Monday, April 25, 2011

இஸ்லாமிய வங்கி:வீட்டுக் கடன்: ஒரு சாமான்யனின் பார்வை


.
இந்த மதத்தில் அறிவியல் என்ற குரலுக்கு அடுத்து ஒலிப்பது மதத்தில் பொருளியல் என்பதும் இஸ்லாமிய வங்கி என்பது சகல பொருளாதாரா பிரச்சிஅனைகளுக்கும் சர்வ ரோகநிவாரணி என்ற பரப்புரைகளும் அறிந்ததே.இது பற்றி தமிழ் பேப்பர் இணையய தளத்தில் எழுத்தாளர் இரா.முருகன் ஒரு தொடர் எழுதியுள்ளார்.



1.இஸ்லாமில் ரிஃபா எனப்படும் வட்டி,தடை செய்யப்பட்ட ஒன்று.பணத்தை கொடுத்து திருப்பி வாங்கும் போது கூடுதலாக வங்குவது வட்டி எனப்படுகிறது.
A  என்பவர் B விற்கு 100 ரூபாய் கடன் தருகிறார்.B ஒரு மாதம் கழித்து 101 ரூபாய் 'A' இடம் திருப்பி அளிக்கிறார். அந்த கூடுதல் ஒரு ரூபாய் வட்டி ஆகும்.

2.இஸ்லாம் வணிகம் செய்வதை த்டை செய்யவில்லை.நியாயமான் முறையில் இலாப ஈட்டுவதையும் தடுக்கவில்லை.


3.அத்தொடரில் பல தரப்பட்ட வங்கி நிதி அளிக்கும் முறைகளை பற்றி பேசுகிறார். அரபி சொற்கள் அதற்காக விளக்கம்(இங்கும் அப்படித்தானா) என்று போகிறது .

 4. அதில் ஒரு வகையான முஷாரகா பற்றி ,அதுவும் அதில் வீட்டுக் கடன் பற்றி மட்டும் ஒரு எடுத்துக் காட்டுடன் பார்ப்போம்.

முஷாரகா என்பது என்ன?


இருவர் சேர்ந்து தொழில் செய்யும் போது வரும் இலாபம்/நஷ்டம் பிரிக்கும் முறை என்று கூறலாம்.வீட்டுக் கடன் இம்முறையின் குறையும் (Diminishing Musharaka) முஷாரகாவின் கீழ் வருவதால் இவ்வார்த்தையை விளக்க வேண்டியதாயிற்று.


 இஸ்லாமிய வீட்டுக் கடன் வழங்கும் நிறுவத்தின் தளத்தில் இருந்து சில தகவல்கள் திரட்டி ஒரு எடுத்துக் காட்டுடன் உங்களுக்கு அளிக்கிறேன்

நீங்கள் வீட்டுக் கடனாக 200,000$ முஷாரகா முறையில் பெற விரும்பிகிறீர்கள்.நீங்கள் 20 வருடத்தில் ,வருடத்திற்கு ஒரு முறை தவணை செலுத்த முடிவு செய்கிறீர்க்ல் என்று எளிதாக வைத்துக் கொள்வோம். உங்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும்? ஆகா வட்டிதான் இல்லை. வருடம் நான் 10,000$ கட்ட வேண்டி இருக்கும் அவ்வளவுதான் என்றுதானே!. கொஞ்சம் பொறுங்கள்.

இப்போது வங்கிக்கு செல்கிறீர்கள்.அவர்கள் சொல்கிறார்கள்.

வங்கி மேலாளர்: வருக சகோதரரே உங்களுக்கு சேவை செய்வதில் மிக்க மகிழ்ச்சி.உங்கள் வருமானம் குறித்த விவரங்கலை சரி பார்த்து உங்களுக்கு கடன் தருவதாக முடிவு செய்துவிட்டோம்.

சார்வாகன்:நன்றி அய்யா,இந்த கடன் பற்றியும்,நான் 20 வருடத்தில் வருடம் ஒருமுறை தவணை கட்ட வெண்டுமென்றால் எவ்வளவு கட்ட வெண்டும் என்பதை கூறுங்கள்.

