Wednesday, June 29, 2011

சவுதி செல்ல பெண்களுக்கு இந்தோனேஷியா தடை(18++)


நாம் பல பதிவுகளில் சவுதியின் சட்டங்கள் உலக் மனித உரிமைகளுக்கு விரோத்மாக இருப்பதையும் பிற நாட்டவர்,மதத்தவர் அந்நாட்டு சட்டத்தின் படி தண்டிக்கப்படுவது தவறு என்று எழுதி வருகிறோம்.

கடந்த சனிக்கிழமை(18/6/2011)இந்தோனேஷியாவை சேர்ந்த பணிப்பெண் சவுதியில் மரண தண்டனை விதிக்கப் பட்டு கொல்லப் பட்டதால் அவ்வரசு பெண்களுக்கு தடை விதித்துள்ளது.  இது பற்றி நிறைய எழுதலாம் ஆனால் கஷ்டம் தனக்கு வந்தால் மட்டுமே குரல் கொடுப்பேன் என்பதோடு சவுதி அரசின் சட்டங்களே உலகில் சிறந்தது என்று கூறும் நண்பர்களை என்ன செய்வது.ஒருவர் தவறாக குற்றம் சாட்டப் பட்டு தண்டிக்கப் படுவதற்கு கூட வாய்ப்பு உண்டு.. அப்பெண்ணின் எஜமானியை கொன்றதாக குற்றம் சாட்டப் பட்டு பல்ர் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப் பட்டது.என்ன நடந்ததோ நம்க்கு தெரியாது. இதுவரை அதிகம் தண்டிக்கப் பட்டவர்கள்  பிற  நாட்டினர்ரே என்பது மிகவும் வருத்தத்திற்குறிய விஷயம்.

வேறு யாரும் இது போல் தண்டிக்கப்ப்டாமல் இருக்க பணியாற்றும் நண்பர்கள் கவனமாக் இருக்க வேண்டுகிறோம். 






இது பற்றிய அல் ஜசீரா தொலைக்காட்சியின் காணொளி விவாதம்

http://english.aljazeera.net/programmes/insidestory/2011/06/20116297232774383.html

இந்தியாவின் கதை பிபிசி மைக்கேல் வுட் ஆவண திரைப்படம்.

உலகின் மிகப் பெரிய மத சார்பற்ற,ஜன்நாயக் நாடு நம் இந்தியா.த்ன பழமை கலாச்சாரம் மாறாது புதுமை வரவேற்கும் நம்து நாட்டின் வ்ரலாறை பிபிசி ஆவணப் படமாக தயாரித்துள்ள்து.நம் வரலாற்றை நாம் சரியாக அறியதாலே பல் குழப்பங்கள் நிகழ்கின்றன.பொறுமையாக அனைத்து கணொளிகளையும் பருங்கள்.
.
நேரமில்லாத நண்பர்கள் முதலில் 4 ஆம் பகுதியை பார்க்கலாம்,அதில் தமிழர் நாகரிகம் ,ராஜராஜன் சோழன் பற்றி மிக அருமையாக படம் பிடித்துள்ளார்கள்.இந்த ஆவணப் படம் நடுநிலையாக் எடுக்கப் பட்டு இருப்பது அருமை.வரலாறு ஆளும் வர்க்கத்தில் சார்பாக்வே எழுதப்படும் என்பதும் உண்மைதான் என்றாலும் கலை ,வ்ணிகம்,ஆட்சிமுறை,ஆன்மீகம் என்று பல் விஷய்ங்களையும் தொட்டு செல்வதை பாராட்ட வார்த்தைகள் இல்லை.உலகின் மிக சிறந்த வாழும் நாகரிகத்தின் ஒரு சாட்சியாக நாம் இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.கண்டு களியுங்கள்.

Part 1:Early History(Vedic Period)

Part 2

Part 3


Part 4 (தமிழர் நாகரிகம் )


Part 5


part 6(British India&Freedom)


கலிலியோ கதை ஆவணப் படம்

கலிலியோ... இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15 ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார்.
இத்தாலியில் பிறந்து சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக குருவான கலிலியோ பற்றிய சுலாரஸ்யமான தகவல்கள் இதோ.

கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைந்தது. ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள் தான் பின்னாளில் வந்த பெளதிகவியல் விஞ்ஞானிகளுக்கு வேத பாடமாகியது. இத்தாலியிலுள்ள வைசாநகர பல்கலைக்கழகத்தில் கலிலியோவுக்கு கணிதப் பேராசிரியராக வேலை கிடைத்தது.ஆனால் தனது ஆராய்ச்சிகளின் காரணமாக மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கிவிட்டனர்.

கண்ணாடி விம்பம், மெழுகுவர்த்தி மூலம் ஒலியைப் பிரதிபலிக்கும் தொழில்நுட்பம் சட்டைப்பையில் வைக்கும் சீப்பு, பேனா போன்ற கண்டுபிடிப்புகளுக்கு கலிலியோவின் ஆய்வுகள் தான் அடிப்படை ஆதாரம்.
தனது சூரிய மண்டலம் பற்றிய கருத்துக்களால் வத்திக்கான் நகரக் கத்தோலிக்க நிர்வாகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கலிலியோ 1633 ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.

1638 ஆம் ஆண்டு அவருக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தார். 1642 ஆம் ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார்.கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின் 1737 ஆம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

உண்மைக்காக் தன் வாழ்வினையே பணயம் வைத்த அவ்ருடைய வாழ்க்கை சரிதம்.
Part 1

Part 2

பெண் காரோட்ட அனுமதியுங்கள்: சவுதி அரேபியாவில் ஃபேஸ் புக் பிரச்சாரம்


உலகிலேயே மோசமான் மனித உரிமை மீறல் கொண்ட நாடுகளுள் ஒன்று சவுதி அரேபியா என்பது அனைவரும் அறிந்ததே.கையை வெட்டுதல்,த்லை வெட்டுதல் போன்ற பழங்கால் நடவடிக்கைகளை கைவிடாத நாடு.இந்நாட்டில் பெண்களுக்கு காரோட்ட அனுமதி இல்லை என்பதும்,அதற்காக் போராடி வருகிறார்கள்.இதற்கு அமெரிக்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆதரவு கொடுத்தும் இருக்கிறார்.

ஆளும் அரசர் அப்துல்லாவின் அரசு இத்னை பரிசீலித்து வருகிறது.உலக அரங்கில் பெயர் கெடாமல் நிலைமையை சமாளிக்க முயற்சி செய்கிறது.ஜூன் 17 ஆன் தேதி காரோட்ட போவதாக் சில பெண்கள் அமைப்பு அறிவித்து இருந்தது.இத்னை தொடர்த்து சில தீவிரவாத சவுதி குழுவினர் காரோட்டும் பெண்களை அடியுங்கள் று ஃபேஸ் புக்கில் பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். "இக்பால் பிரச்சாரம்" என்று இதனை பெயரிட்டனர்..இக்பால் கயிறு என்பது சவுதி ஆண்கள் தலையில் கட்டியுள்ள கயிறு ஆகும். இது உடனே பலர் சுட்டி காட்டிய உட‌ன் ஃபேஸ் புக் அப்பகத்தை நீக்கி விட்டது.

Facebook Campaign to Whip Women Who Drive



http://www.dailymail.co.uk/news/article-1390806/Saudi-men-launch-violent-Facebook-campaign-response-women-taking-wheel-safety.html


இச்செய்தி சவுதி எந்த சூழ்நிலையில் இருப்பது என்பதை புரிய வைத்து இருக்கும்.சவுதி பெண்கள் இதற்காக ஃபேஸ் புக்கில் சில போராட்டங்களை நட்த்துகின்றனர்.நாமும் இதற்கு ஆதரவு கொடுப்போம்.

தைரியமாக காரொட்டிய சகோதரி மனால் அல் ஷெரீஃப்க்கு ஆதரவு கொடுக்கும் ஃபேஸ் புக்கில் கருத்திட வேண்டுகிறேன்.




We support you sister Manal Al sharif
2 seconds ago ·  · 


உலக முழுதும் எதிர்ப்பு வந்தால் இந்த சர்ர்ச்சைக் குறிய சட்டங்கள் அனைத்துமே நீக்கப் படும் நாள் வெகு விரைவில் இல்லை.ஆதரவு கொடுங்கள் நண்பர்களே!!!!!!!!!!!!!





ஒரு சிறிய காணொளி

Tuesday, June 28, 2011

படைப்புக் கொள்கையாளர்களின் செயலாக்கம்.



மதசர்பற்ற பரிணாம எதிர்ப்பு விஞ்ஞானி பற்றி தேடிய போது அப்ப்டி யாரும் இதுவரை கிடைக்கவில்லை.கிறித்தவ மத படைப்புக் கொள்கையாளர்களே அதிகம் பரிணாம் எதிர்ப்பு ஆய்வுகளில் உள்ள்னர்.

ஆகவே இன்னும் சில பதிவுகளில் இந்த் [கிறித்த] படைப்புக் கொள்கையளர்கள் மற்றும் அவர்களின் பரிணாம் எதிர்ப்பு பற்றி சில கட்டுரைகள்,கருத்துகள் மொழி மாற்றம் செய்து வெளியிடலாம் என்று முயற்சிக்கிறேன். படைப்புக் கொள்கை விஞ்ஞானிகளின் கருத்தினை அப்ப்டியே வெளியிடுவதில் நம்க்கு ஒன்றும் தயக்கம் கிடையாது.ஏற்கிறேனா என்றால் விவாதிப்போம்.

இந்த விஷய்மாக் தேடலில் இறங்கிய போதுதான் இவர்கள் ஒன்றும் சும்மா இல்லை என்றும் பல விஷயங்களை செய்து வருகிறார்கள் என்று புரிந்தது.பல் கால பரம்பரை மத மாற்று தொழில் அதிபர்கள் அல்லவா!!!!!!!!!!!!.

நிறைய த்கவல் சேகரிக்க வேண்டியுள்ளதால் அவ்ர்கள் பற்றிய சில த்கவல்கள் மட்டும் தருகிறேன்.
.
1.இவர்கள் பரிணாம்த்தை எதிர்க்கும், அத்னை பொய்யாக்கும் ஆய்வு சார்ந்த கட்டுரைகளை வெளியிடுகிறார்கள் இதற்காக சில ஆய்வு சஞ்சிகைகளையும் நடத்துகிறார்கள்.



ஆக அவ்ர்களது ஆய்வுகள் ஆவணப் படுத்தப் படுகின்றன .சில ஆய்வகங்கள்,ஆராய்சி கல்லூரிகள் நட்த்தி படைப்புக் கொள்கையில் பட்டம் வழங்குகிறார்கள்.படிப்பின் முக்கிய விஷயம் பரிணாம எதிர்ப்பே.


முந்தைய‌ இரு பதிவுகள் பரிணாம் விஞ்ஞானிகளுக்கும்,படைப்பு கொள்கை விஞ்ஞானிகளுக்கும் ஆய்வுக் கட்டுரை தொடர்பான அவ்தூறு பிரச்சாரம் குறித்து அலசியது.அந்த பிரச்சாரத்தில் தொடர்புக‌ள் அனைவருமே இந்த அமைப்புகளில் இப்போது பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

2. கிறித்தவ படைப்புக் கொள்கை குறித்து ஒரு விக்கிபிடியாவும் ஏற்படுத்தி விட்டார்கள்.அதில் இது குறித்து பல விஷயங்கள் இருக்கின்றன.  


