Friday, August 12, 2011

மதங்களை கண்டறிவோம்:ஆவணப் படம்


இந்தஆவணப்படம் சில விவரங்களை அலசுகிறது.பெரும்பாலான மதங்கள் இந்த விஷயங்களை கூறுகின்றன.

1.பிரபஞ்சம்,உயிரினங்கள் ஆகியவற்றை கடவுள்(கள்) படைத்தார்(கள்).

2. மத புத்தக்ங்களையும் இறைவனே வழங்கினார்.

3.பிரபஞ்சத்தின் முடிவு நியாயத் தீர்ப்பு அனைவருக்கும்(மனிதர்களு மட்டுமா?) உண்டு.இறைவனின் முடிவின் மீது ஒவொருவரும் சொர்க்கம்,நரகம் என்னும் அழியாப் பெருவாழ்வு அடைகின்றனர்.

இதில் இந்து ,பவுத்த மதங்கள் வேறுபடுகின்றன என்பது அறிந்ததே.இது குறித்து பிறகு விவாதிப்போம்.

பிரபஞ்சம் தோன்றி 13.6 பில்லியன் ஆண்டுகள் ஆனதும்,பூமி 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதும,மனித 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பரிணாம் வளர்ச்சியில் தோன்றியதும் அறிவியலால் உறுதிப்படுத்தப் பட்ட கருத்துகள்.இதில் பரிணாம்ம் மட்டும் ஆபிரஹாமிய மதவாதிகளால் கடுமையாக் எதிர்க்கப்படுகிறது.மற்ற விஷயங்களை ஏதாவது வார்த்தை ஜாலத்தின் மூலம் மத புத்தக்த்திலும் அதுதான் இது என்று கூறி வருகிறார்கள்.

இந்த ஆவணப்படம் மதங்களின் படைப்புக் கொளகைகளையும் அது எவ்வாறு அறிவியலுக்கு முரண்படுகிரது என்பதை விவாதிக்கிறது.அறிவியலின் கருத்துகளையும் சான்றுகளையும் அளிப்பது மிகவும் சிறப்பு.இந்த ஆவணப்படம் ஆபிரஹாமிய மதங்களின் படைப்புக் கொளகைகளையும் அது எவ்வாறு அறிவியலுக்கு முரண்படுகிறது என்பதை விவாதிக்கிறது.

இக்காணொளியின் முக்கிய சாராம்சங்கள்

1.இளைய பூமிக் கொள்கை(பூமி 6000 ஆண்டுகளுக்கு முன் அனைத்தும் படைக்கப்ப்ட்டது ).

2.நோவாவின் வெள்ள‌ப் பெருக்கும்,உலக் அழிவும்

3.படைப்புக் கொள்கையாளர்களின் கொள்கையாக்கங்கள்

4.பரிணாமத்தின் சான்றுகள்

5.மதச்சார்பின்மை

6.ஒழுக்க கோட்பாடுகள்

7.மத வன்முறைகள்

அறிவியலின் கருத்துகளையும் சான்றுகளையும் அளிப்பது மிகவும் சிறப்பு. இன்னும் மதங்களின் கொள்கையாகத்தினால் ஏற்படும் நிகழ்கால் சிக்கல்களையும் ஆவண‌ப் படுத்துகிற‌து.கண்டு களியுங்கள்.

http://discoveringreligion.net/

Part 1
Part 2

Part 3
Part 4

3 comments:

  1. நண்பரே.

    discoveringreligion தளத்தை அறிமுகப்படுத்தியதுக்கும் காணொளி அளித்ததற்கும் நன்றி.

    இரண்டாவது காணொளியில், 4வது பாகம், ஜெர்மணி.. சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது என்கிறது. எண்கள் மாறி மாறி வருவதால், அந்த பாகம் காணொளியில் இருக்கின்றதா? தளத்தில் லிங்க் கண்டுபிடிக்க முடியவில்லை.

    மதம் என்பது நல்ல கதை, புராணம். மதத்தை நம்பினாலும் அதை கதை புராணம் என்று அளவில் வைத்து கொள்வது நல்லது. இல்லை என்றால் மதவாதம் புகந்த எந்த அமைப்பும், தளமும் அதோகதிதான். படைபுவாதிகளுக்கு புரியும் வகையில் சிம்பிளாக பரிணாமத்தை சொல்லுகிறார்கள், திறந்த மனதுடன் அவர்கள் பார்க்க வேண்டும்..ஹா..ஹா.

