கூற்றுகளை எப்படி மறுப்பது என்பதற்காக இந்த பதிவு.

குரானே தன்னிடத்தில் புரியாத வசனங்கள் உண்டு என்றே கூறுகிறது.

3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

Yusuf Ali: He it is Who has sent down to thee the Book: In it are verses basic or fundamental (of established meaning); they are the foundation of the Book: others are allegorical. But those in whose hearts is perversity follow the part thereof that is allegorical, seeking discord, and searching for its hidden meanings, but no one knows its hidden meanings except Allah. And those who are firmly grounded in knowledge say: "We believe in the Book; the whole of it is from our Lord:" and none will grasp the Message except men of understanding.

_______________

இப்பதிவில் உலகம் உருண்டை என்று எங்கள் புத்தகத்தில் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை எடுத்துக் கொள்வோம்.







இந்த யு டியூபிலும் இந்த பரப்புரைகள் அதிகமாக கிடக்கின்றன.இந்த காணொளியில் குரான் 79.30 ல் பூமி நெருப்புக் கோழி முட்டை போல் உள்ளது என்று கூறுவதை கேளுங்கள்.

1.முதலில் யாரேனுமிந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்று கூறினால் உடனே அவ்வசனத்தை குறித்து கொள்ளுங்கள்..

அவ்வசனத்தை தமிழிலும்,ஆங்கிலத்திலும்,வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பில் பார்த்தால் ஒரு அளவிற்கு அந்த வசனம் என்ன கூறுகிறது என்று புரியும். குரான் வசனம் சரிபார்க்க  இந்த தளத்தில் பார்க்கவும்.ஆங்கில மொழி பெயர்ப்பில் திரு பித்கல்,யூசுஃப் அலி(இவர் இந்திய போஹ்ரா பிரிவு இஸ்லாமியர்) எளிதாக இருக்கும்..ஆனால் யூசுஃப் அலி மொழி பெயர்ப்பில் எப்போதும் அறிவியலை ஒத்து வருமாறே மொழி பெயர்ப்பார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.



79:30 இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.


Sahih International: And after that He spread the earth.


Pickthall: And after that He spread the earth,


Yusuf Ali: And the earth, moreover, hath He extended (to a wide expanse);


Shakir: And the earth, He expanded it after that.


Muhammad Sarwar: After this, He spread out the earth,


Mohsin Khan: And after that He spread the earth;


Arberry: and the earth-after that He spread it out,

Waalarda baAAda thalika dahaha


வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு வேண்டுமெனில் இத்தளத்தில் கிடைக்கும்.
http://corpus.quran.com/


Waalarda -And the earth
baAAda -after
thalika -that
dahaha-He spread it.

இந்த வசனத்தை பார்த்தாலே நெருப்புக் கோழி முட்டை என்பது குறிப்பிடப்படவில்லை என்பது தெரியும்.இபோது இரண்டாவ்து கட்டத்திற்கு செல்வோம்.

2.குரான் என்பது 1400 வருடங்களுக்கு முந்தைய புத்தகம்.அது அப்போது எப்படி அர்த்தம் கொள்ளப்பட்டதோ, விளங்கப்பட்டதோ அப்படியே இப்போதும் சொல்லப்பட்டால் மட்டுமே அது உண்மையான விளக்கம். 


இதற்கு பல குரான் விளக்கங்கள்(தஃப்சீர்) உண்டு.இதில் இபின் அப்பாஸ்(முகமதுவின் உறவினர் 618_678),அல் சுயுட்டி போன்றவர்களின் விளக்கங்கள் ஒரு அளவிற்கு இந்த வசனங்கள் 6ஆல் நூற்றாண்டில் எப்படி பொருள் கொள்ளப்பட்டதோ அது போலவே இருக்கும். இந்த வசனத்தின் விளக்கத்தை பார்ப்போம்.

anwîr al-Miqbâs min Tafsîr Ibn ‘Abbâs 
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }

(And after that He spread the earth) even then He spread it on the water; it is also said: 2,000 years after that He spread it on the water,


* تفسير Tafsir al-Jalalayn 
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }

and after that He spread out the earth: He made it flat, for it had been created before the heaven, but without having been spread out;

படித்தால் பூமி தட்டை என்று சொல்வது போல் இருக்கிறதே என்றால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

3.மேற்கூறிய இரு செயல்களை கொண்டு இந்த பரப்புரைகளை எளிதில் மறுக்கலாம். விவாதிக்க அவசியம் இல்லையென்று நினைத்தாலும் சரி பார்த்தோம் என்ற ஒரு திருப்தி வரும். பல நண்பர்கள் யு டியூபிலும் இந்த பரப்புரைகளை மறுத்து காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள்.இந்த காணொளியில் நாம் சொன்ன விஷயங்கள் அனைத்தும் செய்முறை விளக்கமாக காட்டப்பட்டுள்ளது. பாருங்கள். தெளிவு பெருங்கள்.