உண்மையிலேயே மலைத்து போய் விட்டேன்.பரிணாம விஞ்ஞானிகள் செய்வது அனைத்தையும் எதிர்வகையில் அய்வுகள் மீது ஆவணப் படுத்தி வருகிறார்கள்.பரிணாம் எதிர்ப்பு தவிர,பைபிளை உறுதிப் படுத்தும் அகழ்வாய்வுகள் குறித்தும் கட்டுரை இடுகிறார்கள்.

இனி வரும் பதிவுகளில் இவர்களின் சில கட்டுரைகளை பார்ப்போம்.படைப்புக் கொள்கை அமைப்புகளில் ஒன்றான் ஐ சி ஆர்(ICR) பற்றிய காணொளி.






அப்புறம் நம்ம சகோதரர்கள் கேட்கும் பல பரிணாம் எதிர்ப்பு கேள்விகள் இங்கு ஆய்வுக் கட்டுரைகளாக் உள்ளதையும் சொல்லி விட்டால் அவ்வளவுதான்!!!!!!!!!!!.
Institute for Creation Research from Shannon Falter on Vimeo.

சபாஷ் சரியான போட்டி:பரிணாம ஆதரவு விஞ்ஞானிகளின் மறுப்பு



 வணக்கம் நண்பர்களே,

சென்ற பதிவில் பரிணாம் எதிர்ப்பு அறிவியலாளர்கள் பழி வாங்கப் படுவதாக் ஒரு பிரச்சாரப் படம் பார்த்திருப்பீர்கள்.அரசியலில் ஒருவன்,ஒரு கொள்கையின் மீது அவ்தூறு பிரச்சாரம் என்பது மிகவும் இயல்பான விஷயம்.ஒரு பிரச்சாரத்திற்கு மறுப்பு, பதில் பிரச்சாரம் என்பது அனுமதிக்கப் படும் போது நடுநிலையாளருக்கு இருவர் கருத்தை அறியும் வாய்ப்பு கிடைகிறது.அவர் ஏதோ ஒன்றை ஆதரிக்க்லாம் அல்லது ,இவனுகளுக்கு வேற வேலையே இல்லை இரண்டு பேரும் அயோகிய பயலுங்க‌ என்று ஒரு சராசரி இந்திய குடிமகன் போல் கருமமே கண்ணாயினார் ஆக விலகி செல்லலாம். அனைத்து உரிமைகளும் உங்களுக்கு உண்டு.தயவு செய்து தகவல்கள் மட்டும் அறியுங்கள்.  

பரிணாம் எதிர்பு குழு திரைப் படம் எடுத்து திரையிட்டது போல் பரிணாம் ஆதரவு குழுவும் ஒரு திரைப் படம் தயாரித்தார்கள்.ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது மெய்யாகி விட்டது. அந்த ப்ழி வாங்கப்பட்டதாக கூறப்படும் ஒவ்வொரு விஞ்ஞானி,ஆய்வாளரின் ஜாத்கத்தையே அலசி,நடந்தது என்ன என்று விளக்குகிறார்கள்.

அந்த படத்தையும் பாருங்கள்.

நன்ன் சொல்ல வருவது என்ன?

1.பரிணாமத்திற்கு மாற்றாக எதிர் குழு பதிவிட விரும்பு ஆய்வு எது?

2. அது குறித்த கட்டுரைகள் கிட்டுமா?

இக்கட்டுரைகளில் கடவுள் வந்தார் ,களிமண் எடுத்தார் ,பொம்மை செய்தார் ,மனிதன் வந்தான் என்று ஆய்வுக் கட்டுரை எழுதி பதிவிடுங்கள் என்றால் அப்ப்டி கேட்பவ்ர்களை மன் நிலைக் காப்பக்த்திற்குத்தான் அனுப்ப வெண்டும்.என் புத்தக்த்தில் எழுதியிருக்கிறது ஆகவே இக்கட்டுரையை பதிவிடுங்கள் என்றால் அப்புத்தகத்தை காப்பக்த்தில் வைத்து படிக்க அனுமதி கிடைக்கலாம்.

 நிச்ச்யம் அப்படி செய்ய மாட்டார்கள் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலத்தான் அறிவியல் பின் புலத்தில் சில கருத்தியல்களை உருவாக்கித்தான் செய்ய முடியும்.

ஏஎற்கெனவே நான் அறிந்தவரை பழைய பூமி கொள்கை,புதிய பூமிக் கொள்கை என்று பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி இருகொள்கைகள் உண்டு.உயிர்களின் தொற்ற‌ம் பற்றி என்ன கொள்கை அறிவியல் படி கூற இயலும்?

1. வேற்று கிரகத்தில் இருந்து (மனிதன் உட்பட அனைத்து)உயிர்கள் வந்த்ன.

2. மனிதன் மட்டும் வேற்று கிரகத்தில் இருந்து வந்த்வன் ,மற்றவை மட்டும் பரிணாமம் மூலம் வளர்ச்சி அடைந்த்ன.

3. பரிணாமத்தின் முதல் செல் உயிர்கள் எரிகற்கள் மூலம் பூமிக்கு வந்து இருக்க்லாம்.

இம்மாதிரி கருத்துகளுக்கும் ஆதாரங்கள் தேவைபடுகின்றன.ஏற்கென்வே கிடைத்த படிமங்களின் கால்க் கணக்கீட்டுக்கும் இக்கருத்து ஒத்துப் போக வேண்டும்.

வரும் பதிவுகளில் இந்த அறிவியல் படைப்புக் கொள்கை பற்றி ஆய்வு நடத்தும் மதவாதிய‌ல்லாத விஞ்ஞானிகள் யார்? அவர்களின் ஆய்வுகளில் ஏதாவது ஆச்சர்யமான் விஷயங்கள் உண்டா என்று பார்ப்போம்.

இந்த மாதிரி ஏதாவது செய்யுங்கள் என்றால் யானையின் தும்பிக்கை பற்றிய நம்பிக்கையை காட்டி எப்படி வந்தது சொல் என்கிறார்கள்.இக்கட்டுரையில் இதற்கு பதில் இருக்கிறது என்றால் ஹி ஹி பதில் தெரியலை, என் வழிக்கு வா  என்கிறார்கள்.

நாம் என்ன சொலவ்து?

"உன் நம்பிக்கையின் தும்பிக்கையை சுருட்டு ,எங்கள் வளர்ச்சிப் பாதையை தடுக்கிறது"

தேடலும் அறிவதும்,மனித இயல்பு.இந்த அறிவியல் படைப்புக் கொள்கை பற்றியும் தேடுவோம்,அதில் மதக் கசடை தவிர்த்து ஏற்றுக் கொள்ளும் வண்ண‌ம் ,பரிணாம்த்தை விட சான்றுகளை விளக்கும் விஷய்ம் இருந்தால் ஏற்போம்.

கொஞ்சம் தேடி பிறகு இது குறித்து விவாதிப்போம்.

Watch the Movie in you tube


http://www.youtube.com/watch?v=F5ixmLNwF9s&playnext=1&list=PLA3D6C9C847F27E6F

Monday, June 27, 2011

பரிணாம எதிர்ப்பு விஞ்ஞானிகள் பழி வாங்கப் படுகிறார்களா? திரைப்படம்


பரிணாம கொள்கையை அதிகம் எதிர்ப்பவர்கள் கிறித்தவ இஸ்லாமிய பிரச்சாரகர்கள் என்பதும்,அது அரசியல் கட்டாயத்திற்காகவும்,மதத்தின் இருப்பை உறுதி செய்யவும் என்பதை பதிவுகளில் விவாதித்து வருகிறோம்..

கடந்த சில மாதங்களாக‌ இஸ்லாமிய பதிவர்களின் தந்திரங்களையே பார்த்து வந்தோம்.கொஞ்சம் போர் அடிப்பதால் கிறித்த்வ பிரச்சாரகர்கள் பரிணாம் எதிர்ப்பில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். இந்த இஸ்லாமிய பிரச்சாரம் எல்லாம் இப்ப வந்தது அதனால் பிரச்சாரத்தின் போது நமக்கு தவறு கண்டு பிடிப்பது எளிது,ஒன்றுமில்லை எந்த பிரச்சாரகர் ஆனாலும் அவர் சார்ந்த பிரிவின் கொள்கையாகக்திற்கு பிரச்சினையில்லாமல் பல் நாட்களுக்கு பிரச்சாரம் செய்து பார்த்தது இல்லை,இறைவனுக்கு உருவம் உண்டு என்பதும்,ஜாகிர் நாயக்கின் புது குரு ஹாருன் யாஹ்யா(ஜகஜ்ஜாலக் கில்லாடி இவர் பற்றி பல பதிவுகள் இட வேண்டியுள்ளது.)நான்தான் மஹ்தி[இவர் யாரென்றா அது பெரிய!!!!!!!!!! கதை அப்புறம்) என்பதும் கொடுமை.
  
ஆனால் இந்த கிறித்தவ பிரச்சாரகர்களின் பரிணாம எதிர்ப்பு வித்தியாசமான‌து.நேருக்கு நேர் வா என்பது,யானைக்கு தும்பிக்கை எபடி வந்தது?,கங்காருக்கு வயிற்றில் பை எப்படி வந்தது? போன்ற கேள்விகள் என்பவை வடி கட்டிய முட்டாள்தனம் என்பது அவர்களுக்கு தெரியும்.

பரிணாம கொள்கை எப்படி வளர்ந்தது? என்று பார்த்தார்கள்.அது பல உயிரியல்,மானுடவியல்  அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் படுவதும்,அதின் மீதான ஆய்வுகள் சஞ்சிகைகளில் பதிவு செய்யப் படுவதுமே பரிணாம் கொள்கையை வலுவடைய செய்கின்றன என்பதை உணர்ந்த்னர்.

யூதர்கள் கால்ம் காலமாக பாலஸ்தீனத்தில் வாழ்ந்ததாக பல ஆவணங்களை உருவாக்கி பாதுகாத்து வந்தாலேயே அவர்களின் இஸ்ரேல் கனவு நன்வாகியது.அது பொய் ஆவண்ங்கள் என்றாலும் அதை நிரூபிக்க சம்கால ஆவணங்கள் எதுவுமே எதிர் கட்சியினரிடம் இல்லை(அது எப்படி இருக்கும்!!!!!!!!,இருந்தா ஏன் இப்ப்படி?நேருக்கு நேரா வா ,இல்லை கொஞ்சம் ஓரமா வா என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.)

வரலாற்றில் எப்போதுமே அறிவியலை கிறித்தவ அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்து இருந்த்ன[அது மட்டுமா போப் கண்ணசைத்தால் சாம்ராஜ்யங்கள் காணாமல் போகும்,ஒரு 1000 வருடம் அறிவியலை ஒரு வழி பண்ணி விட்டார்கள்..]கிறித்தவ மதம் பல பிரிவுகளானதும்,,இரண்டாம் உலக்ப் போருக்கு பின்தான் அறிவியல் மதங்களின் கட்டுபாட்டில் இருந்து முழுமையாக் வெளி வந்தது. ஆகவே அறிவியலின் பரிணாம் கொள்கையின் ஆய்வுகள் ஆவணப் படுத்தப்படுவதை தடுக்க முடியவில்லை.

பரிணாமத்தை எதிர்க்க அறிவியல் படைப்புக் கொள்கை என்பதை ஊக்கு வித்த்னர்.அதற்கும் சில உயிரியல் விஞ்ஞானிகள் கிடைத்த்னர்(அவர்கள் மதத்தில் இருப்பதால் இப்படி செய்ய முடியும்!!!!!!!!!!)

