Tuesday, February 22, 2011

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஆவண திரைப்படம்


1947ல் இந்திய சுதந்திரம்பெற்ற போது நடந்த சம்பவங்களை பி.பி.சி ஒரு ஆவண திரைப்படம் ஆக்கியுள்ளது. சுமார் 1.5 கோடி மககள் இடம் பெயர்ந்தனர்.15 இலட்சம் பேர் மதக் கலவரங்களில் கொல்லப்பட்டனர்.
இந்த பிரிவினை இப்போதும் மத வாதிகளால் சரி தவறுஎன்று விவாதிக்கப் படுகிறது. நடு நிலைமையோடே இபடம் எடுக்கப் பட்டுள்ளது.மனிதம் மதத்தால் எப்படி நாசப் படுத்தப் படுகிறது என்பதை பார்த்து உணருங்கள்.
Part 1
Part 2
Part 3

Part 4

Part 5

Part 6

.

பதிவுலகின் மத பெருமிதங்களும் ,மன பேதங்களும்


இணைய உலகில் தமிழ் மொழி அதிகமாக பயன்படுத்த‌ப் பட்டு வருவது தமிழர்களாகிய நமக்கு மகிழ்ச்சிதான்நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்னமுமாக புதிய பதிவர்கள் தோன்றுவதும்,பலவிதமான கருத்துகள்,விவாதங்கள் போன்ற்வை நடை பெறுவதும் வழக்கமாகி வருகிறது.


எந்த ஒரு சாதனமும் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் சமுதாயத்தை வளர்ச்சி பாதையில் வழிநடத்தும்.பதிவுலகில் சில பதிவர்கள் தங்கள் மதம் சார்ந்த கருத்துகளை எழுதி வருகிறார்கள்.

சில சமயம் அப்பதிவுகளை படிக்க நேரிடும் போது அந்த எழுத்துகளில் தெரியும் பெருமிதம் முதலில் ஆச்சரியத்தையே கொடுத்தது.கடவுள் என்பது ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம்.கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதும் ஒரு விடை தெரியா கேள்வியே.

அப்படி கடவுள் என்பது அனைத்திற்கும் அப்பாற்பட்ட சக்தியாக இருக்கின்றார் என்று கருத்தளவில் ஒத்துக் கொண்டால் கூட ,மதங்களால் வரையறுக்கப்பட்ட கடவுளின் செயல்கள்,கொள்கைகள் எல்லாவற்றையும் அந்த சக்திதான்  செய்தது என்று நிரூபிக்கவே முடியாது.

இந்த மதப்பதிவர்கள் தங்கள் மதம் குறித்து நடுநிலையான ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள், கருத்துகள்,பிரச்சினைகளுக்கு தீர்வுகள் என்று ஏதாவது உபயோகமாக‌ பதிவிட்டால் அந்த மதம் சாராதவர்கள் கூட அந்த கருத்துகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் என்ன நடக்கிறது.?

1. எங்கள் மதம் மட்டுமே உண்மையானது.இந்த மதத்திற்கு மாறினால் மட்டுமே மறுமை வாழ்வு இல்லையேல் நரகம்.

2.எங்கள் மத புத்தகம் மட்டுமே இறைவனால் வழங்கப் பட்டது.மற்ற‌ புத்தகங்கள் எல்லாம் இறைவனால் வழங்கப்படவில்லை அல்லது மாற்றப்பட்டு விட்டன.

3. பல அறிவியல் உண்மைகள் முன்பே எங்கள் புத்தக்த்தில் கூறப்பட்டு உள்ளன.

4.எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு எங்கள் மத புத்தகத்தில் அன்றே கூறப்பட்டு உள்ளது.

இபடியே பல பதிவுகள் எழுதப்படுகின்றன.சரி போகட்டும் என்றால் இப்பொழுது வேறு ஒரு பிரச்சினை.

நமது நாடு சுதந்திரம அடைவதற்கு முன் ,பல பகுதிகளாக ப்ரிந்து இருந்ததும் 
அதனை பல மன்னர்கள் ஆண்டது அனைவருக்கும் தெரியும்.

பெரும்பாலான மன்னர்கள் குடிமக்களை பற்றிய கவலை இல்லாமல் சொகுசாக காலம் ஓட்டியவர்கள்.பொழுது போகவில்லை என்றால் அருகில் உள்ள பகுதியை ஆளும் அரசனுடன் போர் புரிவார்கள்.போரில் படைகள் என்ற பெயரில் மக்களை கூட்டமாக மோதவிட்டு,அதில் பல இறக்க ,வெற்றி பெறும் மன்னன் தோற்ற நாட்டை அடிமை படுத்துவான்.கொள்ளையடிக்கும் சொத்தை கொண்டு பல திருமணம்,அரண்ம்னை வாழ்க்கை,கேளிக்கை என்று காலத்தை ஓட்டுவான்.அவனை சிலர் புகழ்ந்து பாடி புலவர்கள் என்று பேர் வாங்கியதும்.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,திரைபடத்தில் ஒரே ஒரு 23ஆம் புலிகேசி.ஆனால் உண்மையில் பல இலட்சம் புலிகேசிகளே உலகம் முழுவதிலும் அரசாட்சி செயதனர். 

பெரும்பாலும் மன்னர்கள் மக்களின் உழைப்பை உறிஞ்சும்  அட்டைப்பூச்சிகளாக்வே வாழ்ந்து வந்தனர்.ஜூனியர் விகடனில் சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் புரம் என்று ஒரு தொடர் வ்ந்தது.அதில் இந்த மன்னர்களின் வாழ்க்கையை நன்றாகவே விளக்கி இருந்தார்கள்.

இப்போது பல மன்னர்களின் செயல்கள் மதங்களின் ஊடாக பார்க்கப்டுவது மிகுந்த கவலைக்குறிய விஷயமாகும்.

ஒரு குறிப்பிட்ட மன்னன் செய்லை சில பதிவர்கள் வராற்று ஆதாரத்துடன் இப்படி செய்தான் என்று பதிவிட்டால்,இன்னொரு பதிவர் குழு (அந்த மன்னனின் மதத்தை சேர்ந்ததாக நினைத்துக் கொண்டு) அதற்கு ஒரு விளக்கம்.
இன்னும் கொஞ்ச பதிவர்கள் எங்கள் சாதி மன்னர்கள் ஆண்டனர்.ஆகையால் நாங்கள் ஆண்ட பரம்பரை என்கிறார்கள்.

