Friday, September 2, 2011

ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது சரியா? விமர்சனங்கள் உண்மையா?





மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த,மனதுக்கு ஊன்றுகோல் போன்ற வாழ்வியல் நடைமுறை. .மதம் சார்ந்த வாழ்வியல் நடைமுறைகளை இந்தியாவில் எவரும் தவிர்க்க முடியாது.பெரும்பாலானவர்கள் இந்த மதத்தில் இனத்தில் பிறந்தது அவர்கள் விருப்பத்தினால் அல்ல என்பதை உணர்ந்து  கூடுமான்வரை மதம் சார்ந்த‌ வாழ்வியல் நெறிமுரைகளை கடைபிடித்து வாழ்க்கை போராட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.பல்ருக்கு மதம் என்பது உண்மையா என்று தெரிவதை விட தனக்கு ஒத்துவரும் கொள்கைகளை மட்டும் பின்பற்றி ,வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் அறிந்த விஷயமே!!!!!!!.

அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை அவதானித்து அதன் காரணி சக்திகளை வரையறுத்து நடக்கக் கூடிய சில சாத்திய கோட்பாடுகள் உருவாக்கப் படுகின்றன். கால்ப்போக்கில் சில ஆய்வுகள் மூலம் சில கோட்பாடுகள் மெய்ப்பிக்கப் படலாம்,அல்லது தவறென்று நிரூபிக்கப் படலாம்.இது ஒரு தொடர்கதை.மனித சமூகம் கடந்த இரு நூற்றண்டுகளில்தான் அறிவியலில் அதிக முன்னேற்றம் கண்டுள்ளது.அறிவியல் நிரூபிக்கப் பட்ட உண்மைகளை எதிர்த்து கருத்து கூறுபவர்களை உலகம் ஒதுக்கி விடும்.இத்னால் மதவாதிகள் அறிவியலை திரிக்கும் முயற்சியில் இறங்கினர்.எங்கள் மதத்தில் அப்போதே இதெல்லாம் கூறியுள்ளது நிரூபிக்கப் பட்ட ஒவ்வொரு அறிவியல் உண்மையும் எங்கள்'"மதகுரு" ஒரு விளக்கம் கூறிவிடுவார் .இது தவறென்று எளிதாக் பல பதிவுகளில் காட்டியுள்ளதால் இப்பதிவில் நண்பர் ஆஸிக் அகமது ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய ஒரு பதிவின் மீது என் விமர்சனம் மட்டும் வைக்கிறேன்.

இதில் நண்பர் ஆஸிக் அகமது ஒரு அறிவியல் விமர்சகர் என்ற வகையிலேயே  என் விமர்சன‌த்தை வைக்கிறேன்.அவர் மத மறுப்பாளர்களை கிண்டல்டிப்பது குறித்து அவரின் நகைச்சுவை உணர்வை வியந்து பாராட்டும் பக்குவம் நமக்கு  இருக்கிறது.இதே போல் வரும் எதிர்வினைகளின் மீதும் பக்குவத்தை வளர்த்தால் இன்னும் பாராட்டலாம். இவரிடைய பதிவுகளில் ஆத்திகர் என்ற நிலையில் இருந்து அனைத்து மதங்களும் ஒன்று என்ற கருத்தை வலியுறுத்தும் அவ்ருடைய மத சார்பின்மையையும் பாராட்டுகிறேன்.பிறந்த மதத்தின் பழக்கவழக்கங்களால் சில அரபி சொற்றொடர்களை ப்யன்படுத்தினாலும் அவருடைய கொள்கையான் அனைத்து ஆத்திகர்களும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் போது நாத்திகர்களை தாக்கினாலும் பர்வாயில்லை என்றே கூறுகிறோம்.

ஏன் தேவையில்லாமல் மத விஷயங்களை பற்றி விவாதிக்க வேண்டும் என்று மத சார்பின்மையில் மூழ்கி முத்தெடுக்கும் தமிழர்களுக்கு ஒரு வார்த்தை.தெரிந்தோ தெரியாமலோ சில அறிவியல் கருத்துகளை விவாதிக்கும் வாய்ப்பு வந்துள்ளது இதன் மூலம் சில‌ அறிவியல் உண்மைகளை அறிகிறோம் மற்றபடி தமிழர்களின் தனி பெருங்குணமாம் மத சார்பின்மை பாதிக்கும் படி எதுவும் சொல்லமாட்டோம் என உறுதி கூறுகிறோம்.அனைத்து மத (&உட்பிரிவு) பிரச்சாரகர்களும் நண்பர் ஆஸிக் அகமது போல் ஆத்திகர் என்னும் நிலையிலேயே ஒற்றுமையாக இருக்க விருப்பம் தெரிவித்து பதிவிற்குள் செல்வோம்.
**********************
முன்கதை சுருக்கம்

ஸ்டீபன் ஹாக்கிங் த்னது க்ராண்ட் டிசைன் என்னும் புத்த்கத்தில் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க கடவுள் தேவையில்லை.கவனிக்கவும் கடவுள் இருகிறாரா இல்லையென்றோ கூறவில்ல்லை.இப்புத்த்கத்தின் நோக்கம் இயற்பியல் விதிகளின் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்குவதே தவிர நாத்திக பிரசாரம் அல்ல.இது கொஞ்சம் விவகாரமான் விளக்கம்(உண்மை என்றாலும்)  என்பதால் மதவாதிகள் விமர்சிப்பது இயல்பே.

பெரு விரிவாக்க கொள்கை


இபோதைய பிரபஞ்ச்த் தோற்றத்தின் நிகழ்வுகளை வளக்கும் பெரு விரிவாக்க கொள்கை குறித்து அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்..

பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை. எளிதாக் புரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் இங்கே படியுங்கள்.


சரி பெருவிரிவாக்க கொள்கை பற்றி தெரிந்து கொண்டீர்கள்.இப்போதைய‌ பிரபஞ்ச தோற்றம் பற்றிய நடைமுறை கொள்கை இதுதான்.ஒரு விஷய்த்தை அனைவரும் புரிந்து கொள்ள வேன்டும்.நமது பிர‌பஞ்சம் விரிவடைந்து கொண்டே இருப்ப்தை சான்றாக வைத்தே உலகம் ஒரு புள்ளியில் இருந்து தோன்றியிருக்கலாம் என்ற பெரு விரிவாக்க கொள்கை வடிவமைக்க படுகிறது.இந்த சான்றுகளை மெய்ய்பிக்கும் எந்த கொள்கையுமே பெருவெடிப்பிற்கு நிகரானதாக கூறலாம்.சான்றுகளின் மீதுதான் சாத்தியம் உள்ள கோட்பாடுகள் உருவாக்ப் படுகின்றன.பிறகு அதன் மீதான பரிசோத்னைகளில் உறுதிப் படுத்தப் படுகிறது.

