Monday, January 31, 2011

பூமியும் பலவித படைப்பு வாத கொள்கைகளும்



அறிவியல் மனித வாழ்வில மகத்தான பங்கு ஆற்றிவருவதும்,மனிதனின் பலவித தேவைகளுக்கு ஏற்ப புதிய கண்டு பிடிப்புகள் வருவதும், இன்றைய வாழவை எளிதாக்க‌கவும் இன்னும் இதன் பயன்களை அடுக்கி கொண்டே போகலாம்.

நமது முன்னோர்களால் நினைத்து பார்க்க முடியாத பல செயல்களை நம்மால் எளிதில் செய்ய முடிகிறது.அறிவியல் விதிகள் என்பது ஒரு மனிதரின் கற்பனையில் தோன்றுவது இல்லை.

அறிவியல் விதி(கருத்தாக்கம்)இயற்கையின் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அதன் காரணிகளை அறிந்து,ஒரு செயல் நடப்பது குறிப்பிட்ட சூழ்நிலையில்,குறிப்பிட்ட காரணிகள மூலம் மட்டுமே என்பதை கண்டறிவதாகும்.

ஒவ்வொரு விதிக்கும் சில எல்லை கள் இருப்பதும்.அந்த எல்லைகளை குறித்து இன்னொரு விதி கண்டுபிடிக்கப் படுவதும் அறிவியலை ஒரு தொடர் பயணமாகவே வைத்துள்ளது..

இந்த வரிசையில் நமது பூமி உருவானது பற்றி அறிவியல் கருத்தாக்கம் பெரு வெடிப்பு கொள்கை என்று அழைக்கப் படுகிறது.

இதன் முக்கியமான கருத்துகள்

பிரபஞ்சம் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

முதல் உயிரினம் ஒரு செல் உயிரி சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகள்
.
.
.
.
.
.
ஹொமொ சேபியன்கள் எனப்படும் மனித இனம் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே என்று கூறுகிறீர்கள் அல்லவா?
இபோதுதான் பதிவுக்கே வருகிறேன். இது சும்மா முன்னோட்டம் தான்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் எங்கள் மத புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது என்பது என்பது மதவாதிகளின் வழக்கமான கூற்றுதான் என்றாலும்.இந்த பூமி மற்றும் மனிதனின் தோற்றம் பற்றிய அறிவியலின் கருத்தாக்கம் அவர்களை மிகவும் நடுங்க வைத்டு விட்டது.

அறிவியலை முழுமையாக எதிர்தால் நிச்சயம் தோல்வி என்பதும் மத்ம் காணாமல் போய்விடும் என்பது அவர்களுக்கு தெரியும்.ஆகவே அவர்களும் பரிணாமம் நீங்கலாக பெரு வெடிப்பு கொள்கையை ஆத்ரித்து பூமி மனித தோற்றங்களுக்கு மத புத்தகங்களில் இருந்து கருத்துகளை சொல்லி தப்பித்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
.
அதனால் பரிணாமத்தை எதிர்த்து படைப்பியல் கொள்கை என்ற கருத்தாக்கத்தை உருவக்கினர்.

கடவுளுக்கு கூட பெரு வெடிப்பு போன்ற செயல் உலகை படைக்க அவசியமாகிறது என்றால் கடவுளும் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப் பட்டவராகிறார் என்பதும் ஒரு நகைசுவையான விஷயமே.

இந்த படைப்பியல் கொள்கை என்றால் என்ன அதன் பல பிரிவுகளை பற்றி இப்பதிவ்ல் பர்ப்போம்.

படைப்பியல் கொள்கை என்பதை கடவுள்(கள்) பிரபஞ்சம்,பூமி,மற்றும் உயிரினங்கள்(மனிதன் உட்பட)  உருவாக்கினர் என்பதாகும்.பிறகு என்ன சிக்கல் கடவுள் படைத்தார் என்று சொல்லிவிட்டால் கதை முடிந்தது அல்லவா என்றால் நீங்கள் கொஞ்சம் அவர்கள் பிரச்சிஅனைகளை ப்ருந்து கொள்ள மறுக்கிறீர்கள்.