    இந்தியாவை பொறுத்த வரை, மதத்தை முன்னிறுத்துவதால் அரசியல் சமூக தளங்களில் அடைந்த கலவரம், ஷாபானு வழக்கு, பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை, தற்பொழுது மோடி, அப்பொழுது ஒள்ரங்கசீப், பிரச்சனைகள் அறிந்ததே. நமது அரசியலைப்பு சட்டம் தான் எல்லாவற்றையும் ஒரளவு கடிவாள்ம் போட்டு காப்பாற்றுகிறது. அதில் எந்த மதம் புகுந்தாலும் நிலைமை மோசம்.

    lā elaha ella Allahu, Muhammad ur-rasul Ullah என்ற கலிமாவை, மொசஸின் முதல் commandment இருந்து எடுக்கப்பட்டதோ?

    ReplyDelete
  2. வணக்கம் நரேன்,
    4அம் அத்தியாயம் என்றால் நோவாவின் ஜல பிரளயம் என்று நிலைக்கிறேன்.அது வேறு எங்கும் கிடைத்தால் இணைப்பு தருகிறேன்.நல்ல விஷயங்கள் கிடைப்பது அரிது.இம்மாதிரி காணொளிகளை தயாரிப்பின் பொருள் செலவு,காப்பி ரைட் போன்ற்வற்றால் சில சம்யம் கிடைக்காது.எதற்கும் தயரித்தவர்களின் யுட்யூப் இணைப்பே தருகிறேன்.முயற்சி செய்யவும்.
    http://www.youtube.com/user/DiscoveringReligion


    அருமையான காணொளி.நான் பார்த்த காணொளிகளிலேயே இந்த தொடர் மிகவும் அருமை எப்படியெனில். மதம் விமர்சிப்பவர்கள் அதே தொடரில் பரிணாம்ம் பற்றி பேசுவதில்லை .இதில் சரியாக மதம் எங்கு வழுக்குகிறது என்பதையும்,பல கோணங்களில் அலசியிருப்பது அருமை.

    இதனை அருமையாக தமிழில் விளக்கினாலே மதவாதம் ஒழிக்க போதுமானது.இத்னை தருமி அய்யா போன்றவர்கள் ஒரு தொடராக எழுதினால் நன்றாக இருக்கும்,பலரையும் சென்றடையும்.எப்படியும் வந்து பார்ப்பார்.இது நம் வேண்டுகோள்.

    எல்லைகளை அறியாத,உண்ராத ,புரியாத மத நம்பிக்கையே மதவாதமாக் மாறுகிற‌து.மதம் என்பது நம்பிக்கை மட்டுமே,மந்திற்கு இதமளிக்கலாம் ஆனாலும் எவ்வளவு பேர் எவ்வ்ளவு உறிதியாக நம்பினாலும்,கடைபிடித்தாலும்,பல தியாகங்கள் செய்தாலும் அது உண்மையாகாது.

    மதவாதம் எந்தவகையிலும் உதவியாக் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை.

    பாருங்கள்முதலில் ஹிடலர்,பிறகு சோவியத் இரஷ்யாவை அந்திக் கிறிஸ்துவாக் காட்டியே பல அரசியல் நிகழ்வுகளை சாதித்தனர்.

    பைபிளில் கூறியிருக்கிற‌து என்பதற்காக் பால்ஸ்தீனத்தை ஆகிரமித்து இஸ்ரேலை உருவாக்கினர்.பைபிளின்படி நியயத்தீர்ப்பு நாளில் யூதர்கள் ஜெருசலேமில் ஒரு நாடாக் கூட்டப்படவேண்டும்.யூதர்களுக்கு எதிராக் உலக்மே போரிடும்.இப்போது நாயகர் இயேசு வந்து கதை முடித்து வைப்பார் என்பது மிகவும் ஆஅபத்தான கதை.சிலுவைப் போர்களுக்கும் இம்மாதிரி கட்டுக்கதைகள் பரப்ப பட்டன.

    மூன்றாம் உலக்ப் போர் என்பது இயற்கை வளங்களுக்காக மதப்பூச்சுடன் நடக்கும் சாத்தியம் இருப்பதால்,மதவாதம் வளர்வது இதனை ஊக்குவிப்பதால் ந்ம்மால் ஆன முயற்சியில் தடுக்க சில உண்மைகள் எழுதுகிறோம் அவ்வளவுதான்.