பெரு வெடிப்புக் கொள்கை பிரபஞ்சம் விரிவடைதலை தெளிவாக் விள்க்குகிறது,அது பல் பரிசோத்னைகளில் உறுதிப் படுத்தப் பட்டது என்றாலும் இத்னாலும் விளக்க் முடியாத சில சான்றுகள் உள்ளது.இந்த சுட்டிகளை பாருங்கள்.



 பல சொற்களை தமிழ் படுத்த இயலவில்லை ஆகவே சுட்டிகளாக்வே அளிக்கிறேன்.பெருவெடிப்பு பிரபஞ்ச தோற்றத்தின் அனைத்து சான்றுகளையும் மெய்பிக்க வில்லை என்பதால் இது மாற்றியமைக்க அல்லது இதற்கு பதில் வேறு கொள்கை ஏற்றுக் கொள்ளப் படும் சூழலே உருவாகியுள்ளது.

இதற்கு மாற்றாக ஸ்ட்ரிங் தியரி,இன்ஃப்ளேஷனரி, theory Multiverse கொள்கை என்ற கொள்கைகள் பல் சான்றுகளை(பெரு வெடிப்பு விளக்காத) விளக்குகின்றன் .இக்கொள்கைகளின் மீது பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டு மதிப்பு மிக்க சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.

இந்த எம் தியரியின் அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் பிரபஞ்ச தோற்றத்தை க்ராண்ட் டிசைன் புத்தகத்தில் விளக்கி எழுதியுள்ளார். அக்கோட்பாட்டில் மட்டுமல்ல அறிவியல் சார்ந்த எந்த கோட்பாட்டிலும் கட்வுள் என்று வராது.சில விதிகள் வரையறுத்து இப்படி நடந்தது என்றுதான் கூறுவார்கள்.இதுவரை எழுதப்பட்ட எந்த அறிவியல் புத்தகத்திலும் முன்னுரையிலோ ,அல்லது நன்றி என்பதற்காக் மட்டுமே இறைவன் பெயர் வரும்.இது எழுதுபவரின் நம்பிக்கை பொறுத்தது.

இதில் ஸ்டீபன் ஹாக்கிங் கடவுளை குறிப்பிடவில்லை என்பது செய்தி.இந்த  புத்தக்த்தில் பெருவெடிப்பிற்கு முந்தைய சூழலும் வரையறுக்கப் படுகிறது.எம் தியரி தொடர் பதிவாக் எழுத இருக்கிறேன் வேண்டுமானால் இச்சுட்டியில் கொஞ்சம் தமிழில் தகவல் இருக்கிற‌து.

___________


நண்பர் ஆஸிக் அகமதுவின் பதிவின் சாராம்சம்

a). பெரு வெடிப்பிற்கு முன் ந்டந்தவற்றை விள‌க்க முடியாது.அப்படி சொல்லப்படும் கொள்கைகள் தவறு.(மாற்றுக் கருத்து இருந்தால் கூறலாம்)

b). இந்த க்ராண்ட் டிசைன் புத்தகம் கீழ்க்கண்ட சுட்டிகளில் விமர்சிக்கப் பட்டுள்ளது. 

1. Scientific American.
. Cosmic Clowning: Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP -  John Horgan, Sep 13, 2010. Scientific Amaerican. 


2. Columbia university
Hawking Gives Up - Peter woit, September 7, 2010. math.columbia.edu. 


3. Physics World (Institute of Physics).
M-theory, religion and science funding on the BBC - Hamish Johnston, Sep 8, 2010. Physics World. 

நாம் எப்போதும் யார் எதை கூறினாலும் அதனை பார்த்து விட்டே முடிவு சொல்வது வழக்கம்.அந்த மூன்று இணப்புகளையும் பார்த்து அதன் மீது நம் கருத்துகள்.
__________
1. Scientific American.
. Cosmic Clowning: Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP -  John Horgan, Sep 13, 2010. Scientific American. 


சரி ஒரு கொள்கையை விமர்சிப்பவர்கள் அது குறித்த வித்தகர்களாக் இருக்கவேண்டியது இல்லை .என்றாலும் இந்த எம் தியரி குறித்து விமர்சிக்க அது அல்லது அதற்கு எதிரான் அறிவியல் கொள்கை உடைய விஞ்ஞானியாக் இருப்பது அவசியம் என்றே கருதுகிறேன்.

திரு ஜான் ஹோகன் ஒரு பத்திரிக்கயாளர்.ஆன்மிக அறிவியல் பற்றி பல் புத்த்கங்கள் எழுதியுள்ளார்.இவர் எம் தியரி பற்றி எழுதுவதி விட எமன் பற்றிய தியரிகளே நன்றாக் எழுதுவார்.!!!!!!!!!!!!!!.

திரு ஜான் ஹோகன் எழுதிய இணயப் பக்கத்தின் (ச்கோ சுட்டின அதே பக்கம்) கீழ் உள்ள விமர்சனங்களை பார்த்தால் மிக அருமையாக் இருக்கிறது ஆக்வே பின்னூடங்களை பார்க்கும் படி வேண்டுகிறேன்.  பார்த்தால் பின்னூடத்தில் அவரை மிகவும் விமர்சித்து இருந்தார்கள்.அவர் ஏற்கெனவே எழுதிய கட்டுரையை மாற்றி எழுதியதும் தெரிந்தது.

பின்னூட்டத்தில் பலரும் விமர்சித்தாலும் கொஞசமும் கவலைப்ப்டாமல் பதில் அளிக்காமல் இருக்கும் அவருடைய இணையப்பக்கம் சென்று பாருங்கள். அதிக நேரம் பார்க்க வேண்டாம் சிக்கலில் இழுத்து விட்டு விடுவார்கள். ஆன்மீகத்தையும் அறிவிய்லை கலந்து குழப்பும் இவர் மாதிரி   ஆட்கள் நம் ஊரில் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

இவர் சொல்வதையும் பின்பற்றி மதச்சார்பின்மை வளர்க்கும் சகோ ஆத்திகர் ஆஸிக் அக்மதுக்கு பாராட்டுகள். நாளைக்கு நித்யானந்தா இப்புத்தக்த்தை விமர்சித்தாலும் பாராட்டப்படுவார்.அவ்வளவுதான்.