அவர்களையும் சில ஆய்வுக் கட்டுரை எழுதி பதிவிட முயன்றார்கள்.அறிவியல் மாதிரி ஆனால் கொஞ்சம் மறைவான் பொருளில் கடவுள் சரக்கும் வந்துவிடும். .பல சர்ச்சைக் குறிய ஆய்வுகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.படைப்புக் கொள்கை ஆவணப் படுத்தாபடா விட்டால் பரிணாமம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்ந்நிலை வரும் என்பதால் இன்னொரு காரியம் செய்தனர்.பரிணாமம் பற்றி முக்கிய ஆய்வு நடக்கும் அமெரிக்க,ஐரோப்பிய பல்களை கழகங்களில் சில பேராசிரியர்கள்,ஆய்வு மாணவர்களை தங்கள் வசப் படுத்தினர்.அவர்களின் பரிணாம்த்தை எதிர்த்து ஆய்வுக் கட்டுரைகள் இட முயன்றதால் பழி வாங்கப் படுவதாக் கதை பரப்பினர்.அதனை திரைப் படமாக எடுத்த்னர்.

அத்திரைப்ப்டம்தான் இப்போது நீங்கள் பார்ப்பது.

இதற்கு மறுப்பு அடுத்த பதிவில் எதிர் கருத்தையும் கேட்க வேண்டும்.அது சரியென்று படுபவ்ர்கள் ஏற்று கொள்லலாம்.நம்ம பரிணாம் மறுப்பாளர்களுக்கும் இதுதான் கூறுகிறேன்,உங்களின் கேள்விக்கு மதிப்பில்லை,சரியான கேள்வி பரிணாமத்தின் மீது இப்போது ஆய்வில வைப்பவர் யார்?என்ன கூறுகிறார்? என்பதை பதிவிடலாம்.முடிந்தால் அவருடன் தகவல் பரிமாற்றம் செய்யலாம். அறிவியலை அதற்கு உரித்தான விதத்தில்தான் மறுக்க வேண்டும். ஒரு விஷயத்தை கேட்கும் போது இது இங்கே ,இவர் இப்போது கூறினார் என்று கூரவேண்டும்.இவை ஆய்வுக் கட்டுரைகளின் தார்மீக நெறி. இனி திரைப்படம் பாருங்கள்.பரிணாம எதிர்ப்பாளர்கள் பழி வாங்கப் படுவதாய் எப்படி சித்தரிக்கிறார்கள்!!!!!.

நாஜிக்களின் கையில் யூதர்கள் போல் பரிணாம ஆதரவாளர்களிடம்,மதவாதிகள் துன்பப்ப் படுவதாக கல்க்க்லாக காட்டியிருக்கிறார்கள்.ப்ரம்பரைத் தொழிலுக்கும் பஞ்சத்துக்கு தொழில் பார்ப்பவருக்கும் வித்தியாசம் உண்டல்லவா!!!!!!!!!!!!!!!!!.

தீர்ப்பு உங்கள் கையில்.



watch it on youtube
http://www.youtube.com/watch?v=cIZAAh_6OXg

ஒரு மத பிரச்சாரகரின் காரியவாதப் பின்னூட்டங்கள்


ஒரு மத ப் பிரச்சாரகர் பரிணம்த்தை மறுத்து எழுதி வருகிறார்.அதற்கு அவர் உரிமையை ஆதரிக்கிறோம்.அவ்ர் மதத்தை மறுத்து எங்கள் வழியில் வர வேண்டும் என்று கோர மாட்டோம்(வேண்டாம்!!!!!!!!!!)

அவர் கேட்கும் நகைச்சுவையான் கேள்விகள் அனைவரும் அறிந்ததே.என்ன பதில் சொன்னாலும் ,ஏற்றுக் கொள்ளாமல் வாதிடுவார்.அதுவும் சரி.அவரின் உரிமை ஆதரிக்கிறோம்.

நண்பர் சுவன்ப் பிரியன் பதிவில் ,நேற்று நான் இட்ட பின்னூட்டம் இது. 

____________
_

சகோ சுவனப்பிரியன்,
ஹாருன் யாஹ்யாவின் கருத்துகளுக்கு டாக்கின்ஸ் பதில் அளித்து விட்டார். அது எனக்கு சரியாக படுகிறது.அதற்கு மேல் என்ன சொலவ்து?.யு ட்யூபில் இருக்கிறது.

பரிணாமம் மட்டுமல்ல உலகில் எல்லா கருத்துகளுமே விமர்சனம் ஆய்வுக்கு உட்பட்ட்வைகளே.கிடைக்கும் சில சான்றுகளை வைத்து பல விளக்க்ங்கள் அளிக்கப் படுகின்றன.அதில் சில ஆய்வுகளுக்கு ஒத்து வரும் கொள்கை இப்போது ஏற்கப் படுகின்றது. அதானால் பரிணாம்த்தை விட இன்னொரு கொள்கை இச்சான்றுகளை மெய்யாக்கி,இன்னும் சான்றளிக்கும் பட்சத்தில் ஏற்கப் படும்.
ஒருவேளை பரிணாமம் முற்றும் முழுதும் தவறு என்றால் எல்லா நாடுகளும் சவுதி அரசு (99% இஸ்லாமிய அரசு கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்,பரவாயில்லை மன்னிக்கவும்!!!!) போல் ஆக வேண்டுமென்பது என்பது நடக்குமா?. நான் மதம் சார்ந்த சட்டங்களை மாற்ற குரல் கொடுக்கிறேன். இது குறித்த விழிப்புணர்வு வர வேண்டுமென்று விரும்புகிறேன்.எல்லாரும் மதம் விட்டு இறை மறுப்பாள‌ன் ஆக வேண்டுமென்ற கொள்கை பிரச்சாரம் செய்பவன் இல்லை. பிடிப்பவர்கள் பிறரின் உரிமைகளை பாதிக்காது பின் பற்ற வேண்டும்.
என்க்கு சரி என்று தோன்றும் கருத்தை பதிவிடுகிறேன். எதிர் கருத்துகளை பின்னூட்டம் இட்டால் தலை வணங்கி ஏற்கிறேன்.அக்கருத்து கொள்ள உரிமை உண்டு என்று அங்கீகரிக்கிறேன்.இப்படி உரிமை இஸ்லாமிய மத ஆட்சியில் பிற மதத்தவர்,இறை மறுப்பாள‌ருக்கு கிடைக்குமா?.அதற்கு மதம் தடையாக் இருப்பதலேயே இஸ்லாமை அதிகம் விமர்சிக்கிறேன். அப்போதும் சில சுய கட்டுப்பாடுகளுடன்,செய்கிறேன். 

அந்த வகையில் இந்தியா மத சுதந்திரம் அளிப்பது எனக்கு மிக பெருமையாக உள்ளது.உடனே ''அஆஇஈ' பரிணாமம் பற்றி கேட்ட‌ கேள்விக்கு பதில் சொல்லவில்லை எனவே இப்படி மழுப்புகிறார் என்பதுதானே பல பின்னூட்டங்கள்?.பரிணாம சான்றுகள் அளிக்கும் காலக் கணக்கீடு அள்வுகள் மத புத்தகங்கள் அளிப்பது இல்லை.அறிவியல் மதங்களை கண்டு கொள்வது இல்லை. மதத்தின் எதிரி அறிவியல் அல்ல,அதன் சர்ச்சைக்குறிய சட்டங்கள்.

யாஹ்யாவின் பல புத்த்கங்களை வாசித்தேன்.சரியென்று படவில்லை.பதிவிடும் அள்விற்கு தரமில்லை என்றே எண்ணுகிறேன்.பரிணாம்த்தின் மீது விமர்சன ஆய்வுக் கட்டுரை எழுதிய விஞ்ஞானி ப‌லரின் இணையத் தளங்கள் கொடுங்க்ள். அவர்கள் அளிக்கும் மாற்று அறிவியல் கருத்தையும் பார்த்து சரி என்று பட்டால் பதிவிடுவேன்.
நன்றி
****************************

அதற்கு நண்பர் சுவன்ப் பிரியன் அவருடய பாணியில் விளக்கினார்.அது வேறு கதை.அது ஒரு தொடர்கதை.அவ்ரின் கருத்தை வெளியிடும் உரிமையை
ஆதரிக்கிறேன்.
___________
முக்கிய விஷயம் நமது நாயகர் பரிணாம மறுப்பாளர்(இறை நம்பிக்கையாளரை விட இந்த்ப் பெயரெ இவருக்கு பொருந்து கிறது,இவருக்கு இதுதான் மற்ற எல்லாமே இரண்டாம் பட்சம் ஆகையால் இப்படி) படியுங்கள்

நம்க்கு பதில் சொல்வதாக் நினைத்து.  பரிணாம மறுப்பாளர் ஒரு பின்னூட்டம் (இதற்கும் அவரின் உரிமைகளை ஆதரிக்கிறேன்) போட்டாரு பாருங்க ஒரே அதிர்ச்சி.
படியுங்கள்
***********************************

/சகோ.சார்வாகன்..!

//////நான் மதம் சார்ந்த சட்டங்களை மாற்ற குரல் கொடுக்கிறேன்./////---???

நன்றாக யோசித்துத்தான் சொல்கிறீர்களா..?

உலகிலேயே தலைசிறந்த சட்டங்களை மனித வர்க்கத்திற்கு அளித்தவர் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அமெரிக்காவின் உச்ச நீதி மன்றத்தில் சிலை வைத்து கெளரவிக்க முனைந்ததே அமெரிக்க அரசு..? மறந்துவிட்டீர்களா..?

இவ்வளவு ஏன்..?

நம் நாட்டின் பல சட்டங்கள் இஸ்லாமிய சட்டங்கள் ஆயிற்றே..? நம்நாட்டின் சட்டத்துறையில் நிறைய அரேபிய வார்த்தைகள் இருப்பதே இதற்கு சாட்சி அல்லவா..? அதெல்லாம் நீக்க "குரல் கொடுத்து" போராடப்போகிறீர்களா? 

எல்.கே.அத்வானி கேட்கிறாரே... பாலியல் வன்கொடுமைக்கு இஸ்லாமிய சட்டமாகிய மரணதண்டனை வேண்டும் என்று..?

மனித குலத்துக்கு நல்ல விஷயங்களை இஸ்லாம் சொல்லி இருந்ததால் எதற்கு அதை எதிர்க்க வேண்டும் நீங்கள்..?

"அத்வானி போலவாவது நியாயத்தை ஆதரியுங்களேன்..." என்று ஒரு படு மோசமான ஆளை எல்லாம் கூட முன்னுதாரணமாக கொள்ளச்சொல்லும் அளவுக்கு, அந்த நிலைக்கு, நீங்கள் ஆளாகி விட்டீர்களா சகோ.சார்வாகன்..?

===================================

இதெல்லாம் பிறகு.... முதலில்... நான் தொகுத்த அனைத்து பரிணாம FIR கேள்விகளுக்கும் ஒரு பதிவு எழுதி பதில் அளிப்பதாய் சொன்னீர்கள் அல்லவா..?