    ReplyDelete
  3. /lā elaha ella Allahu, Muhammad ur-rasul Ullah என்ற கலிமாவை, மொசஸின் முதல் commandment இருந்து எடுக்கப்பட்டதோ?/

    லா இலாஹு இல் அல்லஹ் என்பதன் பொருள் "அந்த ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை"
    பத்துக்கட்டளைகளில் முதல் கட்டளை என்னையன்றி உனக்கு வேறு கடவுள் இருக்க கூடாது என்பதே இரண்டும் ஒன்றுதான் பத்து கட்டளைகள் இச்சுட்டியில் பார்க்கவும்.

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    மத சார்பினமைக்கு முக்கிய வில்லன் இந்த கோட்பாடு என்றால் மிகையாகாது.
    கடவுள் ஒருவெரே என்று கூறாமல் ஒரு கடவுளைத் தவிர வேறு கடவுள்கள் கூடாது என்று எதிர்மறையாக அழுத்தி கூறுவதை கவனியுங்கள்.இத்னால் இஸ்லாமிய நாடுகளில் பிற மத வழிபாடுகள் அனுமதிகப்படக் கூடாது.தடை செய்யப்பட்டே ஆக வேண்டும்.
    ________
    /, Muhammad ur-rasul Ullah என்ற கலிமாவை, மொசஸின் முதல் commandment இருந்து எடுக்கப்பட்டதோ?/

    அதாவது இஸ்லாம் தொடங்கிய போது,முகமதுவின் கால்த்தில் முகமது இறைவன் தூதர் என்று ஏற்ரு கொண்டாலும் அதனையும் கலிமா வாக சொல்லி வந்தார்களா என்பதில் சில‌ பிரிவினர் ஏற்று கொள்வதில்லை.ஷியா முஸ்லிம்கள் அலியுன் வலியுல்லாஹ் என்பதையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.குரான் மட்டும் என்ற பிரிவினார் அனைத்து ஹதிதுகளையும் நிராகரித்து குரான் வசன‌ங்களுக்கு சாந்தமான் பொருள் தருவர்.
    __________
    Quranist rejection of orthodox Muslim theology

    Differences in doctrine between Quranists and orthodox Muslims are extant from minor matters to the core of central beliefs such as the five pillars of Islam. Example areas of difference are:
    The shahada (statement of faith). Quranists say 'lâ ilâha illallâh' rather than the Sunni lâ ilâha illallâh, Muḥammadur rasûlullâh (no god but God, Muhammad is His Prophet) or Shia lâ ilâha illallâh, Muḥammadur rasûlullâh, wa Ali unwali ullah (no god but God, Muhammad is His Prophet, Ali is God's regent).
    ********
    A menstruating Quranist woman may perform salat (prayer), enter a mosque and touch a quran, as the quran only forbids menstruating women from sexual intercourse or marrying a new man within the first three menstrual cycles of leaving her husband, the Quran offering no further mention of menstruation-related prohibitions.
    ***********
    Some Quranists combine 5 prayers into 3 prayers like Shias, although some pray 5 times like Sunnis. Quranists also do not pray the Tarawih.
    ***************
    The amount of zakat (alms). Hadithists provide 2.5% of their wealth in a prescribed manner and formulas based on secondary-sources, whilst a quranist is free to donate as much or little as they wish. [3]
    Circumcision, either male or female, plays no role in Quranist theology, per ayahs 95:4 and 4:119.
    **********
    Orthodox Muslims are encouraged to dress in the way of the prophet Muhammad or his wives. Clothing rules plays no part in Quranist theology other than that the person dress modestly as surah 24:30–31 says. For example hijabs or beards are not necessary.
    **********
    Quranists do not hold that breastfeeding a non-related adult male will make him mahram, whilst some Sunni Muslim scholars have said it does;[4] see rada (fiqh)
    ************
    Quranists do not believe in the emergence of the Imam Mahdi or dajjal, since they're not mentioned in the Quran.
    Quranists can eat food produced by Christians and Jews, as instructed in surah 5:5.
    Quranists do not touch the black stone of the kaaba.
    ____________

    http://en.wikipedia.org/wiki/Shahada
    http://en.wikipedia.org/wiki/Quranism

    ReplyDelete