குரானின் பல வார்த்தைகளுக்கு பல பொருள் கூற முடியும்.அதில் ஏதாவது ஒன்றை அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்ற மாதிரி காட்ட முடியும்.இதில் என்ன ஏமாற்று வேலை என்றால் ஏற்கெனவே இல்லாத அர்த்தம் எல்லாம் புதிதாக க‌ண்டுபிடித்தல், அதாவது இந்த டஹாஹ[dahaha] என்ற வார்த்தைக்கு புதிதாக நெருப்புக் கோழி முட்டை என்று ஒரு அர்த்தம் புதிதாக கண்டு பிடித்து பாருங்கள் அறிவியலை என்று கூறுவதில் இருந்து படிக்கும் நண்பர்கள் இந்த மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.ஜாகிர் நாயக்கின் விளக்கத்தில் இருந்து அது நன்றாக விளங்கும்.


Saturday, March 19, 2011

லிபியாவின் சதாம் ஹுசைன் கடாஃபி?




லிபியா என்றாலே அனைஅருக்கும் ஞாபகம் வருவது பாலைவன சிங்கம் ஓமர் முக்தார்[கி.பி 1862_1931].இத்தாலி முசோலினிக்கு  எதிராக லிபிய விடுதலைக்காக அவர் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் அருமையான திரைப்படமாக கூட எடுக்க ப்பட்டது.முதல் உலகப்போருக்கு பின் மத்தியக் கிழக்கில் அமைந்த எல்லா அரபு நாடுகளிலுமே மன்னர்,இராணுவ அல்லது குழப்பான ஆட்சிகளே நிலவுகின்றது.நமது நாட்டில் ஆட்சி மாறினாலும் ஊழலும் ,சுரண்டலும் தொடர்வது வேறு விஷயம் என்றாலும் ஆட்சியை குப்பனிடம் இருந்து குப்பம்மாவிற்கோ அல்லது சுப்பனுக்கோ பிரசினை இல்லாமல் மாற்றுவது எளிதாக இருக்கிறது. ஜனநாயக ஆட்சியோ,ஓட்டு போட்டு பிடிக்காத ஆட்சியை மாற்றுவது என்பது மத்திய கிழக்கு நாடுகளில் சாத்தியமே இல்லை போல் தெரிகிறது. லிபியா மீது ஐ நா(என்ற போர்வையில் ஆதிக்க சக்திகள்) போர் தொடுத்ததை செய்திகளில் அறிந்திருப்பீர்கள்.இப்பதிவில் அதனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.


லிபியா

லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் தலைநகர் திரிப்பொலி..ஏறத்தாழ 1,800,000 ச.கி.மீs (700,000 sq mi) பரப்பளவுள்ள லிபியா ஆபிரிக்க நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும். லிபியாவின் மக்கள்தொகை 64 இலட்சம்.தலைநகரமான, திரிப்பொலியில் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.. இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் திரிப்பொலித்தானியா, ஃபெசான் மற்றும் சைரநைக்கா ஆகும். லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும். 2009ஆம் ஆண்டு நிலவரப்படி, சீசெல்சு, எக்குவடோரியல் கினி மற்றும் காபொன்னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) கொண்டுள்ளது. இவற்றிற்கு பெரும் பெட்ரோலிய இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன. உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது. உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும்.