அந்த பதில் பதிவை எப்போது வெளியிடுவீர்கள்..?//

******************************
இதின் சாராம்சங்கள்.
1.அமெரிக்க திரு முகமதுவின் சிலை வைக்க முயற்சித்தது.
2.அது இவருக்கு பெருமை

3.சவுதியின் சட்டங்கள் சிற‌ந்தது.
4.அத்வானி ஷரியாவை ஆத்ரிக்கிறார்
______________

இதில் ஒரு விஷயம் என்னவெனில் சகோ இக்பால் செல்வன் ஒரு  படம் வெளியிட்டத்ற்கு ஒரு மனித நேய பதிவு இட்டு வாழ்த்தினார்.அதுவும் அவர் உரிமை.அவ்ரின் அருமையான் பிரச்சாரம்,மாற்று கருத்துகளை மதவாதிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கும் இன்னும் இது போல் பல பதிவு இட்டால் நம் வேலை சுலபமாகும்.
1.ஆனால் அமெரிக்கா சிலை வைக்க முயற்சித்தது( நடந்ததா இல்லையா?) இவருக்கு பெருமை என்றால் படம் வெளியிட்டததும் பெருமையாக்வே இருக்க வேண்டும்.மறுப்பு பதிவு பெருமைதான் இருந்தாலும் எங்கள் மதப்பிரிவின் நம்பிக்கையின் படி த்வறு என்றால் பிரச்சினை சுலபமாக் முடிந்து இருக்குமே!!!!!.
****************************
2.இரட்டை கோபுர தாக்குதல் தி 9/11 செய்ததே அமெரிக்கா என்று துப்பறிந்து கண்டு பிடித்தவ்ர் அமெரிக்க முகம்துவுக்கு  சிலை வைக்க முயற்சித்தது பெருமையாக் படுகின்றது.திரு முகமதுவை பெருமையாக் பேசினால் மற்ற எல்லா விஷ்யங்களும் மறந்து ஏற்றுக் கொள்ளப் படும் .

****************
3.சவுதி சட்டம் மாதிரி இந்தியாவில் கொண்டு வர முயற்சிப்பதை ஒத்துக் கொண்டது மட்டும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உங்க நேர்மை இதில் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.இதே மாதிரி பல் பதிவுகள்,முரண் படும் பின்னூட்டங்கள் இட்டால் எனக்கு எளிதாக் இருக்கும் நன்றி.
********************
4.அத்வானி ஒரு சம்யம் பாலியல் கொடுமைக்கு மரண தண்டனை என்று சொன்னராம்,ஆகவே அவ்ரே ஷாரியா ஏற்கிறார்.என்கிறார்.
ஷாரியாவின் படி மரண தண்டனையா?
இந்த சுட்டிகளை பாருங்கள்,
http://articles.cnn.com/2007-11-17/world/saudi.rape.victim_1_saudi-women-victim-saudi-arabia?_s=PM:WORLD
http://abcnews.go.com/International/story?id=3899920&page=1

_____________
ஷரியா சட்டத்தின் படி ஒரு ஆணின் சாட்சி இரு பெண்களின் சாட்சிக்கு சமம்.இன்னும் நிறைய விஷயம் உண்டு.விவாதிக்கும் போது சொலகிறேன்.
நமக்கு த்னிப்ப்ட்ட யாரையும் விமர்சிக்க பிடிக்காது.ஆனால் பரிணாம் மறுப்பாளர் பெருமித உணர்வும்,சவால் விடும் கருத்துகளும் அவருடைய சொந்தக் கருத்துகள் மட்டுமே மதத்தின் கருத்துகளாக் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் சொல்லி விடுகிறேன்ன்.

கடைசியாக இப்படி சொல்லி விடலாம்

மாமியார்(அமெரிக்கா) உடைத்தா(சிலை வைத்தால்) பொன் குடம்(பெருமிதமடைவேன்),மருமகள்(சகோ இ.செல்வன்) உடைத்தால்(படம் வெளியிட்டால்) மண்குடம்(மனித நேய பதிவு இடுவேன்).  
__________________________

மதவாதிகள் அனைவருமே ஒரே மாதிரித்தான்,அத்வானி சொன்னால் ஏற்று கொள்வதா?.உலகமே எதிர்த்தாலும் நாம் சொலவ்து சவுதியில் பின்பற்றப்படும் ஷாரியாவில் பலமனித நேயமற்ற சட்டங்கள் இருக்கின்றன.அங்கும் இது மாற்ற‌ப் படவேண்டும்.பிற மதத்தவர் ஷாரியாவின் படி தண்டிக்கப் படக் கூடாது.இதற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேஎண்டும்.

ஹாருண் யாஹ்யாவின் பிரச்சாரங்கள்.



அண்ணன் ஹாருண் யாஹ்யவின் கொள்கை பிரச்சாரம் நம்மை விட அற்புதமாக் மத மறுப்பு வேலையை செய்கிறது.ஆகவே அவரது பிரச்சாரங்களை அப்ப்டியே வெளியிட முடிவு செய்து உள்ளேன்.
இக்காணொளியில் இவர் கூறுவது.
1இறை மறுப்பும் 5000 வருட பழமையான‌து[நன்றி!!!!!!]
2.இறை மறுப்பு கொள்கை மனித சமுதாயத்திற்கு பல் தீங்குகளை  செய்து உள்ளது.(அப்ப்டியா!!!!!!!)
3.டார்வினின்(?) கொள்கையின் அடிப்படையிலேயே நாடு ஆக்கிரமிப்பு,அடிமை முறை(அதுக்கு முன்னால் இல்லையா!!!!!!!) ஏற்பட்டது(கொஞ்சம் மாத்தி சொன்னால் சரியாக இருக்கும்).
4.ஹிட்லர் கூட டார்வினின் கொள்கையின் அடிப்படையிலேயே யூதர்களை இனவ்ழிப்பு செய்தார்.[அப்ப் யூதர்கள் பாவம் இல்லையா,போரில் ஹிட்லரைஆதரித்த அரபுகளை என்ன செய்யலாம்?]
கண்டு களியுங்கள்.

ஹாருண் யாஹ்யாவுடன் ஜாகிர் நாயக்[ஹாருண் யாஹயாவின் இந்திய பிரதிநிதி!!!!!!!!!!!]



இறைக் கொள்கையை அருமையாக விளக்கும் அண்ணன் ஹருண் யாஹ்ய, சிஷ்யர் ஜாகிர் நாயக்கின் வழியில் வரும் தமிழர் யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!!!!!!!!!!!!!!!.


நண்பர்களே கொஞ்சம் யோசியுங்கள்.மதம் என்பது அரசியல் காரண்மாக்வே பரப்ப படுகின்றது.இந்த ஹருன் யஹ்யா என்ப்வர் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக இருக்கவே அதிக வாய்ப்பு.

1.அதாவது 500+ வருட‌ வலிமை வாய்ந்த ஆட்டோமான் பேரரசை வீழ்த்த வஹாபி கொள்கை உருவாக்கப் பட்டது.இஸ்ரேல்,சவுதி அரேபியா உட்பட்ட பல நாடுகள் உருவாக்கப் பட்டு பட்டு பல் நாடுகளாக்கி எண்ணெய் வளம் சுரண்டப்படுகின்றது.

2. இப்போது எண்ணெய் வளம் குறைவதால்,அவசியமற்ற‌ வஹாபி பிரசாரத்தை கட்டுப் படுத்த மஹதி கொள்கை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.ஹாருண் யஹ்ய ஷியா,யூத கிறித்தவ்ர்களுடன் முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி அதிகம் பேசுகிறார்.இயேசு[ஈஸா:2000 வருடமா இவர் தொல்லை தாங்க முடியலையே!!!!!!!!!!!!!!!!!!!!]வின் இரண்டாம் வருகை,இறுதி நாள் நெருங்குகிறது என்ற கொள்கை அதிகம் பிரச்சாரத்தில் முன்னெடுக்கப் படுகிறது.

http://www.letmeturnthetables.com/2010/04/jesus-ascend-descend-heavens-above.html

அவ்வளவுதான்,இதன் தாக்கம் இந்தியாவில்,தமிழகத்தில் எப்படி என்றே பார்க்க வேண்டும்.

Sunday, June 26, 2011

ஹாருண் யாஹ்யாவின் ஃபோட்டொ ஷாப் மத பிரச்சாரம்




ஹாருன் யாஹ்ய[அட்னன் ஒக்டார்] என்ற துருக்கி நாட்டை சேர்ந்த மத பிரச்சாரகர் பரிணாம்த்திற்கு எதிராக பல சான்றுகளை கண்டுபிடித்ததாகவும் ஆக்வே எங்கள் புத்தகம் இறைவனால்[என்ன சம்பந்தம்?] வழங்கப்பட்டது ஆகவே இதுவே சரியான மதம் என்பது சில தமிழ் பதிவுகளில் படித்தேன்.நம் ஏற்கெனவே சில மத பிரச்சாரக்ர்கள் பரிணாம்த்தை ஏற்றும் இருக்கிறார்கள் என்று கூறியும் இன்னும் பரிணாமம் தவறு என்று நிரூபிப்பேன் சில கேள்விகளை வைத்து காமெடி செய்வதும் ,அதற்கு சில ஆய்வுக் கட்டுரைகள் பதிலாக இருக்கிறது என்று கூறினாலும்.கேட்பது இல்லை.
                    இந்த ஹாருண் யாஹ்யா என்பவர் பரிணாமம் தவறு என்றும் இறைவன் படைத்த அனைத்து உயிரினங்களும் அப்போது இருந்து ஒரே மாதிரி இருக்கிறது என்று சில பழைய படிமங்கள் புகைப்படம்,இப்போதைய உயிரினத்தின் புகைப்படம் என்று அட்லாஸ் ஆஃப் கிரியேஷன் என்று பல வண்ணங்களில் அச்சிடப் பட்ட புத்தகங்களை செப்டம்பர் 2008ல் உலகின் பல பள்ளிகளுக்கும்,கல்லூரிகளுக்கும் தபாலில் அனுப்பினார்.பரிணாமத்தின் வரலாற்றில் எவருமே இப்படி கூறியது இல்லை என்பது குறிப்பிடத்தகது.கொஞ்சம் சர்ச்சைக் குறிய மனிதர்தான்.


இதற்கு புகழ்பெற்ற இறை மறுப்பாளரும்,பரிணாம் உயிரியல் வல்லுனருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் பதில் அளிக்கும் காணொளிதான் இது.இதில் அவருடைய பல் புகைப்படங்கள் ஃபோட்டோ ஷாப் என்று மற்றும் பல ஏமாற்று வேலைகள் என்று தெளிவாக கூறுகிறார்.டாக்கின்ஸின் காணொளி இப்படி ஒருவரை கூறிய போதும் ஹாருன் யாஹ்யா அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை.இன்னும் அந்த புத்தக்த்தை இஸ்லாமிய நாடுகளில் கூட பாட புத்த்கமாக ஆகியது போல் தெரியவில்லை.

பல இஸ்லாமிய அறிஞர்கள் இவர் மீது இப்போது நல்ல அபிப்ராயம் கொண்டவர்கள் அல்ல. கீழே கண்ட காணொளி பாருங்கள் புரியும்.






இவர் பரிணாமத்தை எதிர்ப்பதால் நம் தமிழ் பதிவர்கள் சிலர் இவரை பற்றி தெரியாமல் பிரச்சாரம் செய்கின்றனர். இன்னும் இவரை நம்பினால் நம்புங்கள்.
பரிணாம்த்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரிப்போம் என்பவர்களை என்ன சொல்வது?.ஹாருண் யாஹ்யாவின் பரிணாம எதிர்ப்பு உட்பட்ட அவ்ருடைய பிரச்சாரங்கள் அனைத்தும் ஏமாற்று வேலை. இல்லை இவர் மிகவும் நியாயமான் மனிதர் என்று ‍சான்றளியுங்கள்,அல்லது அவர் எப்படியோ இருக்கட்டும் அவரின் பரிணாம் சான்று மட்டும் சரி என்றாலும் இன்னும் சில விஷய்ங்களை முனெடுக்கலாம்.