சில மன்னர்கள் தேசத்தொண்டர்களாகவும்(மதத்தின் காரணமாக) சிலர் தேசத்துரோகிகளாகவும்(அதேதான்) சித்தரிக்கப் படுவது வேடிக்கையான விஷயம் அல்ல.

சரி நாம் சொல்வது என்ன?

1.இந்திய வரலாற்றில் எந்த மன்னனும்,தன்,தன் குடும்பம்,சாதி,போனால் போகிறது அவனுடைய எல்லைக்குட் பட்ட பிரதேசம் இவற்றில் மட்டுமே ஈடுபாடு காட்டினார்கள்.

2.தேவையில்லாமல் போர்கள்,வரிச்சுமை,சாதி ,மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை ஊக்குவித்தன்ர்.

3.சுதந்திரம் அடைந்த போது கூட பல மன்னர்கள் தங்கள் நாட்டை திரும்ப பெற முயற்சி எடுத்து பலிக்கவில்லை.பலர் தங்கள் சொத்துகளுடன் வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தன்ர்.

ஒவ்வொருவரும் மதத்தை தனக்கு இணக்கமான் வழியிலேயே பின்பற்றுகிறோம்.மதத்தில் சொல்லியிருகிறது என்பதாலேயே எதையும் செய்வதில்லை.முந்தைய‌ காலத்தின் பண்பாடு என்று கருதப் பட்ட பல விஷயங்கள் எல்லாம் இபோது தூக்கி எறியப்பட்டு பல நாட்களாகிறது.

இவற்றை மறைத்து பதிவிடுவதுதான் இப்பதிவிற்கே காரணம்.

இரண்டு மன்னர்கள் போரிட்டது தம் செல்வத்தை பெருக்கவும்,பாதுகாக்கவுமவே தவிர அவர்களிடம் தேசப் பற்று,மதப் பற்று மிகுந்ததால் அல்ல.

ஒருவருக்கு நல்லவராக தெரிபவர் இன்னொருவருக்கு கெட்டவராக தெரிவது சாதாரண விஷயம்.
.
ஒரு எடுத்துக் காட்டுடன் இப்பதிவை முடிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
இராஜராஜ சோழன் என்றால் தமிழர்களுக்கு பெருமையும்,மதிப்பும் ஒருங்கே வரும்.சிங்களர் வரலாற்றில் அவர் ஒரு ஆக்கிரமிப்பாளர்,கோயில்களை இடித்தவர்,கொலைகாரர் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
.

இதன ஏன் கூறுகிறேன் என்றால் மன்னர்கள் தங்கள் சுய இலாபத்திற்காகவே செயல்களை செய்தனர்.அதை இப்பொதைய நிலவரத்திற்கு விளக்கம் சொல்வது சரியான செயலாகாது.இந்த பெருமித பேச்சுகள்தான் இலங்கை பிரச்சினைக்கு வித்திட்டன.

மன்னர்கள் அவர்கள் காலத்தில்,அவர்களுக்கு சரியென்று பட்டதை,நன் தருவதை மட்டுமே செய்தார்கள்.அவர்களும் இபோதைய ஆட்சியாளர்களை போலவே இருந்தார்கள்.

மதங்களின் கருத்துகளை விவாதியுங்கள்,இறந்த மனிதர்களின் செய்லை அல்ல.மத பெருமிதங்கள் பதிவுலகில் மன் பேதங்களை வளர்க்க வேண்டாம்.














கோத்ரா சம்பவ தீர்ப்பு




பிப்.22: 2002-ம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என அக்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25-ம் தேதி அறிவிக்கப்படும். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோத்ரா ரயில் எரிப்பு தொடந்து நடந்த கலவரங்களில் 1200 பேர் உயிரிழந்தனர்,இலட்சக் கணக்கானோர் வீடு சொத்துகளை இழந்தனர். 

தீர்ப்பின்போது சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி இருந்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முன்னதாக ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று சில தரப்பினரும். திட்டமிட்ட சதி என்று மற்றொரு தரப்பினரும் கூறிவந்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக காட்ட்ப் பட்ட மெளல்வி உமரை போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. சபர்மதி எக்ஸ்பிரஸில் கரசேவகர்கள் இருந்த எஸ்-6 பெட்டியை எரிக்குமாறு ஒரு கும்பலுக்கு உமர் உத்தரவிட்டதாக சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றம்சாட்டியிருந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2/3 பேரை நிதிமன்றம் விடுதலை செய்தது சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நெருக்கடியை உருவாகியுள்ளது.இதில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 63 பேர் சுமார் 9 வருடம் சிறை தண்டனை அனுபவித்து விட்டாடர்கள்.

தீர்ப்பின் முழு விவரமும் வந்த பின் மேல் முறையீடு செய்யப் படும் என தெரிகிறது..

Sunday, February 20, 2011

இறை மறுப்பின் வரலாறு திரைப்படம்

Part1

Part 2

Part 3

கிறித்தவ சமய வரலாறு:திரைப்ப்டம்

Part 1

Part 2

Part 3

Part 4

Part 5

Part 6


இஸ்லாமிய வரலாறு திரைபடம்


ஒரு சில‌ வரலாற்று குறிப்புகள்.

பொ.ஆ 632: திரு முகமதுவின் மரணம்

பொ.ஆ 632_634 திரு அபுபக்கர் கலிஃபா

பொ.ஆ (634_644) திரு உமர்
644ல் தன் அடிமை ஒருவனால் கொலை செய்யப் படுகிறார்.

பொ.ஆ (644_656) திரு உத்மான்
656ல் சிலரால் கொலை செய்யப் படுகிறார். 