__________________
2. Columbia university
Hawking Gives Up - Peter woit, September 7, 2010. math.columbia.edu. link

அடுத்தவர் சகோ ப்யன்படுத்தும் பெயர் திரு பீட்டர் வொய்ட் கொலம்பிய பல்கலைகழகத்தில் கணித்ப் பேராசியராக பணிபுரிகிறார்.இவர் குவாண்டம் ஃபீல்ட் தியரி என்னும் முறையை இந்த எம் தியரிக்கு மாற்றாக கொண்டுவர முயற்சிப்பவர்.இதுவும் ஐன்ஸ்டின் சார்பிய&குவாண்டம் இயற்பியலை இணைக்கும் முயற்சியே.இவரும் இயற்கை வழி வாழ்பவர்(நாத்திகர்களில் கொஞ்சம் ஸ்பெசல்) என்னும் போது இவரை அறிமுகப் படுத்திய சகோ ஆஸிக்கிற்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.இவர் கூறுவதை பாருங்கள்.பீட்டர் வொய்ட்டின் விமர்சனம் இரு நாத்திகர்களுக்கிடையேயான் போட்டி.இதில் ஆத்திகர்கள் வேடிக்கை பார்க்கலாம். 


/I’m in favor of naturalism and leaving God out of physics as much as the next person, but if you’re the sort who wants to go to battle in the science/religion wars, why you would choose to take up such a dubious weapon as M-theory mystifies me./

இதைத்தானே ஸ்டீபனும் சொன்னாரு!!!!!!!!!!

இவர் ஏற்கெனவே ஸ்ர்டிங் தியரி தவறு என்று ஒரு புத்த்கம் கடவுளை பற்றி எதுவும் கூறாமல் 2006 ல் எழுதி உள்ளார்.இவருக்கு 2010ல் வந்த எம் தியரி பற்றிய புத்தக்த்தை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் புரியும்.

இவர் தியரி கொஞ்சம் படிக்க வேண்டும்.பீட்டர் வொய்ட்டின் இயற்கை நாடினால் இது பற்றி ஒரு பதிவு எழுத் ஆசை.

___________
3. Physics World (Institute of Physics).
M-theory, religion and science funding on the BBC - Hamish Johnston, Sep 8, 2010. Physics World. link


This, and other recent pronouncements from Hawking in his new book The Grand Design were debated in a separate piece on Today by brain scientist Susan Greenfield and philosopher AC Grayling. Neither seemed too impressed with many of Hawking’s recent statements and Greenfield cautioned scientists against making “Taliban-like” statements about the existence of God.

நல்ல விஷயம்தான் சொல்லி இருக்கிறார்கள்.அறிவியலாளர்கள் கடவுளை தலிபான் மாதிரி ஸ்டைலில் வ்வரையறுத்து பேசாதீர்கள் என்று!!!!!!!!.

என்னத்தை சொலரது?.இப்படி பேசுகிறார்கள் என்றுதான் இந்த மறுப்பு பதிவு..அப்புறம் இம்மாதிரி அறிவியலுக்கு அரசு பணம் கொடுக்க கூடாது என்கிறார்கள்.இம்மாதிரி கடவுளை பற்றி சொன்னால் பொதுமக்கள் கோபப்படுவார்கள் ஏனெனில் அவர்களின் வரிப்பணம்தான் இப்படி அறிவியலுக்கு நிதி ஆகிறது என்கிறார். மிக்க அன்போடு கடவுளை விட்டு விடுங்க்ள் என்று கூறுவது புரிகிறது.

நாமும் இம்மாதிரி மதவாதிகளுக்கு வரும் பணத்தை அரசுகள் கண்கானித்து வருமான வரி வசூலிக்க‌ வேண்டும் என வேண்டுகிறோம்.

________
முடிவுரை

1.ஸ்டீபன் ஹாக்கிங் எம் தியரியை பெருவிரிவாக்கத்திற்கு மாற்றாக வைப்பது பிரச்சினையில்லை.அதன் மூலம் அனைத்தையும் விவரித்தாலும் பிரச்சினையில்லை. கடவுள் தேவையில்லை இந்த விதிகளே போதும் என்பதுதான் பிரச்சினை.எம் தியரி என்ன எந்த Z தியரியையும் மத புத்தக்க்த்தில் வரவழைக்கும் அண்னன் "அஆஇஈ" க்கு வேலை இல்லாமல் செய்யும் உலகளாவிய சதியல்லவா இது?


2.முதல் சகோ ஜான் ஹோகன் ஒரு ஆன்மீக வியாபாரி.அவர் அப்படி சொலவதில் வியப்பில்லை.

3.இரண்டாம் சகோ பீட்டர் வொய்ட் த்னது குவாண்டம் தியரியை சார்பியல்_குவாண்டம் இயற்பியலை இணைத்து பிரபஞ்ச தோர்றம் விளக்கும் ஒரு கணித மேதை.இவரும் நாத்திகர் என்பதால் நாளை இவர் புத்தக்ம் எழுதினாலும் கடவுள் என்பதை (முன்னுரை,நன்றி உட்பட‌) குறிப்பிடாமலே எழுதுவார் என்பது உறுதி.இப்போதுள்ள புத்த்கத்திலும் கடவுள் படைத்தார் என்று எழுதவில்லை.பெரு விரிவாக கொள்கையின் எல்லைகளை உணர்ந்து அதற்கு மாற்று கொள்கை அமைக்கும் முயற்சியில் அறிவியல் உலகம் உள்ள்து என்பதை புரிந்து கொண்டால் சரி. 

4. .Physics world  பிபிசி செய்திகள் அறிவுறுத்திய தலிபான் ஸ்டைலில் கடவுளை பற்றி பேசக் கூடாது என்பது மிக அருமை.இதைத்தான் நான் சொல்ல வந்தேன்.

