Showing posts with label பரிணாம எதிர்ப்பு. Show all posts
Showing posts with label பரிணாம எதிர்ப்பு. Show all posts

Monday, June 27, 2011

பரிணாம எதிர்ப்பு விஞ்ஞானிகள் பழி வாங்கப் படுகிறார்களா? திரைப்படம்


பரிணாம கொள்கையை அதிகம் எதிர்ப்பவர்கள் கிறித்தவ இஸ்லாமிய பிரச்சாரகர்கள் என்பதும்,அது அரசியல் கட்டாயத்திற்காகவும்,மதத்தின் இருப்பை உறுதி செய்யவும் என்பதை பதிவுகளில் விவாதித்து வருகிறோம்..

கடந்த சில மாதங்களாக‌ இஸ்லாமிய பதிவர்களின் தந்திரங்களையே பார்த்து வந்தோம்.கொஞ்சம் போர் அடிப்பதால் கிறித்த்வ பிரச்சாரகர்கள் பரிணாம் எதிர்ப்பில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். இந்த இஸ்லாமிய பிரச்சாரம் எல்லாம் இப்ப வந்தது அதனால் பிரச்சாரத்தின் போது நமக்கு தவறு கண்டு பிடிப்பது எளிது,ஒன்றுமில்லை எந்த பிரச்சாரகர் ஆனாலும் அவர் சார்ந்த பிரிவின் கொள்கையாகக்திற்கு பிரச்சினையில்லாமல் பல் நாட்களுக்கு பிரச்சாரம் செய்து பார்த்தது இல்லை,இறைவனுக்கு உருவம் உண்டு என்பதும்,ஜாகிர் நாயக்கின் புது குரு ஹாருன் யாஹ்யா(ஜகஜ்ஜாலக் கில்லாடி இவர் பற்றி பல பதிவுகள் இட வேண்டியுள்ளது.)நான்தான் மஹ்தி[இவர் யாரென்றா அது பெரிய!!!!!!!!!! கதை அப்புறம்) என்பதும் கொடுமை.
  
ஆனால் இந்த கிறித்தவ பிரச்சாரகர்களின் பரிணாம எதிர்ப்பு வித்தியாசமான‌து.நேருக்கு நேர் வா என்பது,யானைக்கு தும்பிக்கை எபடி வந்தது?,கங்காருக்கு வயிற்றில் பை எப்படி வந்தது? போன்ற கேள்விகள் என்பவை வடி கட்டிய முட்டாள்தனம் என்பது அவர்களுக்கு தெரியும்.

பரிணாம கொள்கை எப்படி வளர்ந்தது? என்று பார்த்தார்கள்.அது பல உயிரியல்,மானுடவியல்  அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் படுவதும்,அதின் மீதான ஆய்வுகள் சஞ்சிகைகளில் பதிவு செய்யப் படுவதுமே பரிணாம் கொள்கையை வலுவடைய செய்கின்றன என்பதை உணர்ந்த்னர்.

யூதர்கள் கால்ம் காலமாக பாலஸ்தீனத்தில் வாழ்ந்ததாக பல ஆவணங்களை உருவாக்கி பாதுகாத்து வந்தாலேயே அவர்களின் இஸ்ரேல் கனவு நன்வாகியது.அது பொய் ஆவண்ங்கள் என்றாலும் அதை நிரூபிக்க சம்கால ஆவணங்கள் எதுவுமே எதிர் கட்சியினரிடம் இல்லை(அது எப்படி இருக்கும்!!!!!!!!,இருந்தா ஏன் இப்ப்படி?நேருக்கு நேரா வா ,இல்லை கொஞ்சம் ஓரமா வா என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.)