பொ.ஆ (656_661) திரு அலி இபின் அபுதாலிஃப்
பல வாரிசு போர்கள்(ஒட்டகப் போர்கள் என்றழக்கப் படுகின்றன).இவரும் கொலை செய்யப் படுகிறார்.
_____________
உம்மையாது ஆட்சி

அலியிடம் இருந்து ஆட்சி அபு சுஃபியானின் மகன் முவையா & இவரின் வமசம் பொ.ஆ 661_751 வரை ஆள்கின்றனர்.திரு முவையாவின் மகன் யசீதின் ஆட்சியில்தான்[பொ.ஆ 680_683] திரு முகமதுவின் பேரன்(அலி& ஃபாத்திமாவின் மகன்) குடும்பதோடு கொல்லபடுகிறார் .இதுமொஹரம் என்றழைக்கப் படுகிறது.திரு முகமதுவின் வம்சத்தை சேர்ந்தவர்கள் பொ.ஆ 751 ஆட்சியை கைப்பற்றி உம்மையாதுக்களின் வமசத்தையே கொலை செய்து அப்பாசித்து வம்ச கலிஃபாக்களின் ஆட்சி அமைக்கின்றன‌ர்.இந்த அப்பாசித்து கலிஃபாக்களின் கால்த்தில்தான் அனைத்து ஹதிதுகளும் தொகுக்கப் படுகின்றன.

அப்பாசித்துகளின் ஆட்சி (750 ல் இருந்து 1258 வரை நீடித்தது.பொ.ஆ 1258ல் செங்கிஸ்கான் படையெடுத்து வம்சத்தையும்,அரசையும் அழித்தார்.பிறகு ஆட்டோமான் துருக்கியர்கள் வசம் ஆட்சி சென்றது.பொ.ஆ 1299 முதல் 1921 வரை ஆட்டோமான் சம்ம்ராஜ்யமே உலக முஸ்லிம்களின் த்லைமை அரசாக அறியப்பட்டது.ஆட்டோமான் பேரரசை தோற்கடிக்க உதவியஇபின் சவுத் அப்துல் அஜீஸ்[1876_1953]  சவுதி அரச‌ராக மேலை நாடுகள் உதவி செய்தன.இபின் சவுதின் பெயரிலேயே சவுதி என்று அரேபிய நாடு அழைக்கப் படுகிறது.இவர் மகன் திரு அப்துல்லா 2005ல் இருந்து மன்னர் ஆக‌ இருக்கிறார். 
____________


மெலே கூறிய வரலாறு படித்தலே ஒரு மன்னராட்சி என்பது மாறும்போது அந்த வம்சமே அழிக்கப் படு வந்தது புலனாகும்.இதுதான் நடைமுறை இஸ்லாமிய ஆட்சியாக இருந்தது.பிற மத நாடுகள் சிலவற்றிலும் இதே நடைமுறை இருந்து வந்திருக்கின்ரன என்பதையும் ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.

Part1



Part2



Part 3




The Rise and Fall of Islamic Spain: Full documentary (PBS)






Islam In India



Saturday, February 19, 2011

மத திரைப்படம் 2:: ஃபைனல் சோல்யுஷன்

குஜராத் கலவரங்களை மையமாக கொண்டு எடுக்கப் பட்ட திரைப்படம்.
ஆங்கில வாக்கிய உதவி உண்டு..
part 1
Part2

மத திரைப் படங்கள் 1:கறுப்பு வெள்ளி


1993ம் வருடம் மும்பையை உலுக்கிய குண்டு வெடிப்புகளையும்,அது விசாரணைகளையும் மையமாக கொண்டு எடுக்கப் பட்ட திரைப்படம்.ஆங்கில வாக்கிய உதவி இருப்பதால் ஹிந்தி தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ள முடியும்.

Wednesday, February 16, 2011

ப‌ல மத வேதங்கள்















                            


இப்பதிவுகளில் மனிதம்,மதம் சார்ந்த கருத்துகளை விவாதித்து வருகிறோம்.மதம் என்பது மத புத்தகங்களின் அடிப்படையிலேயே கருத்தாக்கமாக,வாழ்வியல் நடை முறையாக பின்பற்றுபவர்களுக்கு மத குருக்களால் கூறப்படுகிறது.

ஒரு மனிதனுக்கு தான் விரும்பும் மதத்தை பின்பற்ற எல்லா உரிமைகளும் உண்டு என்றாலும் சில விதிகளுக்கு உட்பட்டே மதம் பின்பற்றப்படுகிறது.

1.கடவுளை நேரடியாக பார்க்க முடியாது.

2.கடவுள் சில மனிதர்களிடம் சில தகவல்களை கூறிiயுள்ளார்.

3.அந்த தக்வல்கள் தொகுக்கப் பட்டு மத புத்தகங்கள ஆக்கப்பட்டுள்ள்ன.

மத புத்தகங்கள் மூலமாகவே கடவுள் மனிதனை வழிநடத்துகிறார் என்பது எல்லா மதங்களின் கருத்தாகும்.அது கூறும் வழியில் நடந்தால் மட்டுமே மறுமை வாழ்வு அடைய முடியும் என்பதும் அனைவரும் அறிந்ததே.. மதத்தை பின் பற்றுபவர்கள் பெரும்பாலோர் மத புத்தகங்களை படிப்பது இல்லை. .மத குருக்கள் கூறுவதை அப்படியே எடுத்துக் கொள்வது அறிவார்ந்த செயல் ஆகாது. ஆகவே மத நம்பிக்கை உள்ளவர்களௌம்,இல்லாதவர்களும் மத புத்தகங்களை படிப்பது மிகவும் இன்றியமையாதது.

ஒருவர் பின்பற்றும் கருத்துகள் உண்மையிலேயே மத புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளதா என்று சரி பார்ப்பது மிகவும் அவசியமானது.

மத புத்தகத்திலேயே சில அறிவுக்கு,நாகரிக வாழ்வுக்கு ஒவ்வாத கருத்துகள் இருப்பதையும் அதனை மத வாதிகள் மூடி மறைப்பதோ அல்லது அதற்கு சுற்றி வளைத்து நியாயப்படுத்துவதும் கண்டறிய முடியும். 

இணைய்த்தில் மின் நூல்களாக இந்து,இஸ்லாம்,கிறித்தவ,சிக்கியம்,பவுத்த வேத புத்தகங்களை இபதிவில் அளிக்கிறேன்.பதிவிறக்கம் செய்து படிக்குமாறு வேண்டுகிறேன்.