முவாம்மர் அல்-கடாபி 

1951ஆம் ஆண்டு லிபியா நாடு விடுதலை பெற்றது. 1969ஆம் ஆண்டு ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இன்றுவரை முவாம்மர் அல்-கடாபி ஆண்டு வருகிறார்.ஏழைக் குடும்பமொன்றில் பிறந்த கடாபி, அதிகாரம் கையில் வந்தவுடன் குடும்ப அரசியலில் ஈடுபட்டு செல்வம் சேர்த்தமை, லிபிய மக்களின் எதிர்ப்புணர்வுக்கு முக்கிய காரணம். கடாபியின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது “கடாபா” கோத்திரமும் அரசியல்- பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பிற அரேபியர்கள் போல, லிபிய அரேபியரும் பல கோத்திரங்களாக அல்லது இனக்குழுக்களாக பிரிந்துள்ளனர். இந்த அரபிய இனக் குழுக்களுக்கிடையே ஒற்றுமை இருப்பதில்லை என்பது மத்திய கிழக்கு நாடுகளுக்கெ உரித்தான சாபம் என்று கூறலாம்.இராணுவ ஆட்சி,மத ரீதியான சட்டங்கள் என்று லிபியாவும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளை போலவே ஆட்சி நடந்து வந்தது.2011ஆம் ஆண்டு துனிஷியா ,எகிப்தின் மக்கள்புரட்சியை அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன. முதலில் லிபிய எதிர்த்தரப்பு பல கடற்கரைப் பிரதேசங்களையும் நகரங்களையும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தன. கடாஃபியின் அரசின் கட்டுக்குள் தலைநகர் திரிப்பொலியின் சில பகுதிகளும் தெற்கு பாலைப்பகுதியான சபா நகரமும் மட்டுமே இருந்தது.ஆனால் மெதுவாக நிலைமை கடாஃபிக்கு சாதகமாக திரும்பத் தொடங்கியது.ஆதரவு படைகளிடம் இருந்து இடங்களை மீட்க ஆரம்பித்தார்.எதிர்த்தரப்பிற்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சவுதி அரபிய அரசு மூலம் ஆயுதம் வழங்குவதாக குற்றம் சாட்டினார்ம கடாஃபி.லிபியா வான்வெளியில் விமானங்கள் பறக்க ஐ.நா., தடை விதித்த‌து. இந்நிலையில் போரை நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

லிபியா மீதான படை நடவடிக்கை ஆரம்பம் 

லிபியா மீதான படை நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது. முதற்கட்டமாக நேட்டோ படையினரின் கடற்படை கப்பல்களில் இருந்து 112 தொமகவ் குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமாக பென்ரகன் தெரிவித்துள்ளது.இன்று (19-3-2011) மாலை பிரான்ஸ் நாட்டு தாக்குதல் விமானங்கள் தரையில் நகர்ந்து சென்ற லிபிய இராணுவத்தின் வாகனம் ஒன்றை தாக்கியழித்தை தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளின் கடற்படை கப்பல்களில் இருந்து 112 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.லிபியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதிகளை தாக்கியழிக்கும் நோக்கத்துடனே 20 நிலைகள் தாக்கியளிக்கப்பட்டுள்ளதாக பென்ரகனின் படை அதிகாரி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.லிபியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை தாக்கி அளித்த பின்னரே விமானப் பறப்புக்களை மேற்கொள்ள தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லிபியாவின் சதாம் ஹுசைன் கடாஃபி?

கடாஃபியின் ஆட்சியில் அனைத்த்து இனக் குழுக்களுக்கும் சரியான பங்களிப்பு இல்லாததுதான் பிரச்சினைக்கு காரணம் என்றாலும் லிபியாவில் உள்ள எண்ணெய் கிணறுகள்ள் அனைத்துமே அரசுடமை ஆக்கப்பட்டு விட்டதும்,, பிற நாடுகளின்  தலையீடுகளே பிரச்சினைகளை பெரிதாக்கியது.கடாஃபி அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தில்மிகுந்த ஈடுபாடு காட்டுவதை கடாஃபி எதிர்ப்பதும்,மத்திய கிழக்கின் அமெரிக்க நண்பன் சவுதியை விமர்சிப்பதுமே மற்ற நாடுகள் அவருக்கு விரோதமாக செயல் பட தூண்டியது. 

என்ன நடக்கப் போகிறது?.

1.மக்கள் ஜனநாயகத்திற்காக போராட எல்லா உரிமை உண்டு.மத்திய கிழக்கில் அது கானல் நீராக இருப்பதால் போராட்டம் வெடிப்பதற்கு எப்போதும் வாய்ப்பு இருக்கிறது.

2.மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் தொல்லை ஆகிவிட்டது.வளத்தை சுரண்டுவதற்காக தங்களுக்கு ஆதரவான ஆட்சியாளர்களையே பதவியில் அமர்த்த‌ அமரிக்க ,மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.. 