வரலாற்றில் எப்போதுமே அறிவியலை கிறித்தவ அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்து இருந்த்ன[அது மட்டுமா போப் கண்ணசைத்தால் சாம்ராஜ்யங்கள் காணாமல் போகும்,ஒரு 1000 வருடம் அறிவியலை ஒரு வழி பண்ணி விட்டார்கள்..]கிறித்தவ மதம் பல பிரிவுகளானதும்,,இரண்டாம் உலக்ப் போருக்கு பின்தான் அறிவியல் மதங்களின் கட்டுபாட்டில் இருந்து முழுமையாக் வெளி வந்தது. ஆகவே அறிவியலின் பரிணாம் கொள்கையின் ஆய்வுகள் ஆவணப் படுத்தப்படுவதை தடுக்க முடியவில்லை.

பரிணாமத்தை எதிர்க்க அறிவியல் படைப்புக் கொள்கை என்பதை ஊக்கு வித்த்னர்.அதற்கும் சில உயிரியல் விஞ்ஞானிகள் கிடைத்த்னர்(அவர்கள் மதத்தில் இருப்பதால் இப்படி செய்ய முடியும்!!!!!!!!!!)

அவர்களையும் சில ஆய்வுக் கட்டுரை எழுதி பதிவிட முயன்றார்கள்.அறிவியல் மாதிரி ஆனால் கொஞ்சம் மறைவான் பொருளில் கடவுள் சரக்கும் வந்துவிடும். .பல சர்ச்சைக் குறிய ஆய்வுகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.படைப்புக் கொள்கை ஆவணப் படுத்தாபடா விட்டால் பரிணாமம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்ந்நிலை வரும் என்பதால் இன்னொரு காரியம் செய்தனர்.பரிணாமம் பற்றி முக்கிய ஆய்வு நடக்கும் அமெரிக்க,ஐரோப்பிய பல்களை கழகங்களில் சில பேராசிரியர்கள்,ஆய்வு மாணவர்களை தங்கள் வசப் படுத்தினர்.அவர்களின் பரிணாம்த்தை எதிர்த்து ஆய்வுக் கட்டுரைகள் இட முயன்றதால் பழி வாங்கப் படுவதாக் கதை பரப்பினர்.அதனை திரைப் படமாக எடுத்த்னர்.

அத்திரைப்ப்டம்தான் இப்போது நீங்கள் பார்ப்பது.

இதற்கு மறுப்பு அடுத்த பதிவில் எதிர் கருத்தையும் கேட்க வேண்டும்.அது சரியென்று படுபவ்ர்கள் ஏற்று கொள்லலாம்.நம்ம பரிணாம் மறுப்பாளர்களுக்கும் இதுதான் கூறுகிறேன்,உங்களின் கேள்விக்கு மதிப்பில்லை,சரியான கேள்வி பரிணாமத்தின் மீது இப்போது ஆய்வில வைப்பவர் யார்?என்ன கூறுகிறார்? என்பதை பதிவிடலாம்.முடிந்தால் அவருடன் தகவல் பரிமாற்றம் செய்யலாம். அறிவியலை அதற்கு உரித்தான விதத்தில்தான் மறுக்க வேண்டும். ஒரு விஷயத்தை கேட்கும் போது இது இங்கே ,இவர் இப்போது கூறினார் என்று கூரவேண்டும்.இவை ஆய்வுக் கட்டுரைகளின் தார்மீக நெறி. இனி திரைப்படம் பாருங்கள்.பரிணாம எதிர்ப்பாளர்கள் பழி வாங்கப் படுவதாய் எப்படி சித்தரிக்கிறார்கள்!!!!!.

நாஜிக்களின் கையில் யூதர்கள் போல் பரிணாம ஆதரவாளர்களிடம்,மதவாதிகள் துன்பப்ப் படுவதாக கல்க்க்லாக காட்டியிருக்கிறார்கள்.ப்ரம்பரைத் தொழிலுக்கும் பஞ்சத்துக்கு தொழில் பார்ப்பவருக்கும் வித்தியாசம் உண்டல்லவா!!!!!!!!!!!!!!!!!.

தீர்ப்பு உங்கள் கையில்.



watch it on youtube
http://www.youtube.com/watch?v=cIZAAh_6OXg