பிரபஞ்சமும் படைக்கப்பட்டது என்றால் கடவுள்(கள்) எங்கே இருந்தார் என்ற கேள்வியும் வருகிறது.ஆகவே இந்த பிரபஞ்சம் அல்லாத பல பிரபஞ்சங்கள் உண்டு.அதனால் படைபியல் கொள்கை நமது பிரபஞ்சம் பற்றி மட்டுமே கூறுகிறது. மத புத்தகங்களில் வார்த்தை விளையாட்டு செய்வது எளிது ஆகையால் அறிவியலை முற்றும் மாறுபடாமல் மத புத்தகத்தில் கூறும் விதமாக கொள்கைகளை அமைக்கிறார்கள்.


படைப்பியல் கொளையில் பொதுவாக இரண்டு வ‌கை உண்டு.

1.பழைய பூமி கொளகை


பழைய பூமி என்றால் பூமி முன்ன்ரே படைக்கப்பட்டது(சுமார் 4.5 பில்லியன் ஆண்டு முன்பு?)

விலங்குகள் மனிதனுக்கு சற்று முன்பு படைக்கப்பட்டன(காலம் அவசியைல்லை)

மனிதர்கள் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்டனர்.

அறிவியலோடு ஒத்துப்போகிறதா இல்லையா?


ஆனால் பூமியை மனிதர்களுக்காக படைத்தாரா ?இல்லையா? பூமி படைக்கப்பட்டு 99.9% நேரம் கடந்து மனிதனை படைக்கிறார் இறைவன்(கள்).

பெரும்பாலும் மத புத்தகங்களில் இடம் காலம்,பொருள் சரியாகவே 
சொல்லப் பட்டு இருக்காது.புத்தகம் எழுதப் படும்போது உள்ள அறிவு செயல்களே குறிப்பிடப் பட்டு இருக்கும். இருந்தாலும் இதற்கு பொருந்துமாறு ஏதாவது வசனம் சொல்லி விடலாம் ஏடாகூடமாக் ஏதாவது வசனம் இருந்தால் அது ஒரு குறியீடு என்றும் கூறிவிடுவார்கள். பல கிறித்தவ,இஸ்லாம மத பபிரச்சாரகர்கள் இக்கொள்கையை வலியுறுத்துகிறார்கள்.

இவர்கள் ஆறு நாட்கள் படைப்பு என்பதை பலவிதமாக விளக்குவார்கள்.இறைவனின் ஒரு நாள் என்பது பூமியின் 24 மனி நேரம் அல்ல என்றும் அது ஒரு நெடுங்காலம் என்பர்.
இவர்களின் இணைய தளம் ஒன்று தருகிறேன்.இவர்களும் நிறைய வேலை பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது. பொழுது போகவில்லை என்றால் இத்தளத்திற்கு செல்லலாம்.
_



2.இளைய‌ பூமி கொள்கை

கிறித்தவ பைபிளில் ஆதம் முதல் இயேசு வரை ஒவ்வொருவரின் வயது குறிப்பிட்டு வம்ச வரலாறு உண்டு.இதின்படி உலகம்,உயிரினங்கள் படக்கப்பட்டது சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு.


கிறித்தவத்தின் சில பிரிவின்ர் பைபிளில் குறிப்பிட்ட ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே உண்மை பூமி பழையது போல தோன்றினாலும் அது படைக்கப்பட்டு 6000 வருடங்கள் மட்டுமே ஆகின்றது என்று கூறுபவர்கள் இவர்கள்.

இந்த இளைய பூமி கொள்கையாளர்கள் எல்லா விலங்குகளும் டைனோசார் உட்பட மனிதனுடன் படக்கப் பட்டன என்றே நம்புகிறார்கள்.டைனோசார்கள் எல்லாம் நோவாவின் வெள்ளப் பெருக்கில் அழிந்துவிட்டன என்ற கருத்தும் உண்டு.டைனோசார் அழிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மனித இனம் தோன்றியது என்றால் நம்மை பார்த்து ஒரு புன்முறுவல் புரிவார்கள்.

-------

எதற்கு இப்படி உங்களுக்கு எதிரான கொள்கைகளை விளக்கம் கொடுக்கிறீர்கள் என்றால் படித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகளை எழுதுகிறேன்.பாவம் படைபியல்வாதிகளும் ஏதோ சொல்கிறார்கள் என்று படித்தால் அவர்கள் சொல்வது எல்லாம் முந்திய பதிவுகளில் எழுதியபடி வார்த்தை விளையாட்டாகவே உள்ளது.ஆனால் அவர்கள் சொல்வது எல்லாமே முன்னுக்கு பின் முரணாகவே இருக்கிறது.கருத்துகளை தவிர எந்த ஒரு ஆய்வும் மேற் கொள்ளப் படவில்லை.