3.கடாஃபி மேற்கத்திய நாடுகளின் தாக்குதலை இஸ்லாமின் மீது கிறித்தவர்களின் தாக்குதல்,சிலுவை போர் என்று கூறி மத்திய கிழக்கில் உள்ள அரசுகள்,மக்களின் ஆதரவை பெறும் முயற்சி பலளிக்காது என்றே தோன்றுகின்றது

4.அமெரிக்கா மேற்கத்திய நாடுகள் சவுதி உட்ட்பட்ட அரபு நாடுகளில் ஆதரவான ஆட்சிகளின் மக்கள் விரோதப்போக்குகளை கண்டு கொள்ளாமல் ஆதரவு அளித்து வருவதால்,அவையும் இந்த ப்பிரச்சினையில் மேற்கத்திய ஆதரவு போக்கையே எடுக்கும்.கொஞ்ச நாட்களுக்கு முன் கடாஃபி ஆட்சியை தூக்கி எறியுமாறு ஒரு சவுதி முல்லா ஃபத்வா கொடுத்தததை அறிந்திறிப்பீர்கள்,இல்லையென்றால் இந்த சுட்டியை பார்க்கவும்.


5.லிபியாவின் சதாம் ஹுசைன் கடாஃபி ஆவாரா இல்லையா என்பது சில நாட்களில் தெரியும்.கடாஃபிக்குப் பின் ஜனநாயகம் என்ற போர்வையில் தங்களுக்கு ஆதரவான ஆட்சியாளரை பதவியில் அமர்த்தி வளங்களை சுரண்ட வேண்டியதுதான்.

பின் குறிப்பு

வெனிஜுவேலாவிலும் எண்ணெய் வளம் இருக்கிறது.அதிபர் ஹுயுகோ அமெரிக்க எதிர்ப்பு ,பொது உடமைவாதி.ஏன் அமெரிக்கா மத்திய கிழக்கில் ஆட்சி மாற்ற‌த்தை எளிதில் ஏற்படுத்துவது போல் முடியவில்லை என்பதை உங்கள்சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.




ஓமர் முக்தார் போராடியதற்கு அர்த்தமில்லாமல் செய்த கடாஃபி போன பிறகாவது லிபியர்கள் ஒன்றுபட்டு தங்கள் நாட்டை ஆதிக்க சக்திகளில் இருந்து மீட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேன்டும்.

ஒமர் முக்தார் படம் பார்க்காதவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்(தமிழ்)
பகுதி1


பகுதி 2



பகுதி 3

Wednesday, March 16, 2011

ஆதம் ஏவாள் கதை:காயீனின் மனைவி யார்?






நான் படித்த இந்த பதிவின் இந்த வாக்கியங்களுக்காக இந்த பதிவு.


//ஆயின் காபேலை கொன்ற பிறகு ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேறி தனக்கான துணையை தேர்தெடுத்து கொண்டான், அந்த துணை எப்படி வந்தது, அது பற்றி பைபிளில் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?//

யூத்,கிறித்தவ,இஸ்லாமிய வேதங்களின் படி இறைவன் படைத்த முதல் மனிதர்கள் ஆதம்,அவர் மனைவி ஏவாள். 
இவர்களுக்கு இரு மகன்கள் காயீன் மற்றும் ஆபேல்.ஆதியாகமம் அவர்களின் கதையை இவ்விதமாக கூறுகிறது.


ஆதியாகமம் 4 அதிகாரம்

1. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

2. பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

3. சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.

4. ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.

5. காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

6. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

7. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

8. காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.

9. கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.

10. அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.

11. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

12. நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

13. அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.

14. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.

15. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

16. அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.

17. காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.

====================

இதனை படிக்கும், இயல்பாக சிந்திக்கும் யாருக்குமே வரக்கூடிய கேள்வி க்கதை நடப்பதாக சொல்லப்படும் போது உலகில் ஆதம்,ஏவாள் மற்றும் காயீன் மட்டுமே உள்ளனர்,காயீன் வேறு இடத்திற்கு சென்று விடுகிறார், அவர் மனைவி யார்?

இக்கேள்விக்கு விடை காணும் முயற்சியில் இறங்கினோம்.இதற்கு விவிலிய[பைபிள்] தொகுப்பு வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும்.


விவிலிய[பைபிள்] தொகுப்பு வரலாறு 


விவிலியம் ( புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு,  கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.

விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் இணைத் திருமுறை நூல்களை (The Deuterocanonical books) கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இந்நூல்கள் யூத மத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளை தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும் இணைத் திருமுறை புத்தகங்கள் சேர்க்கப்படுவதாலோ அல்லது அவை நீக்கப்படுவதாலோ கிறிஸ்தவத்தின் அடிப்படைகள் மாற்றமடைவதில்லை.