வ.மே:இந்த வங்கி வீட்டு கடன் மற்ற முறைகளை விட‌ சிறப்பானது.எப்படியென்றால் வட்டி கிடையாது......!!!!! ??????.

சார்:: நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் அய்யா,எனக்கு இன்னொரு அலுவல் இருப்பதால் நான் வருடம் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை மட்டும் கூறினீர்கள் என்றால் நலம்.

வ.மே:பொறுமை சகோதரரே,நிங்கள் விரும்பும் வீடு,நகரின் வேகமாக வளர்ந்து வரும் பகுதியில் உள்ளது.இருபது வருடங்களில் அத்ன் மதிப்பு பல மடங்கு ஆகிவிடும். இந்த முறையில் இந்த வீட்டுக்கு நாங்கள் பணம் தருகிறோம்,முதலில் நாங்கள் 100% உரிமையாளர்.நீங்கள் மொத்தப்பணத்தில் 20 வருடமும் ஒவ்வொரு தவனை(5%) செலுத்தும் போதும் தவணை செலுத்தும் உங்கள் பங்கு அதிகரிக்கும்,எங்கள் பங்கு குறையும்.

சார்.:பதிவு செலவு இரு முறை ஆகும் போல் இருக்கிறதே.சரி நான் வருடம கட்ட வேண்டியது 200,000/20=10,000$ மட்டும்தானே.

வ.மே:அது எப்படி ச்கோதரரே?.எங்கள் சொத்தை நீங்கள் அனுபவிக்கும் போது அதற்கு வாடகை கொடுப்பதுதானே முறை.அந்த இருபது வருடமும் நீங்கள் எங்களுக்கு வாடகை தர வேண்டும்.

சார்:?. வட்டி இல்லை என்றீர்களே

வ.மே: சகோதரரே கவனியுங்கள்,இதில் வட்டி எங்கு வந்தது.?முதலில் வீடு வங்கிக்கு 100% சொந்தம் நீங்கள் குடியிருக்கிறீர்கள்.வாடகை ஒரு கணக்கிற்கு 5% என்று வைத்து கொள்வோம்.நீங்கள் கட்டுவது.200,000/20+0.05*200,000=20,000$

இரண்டாம் வருடம் வீடு வங்கி 95% ,உங்கள் பங்கு 5%.

இப்போது நீங்கள் கட்டுவது 200,000/20+0.05*190,000=19,500$
இந்த அட்டவணையை பார்த்தால் உங்களுக்கு புரிந்து விடும்.




சார்: (மனதிற்குள் ஃப்ளாட் ரேட்டில் வட்டி 2.625% வருகிறது)இது கொஞ்சம் மறைமுகமான வட்டி போல் உள்ள்து என்றாலும் இருபது வருடங்களின் நான் கட்டும் கூடுதல் தொகை(வட்டி என்றால் பாவம்!) 105000$.
இருமுறை பதிவு,பத்திர செலவு என்று பார்த்தால் கொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் அஆஇஈ வங்கியை விட உங்கள் வங்கி கொஞ்சம் பரவாயில்லை .அவ்வளவுதானே.முதல் வருடம் நான் 20,000$ கட்ட ஆரம்பித்து ,இரண்டாம் வருடம் 19,500 என்று இருபதாம் வருடம் 10,500$ செலுத்தினால் முடிந்தது.
 அவ்வளவுதானெ.

வ.மே: ச்கோதரரே ,கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் .5% வருட இலாபம் என்று ஒரு எடுத்துக் காட்டுக்காக சொன்னேன்.நாங்கள் நிபுணர் குழு மூலம் 20 வருடங்களில் அந்த வீடு எந்த விலை போகுமோ அதனை கணித்தே இத்னை நிர்னயிப்போம்.

சார்: அப்போது வீடு விலை குறைந்தால் பணம் திரும்ப‌ கிடைக்குமா?.அதாவது இப்போது 200,000 ஆக உள்ளது15 வருடத்தில் 150,000 ஆகிவிடுகிறது என்றால் அப்படியே நிறுத்தி கொள்ளலாமா!!!