இந்து மதம்

நன்கு வேதங்கள்(ரிக் யஜூர்,சாம,மற்றும் அதர்வண) ஆங்கில மொழி பெயர்ப்பு.
தமிழ் மொழி பெயர்ப்பு இன்னும் மின் நூலாக கிடக்கவில்லை.கிடைத்தால் அளிக்கிறேன்



இஸ்லாம்

குரான்,புஹாரி,தமிழ் மொழி பெயர்ப்பு



கிறித்தவம் 

பழைய,புதிய ஏற்பாடுகள் தமிழ் மொழிபெயர்ப்பு




பவுத்தம்

தம்மபதா ஆங்கில மூலம்



சிக்கியம்
கிரந்த் சாஹிப்



Tuesday, February 15, 2011

இஸ்ரேல் பாலஸ்தீனம் நடந்தது என்ன?(1900_1948)


கடந்த 60 வருடங்களாக உலகைல் தீர்க்கப் படாத பிரச்சினைகளுல் ஒன்றுதன் இந்த இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை.நடுநிலைமையோடு நடந்ததை சொல்லும் ஒரு முயற்சி.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை என்பது என்ன?

சவுதி அரேபியா,எகிப்து,ஜோர்டான்,சிரிய இடையே உள்ள பகுதிக்கு யார் உரிமை உடையவர்கள் என்பதுதான் பிரச்சினை.யூதர்கள்,பாலஸ்தீன முஸ்லிம்கள் இருவருமே உரிமை கொண்டாடிவருகிறார்கள்.இப்போது யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி இஸ்ரேல் என்ற் நாடாக அறியப்படுகிறது.பாலஸ்தீன முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகள்(,மேற்கு கரை மற்றும் காசா பிரதேசம்) பாலஸ்தீனம் என்று அழைக்கப் படுகிறது.


அவற்றை பற்றி (இப்போதைய) சில விவரங்கள்
          
இப்பொதைய இஸ்ரேல் மற்றும் பால்ஸ்தீனத்தின் வரைபடம்
.


இஸ்ரேல்

1948ல் தனி நாடாக அங்கீகரிக்கப் பட்டது.

1.பரப்பள்வு:22,072 ச.கி.மீ (தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 ச.கி.மீ)

2.மக்கள் தொகை:73 இலட்சம்(ஐ நா 2010)

3.மொழி:ஹீப்ரூ,அரபி

4.மக்கள்
யூதர் :80% 
,,பாலஸ்தீன முஸ்லிம் 17% 
,,கிறித்தவர்3% 

5.சராசரி ஆண்டு வருமானம்:24000$(ஒருவருக்கு)
_____

பாளஸ்தீனம்(மேற்கு கரை,காசா பகுதி)

இப்போது இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ளது.

1.பரப்பள்வு: 5,970  ச.கி.மீ (சேலம் மாவட்டம் பரப்பளவு 5205 ச.கி.மீ)

2.மக்கள் தொகை:44 இலட்சம்(ஐ நா 2010)

3.மொழி:அரபி,ஹீப்ரூ

4.மக்கள்:
யூதர் :5% 
,பாலஸ்தீன முஸ்லிம் 90% 
,கிறித்தவர் 5% 

5.சராசரி ஆண்டு வருமானம்:2130 $(ஒருவருக்கு)

இந்த விவரங்கள் இப்பொதைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கின்றதை காட்டவே இப்பதிவில் கூறுகிறேன்.

இந்த விவரங்களை பார்த்தவுடன் இரண்டு பகுதிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் எளிதாக புரியும்.

இப்பிரச்ச்னையின் உண்மைகளை வரலாற்று ஆதாரங்களுடன் ஆய்வு செய்வோம்.


1.கி.பி 1914 க்கு முன்பு வரை பாலஸ்தின்னம்,சிரியா,ஜோர்டன்,இராஃ பற்றும் எகிப்து,சவுதி அரேபியாவின் பல பகுதிகள் ஆட்டோமான் பேரரசின் பகுதிகளாக இருந்தன.

.

2. யூதர்கள் மக்கள் தொகை இப்பகுதியில் கி.பி 1900ல் வெறும் 78,000 மட்டுமே.அவர்கள் இங்கே பலஸ்தின்னர்களுடன் அமைதியாகவே வாழ்ந்து வந்தனர்.தம் மத கலாச்சார அடையாளங்களை பேணி உரிமையுடனே வாழ்ந்து வந்தனர்.

3.முதல் உலகப்போர் கி.பி.1914_1919 நடந்த போது ஆட்டோமான் பேரரசு,ஜெர்மனை ஒரு அணியிலும் இங்கிலாந்து ,ப்ரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர் அணியிலும் போரிட்டன. அதில் ஆட்டோமான் பேரரசு தோற்கடிக்கப் பட்டது.இங்கிலாந்தும்,ப்ரான்சும் ஆட்டோமான் பகுதிகளை கூறுபோட்டு பங்கு பிரித்தன்ர். அப்போது இப்பகுதி இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் வந்தது.


4.இரஷ்யா,ஜெர்மனை ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இன பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட யூதர்கள் பலர் பாலஸ்தீனத்திற்கு வர ஆரம்பித்தன்ர்.யூதர்கள் பெருமளவு நிதி திரட்டி பாலஸ்தீனர்களிடம் இருந்து நிலங்களை வாங்க ஆரம்பித்தன்ர். ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனத்தில் யூத அரசு(இஸ்ரேல்) அமைக்க வேண்டும் என்று அரசியல் ஆதரவு திரட்ட ஆரம்பித்தன்ர்.

5.இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பெல்ஃபோர் என்பவர் இங்கிலாந்து யூத தலைவர் ரோத்சைல்ட்கு 2 நவம்பர் 1917ல் எழுதிய கடிதத்தில் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் தனி நாடு ஏற்படுத்துவதாக உறுதி அளிக்கிறார்.


6.யூத தலைவர் வெய்ஸ்மான் என்பவருக்கும் அமீர் ஃபைசல்(அப்போதைய அரேபியாவின் ஒரு பகுதியின் இளவரசர்) இன்னொரு உடன்படிக்கை ஏற்படுகிறது.இதிலும் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு நாடு ஏற்படுத்துவதாக உறுதி அளிக்கப் படுகிறது. பாலஸ்தீனர்கள் யாருமே இந்த உடன்படிக்கைகளில் பங்கேற்கவில்லை.

