Friday, March 4, 2011

வரலாற்று இயேசுவை தேடி 2:யூத வரலாற்று அறிஞர் ஜோசஃபஸ



முதலில் கிறித்தவர்களின் சுவிஷேஷங்களின் படி இயேசுவின் வரலாறை காலவரிசையுடன் தெரிந்து கொள்ளுவோம்


காலவரிசை (Timeline) 

6-4 BC •இயேசுவின் பிறப்பு 

5-4 BC • பெற்றோரால் எகிப்துக்கு கொண்டுசெல்லப்படுதல்,ஏரோது மன்னன் இயேசுவின் வயதுடைய குழந்தைகளை கொல்லுதல்.

4 BC    • ஏரோதின் மரணம். 

7-8 c • ஜெருந்சலமிற்கு பயணம். 

12 c    அகஸ்டஸ் சீசர் திபெரியஸை இளவரசனாக முடி சூட்டுகிறார்.. 

14 c • திபேரியஸ் ரோம பேரரசர் ஆகிறார்.

25 c • பிலாத்து பாலஸ்தீன அரசுபிரதிநிதியாகவும்,கைபா தலைமை மதகுருவாகவும் பதவியேற்றல். 

29 c • ஜான்(இஸ்லாமின் யாஹ்யா) ஊழியம் தொடங்குகிறார். 

29 c • இயேசுவும் ஊழியம் தொடங்குகிறார். 

31 c • திபெரியஸ் தன் தள்பதி செஜனஸுக்கு மரண தண்டனை அளிக்கிறார்.

33 c • இயேசுவின் மரணம் (வெள்ளி ,ஏப்ரல் 3, 3:00(பிற்பகல்).

36 c • பிலாத்து ,கைபா பதவி நீக்கம்.

37 c • திபெரியஸ் சீசரின் மரணம்

வரலாற்று அறிஞர் ஜோசஃபஸ்(c.37 – 100)


இவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று அறிஞர் யூதர்களின் வரலாற்றை தொகுத்தளித்தவர்களில் மிக்கியமானாராக கருதப்படுகிறார்.
இவர் ரோம அரசுக்கு விசுவாசமாக இருந்தவர் என்று கூறப்பட்டாலும் இவர் எழுத்துக்கள் அதாரப்பூர்வமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஜோசஃபஸ் இயேசுவின் ச்கோதனாக ஜேம்ஸ் என்பவரை குறிப்பிட்டு,ஜேம்ஸ் ஒரு யூதக்குழுவிற்கு தலைவராக இருந்ததாக குறிப்பிடுகிறார்.இயேசு,அரச பிரதிநிதி பிலாத்து,மதகுரு கைபா, யோவான்(ஜான்) ஸ்நானகனாகியோரைபற்றியும் குறிப்பிடுகிறார்.


see chapter 3

*********
ஜோசஃபஸ் கூற்றுகளின் மொழியாக்கம்

3. Now there was about this time Jesus, a wise man, if it be lawful to call him a man; for he was a doer of wonderful works, a teacher of such men as receive the truth with pleasure. He drew over to him both many of the Jews and many of the Gentiles. He was [the] Christ. And when Pilate, at the suggestion of the principal men amongst us, had condemned him to the cross, (9) those that loved him at the first did not forsake him; for he appeared to them alive again the third day; (10) as the divine prophets had foretold these and ten thousand other wonderful things concerning him. And the tribe of Christians, so named from him, are not extinct at this day.


பிலாத்துவின் காலத்தில் இயேசு என்ற ஞானி(மனிதர் என்றே குறிப்பிடுவதில் தயக்கம் இருப்பதாக ஜோசஃபஸ் குறிப்பிடுகிறார்) ,போதகர் பல‌ யூதர்களுக்கும்,பிறருக்கும் சத்தியத்தை போதித்து வந்தார் .பிலாத்து சிலரின் குற்றச்சாட்டுகளின் பேரில் சிலுவையில் அறைய செய்தான் என்று குறிபிடுகிறார்.அவர் வணங்கியவர்களுக்கு உயிரிடன் தெரிந்ததாகவும்,அவரை வணங்குபவர்கள்,கிறித்தவர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் கூறுகிறார்.
*************

பிறகென்ன ஜோசஃபஸின் கூற்று கிறித்தவர்களின் சுவிஷேசங்களுக்கு ஒத்து போகின்றது அல்லவா,பிறகென்ன பிரச்சினை என்று கூறலாம்.

ஜோசஃபஸின் புத்தகத்தில் பல இடைசெருகல்கள் பிற்கால (கிறித்தவ)ஆட்சியாளர்களால் செய்யப்பட்டதாகவும் கருத்து உண்டு.

நாம் நடுநிலைமையோடு இந்த வரலாற்று இயேசுவை தேடும் வரலாற்றாய்வாளர்கள்,அவர்களின் எழுத்துகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜோசஃபஸை பற்றி எழுதவே பல பதிவுகள் தேவைப்படும் என்பதால்,ஜோஸஃபஸ் புத்தகத்தில் இப்போதைய கிறித்தவ‌த்திற்கு ஆதரவான கருத்துகள் இருக்கின்ற்ன என்பதை மட்டும் அறிந்து கொள்ளுங்கள்.

இன்னும் கூறினால இவர் இன்னும் ஜீஸஸ் என்ற பெயருடைய வேறு சிலரையும் குறிபிடுகிறார்.இயேசு பற்றிய இவரின் கூற்று புத்தகத்தின் கடைசியில் இருப்பதால் அறுதியிட்டு கூறமுடியாது.தேடல் அதிகம் உள்ளவர்களுக்கு அவர் எழுதிய புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு வேண்டுகிறேன்.


ஆதரவான பக்கங்கள்

see page number 2030(2035 of 2609),2288(2293 of 2609),2318(2323 of 2609),2379(2384 of 2609),2525(2530 0f 2609)

குழப்பமான(எதிரான) பக்கங்கள்

2291(2296 of 2609),2296(2301 of 2609),2599_2600(2604_2605 of 2609)

இந்த பக்கங்களை பார்த்தால் ஜோசஃபஸை வைத்து மட்ட்டும் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது என்று புரியும். அடுட்த பதிவில் இயேசு பிறந்த போது இருந்த அரசியல் சூழ்நிலை பற்றி அலசுவோம்.
.
                                                                          Part 1.



Part 2

Part3

Part 4

.
(தேடல் தொடரும்)

2 comments:

  1. தேடுங்கள் கண்டடைவீர்கள்...............வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  2. brother....better remove your word verification check from comment setting

    ReplyDelete