வ.மே: அப்படியெல்லாம் கடவுள் எங்களை கைவிட மாட்டார்.ஒருவேளை 10% வருட இலாபம் என்றால் இரண்டாம் அட்டவணையை பாருங்கள்.

சார்:அய்யா:எனக்கு தலை வலிக்கிறது. நான் பிறகு வந்து உங்களை சந்திக்கிறேன்.நன்றி

வ.மே: உங்களுக்கு அமைதி உண்டாவதாக.

சார்: இனி எங்கே வாயை திறப்பது.!!!அமைதிதான் வேண்டும்.!!!!
___________

இந்த காணொளியிலும் இத்னை விளக்கி உள்ள்னர்.


ஏதாவது இலவசம் என்றால் அலையும் தமிழ்ரின் குணத்துக்கு சார்வாகனும் என்ன விதிவிலக்கா?.

நான் இதனை முற்று முதலாக குறை கூறவில்லை.நான் கூறிய வண்ண‌ம் கணக்கீடு செய்து,இலாபமாக இருந்தால் வாங்குமாறு பரிந்துரைக்கிறேன்.இன்னும் சில பலன்களாக சில விஷயங்களை இன்சுரன்ஸ்(இது அனுமதிக்கப் பட்டதா!),தாமத கட்டண அபராதமின்மை போன்றவற்றை குறிப்பிடுகின்றனர்.

தகவல்களுக்கு 1‍_8666 தொடர்பு கொள்ளலாம்.இங்கு பேசித்தான் இந்த உரையாடல் நடந்தது..
http://guidanceresidential.com/contact-us


இன்னொரு விஷயம் ஒருவேளை நீங்கள் பணம் கட்ட முடியாத சூழ்நிலை வந்தால் அந்த வீட்டில் உங்கள் பங்கு அப்டியே இருக்கும்.இன்னொருவர் அவ்வீட்டை வாங்கினார் என்றால் உங்கள் பங்கு பணம் அப்போதைய லாப கணக்கின்படி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.இத்னை அனுபவப் பட்டவர்கள் கூறினால் நலம்.அப்போதைய சூழ்நிலையில் வீட்டில் குடியிருக்க முடியாது என்பதனையும் தெரிந்து கொள்ளுதல் நலம்.

ஒரு வீடு 20 வருடத்தில் விலை 400% அதிகரிக்கும் எனும்போது ,உங்களுக்கும் வங்கிக்கும் உடன்பாடு 50/50 எனில் வங்கிக்கு கொடுக்க வேண்டிய  இலாப  விகிதம்=200/20=10%
இப்பதிவில் கூறிய எடுத்துக் காட்டு வீடு 20 வருடத்தில் 200% விலை அதிகரிக்கும்,உங்களுக்கும் வங்கிக்கும் உள்ள உடன்பாடு 50/50 என்றால் வங்கிக்கு கொடுக்க கூடிய இலாபவிகிதம் 5% என்பது புரியும்.


.வட்டி என்பதற்கு பதில் இலாபத்தில் பங்கு என்று சொலவதுதான் இஸ்லாமிய வங்கியியல். இதில் எவ்வளவோ பல முறைகள் இருக்கின்றன.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 100 ரூபாய்(பொருள் மீதான) கடன் 110 ரூபாய் ஆக திரும்புவதுதான் பொருளாதாரம். இத்ற்கு மாற்றாக கட‌வுளால் கூட  எதுவும் செய்ய முடியாது என்பதையே இவ்வங்கி முறை காட்டுகிறது.இக்கட்டுரையை மறுப்பவர்கள் ஒரு எடுத்துக் காட்டுடன் பதிவிட்டு , இது குறித்து வெளிப்படையான தகவல்களை தெரியப் படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.