7.யூதர்கள் அதிக்மாக குடியேறுவதும் தனிநாட்டுக்கான வரைபடங்கள்,திட்டங்கள் முதலியவற்றால் விழிப்படைந்த‌ பாலஸ்தீனர்கள் பிப்ரவரி 1920முதல் எதிர்க்க ஆரம்பிக்கின்ற‌னர். இன கல்வரங்கள் நடப்பதும்,இரு புறங்களிலும் வன்முறைகள்,உயிரிழப்பு முழு அளவில் நடக்க ஆரம்பிக்கிறது.

8.முகமது அல் ஹுசைனி (ஜெருசலேம் மசூதி மத குரு)பாலஸ்தீனர்களின் தலைவராக உருவெடுக்கிறார்.
இவர் பாலஸ்தீனம் சிரியாவின் ஒரு பகுதியாகவும்,டமாஸ்கஸ் அதன் தலைநகராகவும் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளில் செயல் பட்டார்.
                                            
                                                 முகமது அல் ஹுசைனி.

9.அரபு தலைவர்களின் குழு கி.பி 1922ல் ஃபெல்ஃபோர் தீர்மானத்தை ஏற்க முடியாது என்று இங்கிலாந்து அரசிடம் திட்டவட்டமாக கூறுகிறது.
இதற்கு சர்சில் வெள்ளை அறிக்கை இதற்கு பதிலாக 1922ல் தர்படுகிறது.அது குழப்பான வார்த்தைகளில் பாலுக்கும் காவம்,பூனைக்கும் தோழன் என்ற வகையில் இருக்கிறது.

10.பிரிட்டிஷ் தீர்ப்பு என்று பாலஸ்தீனத்தை பிரித்து அப்போதைய ஐ.நா சபையிடம் 24,ஜூலை 1922ல் ஒப்புதல் பெறுகிறது.இதன் படி மொத்த பகுதியும் பிரிட்டிஷ் பாலஸ்தீனம் மற்றும் ட்ரான்ஸ் ஜோர்டான் எனா  இரு பிரிவாக பிரிக்கப் படுகிறது.

11.ஜோர்டான் சவுதி ஹாசிமைட் வம்சத்தை சேர்ந்த அரசர் வசம் ஒப்படைக்கப் படுகிறது.இந்த பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தில் யூத நாடு அமைக்கவும் அதில் பிற இனத்தவர்களுக்கு சம் உரிமை வழங்க வேண்டுமென்றும் கூறப்பட்டது.

12.கி.பி 1930ல் பாஸ்ஃபீல்ட் வெள்ளை அறிக்கை யூத குடியேற்றத்தை தை செய்ய சட்டம் கொண்டு வந்தது.ஆனால் யூதர்கள் சட்ட விரோதமாக குடியேறுவது தொடர்ந்தது.யூத பிரிட்டிஷ் மோதல்களும் நடந்தது.ஹகன்னா,இர்குன் போன்ற யூத ஆயுதக் குழுக்கள் வளர்ச்சி அடைய ஆஅரம்பித்தன.

13.இதன் பிறகு 1922_36 வரை இன மோதல்களே நடை பெற்று வந்தன.எந்த முன்னேற்றமும் இல்லை.கி.பி 1937ல் சமதான‌ முயற்சி தோல்வி அடந்தது.1937_39 பல்வேறு முயற்சிகள்,ஒன்றினந்த பாலஸ்தீனம் முதல் இரு நாடு கொள்கை வரை இரு குழுக்களுமே ஒத்துழைக்கவில்லை.

14.கி.பி 1939ல் இரண்டாம் உலக்ப்போர் ஆரம்பித்தது.பாலஸ்தீன மற்றும் பல அரபுத் தலைவர்கள் பிரிட்டனுக்கு எதிரான நிலையை எடுத்தனர்.பாலஸ்தீன தலைவர் அமின் அல் ஹுசைனி ஹிடலருக்கு முழு ஆதரவு அளித்தார்.இதன் காரணமாக பிற அரபு நடுகளில் இருந்த யூதர்கள் பலரும் பிரிட்டிஷ் பாலஸ்தீனத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

15.கி.பி 1945ல் போர் முடிவுக்கு வருகிறது.இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றனர்..ஜூலை 22 ,1946ல் கிங் டேவிட் ஹோடெல் இஸ்ரேலிய இர்குன் அமைப்பால் குண்டு வைத்து தகர்க்க படுகிற‌து.இது பிரிட்டிஷ் ஆட்சியின் அலுவல்கமாக இருந்தது.

16.பிப்ரவரி 22,1947 பிரிட்டன் ஐ நா அமைப்பிடம் இப்பிரசினையை தீர்க்க கோருகிறது.நவம்பர் 29,1947 ஐ நா சபை வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவு கிடைத்தது.
இஸ்ரேலில் வசித்த மக்கள் தொகை 498,000 யூதர்கள்+ 407,000 பாலஸ்தீனர்கள்

பாலஸ்தீனத்தில் வசித்த மக்கள் தொகை 10,000 யூதர்கள்+ 725,000 பாலஸ்தீனர்கள்.
ஐ நா பிரிவுக்கு பின் மே 14 முதம் 13 மாதங்கள் இஸ்ரேல் அரபு போர்கள் நடந்தது. அத்னை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

17.மே 15,  1948ல் இஸ்ரெல் சுதந்திர நாடாக பிரகடனம் செய்தது



.                           இஸ்ரேல் வரைபடம் ஐ நா வின் திட்டப்படி (1947)[72]





Monday, February 14, 2011

நோவா வின் கப்பல். 1



நோவாவின் கதை அனைவரும் அறிந்ததே.யூத ,கிறித்தவ,இஸ்லாமிய மத புத்தகங்களில் இந்த கதை கூறப்ப்டுகிறது.பூமியில் பாவம்பெருகியதால் நோவானவின் குடும்பத்தை தவிர அனைவரையும் அழிக்க கடவுள் முடிவெடுத்தார்.