இவர் மாதிரி ஆள் பற்றியெல்லாம் பதிவிட வேண்டி உள்ளதே என்று எண்ணி நாகரிகமாக் மறுத்தால்,தவறென்று நிரூபி என்ற‌ பெருமித கூச்சல் தாங்க முடியவில்லை.மதம் என்பது ஆன்மிக வழி காட்டியாக்வும்,மனித பண்பு மேம்படுத்துவதாக மட்டும் இருந்தால் போதும்.அறிவியல் மதத்தை கண்டு கொள்வது இல்லை.பரிணாமம் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை.அதாவது கிடைத்த சான்று(படிமங்கள்)களை மெய்ப்படுத்தும்[பொருந்தும்] கூற்று.

பரிணாம எதிர்ப்பாளர்கள் மதத்தை அடிப்ப்டையாக் வைத்து எதிர்ப்பது தேவையற்றது.அறிவியல் அடிப்ப்டையில் எதிர்ப்பதாக் சொல்பவர்கள் ஹாருன் யாஹ்யா மாதிரி ஆட்களை காட்டுவது அவர்களின் பிற கூற்றுகளையும் கேலிக்குள்ளாக்கும்.

பரிணாம மறுப்பு என்பது முழுக்க அறிவிய‌ல் ஆய்வாளர்கள் செய்யும் வேலை ஆகும்.பரிணாமம் என்பது முற்று முதலாக் தவறு என்று எதிர்ப்பு கருத்துள்ள உயிரியல் விஞ்ஞானிகளின் கடந்த 10 வருட ஆய்வுக் கட்டுரைகளை குறிப்பிடுங்கள்.அதன் படி சரியான் ஆய்வு கருத்துகளை உங்கள் கட்டுரைகளில் எழுதுங்கள்.அப்ப்டி எழுதும் போது இவர் இப்படி இந்த சஞ்சிகையில் குறிப்பிடுகிறார் என்று கூறுங்கள்.ஒரு கருத்தை குறிப்பிடும் போது அது இவருடையது, அல்லது என் சொந்தக் கருத்து என்று சொல்ல வேண்டும்இது ஆய்வுக் க‌ட்டுரைகளின் தார்மீக நெறி.இணையத்தில் பலரது அறிவியல் கட்டுரைகளை படிக்கும் போது எப்ப்டி எழுதுகிறார்கள் என்று வியந்து போனது உண்டு.அவர்களோடு ஒப்பிட்டால் எனக்கு ஒன்றுமே தெரியாது என்றே கூறுவேன்.தேடலும் ,கற்றுக் கொள்ளும் ஆர்வமும் உடையவர்கள் கேள்விகளில் பாதி பதில் இருப்பதை உணர முடியும். இதுவும் ஒரு அமெரிக்க அறிஞர் கூறியது. 
*************
A problem well stated is a problem half solved.
Charles F. Kettering
US electrical engineer & inventor (1876 - 1958)
**************
கேள்வி சரியாக் இருந்தால் பதில் நிச்சயம் கிடைக்கும்.

மத பிரச்சாரகர்கள் மத புத்தகத்தின் அடிப்ப்டையில் பரிணாம்த்தை எதிர்ப்பது என்பது நகைச்சுவையான விஷயம். 



Saturday, June 25, 2011

What happened before the big bang

What happened before the big bang




History Channel - The Universe - Beyond the Big Bang





Aeons Before the Big Bang - Sir Roger Penrose 





Neil Turok: What Caused The Big Bang?

Friday, June 24, 2011

முதல் காரணி வாதமும் பெரு வெடிப்பு கொள்கையும்



நீங்கள் ஒரு இறை மறுப்பாளராகவோ அல்லது ஒரு மத பிரச்சாரத்தை எதிர்கொள்ளும் போது அதனை ஏன் எப்படி என்று கேட்பவராக இருந்தால் நேரடி விவாதத்திற்கு வாருங்கள் என்று அறை கூவல் விடுப்பதை கேட்டு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மதவாதிகள் இவ்வளவு தைரியமாக இப்படி கூப்பிடுகிறார்கள் இறைவன் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் இதில் எப்படி விவாதித்து இறைவன் இருக்கிறாரா என்று முடிவு செய்ய முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.அது குறித்தே இப்பதிவு.

விவாதம் என்றால் என்ன என்பதை முதலில் அறிவோம். 
**********************************
de·bate
noun,From Dictionary.com
1.a discussion, as of a public question in an assembly, involving opposing viewpoints: a debate in the Senate on farm price supports.
2.a formal contest in which the affirmative and negative sides of a proposition are advocated by opposing speakers.
3.deliberation; consideration.
***************************************
ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது மாறுபட்ட கருத்துகளை எடுத்துரைத்தல்,இதில் நேரடி,இணைய,தொலை பேசி,தொலைகாட்சி  என்று பல வகையில் நடை பெறலாம்.
என்னை பொறுத்தவரை எழுத்து பூர்வமான் விவதத்தில் கருத்தை சிதைவில்லாமல் ,மாற்றாமல் கூற இயலும்.ஆகையால்தான் எந்த சொத்திற்கும் பத்திரம் எழுதி பதிவு செய்து கையெழுத்தும் வாங்குகிறார்கள்.அதில் எழுதும் போது மாற்றம் என்றால் பெரிய வில்லங்கம் ஆகிவிடும் என்பதால் எழுத்து பூர்வமான விஷயங்களுக்கு அங்கீகாரம் அதிகம்.
இன்னும் ஒரு விஷயம் இந்த மத ச்புத்தகங்களின் சமகால புத்தக்ங்கள் கிடைத்து அதனை படித்தால் மத புத்தக்த்தில் மிகைப் படுத்திக் கூறப்பட்ட பல விஷயங்களை அறிய முடியும்.சில சம்யங்களில் மத புத்தகம் பற்றியே சர்ச்சைக் குறிய கருத்துகள் நம்ப்கமான சமகால் குறிப்புகளில் இருந்து கிடைக்கும். முரண்படும்,மாறுபடும் சம கால்க் கருத்துகளை பெரும்பாலும் மதவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பல சம கால கருத்துகள் சில மட்டும் புத்தகமாக எழுதப் பட்டு பாதுகாக்கப் பட்டதா,அல்லது அப்போது அவை ஏற்றுக் கொள்ளப் பட்டதன் காரணமாகவோ இப்போதும் கிடைப்பதுண்டு.அதனை எதிரிகள் சதி என்று பல கதை இணையத்தில் படிக்கிறோம். ஒவ்வொரு கருத்தும் ஆவணப் படுத்தப்படுவது இக்கால சிந்த்னைகளை பிறகால்த்தவ்ருக்கு எடுத்துச் சொல்லும் முயற்சி ஆகும்.இணையப் புரட்சி ஏற்பட்டதால் யாருடைய கருத்தும் ஆவணப் படுத்தக் கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளதை உபயோகப் படுத்த வேண்டுமெனில் மத கருத்துகளை விவாதங்களை எழுத்து பூர்வமாக் ஆவணப் படுத்துவது நல்லது.

இப்படி ஆவணப் படுத்தப் பட்ட கருத்துகளை 'அ' என்பவர் ,அப்போது, இதனை கூறினார்.அக்கருத்து இப்போது 'ஆ'என்பவரால் இப்படி கூறப்படுகின்றது என்பதை அறிய முடியும்.ஒரு ஆய்வுக் கட்டுரை படிக்கும் போது ஒரு பிரச்சினையை பலர் ,பல கால கட்டங்களில் எவ்வாறு அணுகிணார்கள்,அதன் சாதக ,பாதகங்கள் குறித்தும் எழுதி,இப்போது இக்கட்டுரையில் பரிந்துரைக்கும் முறை இதுவரை பின் பற்றப் பட்ட அணுகுமுறையில் இருந்து எப்படி மேம்பட்டது என்பதையும் கூறுவார்கள்.மதம் குறித்த கட்டுரைகளிலும் இம்மாதிரி அணுகுமுறை வர வேண்டும் என்பதே நம் ஆசை.

ஒரு மத பிரச்சாரகர்களிடம் நீங்கள் கூறும் கருத்தாக்கம் மதம் தோன்றிய[இது உலகம் தோன்றிய நாள் முதல் மதம் இருக்கிறது என்ற கூற்றும் சொல்வார்கள்]நாள் முதல் அப்ப்டியே இருக்கிறதா ,இல்லை காலத்திற்கு ஏற்ப பரிணமித்தா அதாவது பழையன் கழிதலும்,புதியன புகுதலும் என்று மாறியிருக்கிறதா என்று கேட்டால் என்ன சொல்வார்கள்?

இது இறைவனால் ஏற்படுத்தியது மனிதனின் கருத்திற்கே இடமில்லை.அன்று முதல் இன்றுவரை ஒரே மாதிரி இருக்கிறது,மனிதர்கள்,இன்னும் பலர்(?) சேர்ந்தாலும் இதில் ஒரு எழுத்தை கூட மாற்ற முடியாது என்பர்.பழைய பிரதி மத புத்தக்த்திற்கும்,இப்போதைய புத்தக்த்திற்கும் சில வித்தியாசங்கள் இருப்பதாக கூறுகிறார்கள் என்றால்,நாங்கள் தலைமுறை தலைமுறையாய் மனன்ம் செய்தே பரப்புகிறோம் அகவே இதை மட்டும் பாருங்கள் என்பார்கள்.இவர்கள் சொலவ்து உண்மையா பொய்யா என்பது அறிய முடியாது.இன்னும் ஒரு 100 வருடத்திற்கு முந்தைய கருத்தாக்கங்கள்,மாறுபட்ட பிரச்சாரங்கள் பெரும்பாலும் பாதுகாக்கப் படாமல்,ஒருவிதமான் அரசியல் சார்ந்த கொள்கையாக்கம் பிரச்சாரம் செய்யப் படுகின்றது.

முந்தைய கருத்தாக்கங்கள் அனைத்தும் தவறு,வேண்டுமென்றால் விவாதத்திற்கு வரமுடியுமா? என்பார்கள்.மேற்கூறிய நாம் கூறிய கருத்துகளை அசை போட்டால் இந்த நேரடி விவாதம் என்பது எப்படி இருக்கும் என்பதை புரிந்து கோள்ளலாம்.இந்த விவாதங்களில் மதங்கள் பற்றி அதன் ஆதார மூலங்கள்,வரலார்று ரீதியான கருத்தாக்க மாற்றங்கள் என்று அறிவியல் பூர்வமாக விவாதிக்க மாட்டார்கள்.இன்று இப்போது நான் சொல்லும் விளக்கம் மட்டுமே சரியாது என்று பேசுவார்கள்.அங்கே அவர் அப்ப்டி சொன்னார் என்றால்,இதுதான் சரி,அவர் பெரிய ஆளுங்க என்று சொன்னால் அதுவும் சரி,இதுவும் சரி என்பார்கள்.இந்த நேரடி விவாதங்களே ஒரு நகைச்சுவையான பொழுது போகே தவிர வேறொன்றுமில்லை.
**************
இந்த நேரடி விவாதங்களின் அடிக்கடி நடப்பது இறைவன் உண்டா இல்லையா என்பதாகும்.இதனை சென்ற பதிவில் சிறிது ஆய்வு செய்தோம் என்றாலும் இதில் ஒரு முதல் காரணி விவாதம் என்பதையும் இதனை எப்படி பயன் படுத்துகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

முதல் காரணி கொள்கை என்றால் என்ன?