தமிழிலும் சில படைப்பியல்வாதிகள் சிலர் இணையத்தில் எழுதுகிறார்கள். அவர்கள் பரிணாம் குறித்து விமர்சனம் எழுதுவதை மட்டுமே செய்கிறார்கள்.இந்த இணைய தளங்கள் மாதிரி ஏதாவது படைபியல் பற்றி எழுதினால் நமக்கு மறுப்பு எழுத வேலை வரும் என்பதற்காகவே இப்பதிவு. 




















ஒரு பரிணாமவாதி மற்றும் இரு படைப்பியல்வாதிகளின் விவாதம் ஒன்று இணைக்கிறேன்.பிறகு பார்ப்போம்.

Wednesday, January 26, 2011

படைப்பு ஆதியிலா?பாதியிலா? மீதியிலா?


ஆதியாகமத்தின் மூல மொழி ஹீப்ரு,அதில் இருந்தே பிற மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது. நீங்கள் பார்க்கும் அனைத்து பைபிள்களிலும் இது மூல‌ மொழியாகிய ஹீப்ருவில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்று குறிப்பிட பட்டு இருக்கும். கிறித்தவர்க்ள் ஹீப்ரு மொழி கற்க வேண்டிய அவசியம் இருப்பதாக கருதுவது இல்லை ஆகவே மொழி பெயர்ப்புகளையும் அப்படியே புனித நூல்களாக கருதுகின்றனர்.ஆனால் மொழிபெயர்ப்புகளில் சில குழப்பங்கள் இருப்பதை மறைத்து மத கொள்கைகளுக்கு முரண்படாத வகையிலேயே மொழி பெயர்ப்பு செய்யப் படுகின்றது. இதனை விளக்க ஒரே ஒரு வசன‌த்தின் மொழிபெயர்ப்புகளை பற்றிய சிறு ஆய்வு.
.
கிறித்தவர்களின் வேதத்தின் முதல் வசனம் அனைவரும் அறிந்த ஒன்று

ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் ,பூமியையும் சிருஷ்டித்தார்.

இந்த வசனம் பற்றிய ஒரு கட்டுரையில் கூறப் பட்ட விவரங்களை இப்பதிவில் கூறுகிறேன்.

கட்டுரையின் ஆசிரியர் திரு டேனியல் பெர்ரி பற்றி சிறு குறிப்பு.
 டேனியல் பெர்ரி ஒரு கணிப்பொறி பேராசிரியர்.கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைகழகத்தில் க்ணிணி துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மத புத்தகங்களை ஆரார்வதிலும் ஈடுபாடு உண்டு.இவர் யூத இனத்தில் பிறந்தவர். ஹீப்ரு மொழியில் புலமை பெற்றவர். 



இபோது பதிவின் கருத்துக்கு வருவோம்.இந்த ஆதியாகமம் 1.1 வசனம் ஹீப்ரு மொழியின் ஆங்கில எழுத்துகளில் இவ்வாறு குறிப்பிட படுகிறது.

1:1, b'reshit bara elohim et hashamayim v'et ha'aretz,
In the beginning, God created the heavens and the earth

இந்த முதல் வார்த்தையான ப்'ரேஷிட் என்கிற வார்த்தைக்கு ஆதியிலே என்பது அர்த்தமாக‌ அனைத்து தமிழ் பைபிள்களிலும் குறிப்பிட பட்டு ஊள்ளது.

b'reshit -In the beginning-ஆதியிலே-ஆதி காலத்தில் 

திரு டேனியல் பெர்ரி இது சரியான அர்த்தம் அல்ல இந்த வார்த்தைக்கு சிறிது வேறுபட்ட அர்த்தம் என்கீறார். அதாவது

b'reshit -In a beginning- ஒரு ஆதி காலத்தில் 

ஒரு ஆதி காலம் என்றால் பல ஆதி(தொடக்க) காலங்கள் இருந்ததாக பொருள் விளங்குகிறது. இதை இன்னும் எளிதான மொழிபெயர்ப்பாக முந்தி ஒரு காலத்தில் என்று கூறலாம்.