கடவுளின் வார்த்தை படி ஒரு கப்பல் செய்தார் நோவா.அதில் ,குடும்பத்தினர் மற்றும் அனைத்து உயிரினங்களையும் ஏற்றிக்கொண்டார்.40 நாட்கள் மழை பெய்து பூமி முழுவதும் நீரில் மூழ்கியது.அனைவரும் அழிந்தனர்.பிறகு கப்பல் ஒரு மலை மீது தரை தட்டியது.கப்பலில் இருந்து வெளிவந்து நோவாவின் குடும்பத்தினர் ,அனைத்து உயிரினங்களும் வெளிவந்தனர். 

நோவாவின் குடும்ப்த்தினரில் இருந்து மக்கள்தொகை பலுகி பெருக ஆரம்பித்தது.இப்போது பூமியில் வாழும் அனைவருமே அவரின் வழித் தோன்றல்கல்ளே என்கிறது மத புத்தகங்கள்.

இஸ்லாமில் இவர் ஒரு இறைத்தூதர் நூஹ் என்று அறியப் படுகிறார்.குரானின் படி இக்கதை யில் கொஞ்சம் வேறுபாஅடு உண்டு.நொவாவின் ஒரு மகனும் வெள்ளத்தில் பலியானதாககூறப்படுகிறது.

இக்கதையை பற்றி எவ்வளவு விஷயம் தெரிந்து கொள்ள முடியுமோ,இப்பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.

பழைய ஏற்பாடு புத்தக்த்தின் படி நோவாவின் கதையை மூலமாக எடுத்து கொள்வோம்.தேவையென்றால் பிற மத புத்தகங்களையும் விவாதிப்போம்.

பழைய ஏற்பாடு நோவாபற்றி கூறுவது என்ன?

ஆதியாகமம் 6 அதிகாரம்

1. மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:

2. தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

3. அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.

4. அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

5. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,

6. தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

7. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.

8. நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.

9. நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.

10. நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.

11. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.

12. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

13. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.

14. நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.

15. நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.

16. நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.

17. வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.

18. ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.

19. சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.

20. ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.

21. உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.

22. நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

ஆதியாகமம்
7 அதிகாரம்

1. கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.

2. பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும்,

3. ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.

4. இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம் பண்ணுவேன் என்றார்.

5. நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.

6. ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.

7. ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.

8. தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,

9. ஆணும் பெண்ணும் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன.

10. ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.

11. நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.

12. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.

13. அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள்.

14. அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டுமிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன.

15. இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்ச ஜந்துக்களெல்லாம் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன.

16. தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாகச் சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார்.

17. ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.

18. ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது.

19. ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.

20. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.

21. அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன.

22. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.

23. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.

24. ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
ஆதியாகமம்
8 அதிகாரம்

1. தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டுமிருகங்களையும், சகல நாட்டுமிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

2. ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்று போயிற்று.

3. ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது, நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது.

4. ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.

5. பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.

6. நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

7. ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.

8. பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.

9. பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.

10. பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.

11. அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.

12. பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.

13. அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.

14. இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.

15. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:

16. நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.

17. உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

18. அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.

19. பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.

20. அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

21. சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.

22. பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
*        *        *
    
முதலில் நோவா கதையை தெரிந்து கொள்வோம்.பிறகு இது உண்மையாக் நடந்ததா,கப்பலை தேடியவர்கள்,பற்றி எல்லம் வரும் பகுதிகளில் பார்ப்போம்.



Sunday, February 6, 2011

சூடான், எகிப்து என்ன நடக்கிறது?



கடந்த சில நாட்களாக செய்திகளில் அடிபடும் ஆப்பிரிக்க நாடுகள் சூடான் மற்றும் எகிப்து. இதனை பற்றி நமது பார்வை.

சூடான்

 ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் கார்த்தௌம் ஆகும்
எண்ணெய் வளம் உடையது.

1956 வரை எகிப்துடன் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.அந்த ஆண்டே எகிப்திடம் இருந்து பிரிந்து சுதந்திர நாடாகியது.அரபு,நுபுய மஸ்லிம்கள் வடபகுதியிலும்,கிறித்தவ,ஆதிவாசிகள் தெற்கிலும் பெரும்பான்மை இனத்தவராக வசித்து வருகின்றனர். அரசாங்கம் வடபகுதி இஸ்லாமியர்களால்(4 கோடி) நடத்தப் பட்டதை தென் பகுதி மக்கள்( 1கோடி) ஏற்கவில்லை.

தென் பகுதி மக்கள் சுய நிர்ணய உரிமை கோரியதை அரசு இராணுவம் மூலம் அடக்க முயல் உள்நாட்டுப் போர் மூண்டது. 1955 முதல் 1972 வரை நடை பெற்ற முதல் சூடானிய போரில் 5 இலட்சம் மக்கள் மடிந்தனர்.அடிஸ் அபா ஒப்பந்தம் 1972ல் ஏற்பட்டது. கொஞ்ச நாள் அமைதி.வடக்கு மாறவில்லை தனது இன ரீதியான ஒடுக்குதல்களை தொடர்ந்ததால் மீண்டும் 1982ல் மீண்டும் உள்நாட்டுப் போர் மூண்டது.

இது 2005 வரை தொடர்ந்தது.சுமார் 20 இலட்சம் மக்கள் இறந்தனர்,

ஒசாம பின் லேடன்.

தீவிரவாத இயக்கமான அல் கொய்தாவின் தலைவன் ஒசாம பின் லேடன் 19992 ல் சூடானில் அல்கார்டும் என்ற இடத்தில் தனது முகாமை அமைத்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.