இயற்கை விதிகளை கடவுள் படைத்து விட்டு எல்லாவற்றையும் நீயே பார்த்துக் கொள் என்று ஒதுங்கி விட்டார் என்று சொல்வது போல் மத அறிவியலாளர்களின் கருத்து இருக்கிறது.அறிந்த வரை கடவுள் என்பதை ஆய்வுப்பூர்வமாக் உணர முடியவில்லை என்பதை அவர்களும் ஒத்துக் கொள்கிறார்கள்.ஆனால் கடந்த‌ காலங்களில் மட்டும் சிலருக்கு உதவி,செய்தி என்று கேசுவலாக் செயல் பட்டு இருக்கிறார்.சரி அது வேண்டாம்

இப்போதைய‌ ஆய்வுகளில் உண்ர முடியாத ஒரு பரிமாண‌த்தில் கடவுள்  இருக்கிறார் என்றால், என்றாவது ஒரு நாள் உண்ர முடியும் என்று நம்பினால் ஆட்சேபனை இல்லை.  இப்போது போல் ஒரு நாளும் உணரமுடியாது என்று நாத்திகர்களும் கூறுகிறோம்.இரு செயல்களுக்கும் உள்ள வித்தியாசம் அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன்.

அறிவியல் கடவுளின் இருப்பு குறித்து எதுவும் சொல்லாது,அக்கொள்கை இயற்கை நிகழ்வுகளை விளக்க‌ தேவையில்லை என்றே கூறுகிறது. இதே போல் கடவுள் கொள்கையாளர்களும் செய்தால் நலமாக் இருக்கும்.


இந்த பதிவு இட ஓய்வு நேரம்,இணையம், கணிணி மட்டும் போதுமென்று நான் கூறினால் எப்படியோ அது போன்றே ,பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க இயற்பியல் விதிகள் மட்டும் போதும்,கடவுள் என்னும் கருதுகோள் தேவையில்லை என்றே ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

இத்னை மறுப்ப்வர்கள் பிரபஞ்ச தோற்றம் விவரிக்கும் ஒரு புத்த்கம் கடவுளின் செய்லாக வெளியிடட்டும் வரவேற்கிறோம்!. இன்னும் கொஞ்சம் பதிவு போட உதவியாக் இருக்கும்!!!!!!!!!!..

எதற்கும் பதிவின் தொடக்கத்தில் உள்ள பட்த்தை ஒருமுறை பார்க்க வேண்டுகிறேன்.

இதே போல் கடவுள் என்பது உங்கள் மூளை(லை)யில் மட்டுமே இருக்கிறார் என்ற கருத்தையும் விமர்சிக்க சகோ ஆஸிக்கை ஊக்குவிக்கிறேன்.

http://www.corante.com/brainwaves/archives/2005/01/19/is_god_in_your_brain_neurotheology.php

http://www.dailymail.co.uk/sciencetech/article-1339517/God-brain-Scans-activity-religious-people-meditate.html

நன்றி சகோ ஆஸிக் அகமது.  


பிரப்ஞ்ச உருவாக்கம் &பெரு விரிவாக்க கொள்கை குறித்த காணொளி


இஸ்லாமிய நண்பர்களின் கேள்விகளும்:இறை மறுப்பாளனின் பதில்களும்

சென்ற பதிவில் இன்னும் கொஞ்சம் கேள்விகள் மீதம் இருப்பதால் அதற்கும் பதில் அளித்து விடலாம்.நமக்கு இதுவரை பரிச்சயம் இல்லாத நண்பர்களின் கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்கிறேன்.பழைய விவரங்களை கிளர விரும்பவில்லை. மீதம் இருப்பவர்களுக்கு ஏற்கெனவே பல் பதிவுகள் விவாதங்களில் பதில் சொல்லியாகிவிட்டது.அவர்களுக்கு நான் சொல்லும் பதில் குரான் 109ஆம் சூரா(ஸூரத்துல் காஃபிரூன்) 6 வசனங்களே.இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு கூறப்படுகிரது.அரபி வார்த்தை காஃபிர் என்றால் நம்பிக்கை மறுப்பாள‌ர்.ஆகவே உங்களுக்கு நான் காஃபிர் என்றால் நீங்கள் எனக்கு காஃபிர்.இப்போது படியுங்கள் 109ஆம் சூரா.
The Qur'an uses the words Kafir, Kuffar, and Kufr 470 times in 451 different verses.



******************************************
உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறேன்
*******************************************
A)அபு நிஹான்                                                                                       
hajamydheen[at]gmail.com


நண்பரே 

இந்த பகுத்தறிவுவாதி என்பதை விட மத விமர்சகன் என்ற பெயரையே விரும்புகிறேன்.அனைவருக்கும் பகுத்து அறியும் அறிவு உண்டு.திராவிட பாணி இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் பட்டம் எனக்கு தேவையில்லை.நான் எந்த மதத்திலும்,நாட்டிலும் உள்ள‌ மனித விரோதக் கொள்கைகளை எதிர்ப்பவன்.இந்து மதத்தில் பொருள்முதல் வாதம் சார்வாகம் என்று அழைக்கப் படுகிறது.சமண மதத்தில் கடவுள் இல்லை.இப்போது கெள்விகள்&பதில்கள்.

1 /அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம் செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா? வராதா?/

தமிழ்நாடும் , ஆந்திராவும் இந்தியாவில்தான் உள்ளன.இந்தியா முழுவதும் சமுக சட்டங்கள் மத ரீதியாக உள்ளன.ஆகவே இருவரும் இருவரும் பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்தவர் எனில் இந்து திருமண‌ சட்டம் செல்லும். ப‌ல் கிறித்தவர்,முஸ்லிம்கள் தங்களை வெளிப்படையாக மதம் விட்டு வெளி வருவதில்லை.
***********************


2 / அடுத்து தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பகுத்தறிவாதி Living together கலாச்சாரத்தை பற்றி என்ன முடிவு சொல்வான். அது நன்று என்று கூறுவானா? அல்லது தீமை என்று கூறுவானா? தீமை என்று சொன்னால் என்ன காரணம் சொல்வான்? ஓரினப்புணர்ச்சி பற்றி பகுத்தறிவாதிகளின் முடிவு என்ன?/

Living together என்பது திருமண‌ பதிவு இல்லாமல் ஆண் பெண் சேர்ந்து வாழ்வதாகும்.இது பெண்ணுக்கு பல பாதகங்களை தரும் என்றாலும் தானாக ரிஸ்க் எடுப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.மேலை நாடுகளில் மிக இயல்பான ஒன்று. விருப்பப்படும் இருவர் சேர்ந்து வாழும் போது அதன் சாதக் பாதகங்களை அறிந்து எதனை எதிர்கொள்ளத் துணியும் போது சட்ட ரீதியாக தடை நமது மேலை நாடுகளில் இல்லை.இது தனிப்பட்ட விஷயம்.என்னை பொறுத்த்வரை சுய மரியாதை திருமணம் செய்து பதிவு செய்வது பெண்ணுக்கும்,குழந்தைகளுக்கும் சட்ட ரீதியாக பாதுகாப்பு..ஓரிணப் புணர்சியில் ஈடுபடும் சிலரை மனரீதியாக் குணப்படுத்த முடியும்.சிலரை முடியாது இது ஜீன் குறைபாடு.அவர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம், பாதுகாப்பு வேண்டும்.