இதுவும் இல்லாமல் பழங்காலத்தில் பல புத்தகங்கள் புனித்மாக கடைப்பிடிக்கபபட்டன. அவற்றில் சிலவற்றை தொகுத்தே விவிலியம் உருவாக்கப் பட்டது.கிறித்தவம் ரோம பேரரசின் அரசு மதம் ஆனதும் அரசர் கான்ஸ்டன்டைன்[272‍‍ _337கி.பி] அறிஞர்களை கொண்டு தொகுத்த வாட்டிகன் கோடெக்ஸ்,சினக்டிஸ் கோடெக்ஸ என்ற மூலப் பிரதிகளை கொண்டே இப்போதைய விவிலியங்கள் அச்சிட படுகின்றன.


விவிலியத்தில் இடம் பெறாமல் போன புத்தகங்கள் அபொகிரிபா[apocrypha]  என்று அழைக்கப் படுகின்றன.அப்படி ஒரு புத்தகம்தான் ஆதம் ஏவாளின் புத்தகம்.[Book-of-Adam ]இந்த புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
The Book of Adam and Eve
The 1st Book of Adam & Eve (Revised English)




இப்புத்தகம் ஆதம் ஏவாளின் கதையை கொஞ்சம் விளக்க்ச்மாகவே கூறுகிறது.ஆதம் ஏவாள் முத்லில் பெற்றது இரட்டை குழந்தைகள்.ஆண் குழந்தை காயின் மற்றும் பெண் குழந்தை லுலுவா.

Book1:Chapter 74
The birth of Cain and Luluwa. Why they received those names.

5 And God looked at His maid-servant Eve, and delivered her, and she gave birth to her first-born son, and with him a daughter.

6 Then, Adam rejoiced at Eve’s deliverance, and also over the children she had borne him. And Adam ministered to Eve in the cave, until the end of eight days;when they named the son Cain, and the daughter Luluwa.
7 The meaning of Cain is “hater,” because he hated his sister in their mother’s womb; before they came out of it. Therefore, Adam named him Cain.

8 But Luluwa means “beautiful,” because she was more beautiful than her

ஆதம் ஏவாள் இரண்டாவது பெற்றதும் இரட்டை குழந்தைகள்.ஆண் குழந்தை ஆபேல் மற்றும் பெண் குழந்தை அகிலா.

Book1:Chapter 75

11 When the children were weaned, Eve again conceived, and when her
pregnancy came to term, she gave birth to another son and daughter. They
named the son Abel and the daughter Aklia

சாத்தான் காயின் மனதில் ஆபேல் மீது பொறாமை வர வைத்ததும் கூறபடுகிறது.காயின் விரும்பிய லுலுவாவை ஆபேல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே காயீன் ஆபேலை கொலை செய்கிறார்.

Book1:Chapter 76

10 But as to the hard-hearted Cain, Satan came to him by night, showed himself and said to him, “Since Adam and Eve love your brother Abel so much more than they love you, they wish to join him in marriage to your beautiful sister because they love him. However, they wish to join you in marriage to his ugly sister, because they hate you. 1

1 Now before they do that, I am telling you that you should kill your brother. That way your sister will be left for you, and his sister will be cast away.”

12 And Satan departed from him. But the devil remained behind in Cain’s heart, and frequently aspired to kill his brother.


பிறகு காயீனும் லுலுவாவும் வேறு இடத்திற்கு சென்று விடுகின்றனர்.

Book2:Chapter 1

The grief stricken family, Cain marries Luluwa and they move away.

1.When Luluwa heard Cain’s words, she wept and went to call her father and mother, and told them how that Cain had killed his brother Abel.

2 Then they all cried aloud and lifted up their voices, and slapped their faces, and threw dust upon their heads, and rent asunder their garments, and went out and came to the place where Abel was killed.

3 And they found him lying on the earth, killed, and beasts around him; while they wept and cried because of this just one. From his body, by reason of its purity, went out a smell of sweet spices.

4 And Adam carried him, his tears streaming down his face; and went to the Cave of Treasures, where he laid him, and wound him up with sweet spices and myrrh.

5 And Adam and Eve continued by the burial of him in great grief a hundred and forty days. Abel was fifteen and a half years old, and Cain seventeen years and a half.

6 As for Cain, when the mourning for his brother was ended, he took his sister Luluwa and married her, without leave from his father and mother; for they could not keep him from her, by reason of their heavy heart

முடிவுரை

இப்புத்தகம் ஏன் விவிலியத்தில் இடம் பெறவில்லை என்ற விவரம் தெரியவில்லை.நாம் இப்படி கூறலாம்.