அங்கிருந்து சவுதி மன்னர் ஃபாக்த் அவர்களை விமர்சனம் செய்ததால் சவுதி அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க சூடான் அரசை கேட்டு கொண்டது..
இதனைடையில் எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் என்னும் அமைப்புக்கும் ஒசாமா உதவி செய்தார்..இந்த இயக்கம் 1995 ல் எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக்கை கொலை செய்ய முயற்சித்து தோல்வி அடைந்தது.இதனால்.சூடன் அரசின் மீதான,எகிப்து,சவுதி,அமெரிக்க அரசுகளின் அழுத்தம் அதிகமானது. 1996ல் அங்கிருந்து ஒசாமா ஆப்கானிஸ்தான் சென்று விட்டார். எகிப்திய ஜிஹாத் அமைப்பு தடை செய்யப் பட்டது.
இந்த அமைப்பு மறைவாக எகிப்தின் இஸ்லாமிய சகோதர்த்துவ  கட்சியோடு இணைந்து பணியாற்ற ஆரம்பித்தது.
இ.ச்.கட்சிக்கு நைத்து மத்திய கிழக்கு நாடுகளிலும் கிளைகள் உண்டு.இந்தோனேஷியா முதல் ஸ்பெயின் வரை உள்ள அகண்ட இஸ்லாமிய பேரரசு அமைப்பதே இவர்கள் நோக்கம்.
------
சூடான் பிரிவினை

திருப்பி சூடானுக்கு வருவோம். 2005ல் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.இடையே சூடான் அதிபர் ஃபஷீர் போர்க் குற்ற வாளியாக குற்றம் சாட்டப் பட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் படி 20011 ஜன‌வரியில் வாக்கெடுப்பு நட‌த்தி தென் சூடான் தனி நாடு ஆவதா இல்லையா என்று  தீர்மானிக்கப் படும் என்று முடிவெடுக்கப் க பட்டது.

20011ல் நடை பெற்ர வாக்கெடுப்பில் 95% மேலாக தென் சூடான் பிரிவதற்கு ஆத்ரவு கிடைத்தது. சீக்கிரமே தனி நாடு ஆகும் தென் சூடானுக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்.
பிரிவுக்கு காரணம் என்ன?

1.அரசாங்கம் வர சூடானியராலேயே நடத்தப் பட்டது.
2. இஸ்லாமிய ஷாரியா சட்டம் அமல் படுத்தப் பட்டது.இந்த சட்டம் அமலுக்கு வர இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் பங்கு மிக அதிகம்.
3.ஏண்ணெய் வளம் அதிகம் இருந்தும் தென் சூடான் எந்த முன்னேற்றமும் பெறவில்லை.

தென் சூடானின் போராட்டக் குழுக்கள் ஒரு இனத்தையோ,மதத்தையோ சேர்ந்தவர்கள் அலல,இருப்பினும் அடக்குமுறை அவர்களை ஒன்றினைத்தது.

http://en.wikipedia.org/wiki/Sudan

http://countrystudies.us/sudan/65.htm.

________

இப்போது எகிப்து நாட்டை பற்றி பார்ப்போம்.



எகிப்தின் வரலாறு

1953க்கு முன் மன்னர் ஆட்சி இருந்தது.1954ல் நடந்த புரட்சியில் திரு நாசர் ஆட்சிஅயி கைபற்றினார். சூயஸ் கால்வாயை தேசிய மயமாக்கி மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சி தந்தார். இங்கிலாந்து,ப்ரான்ஸ்,இஸ்ரேல் எகிப்து மீது தாகுதல் நடத்தி சூயஸை தங்கள் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

பிறகு ஐநா தலையீட்டில் ஆக்கிரமிப்பு விலக்கப் பட்டது. .1967ல் இஸ்ரேலுடன் நடந்த 6 நாள் போரில் எகிப்து தோவி அடைந்தது .எகிப்தின் சினாய் பிரதேசம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்தது. 
  
தோல்விக்கு பொறுப்பேற்று நாசர் பதவி விலகினார்.அரபு தேசியமே மூச்சாக கொண்ட த்லைவர் நாசருக்கு பிறகு அன்வர் சதாத் பதவி ஏற்றார். இழந்த பிரதேசத்தை மீட்பதற்காக 1973ல் இஸ்ரேலுடன் நடந்த அக்டோபர் போரிலும் எகிப்து தோல்வி அடைந்தது.

சதாத் 1977ல் இஸ்ரேலுக்கு சென்று அமைதி பேசு வார்த்தை நடத்தினார்.இதனால் 1979ல் இரு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு விலகியது.இந்த ஒப்பந்தம் அரபு நாடுகளிடம் பகையை தோற்றுவித்தது. அமைதியை ஏற்படுத்திய அன்வர் சதாத் 1981ல் ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்டார்.
இதன் பிறகு 1981ல் இருந்து 2011 வரை ஹோஸ்னி முபாரக் ஆண்டு வருகிறார்.இப்போது இவருடைய ஆட்சி எதிர்த்து போராட்டம் நடை பெறுகிறது.
 _____

இப்போது மக்கள் புரட்சி செய்வதாகவும்,அதற்கு பல் காரணங்கள் கூறப் பட்டாலும் இது இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் ஆதரவோடு இந்த போராட்டங்கள் நடத்தப் படுகின்றன என்பதே உண்மை.இவர்களை பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 இது பல அரபு நாடுகளில் உள்ள இஸ்லாமிய பழமை வாஅத அமைப்பாகும்.
இஸ்லாமே சர்வ ரோஹ நிவாரணி என்ற கொள்கையுடையவர்கள்.குரன் மற்றும் ஹதிதுகளின் படி தனி மனித ,சமூக,நட்டின் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம் என்று கூறுபவகள்.

1936ல் எகிப்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ஆரம்பிக்கப் பட்ட இயக்கம் பல நாடுகளுக்கும் பரவியது.சிரியாவில் 1982ல் இராணுவத்தால் ஒடுக்கப் பட்டது.எகிப்தில் தடை செய்ய பட்டாலும் தேர்தலில் சுயேச்சையாக வேட்பாளர்களை நிறுத்தி வந்தது.20% இடங்களை கடந்த தேர்தலில் கைப்பற்றியது.


இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசித்து 9/11 தாகுதலுக்கு கண்டணம் தெரிவித்து,பெண்கள் ஆடை விஷயத்தில் கண்டிப்பு காட்ட மாட்டோம் என்றும் கூறி வருகிறார்கள்.இர‌ண்டும் முரணாக உள்ளதே என்றால் அரசியலில் எல்லாம் சகஜம் என்பதே நிஜம்.
_____
சூடானின் அதிபர் பஷீர் இஸ்லமிய சகோதரத்துவ கட்சியை ஆதரிப்பவர்.ஹமாஸ்
கூட இதன் நட்பு இயக்கமே.
ஒரு வேளை இக்கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்?