***********************
3./இந்தியாவில் சொத்து விவகாரங்களில் அவர்கள் எந்த சட்டத்தை பின்பற்றுவார்கள்? விவாகரத்து போன்ற விஷயங்களில் அவர்களின் நிலைபாடு என்ன? விவாகரத்து பண்ணினால் just like that விட்டுவிடுவார்களா? அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டுமா? விவாகரத்து செய்வதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம்? அதன் அளவுகோல் என்ன? அதை எவ்வாறு வழிவகுத்தார்கள்./

இறைமறுப்பாளர்கள் தனியாக் நட்த்தப்படாமல் பிறந்த‌ மதங்களை சேர்ந்தவர்களாகவே நம் நாட்டில் நடத்தப் படுகிறார்கள்.அப்படி ஒருவேளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தால் ஆண்,பெண்களுக்கு இந்து சொத்து முறை சட்டமே சிற‌ந்தது.இஸ்லாமியர்களையும்,அவர்கள் உரிமைகளையும் மதிக்கும் மனிதர்கள் இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களுக்கு(muslim personnel law) தனி சமூக சட்டம் இருக்கிறது.இதனை ஒழித்து அனைவருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சில கட்சிகள் போராடுகின்றன.குற்றவியல் நடைமுறைகளில் அனைவரும் சமமே.
**************************
4/இது போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எந்த பகுத்தறிவாதிக்கு எந்த சட்டம் தன் மன்சாட்சிக்கு சரியன படுகின்றதோ அதை செய்தால், கண்டிப்பாக பிரச்சனைகளுக்கான சரியான தீர்வாக பகுத்தறிவாதிகளின் சட்டம் இருக்காது, தவிர இது மேலும் குழப்பங்களையும், சச்சரவுகளையுமே ஏற்படுத்தும். மதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூக்குரலிட்ட போலி பகுத்தறிவாதிகளே, முதலில் வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் அமைத்த கொள்கைகள் என்ன என்பதை கூறுங்கள். பின்னர் கடவுளை பற்றி பேசலாம்./

மத விமர்சகர்கள் எந்த சமூகத்தில் வாழ்கிறார்களோ அச்சமூக  நடைமுறையில் காலத்திற்கு ஏறறவற்றை பின்பற்றுவர்.மாற்ற வேண்டியதை மாற்றுவர்.மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.
____________

B)

G u l a m 
இறை நாடினால் இனியும் சந்திப்போம்...
gulamdhasthakir[at]gmail.com


/நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு இலக்கணம்..?

*பொதுவாக, இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மார்க்கப் போதனைப்படி ஏவல்/விலக்களை பின்பற்றுகிறோம் இஸ்லாமல்லாத ஏனைய மதங்களை பின்பற்றுவோர் தங்களது வாழ்வுமுறையே அவர்களது மதத்தின் படி (சரியோ/ தவறோ) பின்பற்றுகிறார்கள்., எந்த மத வழிமுறைகளையும் பின்பற்றா நீங்கள் எதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துள்ளீர்கள்?., குறிப்பாக "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற திருமண பந்தத்தை எந்த நாத்திக சட்ட்த்தில் எடுத்தீர்கள்..?

*ஒருவன் ஏன் இறை மறுப்பாளானாக இருக்க வேண்டும்..?/


உங்கள் கருத்து தவறு. இஸ்லாம் தவிர்த்த பிற‌ மதத்தினர் தங்கள் மத புத்தக்த்தில் சொல்லிய அனைத்தையும் பின்பற்றுவது இல்லை.இந்து மதம் என்பதே வாழ்வியல் நடைமுறைதான்.அது காலத்திற்கேற்ற படி மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.நேற்றைய தவறுகளுக்கு இன்று பரிகாரம் செய்யப் படுகின்ற‌து.நியாய படுத்தப் படுவது இல்லை.

இறை மறுபாளர் என்ற் தனி சட்டத்தின்.நடைமுறை அவசியம் இங்கு இல்லை.இந்துமதம் இறை மறுப்பாளர்களையும் ஒதுக்குவது இல்லை.இறைமறுப்பாளர்கள் சீர் திருத்தப் பட்டுக் கொண்டிருக்கும் 
இந்து (இந்திய)  நடைமுறை சட்டங்களை பினபற்றுகிறார்கள் என்று கூறலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்து திருமண சட்டம் அம்பேத்கார் (1955) தலைமையில் தொகுக்கப் பட்டது.

________________
C)

சகோதரி,
அஸ்மா.

/1) உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மனைவி, மக்கள், குடும்பத்தார் அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள் என்றால், அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?/

நல்ல கேள்வி.ஒவ்வொன்றையும் அல்ல..அறிவியல் நிரூபிப்பதை ஏற்கவேண்டும் என்கிறோம். நம் குடும்பத்தினர் நம்மை நேசிப்பதை உண்ர முடியாதா? பெற்றோர் குழந்தைகளை நேசிப்பதால் அவர்களுக்கு பொருளாதார,மன் ரீதியான பாதுகாப்பு தருகின்றனர்.இறை மறுப்பாளர் தங்கள் குழந்தை வேற்று மதத்தவரை காதல் திரும்ண‌ம் செய்வது என்று முடிவெடுத்தால் ,அத்துணை சரியாக் இருக்கும் எனில் அனுமதிப்பர்.மத நம்பிக்கையாளர்கள் என்ன செய்வார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை.


2) விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் பகுத்தறிவுப் பூர்வமானதாக இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?

உங்களுக்கு சரியாகப் படுவது எனக்கு தவறாக‌ படலாம்.ஒரு புத்தக்த்தில் சொல்லி இருக்கிறது,அத்னை ஒரு மத்வாதி ஒர் விளக்கம் தருகிறார் என்பதற்காக எதனையும் ஏற்று கொள்ள முடியாது.சரியென்று பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.