1.இப்புத்தகத்தில் முறை தவ‌றிய உறவு கூறபடுவதால் நாகரிகம் கருதி தவிர்க்கப் பட்டு இருக்கலாம்.[ஆனால் பல இப்படிபட்ட‌ கதைகள் இப்போதைய விவிலியத்திலும் உண்டு]

அல்லது

2.ஏதாவது மதவாதி ஆதியாகமத்தின் விடை தெரியாத கேள்விகளுக்கு விடையளிக்க எழுதிய புத்தகம் என்று கண்டு பிடிக்கப் பட்டு இருக்கலாம்..

எனக்கு இரண்டாம் காரணமே சரியாக படுகிறது ஆமென்.





பஹ்ரைன் போராட்டம் பற்றிய விவாதம்


 

பஹ்ரைனில் மக்கள் ஆர்பாட்டங்கள் தொடர்கின்றது சவூதி மன்னர் ஆயிரம் பேரை கொண்ட இராணுவத்தை கடந்த திங்கள் கிழமைபஹ்ரைனுக்கு அனுப்பியுள்ளார் துபாயும் 500 பேரை கொண்ட படை ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிகின்றன  பஹ்ரைன் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு கூட்டம் இந்த சிறிய தீவு கூட்டம் 33 தீவுகளை கொண்டுள்ளது இதன் பெரிய தீவு 55 கி.மீ நீளத்தையும் 18 கி.மீ அகலத்தையும் கொண்டுள்ளது இங்கு உள்நாட்டு மக்களை விடவும் வெளிநாட்டு மக்கள் அதிகம் வாழ்கின்றனர் இந்த நாட்டின் மக்கள் தொகை 12 இலட்சத்தி 35 ஆயிரம் என்ற மிகவும் சிறிய மக்கள் தொகையை கொண்டுள்ளது.

ஆனால் மக்கள் தொகையில் 54 வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் இதில் இலங்கையர் , இந்தியர் பிலிபைன் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை அதிகம்  கொண்டுள்ளது. அதிகம் வெளிநாட்டவர்களை கொண்டுள்ளமையால் முஸ்லிம்களின் வீதம் 81.2 ஆக குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது கிறிஸ்தவர்கள் 8 வீதமும் ஏனைய மதத்தவர்கள் 9.8 வீதமும் உள்ளனர் இவார்களில் கணிசமான யூதர்களும் , இந்துக்களும் உள்ளனர் இந்தியர்கள் 3 இலட்சம் பேர் அங்கு தொழில் புரிந்து வருகின்றனர்.
பஹ்ரைன் மக்கள். அந்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்‌டனர். ஆனால் அறவழியில் போராட முயன்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் பலியாகினர்.அவசரநிலை : பஹ்ரைனில் கலவரம் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருப்பதால் அங்கு 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ...

Friday, March 4, 2011

வரலாற்று இயேசுவை தேடி 2:யூத வரலாற்று அறிஞர் ஜோசஃபஸ



முதலில் கிறித்தவர்களின் சுவிஷேஷங்களின் படி இயேசுவின் வரலாறை காலவரிசையுடன் தெரிந்து கொள்ளுவோம்


காலவரிசை (Timeline) 

6-4 BC •இயேசுவின் பிறப்பு 

5-4 BC • பெற்றோரால் எகிப்துக்கு கொண்டுசெல்லப்படுதல்,ஏரோது மன்னன் இயேசுவின் வயதுடைய குழந்தைகளை கொல்லுதல்.

4 BC    • ஏரோதின் மரணம். 

7-8 c • ஜெருந்சலமிற்கு பயணம். 

12 c    அகஸ்டஸ் சீசர் திபெரியஸை இளவரசனாக முடி சூட்டுகிறார்.. 

14 c • திபேரியஸ் ரோம பேரரசர் ஆகிறார்.

25 c • பிலாத்து பாலஸ்தீன அரசுபிரதிநிதியாகவும்,கைபா தலைமை மதகுருவாகவும் பதவியேற்றல். 

29 c • ஜான்(இஸ்லாமின் யாஹ்யா) ஊழியம் தொடங்குகிறார். 

29 c • இயேசுவும் ஊழியம் தொடங்குகிறார். 

31 c • திபெரியஸ் தன் தள்பதி செஜனஸுக்கு மரண தண்டனை அளிக்கிறார்.

33 c • இயேசுவின் மரணம் (வெள்ளி ,ஏப்ரல் 3, 3:00(பிற்பகல்).

36 c • பிலாத்து ,கைபா பதவி நீக்கம்.