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணி[cause] உன்டு.காரணி இல்லாமல் ஒன்றும் நடக்க முடியாது.பிரபஞ்சம் ஒன்று இருந்தால் அதனை படைத்தவர் என்று ஒருவர் உண்டு.ஆக்வே இறைவன் இருக்கிறார்.அப்போது இறைவனை படைத்தவ்ர் யார்? என்றால் நம்மை எள்ளி நகையாடி இறைவனுக்கு இது பொருந்தாது என்றும் இருப்பவர் என்று சொல்வார்கள்
.
 இதனை கூறுபவர்கள் சொந்த சரக்கு போல் கூறுவதும்,அவரது சிஷ்யர்கள் ஆஹா நம்து குரு என்னே அபாரமாக் வாதிடுகிறார் என்று மெய் மற்ப்பதும் இயல்பான விஷயங்கள். இந்த ஆச்சரியத்தினால்தான் யாரை பார்த்தாலும் நேருக்கு நேர் வருகிறாயா என்றழைப்பது. சரி இந்த முதல் காரணி கருதுகோள் தத்துவத்திற்கே திரும்பி வருவோம்.இந்த முதல் காரணி கருதுகோள் முதலில் பிளாட்டொ (c. 427–347 BC) ,அர்ஸ்டார்டில்(c. 384–322 BC),மற்றும் தாமஸ் அக்கினோ[ 1225 – C.E 1274).ஆகியோர்களால் உருவாக்கி ,பண்படுத்தப்பட்டது.ஆக்வே இந்தக் கொள்கை மிகப் ப்ழமையான‌து என்பதையும், இதனை பண்படுத்திய சரித்திர தத்துவ‌ நாயகர்களை மேற்கோள் காட்டாமல் சொலவ்து தவறு. 

 இன்னும் இந்த கொள்கையில் பல மாறுபட்ட வகைகள் உண்டு,ஒவ்வொன்றும் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பின் போதும் பரிணமித்தது என்பதை அறிதல் நலம்.பிரபஞ்சம் தோன்றியது பெரு வெடிப்பின்[Big Bang Theory] மூலம் என்பதே இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரபஞ்ச தோற்ற‌ கொள்கை[Orgin of universe]. .நம்ம மதவாதி அண்ணாச்சி ஒரே போடாக பெரு வெடிப்பிற்கு காரணம் என்ன?அதனை வெடிக்க வைத்ததே எங்க இறைவன்தான் என்று அனைவரையும் புல்லரிக்க வைத்து விடுவார்.அடேயப்பா இவரை இறைவன் எப்படி பயன்படுத்துகிறான் பாருங்கள் என்று மெய் மறப்பர் சிஷ்யர்கள்.
_________
சரி நாம் இப்போது இதனை ஆய்வு செய்வோம்.

பெரு வெடிப்பு கொள்கை என்றால் என்ன?

பெரு வெடிப்பு கொள்கை பிரபஞ்சம் எப்படி தோன்றியது பற்றிய அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பற்றிய இப்போதைய கருது கோள் ஆகும். பொ.ஆ 1927ல் ஜார்ஜ் லாமெடர் என்ற பெல்ஜியத்தை சேர்ந்த,கத்தோலிக்க மதகுரு மற்றும் ஆய்வாளரால் வரையறுக்கப் பட்டது.மிக அதிக‌ வெப்பமும்,மிக அதிக அடர்த்தியும் கொண்ட ஒரு வினோத ஓர்மைப் புள்ளி[singularity) அணுவில் இருந்து 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விரிவடைய ஆரம்பித்து பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் இக்கொள்கை.
திடிரென்று வெடிப்பு ஒன்றும் ஏற்படவில்லை,ஒரு பலூன் ஊதினால் என்ன நிகழுமோ அதுபோல் நிகழ்ந்து கொண்டிருப்பது.இக்கொள்கை எப்படி சரி என்று கருதப்படுகின்ற‌து என்றால் இரு வேறு கால கட்டங்களில்நட்சத்திர மண்டலங்களுக்கிடையே உள்ள தூரம் அதிகரிப்பதும்,வெப்பம் குறைவதை வைத்து ஒரு கால கட்டத்தில் அனைத்துமே ஒரு வினோத ஓர்மை புள்ளியில் இருந்திருக்கலாமோ என்ற கண்க்கீட்டில் உறுதிப் படுத்தப்பட்டது. இன்னும் சில கருதுகொள்களும்'[hypothesis] போட்டியில் இருக்கின்ற‌ன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எந்த மத புத்தக்த்திலும் இறைவன் வானங்களையும்,பூமியையும் படைத்து முடித்து விட்டார்.இங்கே முதல் க்ஷன‌த்தில் நடந்தது போலவே இப்போதும் நடகின்ற‌து ஆகவே இந்த பெரு வெடிப்பு கொள்கை மத புத்தகங்களில் கூறப்படும் இறைவனின் படைப்பை வழி மொழிகிறதா என்பதை யோசிக்கலாம்.

சரி பெரு வெடிப்பு என்பதை விட தமிழில் பெரும் விரிவடைதல் கொள்கை என்பதே பெயர் சரியாக இருக்கும்.

***********
   

இப்போது திருப்பி நம் முதல் காரணி கொள்கைக்கு வருவோம்.

மதவாதிகள் என்ன கூறுகிறார்கள்,இந்த ஒரு புள்ளியில் இருந்து விரிவடைய செய்து கொண்டிருப்பவர் இறைவன்(கள்) என்கிறார்கள்.இது அறிவியலின் படி அந்த புள்ளிக்கு முன் வெளி(இடம்),காலம் இல்லை.அங்கிருந்துதான் இரண்டும் ஆரம்பிக்கின்றன.அந்த வினோத ஓர்மை புள்ளி[singularity] என்பதும் ஒரு பொருள்.அதற்கு வெளியில் இருந்து இறைவன் என்னும்சக்தி என்பது அறிவியலின் படி தவறு.அந்த புள்ளியில் உள்ள மிக அதி சக்தி(அதி வெப்பம்+அதி அடர்த்தி) அத்னை விரிவடைய செய்கிறது என்பதும் ஒரு குறிப்பிட்ட அள்விற்கு விரிவடைந்ததும் பின் திருப்பி சுருங்கி பழைய நிலைக்கு வந்துவிடும் என்பதும் இக்கொள்கையின் அம்சங்களே.இத்னை மத புத்தகங்கள் ஏற்காது.ஆக சுருங்குவதும் விரிவதும் ஒரு முடிவற்ற செயல் என்ற் கருத முடியும்.நாம் முதல் விரிவாக்த்தில்தான் இருக்கிறோம் என்று அறுதியிட்டு கூற இயலாது.
Big crunch(End of Big bang)

இப்படி பிரபஞ்சத்தில் 0.000001% பூமியில் உள்ள மனிதனுக்காக் இப்படி பிரபஞ்சம் விரித்து சுருக்குவது அவ்வளவு திறமையுள்ள படைப்பாளி செய்யும் வேலை அல்ல.பிரபஞ்சம் நிலையானது என்பதும் எண்ணற்ற முறை விரியும் சுருங்கும் என்பது ஒரே மாதிரியே.ஒருவேளை அந்த சக்தி தீர்ந்து விட்டால அப்ப்டியே நின்றும் விடலாம்.ஆக நடைமுறையில் உல்ள பல் மதங்களின் படைப்பு கொள்கைக்கு இது ஒத்து வராது. பெரும் விரிவாக கொள்கையை முதல் காரணி வாதத்திற்கு பயன் படுத்த ஒரு புது மதம் உருவாக்கப் பட்டால் அதற்கு உபயோகப் படலாம்.இக்காணொளி பாருங்கள் இவர்கள் வேறு முறையில் பிரச்சினையை அணுகுகிறார்கள்.




Uniqueness and Relevance of Jainism


Study Notes

இறைவனின் இருப்பு பற்றிய விவாதங்கள்


இறைவன் இருகிறானா?இல்லையா என்னும் விவாதம் மிகப் பழமையானது.இதனை பல ஆபிரஹாமிய மதபிரச்சாரகர்கள் விவாதிக்க விரும்புவர்..இது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம்..

இந்த கேள்வியை விவாதிக்கும் போது இறைவன் என்று சொல்லப் படும் சக்தியின் தன்மைகள்,தேவைபடுவது இல்லை.அதாவது இறைவன் ஒருவரா ,பலரா என்பது அவசியமில்லாதது.இந்த விஷயத்தை தங்கள் மதம் குறிப்பிடும் அந்த ஒரே இறைவன் என்ற பாணியில் செய்ய மாட்டார்கள்.பொத்தாம் பொதுவாக ஒரே இறைவன் என்பார்கள்.அதாவது அனைத்து மதங்களும் சொல்லும் கடவுள்கள் அனைத்தும் ஒன்றா? .அபோது மத பிரச்சாரம் என்பது தவறு. உங்கள் புத்தகம் கூறும் கடவுள் மட்டுமே உண்மை எனில் மத புத்தக்ம் முதலில் ஆய்வுக்கு உட்படுத்தப் படவேண்டும்.உலகில் உள்ள அனைத்து மதத்தினரும் ஒரே கடவுள்(கள்) என்று ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த பொது இறைவன் பற்றிய விவாதம் சரி..

இறை மறுப்பாளர்கள் ஏன் கடவுள் இல்லையென்று கூறுகிறோம் என்றால் இந்த மதம் சார்ந்த சட்டங்கள் மற்றும் வன்முறை ஒழிக்க மட்டுமே. மதங்கள் கூறும் கடவுளை மறுப்பதே இதற்கு போதும்.அனைவரின் இன,மொழி,மத பேதமின்றி அனைவரின் வாழ்வாதாரம்,நம்பிக்கை பாதுகாக்கும் எந்த மதத்தையும் எதிர்க்க தேவையில்லை. மத சார்பற்ற மதங்களில் மக்களை பாதிக்கும் அம்சங்கள் மட்டும் மாற்றக் கோருவது சிறந்தது. .பிற‌ மதத்தினரை த்வறு என்று இம்மதம் மட்டுமே சரிஎன்னும் மதங்களை தவறு என்று நிரூபிப்பது அனைவரின் கடமையாகும்.இதற்காக பல் போர்கள்,இனவழிப்பு நடந்தன என்பதையும் அது குறித்து பெருமிதம் கொள்கிறார்கள் [சில சமயம் மறுப்பார்கள்] என்பது மிகவும் மனித நேயமற்ற செயல் ஆகும். 

இந்த கேள்வியை இறை மறுப்பு நண்பர்கள் எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது.மதவாதிகளின் 21ஆம் நூற்றாண்டு தந்திரங்கள் அனேகம். அதனை வகைப் படுத்துகிறேன்.

இந்த விவாதத்தில் முதலில் இப்படி கேட்பார்கள்.

1.இறைவன் இல்லை என்று நிரூபிக்க முடியுமா? 

இது என்ன முட்டாள் தன்மாக கேட்கிறார்களே என்று நினைத்து விடாதீர்கள்.இதில் திற்மையான் ஏமாற்று வேலை இருக்கிறது.

இத்னை இப்படி அணுகலாம்.ஒருவர் ஆண் என்று நிரூபி என்று கேட்க‌ப் படும் போது அவர் திருப்பி அப்படியென்றால் நான் பெண் என்று நிரூபி என்று சொலவ்து போல் ஆகும். இது.ஆணுமல்லாமல்,பெண்ணுமல்லாமலும் சிலர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அதனை தனக்கு சாதகமாக பயன் படுத்தும் முயற்சியே இது.

'க' என்பவர் பெண் என்பதற்கு சோத்னை நட்த்தப் படுகின்றது ,சோத்னை முடிவில் அவர் பெண் இல்லை. 