3) கடவுளின் பெயரால் மக்கள் சுயமாக நடத்தும் அனாச்சாரங்கள்/அக்கிரமங்கள்/சமூக அவலங்களை வைத்து 'கடவுளே இல்லை' என்று முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு? 

கடவுள் பெயரில் அக்கிரமங்கள் நடக்கிற‌து.நடக்கும் வாய்ப்பு உண்டு.இத்னை பெரும்பாலான் மதவாதிகள் நியாயப் படுத்துகிறார். இதனை நான் சொன்னால் பிரச்சினை ஆகியிருக்கும் நன்றி. .இது மட்டும் காரணமில்லை மத புத்தகங்கள் கூறும் கடவுள்கள் உண்மையாக் இருக்கமுடியாது என்பதற்கு பல ஆய்வுகள்,பதிவுகள் எழுதியாயிற்று..மத புத்தகங்கள் தொகுப்பே அரசியல் சார்ந்தது.

/4) 'கடவுள்' என்ற சூப்பர் பவர் இருக்கிறான் என்று சொல்வது மூடத்தனம் என சொல்லிக் கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு கற்சிலைகளை உண்டாக்குவதும், அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும் மட்டும் பகுத்தறிவுதானா/

இது திரவிட பிரிவு கேள்வி என்றாலும் பரவாயில்லை.
இந்த கற்சிலைகளுக்கு மாலை அணிவிப்பது,  அவர்கள் மீதுள்ள மரியாதை காட்டுவதற்காக்,  அவர்கள் வந்து உதவி செய்வார்கள் என்பதற்காக் அல்ல. அப்படி என்றால் ஃபோட்டோ எடுப்பது கூட தவறுதான்.


5) பகுத்தறிவின் ஊற்றாக தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள், காலம் முழுதும் கருப்புச் சட்டையே கதி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதில் உள்ள‌ அறிவியல் தத்துவம்தான் என்ன?

இதுவும் திராவிட கேள்வி.ஒரு அடையாளம்தான் அதற்காக‌ கருப்புச்சட்டை அணிபவர் எல்லாம் நாத்திக‌ரா?.ஒரு அரசியல் இயக்கம் என்னும் போது இவை போன்ற‌ விஷயங்கள் தவிர்க்க இயலாது.



6) நேற்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை 'விஞ்ஞானக் கண்டுபிடிப்பு' என அறிவிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அதே விஷயத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதா?


7) பூமி உருண்டை வடிவமானது என்பதையும் ஒவ்வொரு கோள்களும் அதன் துணைக் கோள்களும் தன்னைத் தானே சுழன்றுக் கொண்டே சுற்றி வருகின்றன என்பதையும், அவற்றின் ஈர்ப்பு விசை குறித்து அறிவித்து தந்த விஷயங்களையும், இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வரும்/அந்த‌ விஞ்ஞானிகளைக் கூட வியப்படையச் செய்த இன்னும் பற்ப‌ல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதை வைத்தும், 'இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று அல்ல' என்றும்'முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மற்ற யாரும் அன்றைய மக்களின் விஞ்ஞான அறிவைக் கொண்டு இவ்வளவு துல்லியமாக நிச்சயம் கூற முடியாது' என்றும், 'அது முக்காலத்தையும் அறிந்துள்ள பேராற்றல் மிகுந்த/மகத்தான‌ இறைவனின் வார்த்தைதான்'என்றும் பகுத்தறிவைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களாகிய நாங்கள் நம்புகிறோம். விஞ்ஞானம் முன்னேறி இராத அந்தக் காலக் கட்டத்தில் இவற்றையெல்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படிக்கூற முடிந்தது என்பதற்கு, கடவுளை மறுக்கும் உங்களின் அறிவியல் பூர்வமானபதிலென்ன? 



ன்னிக்கவும். மத புத்தகத்தில் அறிவியல் என்பது வார்த்தை ஜால ஏமாற்று 
வேலைஉங்களுக்கு என்பதிவு ஒன்றை பரிந்துரைக்கிறேன்.
_________

மதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?.






8) 'பரிணாம வளர்ச்சி'யென கற்பனையாக உருவாக்கப்பட்ட‌ டார்வின் தத்துவம் 'பொய்' என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிக அளவில் பெருகிய பிறகும், அதையே மீண்டும் மீண்டும் உங்கள் வாதத்திற்கு ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பகுத்தறிவுதான் என்கிறீர்களா?"

இது கிறித்தவ,இஸ்லாமிய மத நம்பிக்கையாளரின் கொள்கை.பரிணாம்த்திற்கு எதிரானவர்கள் மதவாதிகள். அதுவும் அரசியல் பொருளாதாரம் சார்ந்த எதிர்ப்பு மட்டுமே.பரிணாம்ம் முற்றும் முழுதும் த்வறென்று கூறும் சில விஞ்ஞானிகளின் கட்டுரைகளை கொடுங்கள்.
நன்றி சகோதரி.  
********************************************************


D) /ஏனைய உயிரின தொடர்ச்சியின் விளைவாக மனிதன் உருவானான் என்றால் ஏன் மனிதன் பரிணாமம் அடைந்து வேறு நிலைக்கு இன்னும் மாற வில்லை? ஏனெனில் சூழ் நிலைக்கு தகுந்தவாறு ஒரு உயிரினம் மெல்ல மெல்ல மாற்றமடைவதே பரிணாமம். ஆக ஏனைய அஃறிணை உயிரினங்களின் மாற்றத்தை விட அறிவு மிகுந்த மனித உயிரி வாழும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றமடைய வேண்டியது அவசியமான ஒன்று., அஃது மாற்றடைவதற்கான அறிகுறீகள் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று..! /
சபாஷ் சரியான் கேள்வி.இதன் காரண்மாக் மதம் பின்பற்றுகிறீர்கள். see this 
********************************************************

E) நாத்திகர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முதலில் தாங்கள் என்ன கொள்கையுடையவர்கள் என்று விளக்குவார்களா..? .ஏனெனில் பெரியார் தொண்டனாக இருந்தால் அவர்களது கள்ளத்தனங்கள்,  கயமைத்தனங்கள், முட்டாள்தனங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியும்,  கம்யூனிசத்திற்கு சப்போர்ட் செய்பவர்களாக இருந்தால் அவர்களது கொலைப்பட்டியலுடன் ஏராளமான கொள்கை ஓட்டைகளை குறித்தும், இதல்லாமல் எந்த கொள்கையுமின்றி வெறும் இறை மறுப்பாளர்களாக இருப்பவர்களை அவர்கள் பானியில் அதாவது விஞ்ஞான ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் குறித்தும் விவாதிக்கலாம்.