37 c • திபெரியஸ் சீசரின் மரணம்

வரலாற்று அறிஞர் ஜோசஃபஸ்(c.37 – 100)


இவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று அறிஞர் யூதர்களின் வரலாற்றை தொகுத்தளித்தவர்களில் மிக்கியமானாராக கருதப்படுகிறார்.
இவர் ரோம அரசுக்கு விசுவாசமாக இருந்தவர் என்று கூறப்பட்டாலும் இவர் எழுத்துக்கள் அதாரப்பூர்வமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஜோசஃபஸ் இயேசுவின் ச்கோதனாக ஜேம்ஸ் என்பவரை குறிப்பிட்டு,ஜேம்ஸ் ஒரு யூதக்குழுவிற்கு தலைவராக இருந்ததாக குறிப்பிடுகிறார்.இயேசு,அரச பிரதிநிதி பிலாத்து,மதகுரு கைபா, யோவான்(ஜான்) ஸ்நானகனாகியோரைபற்றியும் குறிப்பிடுகிறார்.


see chapter 3

*********
ஜோசஃபஸ் கூற்றுகளின் மொழியாக்கம்

3. Now there was about this time Jesus, a wise man, if it be lawful to call him a man; for he was a doer of wonderful works, a teacher of such men as receive the truth with pleasure. He drew over to him both many of the Jews and many of the Gentiles. He was [the] Christ. And when Pilate, at the suggestion of the principal men amongst us, had condemned him to the cross, (9) those that loved him at the first did not forsake him; for he appeared to them alive again the third day; (10) as the divine prophets had foretold these and ten thousand other wonderful things concerning him. And the tribe of Christians, so named from him, are not extinct at this day.


பிலாத்துவின் காலத்தில் இயேசு என்ற ஞானி(மனிதர் என்றே குறிப்பிடுவதில் தயக்கம் இருப்பதாக ஜோசஃபஸ் குறிப்பிடுகிறார்) ,போதகர் பல‌ யூதர்களுக்கும்,பிறருக்கும் சத்தியத்தை போதித்து வந்தார் .பிலாத்து சிலரின் குற்றச்சாட்டுகளின் பேரில் சிலுவையில் அறைய செய்தான் என்று குறிபிடுகிறார்.அவர் வணங்கியவர்களுக்கு உயிரிடன் தெரிந்ததாகவும்,அவரை வணங்குபவர்கள்,கிறித்தவர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் கூறுகிறார்.
*************

பிறகென்ன ஜோசஃபஸின் கூற்று கிறித்தவர்களின் சுவிஷேசங்களுக்கு ஒத்து போகின்றது அல்லவா,பிறகென்ன பிரச்சினை என்று கூறலாம்.

ஜோசஃபஸின் புத்தகத்தில் பல இடைசெருகல்கள் பிற்கால (கிறித்தவ)ஆட்சியாளர்களால் செய்யப்பட்டதாகவும் கருத்து உண்டு.

நாம் நடுநிலைமையோடு இந்த வரலாற்று இயேசுவை தேடும் வரலாற்றாய்வாளர்கள்,அவர்களின் எழுத்துகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜோசஃபஸை பற்றி எழுதவே பல பதிவுகள் தேவைப்படும் என்பதால்,ஜோஸஃபஸ் புத்தகத்தில் இப்போதைய கிறித்தவ‌த்திற்கு ஆதரவான கருத்துகள் இருக்கின்ற்ன என்பதை மட்டும் அறிந்து கொள்ளுங்கள்.

இன்னும் கூறினால இவர் இன்னும் ஜீஸஸ் என்ற பெயருடைய வேறு சிலரையும் குறிபிடுகிறார்.இயேசு பற்றிய இவரின் கூற்று புத்தகத்தின் கடைசியில் இருப்பதால் அறுதியிட்டு கூறமுடியாது.தேடல் அதிகம் உள்ளவர்களுக்கு அவர் எழுதிய புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு வேண்டுகிறேன்.


ஆதரவான பக்கங்கள்

see page number 2030(2035 of 2609),2288(2293 of 2609),2318(2323 of 2609),2379(2384 of 2609),2525(2530 0f 2609)

குழப்பமான(எதிரான) பக்கங்கள்

2291(2296 of 2609),2296(2301 of 2609),2599_2600(2604_2605 of 2609)

இந்த பக்கங்களை பார்த்தால் ஜோசஃபஸை வைத்து மட்ட்டும் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது என்று புரியும். அடுட்த பதிவில் இயேசு பிறந்த போது இருந்த அரசியல் சூழ்நிலை பற்றி அலசுவோம்.
.
                                                                          Part 1.