ஆகா அவர் ஆண் என்று கூற முடியுமா? இல்லை.என்ன கூறலாம் அவர் ஆணாக்வோ அல்லது இரு பால் சாராதவராகவோ இருக்கலாம்.
ஆகவே 'க்' என்பவர் ஆண் என்ற சோத்னை நடை பெற்றால் மட்டுமே அவர் ஆண்.
அது போல் அவர்களின் மத புத்தக்த்தில் சொல்லப் படும் ஒவொரு விஷயமும் ஐயந்திரிபர நிரூபிக்கப் பட்டால் மட்டுமே அவர்கள் மதம் சரி,ஒன்று தவ்றென்ராலும்[நிறைய இருக்குல்லா] ,மதம் தவறு, கடவுளுக்கும் அந்த மதத்திற்கும் தொடர்பு இல்லை.

இது கறுப்பு வெளுப்பு [Binary] விஷயம் அல்ல[0 அல்ல்து 1] இடையில் உள்ள்வையே மிகுதி.இறை மறுப்பாளர்கள் '0' என்கிறோம்,மத வாதிகள் '1' என்று தானே சொல்ல வேண்டும்.'0' அல்லாத எதுவுமே '1' என்கிறார்கள்.இது போல் முழுமையான் இறைமறுப்பு என்பதற்கும் குறிப்பிட்ட மதத்தின் இறைவனின் இருப்புக்கும் இடையில் பல நிலைகள் உண்டு. ஒருவன் இறைவ‌னை அறிய தியானம்,தவம்,யோகம் என்ற தேடலில் இருப்பதாக கூறுவதை இறை நம்பிக்கையாக இந்திய சமயங்கள் ஏற்கின்றன.

முழுமையாக் நம்பி அதன் படி வழிகாட்டுதல் படி வாழவில்லை எனில் நிராகரிப்போர்,வழிகேடர் என்பது என்பது ஆபிரஹாமியம்.ஆக்வே இந்திய மத‌ நம்பிக்கையாளன் ஆபிரஹாமிய மத நம்பிக்கையாள்னுக்கு இறை மறுப்பாளனே.
தேடலில் இருப்பதும் ஆபிரஹாமியத்தின் படி இறை நிராகரிப்பே..இப்படி பொது இறைவன் என்ற வாதம் .அப்போது முழுமையற்ற இறைவன் ஆகிவிடாதா என்றால் ,அவர்களுக்கு ஏமாற்ற இது போதும்.ஆகவே இதுவே இறைவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பு. .
*                                  *                                 *

2.இதுபோல் மதவாதிகள் தங்கள் வாழ்வில் இறைவனின் வழிநடத்தலை உனர்வது பற்றி பேசினால் நல்மாக இருக்கும். இறைவனை தொடர்பு கொள்ளல்,உணர்தல் போன்ற விஷயங்களை ஏற்கெனவே இப்பதிவில் அலசி உள்ளோம்.இதற்குள்ளும் வரமாட்டார்கள். ஏனெனில் இதுவும் முடியாது என்பது தெரியும்.இறை மறுப்பாளர்கள் தங்கள் வாழ்வில் இறைவனின் செயல் என்று எதையும் உணர்வது இல்லை,நடக்கும் நடைமுறை செயல்களை அதன் காரணிகளை கொண்டு விளக்கி விடலாம்.[இதிலும் விஷயம் இருக்கிறது.]

இதற்கு இவர்கள் வைக்கும் (பிடி)வாத்ம்தான் முதல் காரணி வாதம்.

இறைவன் என்பது மறை பொருள்,அதனை மெய் ஞானம் அடைந்து ,பகுத்தறிந்து உணர்வதே மதம் என்று கூறும் நண்பர்களே,உங்கள் தேடல் முடிவில்லாதது. உங்களுக்கும் இறைமறுப்பாள‌ர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இறைவன் பற்றிய தேடலில் இருக்கிறோம் என்பது இறைவனின் இருப்பையோ,இலாமையோ உறுதிப் படுத்தாது என்றாலும் இத்னை நிறுவன் மதங்களின் பிரசாரகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் இறை மறுப்பாளர்கள் அறிய வேண்டிய உண்மை.. ஆபிரஹாமிய மதத்தவருக்கு தன் மதம் மட்டுமே சரி என்ற அரசியல் சார்ந்த கட்டாயம் இருக்கிறது..இறை நம்பிக்கை கொள்வதின் அவசியம் என்ன?இல்லாவிட்டால் என்ன நஷ்டம் என்றால் பலருக்கு ஒன்றும் இல்லை.சிலருக்கு தொழில் பாதிக்கும். அவ்வளவுதான்!!!!!!!!!!!.

அதாவது இறைவனை தேடுவது என்பது விருப்பம் உள்ள‌ ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய ஆன்மீக தேடல்,அது முடிவிலாதது.இந்த கொள்கை இறை மறுப்பிற்கு ஆதரவானது.ஆக்வே இக்கொள்கையாளர்களுடன் விவாதிப்பது அவசியமில்லை.இந்து, பௌத்த,சமண மதங்கள் இக்கொள்கையை வலியுறுத்துகின்றன. ஒவ்வொருவரும் சுய விருப்பத்தில்,சுய தேடலில் இறைவனை உணர வேண்டும்.இம்மதங்களுக்கு இறைவன் என்பது ஒரு வகை உணர்வே அவ்வளவுதான்,மற்ற படி மத புத்தக்ங்களில் இருப்பது அனைத்தும் உண்மை என்று கூறுவது இல்லை.பெரும்பாலும் இம்மதத்தை சேர்ந்த நண்பர்கள் சில விதமான பழக்க வழக்க நெறிமுறைகளை பின் பற்றும் போது சில உணர்வுகள்[மன் நிம்மதி] கிடைகின்றது,அதற்காக்வே செய்கிறேன் என்பார்கள்.எ.கா ஐயப்பன் விரதம்.இவர்களுக்கு கடவுள் எப்படி பிறந்தார்,ஆதாரம் உண்டா என்பதில் கவலையில்லை,அந்த விரதத்தை பின் பற்றும் போது கிடைக்கும் உணர்வை விரும்புவதால் மட்டுமே இதனை செய்கிறார்கள்.கூட்டம் அதிகமாக் இருக்கும் போது ஏற்படும் பாதுகாப்பும் கூட மனதுக்கு இதமானது.இப்போதைய வாழ்வின் அழுத்தங்கள் குறைய ,உறவுகள்,நண்பர்கள் அனைவரையுமே நம்ப முடியாமை தவிர்க்க‌ ஒரு சுமைதாங்கி இந்த உணர்வு..

இது அனைத்து மதங்களுக்கும் பொதுவானது.ஆனாலும் இத்னை ஆபிரகாமிய மத பிரச்சாரகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.ஏனெனில் இறை மறுப்பாளர்கள் எனக்கு அந்த‌ உணர்வு தேவையில்லை என்று கூறிவிடலாம். நண்பர் ஒருவர் கூறினார் என்று போனால் எல்லாம் அயோக்கியத் தனம் நடக்குது என்று கூறுவர்.ஏனெனில் இது அவர்களின் சிந்தனை. 

இஸ்லாமின் புனிதத் தலமான் மெக்கா,மதினவில் பிற நபிக்கையாளர்களை அனுமதிக்காததிற்கு இதுவே காரண‌ம்.அங்கு செல்லும் நம்பிக்கையாளர்கள் இவ்வளவு பேர் வருகிறார்களே,எலோரும் என்ன முட்டள்களா?,ஆக்வெ இது உண்மை,என்று நம்புவதால் மன் நிம்மதி கிடைக்கிறது,நம்பிககை அதிகரிக்கிற‌து.இது அனைத்து மதத்தவருக்கும் அவர்கள் புனித்மாக கருதும் இடங்களில் கிடைக்கும் என்பதால் இதை மட்டும் வைத்து இறைவனின் இருப்பை கூற முடியாது. இறைவன் அனைத்து மதத்தவரின் புனித இடங்களிலும் இருக்கிறார் என்றால் கதை முடிந்தது,மத பிரச்சாத்தை நிறுத்தி விடலாம்.

ஆக்வே இந்த உணர்வுகள் கொடுக்கும் நிம்மதிக்காக்வே மதம் பின் பற்றப் படுகின்ரது என்ற உண்மையை ஆபிரஹாமிய மதத்தவர் மறை(று)க்கின்றனர்.

___________

இன்னும் ஒரு விஷயத்தை புரிந்து கொல்ளுங்கள் தன்னை மட்டுமே அனைவரும் வணங்க வேண்டும் என்ற பொறாமை பிடித்த ஒரே கடவுளுக்குத்தான் தன் இருப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அக்கட்வுளை இல்லையென்று சொல்வதற்கு பிற மத நம்பிக்கையாளர்களின் இருப்பே போதுமானது. இந்திய சமயங்களின் கடவுள் நம்பிக்கை, ஆபிரஹாமிய கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது.
ஆக்வே இறைவன் உண்டா இல்லையா என்று பொதுவில் வாதம் செய்வது ஆபிரஹாமிய பிரச்சாரகர்களுக்கு சில சாதகங்களை ஏற்படுத்தும் அதாவது அவர்களுக்கு தப்பிக்க வாய்ப்பு கிடைக்கிற‌து.அவர்கள‌து கொள்கை இதுதான்.

1.இறைவன் உண்டு என்று விவாதத்தில் சொல்லப் படும் வாதங்கள்

 அ)'இறைவன் இல்லை என்று நிரூபி',

ஆ)இந்த முதல் காரணி வாதம் வைத்து குழப்புவது.[அடுத்த பதிவில் ]

2.இதற்கு பதில் சொல்ல முடியாது என்று நினைத்துக் கொண்டு வாதத்தில் வெற்றி என்பதும்,பிற மதங்களை விமர்சிக்கும் போது அவர்களின் மத புத்தங்களில் கூட எங்கள் மதமே கூறப்பட்டு இருக்கிறது என்பது.அவ்ர்கள் மதபுத்தகங்கள் குறையுள்ளவை ,எங்களது புத்தகம் மட்டும் மாறாதது என்று அவர்களையும் மடக்குவது.

இறைவன் இருக்கிற‌தா என்ற வாதம் செய்யும் போது ஆபிரஹாமிய மதத்தின் புத்தக்ங்களில் கூறப்படும் இறைவனின் இருப்பை சோதித்த்றிவதுதான் சரியாகும்.இன்று அற்விவியலில் விடை தெரியா கேள்விக்கு எல்லாம் கடவுள்தான் ,காரனம்,அதே கடவுள் மத புத்தகம் அனுப்பினான் [இதற்கு நிரூபிக்க முன் வர மாட்டார்கள் என்பதையும்,மத புத்தகங்கள் பற்றி அவர்கள் கூறும் கதைகளுக்கு அவர்களின் மூலங்களிலேயே ஆதாரம் இல்லை என்பதை நிரூபித்து உள்ளோம்] இதை அனைவரும் பின் பற்றியே ஆக வேண்டும் எனதும் நகைப்புக் குறியது.

அவர்களுக்கு சில வேலைகள்.

1. மத புத்தகங்கள் கூறும் கடவுளின் தன்மைகளை, இருப்பை,வரலாற்றை [இருந்தால் கால அட்டவணையோடு] வரையறுக்கவும்.அதனை அறிவியல் கொண்டு சோதனை செய்த சான்றுகள்.

2. இப்படி அனைத்து மதங்களுக்கும் பொதுவான‌ இறைவன் உண்டா இல்லையா என்று விவாதிப்பது மத புத்தகங்களின் படி சரி என்றால் அதனை குறிப்பிடவும்.

இந்த மத பிரச்சாரகர்கள் செய்யும் விவாதம் அவர்களின் மதபுத்தக்ங்களின் படி இருந்தால் மட்டுமே சரியாகும்.இல்லையெனில் அவர்கள்செய்வது தவறு.. 
_________________
அடுத்த பதிவில் இந்த பொது இறைவன் பற்றிய முக்கிய விவாதக் கருத்து பற்றி கூறுவேன்.