  -Mohamed Ihsas

இஹ்சாஸ் ஓன்லைன்
 mohamedihsas786[at]gmail.com


அப்படியா இஸ்லாமியர்களில் அனைவரும் மிக நல்லவர்கள்.அமைதி அன்பு சகோதர‌த்துவம் அனைத்து இஸ்லாமியர்களிடமும் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த காஃபிர்கள்தான் எல்லா தவறுகளையும் செய்கிறார்கள்.
நன்றி.



**********************************************************



சகோதர ச்கோதரிகளே மதம் அதன் கோட்பாடுகளில் நம்பிக்கை இலாதவனே இறை மறுப்பாளன். இறை மறுப்பாளன் என்பதற்காக என்ன செய்யலாம்?. மதத்தினால் வரும் பிரச்சினைகளை மட்டும் தவிர்க்க முடியும்.சமூக சூழலில் , நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து வாழ வேண்டிய கட்டாயம் அவனுக்கும் உண்டு.ஜனநாயம்,மதச்சர்பின்மை தொடர,மேம்பட முயற்சிக்கிறோம். அவ்வளவுதான்!!!!!!!!!!!

எல்லா மதங்களும் நம்பிக்கை மட்டுமே.எத்தனையோ மதம் ,கடவுள்கள், கொள்கைகள் காண்மல் போனது உண்டு. அரசியல்,பொருளாதார பலம் உள்ள மதங்கள் மட்டுமே நீடிக்க முடியும்.என்னாலும் பல் கேள்விகள் கேட்க முடியும். ஆனால் உங்கள் மதத்தை பொறுத்தவரை எனது தேடல் முடிந்து விட்டது.அவசியம் என்றால் மட்டுமே விவாதிப்பேன்.ஆக்வேதான் இப்பதிவில் இறைமறுப்பை பற்றி மட்டும் விள்க்கினேன்.


மறுமை வாழ்வில் நம்பிக்கை அற்ற ஒருவனுக்கு மதம் என்பது தேவையற்றது.உங்கள் கேள்விகளில் உள்ள பெருமிதம் எனக்கு நகைச்சுவையாக் படுகிறது.நாகரிகமாக் விவாதிப்பதில் தவறில்லை.

ஒழுங்காக வடிவமைகப் பட்ட பிரபஞ்சக் கொள்கை மீதான விமர்சனம்



இணையத்தில் மத விளம்ப்ர பிரச்சாரம் நடைபெறுவது நாம் அறிந்ததே.விவாதத்தில் சகலத்தையும் விள‌க்குவோம் என்பதே கொள்கையாக கொண்டவர்கள்.இவர்களை கண்டு கொள்ளாமல் செல்வதே நல்லது என்றாலும் என்ன சொல்கிறார்கள் அதற்கு நாமும் பதில் சொல்லி பார்ப்போமே என்ற சிறு முயற்சிதான் இது.

இந்த பதிவில் பார்த்த கேள்விகளுக்கு பதில் இது

மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம்.ஒருவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு. உண்மையான அன்மீகம்,இறைமறுப்பு என்பது முடிவற்ற தேடல் என்பதை பல பதிவுகளில் அலசி இருக்கிறோம்.ஆனால் நாங்கள் அனைத்தும் அறிந்து புரிந்து விளக்குவோம் எனில் விளக்கத்தையும் பார்த்து விடுவோம்.இது ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவு அவ்வளவுதான்.!!!!!!!!!!!


 சிவப்பு நண்பரின் கேள்விகள்.கருப்பு நம் பதில்கள்

____________
நாத்தீகரா நீங்கள்? அப்போ இந்த கேள்விகளெல்லாம் உங்களை பார்த்துதான்..

இதுதான் இப்பதிவு எழுத காரணமான் வரிகள்.

இந்த பிரபஞ்சம்,இந்த பூமி,அதில் உள்ள உயிரினங்கள்(மனிதன் உட்பட),அதுவல்லாது,உயிர் வாழத்தேவையான நீர்,காற்று ஒளி,இவைகளின் வடிவமைப்பு என ஆதி முதல் அந்தம் வரை அத்துனையும் இயற்கையாகவே உருவானதாக கருதுகிறீர்களா???

பிரபஞ்ச‌த் தோற்றத்தை விளக்க இறைவன் தேவையில்லை.இயற்பியல் போதும்.இத்னை ஸ்டீஃபன் ஹாக்கிங் விள்க்குகிறார்.தவறு என்றால் ஒரு மின்னஞ்சல் அல்லது  இதே மாதிரி படைப்புக் கொள்கையில் இந்த சான்றுகளை எல்லாம் விளக்கி ஒரு புத்தகம் எழுதலாம்.அறிவியல் கொள்கை என்பது சான்றுகளுக்கு விளக்கம் அளிக்கிற‌து.மதக் கொள்கை புத்தக்த்தின் கூற்றுகளுக்கு சான்று ஏற்படுத்த பார்க்கிரது.

இப்போதைய அறிவியல் கருத்தியலின் படி பல பிரபஞ்சங்க்ள்.நமது பிரபஞ்சம்  மிகப் பெரியது அதாவது 46 மில்லியன் ஒளி வருடங்கள்.இது 13.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.அதில் கண்டுபிடிக்கப்ப்ட்ட வரை உள்ள் 200 பில்லியன் கேலக்ஸிகளில் நமது காலக்ஸியும் ஒன்று,இதன் பெயர் பால் வீதி மண்டலம்.(milky way) இதனை ஒரு வட்டமாக வரையறுக்கிறார்கள்.விட்டம் 10,000 ஒளி வருடங்கள்.இதன் கன அளவு 7.85 ட்ரில்லியன் ஒளி வருடம் .