Part 2

Part3

Part 4

.
(தேடல் தொடரும்)

Wednesday, March 2, 2011

வரலாற்று இயேசுவை தேடி


ஆங்கில நாட்காட்டிகள் உலக வரலாற்றையே இரு பிரிவாக கி.மு(கிறிஸ்துவுக்கு முன் ),கி.பி(கிறிஸ்துவுக்கு பின் )என்று பயன்படுத்தி வருவ்து அனைவரும் அறிந்ததே. இந்த கிறிஸ்து என்னும் சொல்லுக்கு அபிஷேகம் செய்யப்பட்டவர்,மீட்பர்(மேசியா) என்று பொருள்..

Christ is the English term for the Greek Χριστός (Khristós) meaning "the anointed one". It is a translation of the Hebrew מָשִׁיחַ (Māšîaḥ), usually transliterated into English as Messiah. In popular modern usage—even within secular circles—the term usually refers explicitly to Jesus of Nazareth.

இது ஜீஸஸ்,இயேசு,ஈசா என்று பலவாறாக அழைக்கப்படும் கிறித்தவ‌ மதத்தின் கடவுளாக(ம‌கன்) கருதப்படும் ஒருவரைக் குறிக்கிறது. இவரின் வாழ்க்கை வரலாறு கிறித்தவர்களின் வேதமான புதிய ஏற்பாட்டின் சுவிஷேசங்களான மத்தேயு,மாற்கு,லூக்கா மற்றும் யோவான்(ஜான்) ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது.
இவர் கன்னித்தாய்க்கு பிறந்த்தாகவும்,பல அற்புதங்கள் செய்ததாகவும் இந்த சுவிஷேசங்கள் கூறுகின்றன.யூதர்களால் சிலுவையில் அறைப்பட்டு இறந்தார்,ஆனால் மூன்று நாட்கள் கழித்து உயிரோடு திரும்பினார் என்றெல்லாம் கூறபடுகிறது.

இஸ்லாமியர்களின் வேதமான குரானிலும் இவர் ஈசா என்ற பெயரின் இறைத்தூதராக அறியப்படுகிறார்.கன்னித்தாயின் மகன்,அற்புதஙகள் இங்கும் கூறப்படுகிறது.ஆனால் இவர் ஒரு இறைத்தூதர் மட்டுமே.கடவுளின் அவதாரமில்லை.

கிறித்தவம்,இஸ்லாமின் ப்ல பிரிவினர் இவர் மீண்டும் மறுமை நாளில் வருவார் என்று நம்புகின்றனர்..இந்த விஷயங்களை வரலாற்றின் மூலம் உறுதி செய்ய முடியுமா?.இந்த குறிப்புகள் வரலாற்று ஆதாரம் உடையனவா என்பதை குறித்து சேகரித்த விவரங்களை இந்த தொடர் பதிவுகளில் எழுத இருக்கிறேன்.

இப்பதிவு ஏன் எழுதவேண்டுமெனில ஏற்கெனவே ஆங்கிலத்தில் இது குறித்து பல் கட்டுரைகள்,புத்தகங்கள் வெளிவந்துள்ளன.தமிழர்களுக்கும் அது குறித்து சில தகவல்கள் சொல்லவேண்டும்.தொடரின் உள்ள சந்தேகங்கள்,விளக்கங்கள் கூடுமானவரை எளிமை படுத்த முயற்சிக்கிறேன்.

 புதிய ஏற்பாடு புத்தகங்கள் பற்றி சில குறிப்புகள் 

பதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதியாகும் . முதல் பகுதி பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது.

கிறித்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது.புதிய ஏற்பாடு பல நூல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். இது பல எழுத்தாளர்களாலும் குழுமங்களாலும் கி.பி. 45க்குப் பின்னும் கி.பி. 140க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டு, கிறித்தவ திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன..
புதிய ஏற்பாட்டின் மூல நூல் (செப்துவசிந்தா) ] என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது. தொடக்க காலத்திலிருந்தே விவிலியம் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது..கீறிதவத்தை விமர்சிக்கும் பல இஸ்லாமிய தளங்களில் புதிய ஏற்பாடு மூலம் அரமைக்(இயேசுவின் தாய்மொழி) மொழி என்று தவறாக குறிப்பிடுகிறார்கள்..

பொதுவாக கிறித்தவ மத சார்பு ஆய்வாளர்கள் ஜோசபஸ்(கி.பி 37_100) என்ற யூத வரலாற்று அறிஞர் இயேசுவை பற்றி குறிப்பிடுவதாக கூறுவர்.அடுத்த பதிவில்.இவர் என்ன கூறினார்,அதன் ஆதாரங்கள் பற்றி ஆய்ந்து,தொடர்ந்து தேடுவோம்.
http://en.wikipedia.org/wiki/Josephus_on_Jesus
(தொடரும்)