பதிவு ரொம்ப நீள்மாகிவிட்டது.இன்னும் முதல் காரணி வாதம் பற்றி ஆரம்பிக்கவே இல்லை.அடுத்த பதிவில் சொல்கிறேன்.

கடவுளை ஏன் நம்புகிறோம் என்பது பற்றிய காணொளி


Thursday, June 23, 2011

இறைமறுப்பாளர்கள் ஒழுக்கமற்றவர்களா?



மதவாதிகளால இறை மறுப்பாளர்கள் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டுகளுல் ஒன்று அறிவியல் ஒழுக்கத்தை[Moral] பற்றி எதுவும் கூறுவதில்லை.ஆகவே அறிவியலை மட்டும் பின்பற்றுவதாக் கூறுபவர்கள் ஒழுக்கமான்வர்களாக் இருக்க முடியாது என்பர்.இன்னும் 'வல்லது வாழும்(survival of the fittest)' என்பதே இயற்கைத் தேர்வின்[natural selection] அடிப்படை, ஆக்வே எது செய்தாவது வாழ வேண்டும் என்பத்தான் இறைமறுப்பின் கொள்கை என்றும் கூறுகின்றனர்.

இன்னும் ஒரு விவாதத்தில் ஒரு நண்பர் இறை மறுப்பாளர்கள் நெருங்கிய  உறவுமுறைகளில் கூட பாலுறவில் ஈடுபடுவார்கள்,ஓரின‌ புணர்ச்சியாளராக இருப்பார்கள் என்றும் கூறினார். ஏனெனில் இறை மறுப்பாளர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது என்றார்.இந்த கூற்றுகளை இப்பதிவில் ஆய்வோம்.

இறுதியாக கூறிய கூற்றுகளை நண்பர் இக்பால் செல்வனின் பதிவில் நன்றாக அலசிவிட்ட படியால் அதன் சாரத்தை மட்டுமே அளிக்கிறேன்.

அ) நெருங்கிய இரத்த பாலுறவு:இந்த உறவு குறையுள்ள சந்ததிகளையே உருவாக்கும் என்பதை உணர்ந்தே சமூக கட்டுப்பாடுகள் ஆனது.ஆக்வே இது அறிவியலின் படி தவறு.அறிவியல் இன்னும் ஒரு படி மேலே போய் ஒன்று விட்ட சொந்தங்களுடன் மணம் புரிவது கூட இதே விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நிரூபிக்கிறார்கள்.இப்படிப்பட்ட திருமணங்கள் மதங்களால் அங்கீகரிக்கப் பட்ட ஒன்று என்பதை உணர்க. 

ஆ) ஓரிணப் புணர்ச்சி என்பது ஜீன் குறைபாடுகளால் ஏற்படுவது.இம்மாதிரி குறைபாடுள்ளவர்கள் பிறப்ப்தும் பரிணாம்த்தின் நிரூபணம்.
பழக்க வழக்கத்திகன் காரணமாக் இச்செயலில் ஈடுபவர்களை மருத்துவ, உளவியல் ரீதியான் சிகிச்சை அளித்து மாற்ற முடியும்.. மாற்ற முடியாத பிறவி குறை உள்ள‌வர்களுக்கும் கல்வி,வேலை வாய்ப்பு, சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டுமெபன்தே இறை மறுப்பாளர்களின் நிலை. .ஒருவேளை இம்மாதிரி குறையுள்ளவர்கள்,மத நம்பிக்கையாளராகவோ அல்லது,இறை மறுப்பாள‌ராகவோ இருந்த போதும் ஈடுபடலாம்.ஒன்றும் வித்தியாசம் இல்லை.இவற்றை பல செய்திகளில் படித்திருக்கிறோம் அல்லவா.
 **********************
இப்போது பதிவின் முக்கிய கேள்வியான ஒழுக்கம் பற்றிய இறை மறுப்பாளர்களின் கொள்கை பற்றி விவாதிப்போம். ஒழுக்கம் என்பதை முதலில் வரையறுப்போம்.விக்கிபேடியாவில் இருந்து

Moral:A moral (from Latin morālis) is a message conveyed or a lesson to be learned from a story or event. The moral may be left to the hearer, reader or viewer to determine for themselves, or may be explicitly encapsulated in a maxim

ஒழுக்கம் என்பது ஒரு அனுபவத்தில் கற்றுக் கொண்ட உண்மை(செய்தி).இதை செய்தால் இது நடக்கும் என்று உணர்ந்து நடப்பதுதான் ஒழுக்கம்.ஒருவர் இறந்து விட்டால் திருப்பி உயிர் பெற முடியாது என்பதெலேயே கொலை என்பது பெரிய குற்றம் ஆனது.அக்கொலையே தற்காப்பிற்காக் செய்யப் படும்போது வேறு விதமாக பர்க்கப் படுகின்றது. ஒரு செயல் நடந்த போது அது நடந்த சூழ்நிலையும் இப்போது முக்கியமாக் கருதப் படுகின்றது.

ஆக ஒழுக்கம் என்பது அனுபவத்தில் கற்றுக் கொண்டு நடைமுரை படுத்தப்பட்ட இடம்,காலம்,சூழ்நிலை சார்ந்த சமூக கட்டுப் பாடுகள்..அறிவியல் என்பதைஒரு ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து இரு பொருள்களை இந்த விகிதத்தில் ,குறிப்பிட்ட சூழ்நிலையில் கல்ந்தால் புதிய பொருள் கிடைக்கும் என்பது மட்டுமல்ல. மானுட வியல்,உளவியல் ,வரலாறு,சட்டம்,மத ஆய்வு போன்ற்வையும் அறிவியலில் வரும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டால் அறிவியல்தான் ஒழுக்கத்தை வரையறுக்கிற‌து என்பது புரியும்.

அறிவியல் புத்தக்த்தில் படிப்பது மட்டுமே அறிவியல் என்ற மற்ற விஷயங்கள் அறிவியல் ஆகாது என்ற கருத்தை மதவாதிகள் கொண்டிருப்பதால் மட்டுமே அறிவியல் ஒழுக்கத்தை தராது என்பவர்கள் மத புத்தக்த்தில் சொலப் பட்ட விஷயங்களுக்கே கால அட்டவனை தந்தது அறிவியல் என்பதை மறந்து  பேசுகிறார்கள்.
ஆக மனிதன் தோன்றிய போது விலங்கு போலத்தான் வாழ்ந்தான்,மூளை வளர்ச்சி அடைய ஆரம்பித்தபின் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ல ஆரம்பித்தான், அது குழுக்களாக வாழும் போது நடை முறைப் படுத்தப் பட்டது.இசூழ்நிலையில் த்னக்கு புரியாத இயற்கை சக்திகளை மேற்பட்ட சக்தியாக தெய்வங்களாக் அஞ்சி,அவைகளுக்கு பிரியமாக் நடக்க முடியுமா என்றும் யோசிக்க ஆரம்பித்தான்.

இப்படி நடைமுரையில் கற்றுணர்ந்த உண்மைகளை குழு தலைவர்கள் கூறும் போது தனக்கு இறைவன் அளித்த கட்டளை என்று கூறி விட்டால் மறு பேச்சு கேட்காமல் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.சொல்வதை கேட்டால் சொர்க்கம்,கேட்காவிட்டால் நரகம் என்று எளிய முரையில் எடுத்து சொல்ல ஆரம்பித்தார்கள்.

அவையனுத்தும் தொகுக்கப் பட்டே மத புத்தகங்கள் ஆன‌தும்,மதங்கள் பரப்புவதும் தோன்றியது.ஆக அறிவியலே மனித சமுதாயத்திற்கு ஒழுக்கம் கற்று கொடுத்தது.தமிழில் பாருங்கள் கட்வுள்=கட+உள் உண்மையை ஆய்ந்து அறிதல். புத்தர் யோசித்தே 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்னும் அரிய தத்துவத்தை கண்டு பிடித்தார். ஒரு கேள்விக்கு தர்க்க ரீதியாக விடை தேடுவது அறிவியலே.. மத புத்தக்த்தில் பல இடங்களில் விவாதம் போல் கேள்வி பதில்கள் ஆய்வுரீதியாக விடை தேடும் முயற்சி ஆகும்.மத புத்தங்களில் பல்ர் கற்று அறிந்த உண்மைகள் அப்ப்டியே ,அல்லது கொஞசம் மாற்றமாக்  கூறப்டுவதையும் அறிந்திருக்கிறோம்.


மதவாதிகள்தான் சட்டம் கடுமையாக்கப் பட வேண்டும் என்று கூக்குரல் இடுகிறார்கள்.கடுமையான சட்டங்களின் மூலமே அனைத்து குற்றங்களும் தடுக்கப் படும் என்கிறார்கள்.ஒருவர் தவறு செய்யும் போது குற்ற உணர்ச்சி ஏற்படுவதை கட்வுளால் செய்ய முடியாதா?.ஆனால் ஒழுங்கான புரிதல் உள்ள ஒருவன் சந்தப்ப்ம் கிடைத்தால் கூட தவறு செய்யும் வாய்ப்பு குறைவு.அப்புரிதல் மத் வாதிகளிடம் கூட இருக்க்லாம்.இறை மறுப்பாளர்களிலும் இருக்கலாம். அறிவியலின் வாடையே அடிக்காத ப்ழங்குடி மக்களில் கூட சில ஒழுக்க விழுமியங்கள் உல்ளது எப்படியெனில்,இதே விளக்கம்தான் அவர்கள் நடைமுரையில் தலைமுறை தலைமுறையாக் கடைப்பிடிக்கும் கோட்பாடுகள்.அதுவும் அறிவியலே முதல் தலைமுறைக்கு எப்படி கோட்பாடு கிடைத்தது என்றால் செய்து கற்றுக் கொள் தத்துவம்[Trial and Error] மட்டுமே அன்றி வேறில்லை.ஒரு தலைமுறையின் கற்றுணர்வு,அடுத்த தலைமுறையின் மத கோட்பாடு ஆகிறது.

மற்றவர்களை பற்றிய புரிந்துணர்வை வளர்க்கும் அற்வியலே மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒழுக்கத்தை  ஏற்படுத்தி,பண்படுத்திக் கொண்டிருக்கிறது. .எப்படி பண்படுத்துகிறது என்றால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் வரை அடிமை முறை வழக்கத்தில் இருந்தது,அதனை மத புத்தகங்கள் அங்கீகரிப்பதால் மத்வாதிகள் ஆமோதித்தனர்.ஆபிரஹாம் லிங்கன் போன்ற பலர் போராடியே இதனை ஒழித்தனர்.

ஒருவேளை கடவுள் கொடுத்த சட்டம் எனில் எக்காலத்திற்கும் பொருந்தும் வண்னம் இருக்க வேண்டும்.அதில் அனுமதிக்கப் பட்ட பல செயல்கள் இப்போது ஒதுக்கப் படுகின்ற‌ன.ஆக அறிவியலாளர்கள் ஒழுக்கத்தை அறிவியல் என்றே ஏற்கிறார்கள்.அதன் மீதான சட்டங்களை மதித்தே நடக்கிறார்கள்.மாற்ற வேண்டிய சட்டங்களை எதிர்த்து குரல் கொடுகிறாகள்.சடங்களை மீறினால் அதற்குறிய தண்டனையையும் ஏற்கிறார்கள்.ஒழுக்கம் என்பதும் அறிவியல் மட்டுமே.ஆகவே அறிவியல் என்பதும் அற இயலே. இது குறித்த ஒரு காணொளி