.இதில் உள்ள 200_400 பில்லியன் நட்சத்திரங்களுல் ஒன்றுதான் நம் சூரியக் குடும்பம்.சூரியக் குடும்பத்தின் மொத்த எடையில் 99.86% சூரியன் ஆகும்.பிற கோள்கள் எல்லாம் மிச்சம் மீதி மட்டுமே.இதில் நம் பூமி ஒரு தூசு. நமது நம்து பூமி 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியடு.இதன் விட்டம் சுமார் 12,000 கி.மீ.இந்த உருவாதலுக்கு இயற்கை விதிகள் மீது விளக்கம் அளிக்கப் படுகின்ற‌ன்.


இயற்கை விதிகளுக்கு மாறாமல் மெதுவாகவே பிரபஞ்சங்க்ள்  உருவாதல் நடந்திருக்கிறது.இன்னும் பல விஷயங்கள் உள்ளது படைப்பு இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது.புதிய நட்சத்திரங்கள் தோன்றுவதும்,பழையவை அழிவதும் நடந்து கொண்டே இருக்கின்ற‌ன.


இது அனைத்தையும் இறைவன் இயற்கை விதிகளுக்கு மாறாமல் மெதுவாஆஆஆஆஆஆஆஅகாஆஆஆஆஅ படைத்துக் கொண்டே இருக்கிறாஆஆஆஆஆஆர் என்றால் என்று நீங்கள் நம்பினால் அது உங்கள் உரிமை.கடவுளும் இயற்கை விதிகளுக்கு கட்டுப் பட்டவர் என்றால் அவர் ஒரு ஓரமாக இருந்து விட்டு போகட்டும்.இயற்கை விதிகளை மீறும் கடவுள்(கள்) தேவையில்லை.

ஆனால் பாருங்கள் பிரபஞ்ச படைப்பு என்பது மத புத்தகங்களின் படி முடிந்து போன விஷயம்.
**********
ஆம்! பகுத்தறிவு...அல்லவா? எந்த ஒரு பொருளும் ஒரு படைப்பாளி இல்லாது தானாக வந்துவிடாது என்ற அறிவு.வீடல்ல,ஒரு குருவிக் கூடானாலும், எறும்பு தங்கும் புற்றானாலும்,அதை ஒருவர் உருவாக்காமல் வந்து விடுவதில்லை என்பதில் திண்ணமாக இருக்கும் நீங்கள்....முழு மனித சமுதாயமும் முயன்றாலும் முடிந்திடாத,கற்பனைக்கும் எட்டிவிடாத டிஸைனில் இந்த உலகத்தை ஒரு படைப்பாளன் இல்லாது தானாக உருவாகிவிட்டது என வாதிடுவது விந்தையாகவும்,கருத்துமுரணாகவும், பின் முட்டாள்தனமாகவும் இருக்கிறதே

இதற்கு பெயர் முதல் காரணி கொள்கை.(first cause argument) கடவுளுக்கு மட்டும் பொருந்தாது.ஒரெ கடவுள் எப்போதும் எதுவும் இலாமல் இருப்பார் என்பதை விட இயற்கை எப்போதும் இருக்கிற‌து என்பதே அறிவார்ந்த சிந்த்னையாக தெரிகிறது.கடவுள் வடிவமைப்பு(design) என்பது இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டதால் கடவுளும் இயற்கையின்(உண்மையில் மனிதனின் படைப்பு) படைபாகவே இருக்க முடியும்.



இறை மறுப்பாளர்களாகிய நாங்கள் தேடியவரை இயற்கை விதிகளுக்கு மேலான சக்தி எதையும் கண்டறிய முடியவில்லை என்று ஆய்வு பூர்வமாக் கூறுகிறோம்.எல்லையற்ற தேடல் மட்டும் தொடர்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் இயற்கையாக உருவானது என சொன்னால் நம்பி விடுவீர்களா?? ம்ம்ஹும் இல்லை..இதை யாராவது உருவாக்கி இருக்க வேண்டும் என எதை வைத்து ஆணித்தரமாக சொல்கிறீர்கள்?

உங்கள் வீடு என்றாலே உங்களால் உருவாக்க‌ப் பட்டது.தானே.மனிதர்கள் வாழ்வது கடந்த 2 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே.பிரபஞ்சம் தோன்றி 99.9999% காலம் கடந்து ஒரு வீட்டை உருவாக்க கூடிய மனித்ன உருவானான்.பல விலங்குகள் இல்லாமல் போய் விட்டன.அது போல் மனிதன் இல்லாமல் போகும் காலமும் வரும் அப்போதும் பூமி இருந்தால் பிற உயிர்கள் வாழும்.

பூமி மனிதனுக்காக‌ படைக்கப் பட்டது என்பதை இக்கூற்றுகளின் மேல் நம்ப முடியுமா?

இயற்கையாகவேதான், இந்த பூமி 100% பெர்ஃபெக்‌ஷனுடன் வந்துவிட்டது என உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா???ஒன்றும் இல்லை..கையில் பத்துவிதமான பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொன்றும் உங்களின் மேசையில் இன்ன இன்ன இடத்தில் இன்னின்னவாறு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள் பின் அதை மேசையில் சிதரவிட்டுவிடுங்கள்... அவையாவும் தாங்கள் விரும்பிய பெர்ப்க்‌ஷனை பூர்த்தி செய்யும் சதவிகிதம் எத்தனை என நீங்களே யூகித்துக்கொள்ளவேண்டியதுதான்...அது ஒன்றில் இருந்து ஐந்து சதவிகிதத்தை கூட எட்டமுடியாது என்பது உறுதி..இதுதான் நீங்கள் சொல்லும் இயற்கையால் கொடுக்கப்பட முடிந்த பெர்ஃபெக்‌ஷன்...நீங்கள் விரும்பிய, அல்லது, குறைந்த பட்ச ஒழுங்கை எட்டவேண்டும் என்றால் கூட உங்களின் கைவைக்கப்படாமல் அங்கு ஒன்றும் நடக்காது.

 இந்த வாதத்தின் பெயர் ஃபைன் ட்யூனிங் வாதம்(fine tuning argument) உல்கம் தோன்றிய போதே இப்படி வாழவதற்கு ஏற்றதாக இருந்தது என்றால் மட்டுமே இக்கூற்று சரி.ஆனால் அப்ப்டி இல்லை.



நண்பர்களே மதவாதிகள் இம்மாதிரி விதண்டாவாதம் செய்து மூளை சல்வை செய்வதில் இருந்து விலகுங்கள்.மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்றலாம்.சர்சசைகுறிய நடைமுறைகளை நியாயப் படுத்தாதீர்கள்.இது நமது வேண்டுகோள்.