1.இஸ்லாமிய சட்டம்(ஷாரியா) அமல் படுத்தப்படும்.

2.ஜன நாயகம் இருக்காது.

3.இஸ்ரேலுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகும்.போர் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.

4.ஆப்கானிஸ்தான் பாதையில் எகிப்து செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

5.இது பிற இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஊக்கமாக அமையும்.

6.அகண்ட ஆட்டோமான் பேரரசை திரும்பவும் அமைக்கும் முயற்சிக்கு அமெரிக்க உட்பட்ட நாடுகள் நிச்சயம் தடைக்கல்லாக இருக்கும்.  

மனித சமுதாயத்தை வழிந்டத்த இரு அருமையான கொள்கைகள் பல்வேறு சோதனைக்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப் பட்டு பல நாடுகளின் அமல் படுத்தப் பட்ட்டு வருகின்றது. அவை 

1.மத சார்பற்ற மனித உரிமை சட்டங்கள்

2.மக்களாட்சி

இதனை விட எந்த முறையும் சிறந்ததாக வரலாற்றில் காட்ட முடியாது.இவற்றிலும் சில குறைகள் இருந்தாலும் மக்கள் கையில் உரிமை இருப்பதால் ஆட்சியாளரை மக்கள் மாற்ற முடியும்.
ஷாரியா சட்டம் 25 இலட்சம் மக்களை சூடானில் கொன்று விட்டு எகிப்திற்கு வர பார்க்கிறது.என்ன நடக்குமோ?.பொறுத்திருந்து பார்ப்போம்.





  

Tuesday, February 1, 2011

உலகம் அளந்த பெர்ஷிய அறிஞர் அல் பைரூனி







புவி அளவியலின்(geodesy)  தந்தை அல் பைரூனி

அல் பைரூனி என்பவர் ஒரு பெர்ஷிய நாட்டு அறிஞர்.இவர் அறிவியல்,கணிதம், உள்ளடங்கிய பல் கலைகளில் தலை சிறந்த மேதை. இவர்  973 ல் காத்,உஸ்பெக்கிஸ்தானில் பிறந்தவர். இந்தியாவின் பல்வேறு கலைகள்,வானவியல் போன்றவறை பற்றி கூட ஆய்வு செய்து 146 புத்தகங்கள் எழுதியவர்.கிரேக்க தத்துவம்,அறிவியல் முதலியவற்ரை பெர்ஷிய மொழி பெயர்ப்பு செய்தவர். 

இவரை பற்றி ஏன் இந்த பதிவு என்றால். இவர்தான் முதன் முதலில் உலக் உருண்டையின் ஆரத்தை எளிதாக கணக்கிடும் முறையை உருவாக்கியவர். இவர் கண்டுபிடித்த முறை சிறிது மாற்றங்களுடன் இன்னும் பயன் படுத்தப்படுகிறது.

இப்பதிவு பூமியின் ஆரத்தை கண்டுபிடிக்கும் அவரது முறையை பற்றித்தான்.


இதற்கு முதலிலும் சில முயற்சிகள் நடை பெற்றாலும் பூமி உருண்டையானது என்ற கருத்தின் அடிப்படையிலேயே இவரது ஆய்வு மேற்கொண்டது எனக்கு முகவும் சிறப்பான ஒரு விஷயமாக தெரிகிறது.பூமி உருண்டையானது என்ற கருத்தை த்தை கி.மு 300ல் கிரேக்க அறிவியலாளர் எரோஸ்தனிஸ் கூறி பூமியின் சுற்றளவை தோராயமாக கண்டுபிடித்தார்.


அல் பைருனியின் செயல் முறை.

1.இதற்கு ஒரு கடல் அருகில் உள்ள ஒரு மலை தேவைப்படுகிறது.

2. மலையின் கீழ் இருந்து அடிவாரத்தில் இரு இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.மலை மற்றும் தேர்ந்தெடுக்கும் இடங்கள் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.இரு இடங்களௌக்கும் உள்ள தூரம் அளக்க வேண்டும்.


3.அல் பைரூனி கண்டுபிடித்த ஒரு கருவி(ஸ்பெக்ட்ரொ மீட்ட‌ர் மாதிரி) மூலம் இரு இடங்களில் இருந்தும் மலை உச்சியின் கோணம் அளக்க வேண்டும்.
இடங்களுக்கிடையே உள்ள தூரம்,இரு கோணங்கள் மூலம் மலையின் செங்குத்து உயரம் கணக்கிடப் படுகிறது.

4.பிறகு மலையுச்சிக்கு சென்று கடலை நோக்கி அந்த கருவிஅயை திருப்பி கடலும் மேககமும் சந்திக்கும் மிக அதிக கோணத்தை அளக்க வேண்டும்.
மலையின் செங்குத்து உயரம் ,மற்றும் இப்போது அளவிட்ட கோணம் ஆகியவற்றுடன் எளிதாக பூமியின் ஆரம் கணக்கிடலாம். 



அல் பைரூனியின் இந்த கணக்கிடும் முறை மிகவும் பாராட்டத்தக்கது என்றாலும்.இவரது கண்டுபிடிப்புகளை மத வாதிகள் தங்களுக்கு சாதகமாக கூறி வருவதை தவிர்ப்பதும் இப்பதிவின் நோக்கமாகும்.

இஸ்லாமியர்களிலும் சில அறிவியலாளர்கள் இருப்பதும் இயல்பான விஷயமே அறிவியலில் மததலையீடு இல்லாத்தால்தான் இவரால் செய்ய முடிந்தது என்பதற்கும் ஆதாரம் தருகிறேன்.

இவருக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் சோதிடம் ஆகியவற்றிலும் ஈடுபாடு உண்டு.இதனை பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் என்பது இவர் மேல் குத்தப்படும் மத முத்திரையை உஅடைத்துவிடும் என்று கருதுகிறேன்..


அறிவியலாளர்கள் இயற்கையை அறிந்து கொள்வதிலும்,ஆய்வுகள் மூலமே முடிவுகளை எடுப்பவர்கள். அவர்கள் மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் மதத்தை அறிவியலில் கலக்கும் செயலை செய்ய மாட்டார்கள்.ஆய்வின் முடிவை ஆண்டவன் கூறியதாக கூற மாட்டார்கள்.