இரண்டாவது காணொளியை பார்த்தால் இஸ்லாமிய வங்கிகள் கூட்டு வட்டியை (Compound Interest) மட்டும் தவிர்ப்பது புரியும்.பணம் கடனாக கொடுக்கப்படக் கூடாது என்பது எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்பதும் விவாதத்திற்குரியதே..சொத்துகள் வாங்குவதற்கு மட்டுமே கடன் என்பது வங்கிகளின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.ஆனால் இந்த இலாப கணக்கீட்டு முறைகள் எப்படி நடைமுறைபடுத்தப் படுகின்றன என்பதும்,சில சம்யம் சாதாரண வங்கி கடனை விட கூடுதல் தொகை(வட்டி என்று சொல்லக் கூடாதுஅல்லவா!!!!) கட்டும் படி கூட நிலைமை ஏற்படலாம்.ஆகவே ஜாக்கிரதையாக இந்த கணக்கீடுகளை ஒப்பீடு செய்து பயன் படுத்துமாறு கேட்டு கொள்கிறேன் .

இஸ்லாமிய வங்கி முறை என்பது பொருள்களின் மீது மட்டும் கடன் கொடுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமான கூடுதல் தொகை[சாதாரண வட்டி(Simple Interest) rate] முறை என்று வரையறுக்கலாம்.

5 comments:

  1. நியாயமான வட்டி என்பது சரி. ஆனால் வட்டியே இன்றி என்றால் ‘நிழலில் ஏதோ ...’ என்பதுதான் சரி போலும்!

    ReplyDelete
  2. வாருங்கள் அய்யா
    குரான் ரிபா என்னும் வட்டியை இஸ்லாம் தடை செய்கிறது ஆனால் வியாபாரத்தை அல்ல.ஆகவே வட்டியை வியாபாரமாக் மாற்றி விட்டார்கள்.ஒரு இஸ்லாமிய வங்கியில் 100 ரூ முதல் இடுகிறீர்கள்.அத்னை கொண்டு வங்கி கடன் கொடுத்து இலாபம் 30 ரூ ஈட்டுகிறது என்றால் உங்கள் இலாபமாக(உடன் படிக்கையின் படி) 15ரூ பெறலாம்.இதுதான் இஸ்லாமிய வங்கி.
    ______________
    2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
    _____________
    http://www.scribd.com/doc/18483063/Riba-and-Islamic-Banking

    ReplyDelete
  3. மியுசுவல் ஃபுன்ட்,பங்கு வர்த்தகம் ஆகியன அனுமதிக்கப் பட்ட்வையாக மாறிவிடுகின்றன.

    http://www.universityislamicfinancial.com/mutualfunds.html
    http://www.stockopedia.co.uk/share-prices/european-islamic-investment-bank-LON:EIIB/

    ReplyDelete
  4. முகமது நிறையா வட்டிக்கு வாங்கி மாட்டிகிட்டார் போல, அதான் அல்லா வட்டி வாங்க கூடாதுன்னு சொல்லிட்டாருன்னு மழுப்பிட்டார், எத்தனை பொண்டாட்டி வேணும்னாலும் கட்டலாம் என்ற கதை தான் இதற்கும் பொருந்துகிறது!

    ReplyDelete
  5. //முகமது நிறைய வட்டிக்கு வாங்கி மாட்டிகிட்டார் போல,//
    பெரிய‌ குடும்பஸ்தன் அல்லவா,இதெல்லாம் சகஜம்தானே நண்பெரே
    ____________
    2069. அனஸ்(ரலி) அறிவித்தார்.
    நான் நபி(ஸல்) அவர்களிடம் தீட்டப்படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப்பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கவசத்தை மதீனாவில் உள்ள ஒரு யூதரிடம் அடைமானமாக வைத்து அவரிடமிருந்து தம் குடும்பத்தினருக்காகத் தீட்டப்படாத கோதுமையை வாங்கியிருந்தார்கள். 'முஹம்மதின் குடும்பத்தினரிடம் தீட்டிய கோதுமையில் ஒரு ஸாவு, பிற தானியத்தில் ஒரு ஸாவு இருந்ததில்லை." அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.
    Volume :2 Book :34

    ReplyDelete