___________

elohim-God(s)-தேவன்‍தேவர்கள்
பிறகு மூன்றாவது வார்த்தையான ஏலோஹிம் எனபதை சிறிது ஆராய்வோம்.தேவன் என்ற அர்த்தம் கூறப்படுகிறது. இது ஒரு பன்மை வார்த்தை,இதன் ஒருமை ஏல் என்பதாகும்.இயேசு ஏலீ,ஏலீ,லாமா சபக்தானி என்று கடவுளை கூப்பிட்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.கடவுளை மரியாதை நிமித்தம் பன்மையில் அழைப்பதாக கூறுவதும் மதவாதிகளின் விளக்கங்களுல் ஒன்று.
கர்த்தர் என்று வரும் இடங்களில் எல்லாம் இந்த ஏலோஹிம் என்றா வார்த்தையே பெரும்பாலும் வருகிற‌து
ஆகவே இந்த முதல் வசனத்திற்கு இவ்வாறு பொருள்கள் கொள்ள இயலும்.
.
1.ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.(இப்போது இருப்பது).

2.ஒரு ஆதி காலத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
(இறைவன் பல கால்ங்களில் படைத்தல்,காத்தல்,அழித்தல் செய்கிறார்)

3.ஆதியிலே தேவர்கள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தனர்.
பல கட‌வுள்கள் சேர்ந்து ஒரே ஒரு முறை படைத்தனர். 

4..ஒரு ஆதி காலத்தில் தேவர்கள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தனர்..
(பல கடவுள்கல் பல கால்ங்களில் படைத்தல்,காத்தல்,அழித்தல் செய்கிறார்கள்)

_____

இந்த வார்த்தை ஏல் என்பது ஹீப்ருவில் எழுதும்போது மாட்டின் தலை மற்றும்  கோல்(தடி,கலப்பை) போல் தோற்றம் அளிக்கிறது.

 இது ஏன் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.இப்பதிவின் ஆங்கில மூலக்கட்டுரையின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Saturday, January 22, 2011

குரானா? இல்லை குரான்களா?



இஸ்லாமிய மத பிரச்சாரகர்களால் ஆணித்தரமாக கூறப்படும் இன்னொரு விஷயம் எங்கள் மத புத்தகம் காலம் காலமாக மாறாமல் அப்படியே இருக்கிற்து.
இறைவனால் வழங்கப்ப்ட்ட முந்தைய வேதங்கள் எல்லாம் மாறி விட்டன.இது இறுதி வேதம் என்பதால் இறைவனால் பாதுகாக்கப் படுகிறது. இந்த கூற்றுகளை இப்பதிவில் ஆராய்வோம்.
___________
இஸ்லாமியர்களின் குரான் வரலாறு

1.ஜிப்ரீல் என்னும் வானவர் திரு முகமதுக்கு 610 ல் இருந்து 632 வரை இறை செய்தி வழங்கினார்.முகமது எழுதப் படிக்க தெரியாதவர்.ஜிப்ரீல் சொன்னதை ஞாபகத்தில் வைத்து தன்னை பின் பற்றியவர்களுக்கு கூறி அவர்களையும் மனன்ம் செய்ய வைத்தார்.குரான் வசனங்கள் வெளிப்படும்போதெல்லாம் அதனை சிலர் தோல் சுருள்,எலும்புகள்,தகடுகள் போன்றவற்றில் எழுதி வைத்தனர்.

2. முகம்துக்கு பிறது அபு பக்கர் ,உமர்,உதுமானால் குரான் மன‌னம், செய்த எழுதி வைத்தவர்களிடம் இருந்து பெற்று ஒரே புத்தகமாஅக தொகுக்கப் பட்டது.

3.  அந்த புத்தகம்தான் உலக முஸ்லிம்கள் அனைவராலும் இன்று வரை பின் பற்ற‌ப் பட்டு வருகிறது.
__________

மேலே கூறிய விவரங்களின் நமபகத்தன்மை குறித்து வரும் பதிவுகளில் ஆராய்வோம். இந்த ஹதிதுகள்(புஹாரி) மேலே கூறிய கருத்துகளை பிரதி பலிக்கிறதா என்பதை உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.
_______________

4986. (வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார் 
யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்: உமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.) .

(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை போPச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128, 129) 
(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்(ரலி) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. 
Volume :5 Book :66
_____________
4984. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 
(மூன்றாவது கலீஃபா) உஸ்மான்(ரலி) (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா(ரலி) வசமிருந்த குர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து), ஸைத் இப்னு ஸாபித், ஸயீத் இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர்களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களைத் தவிர இருந்த குறையுயரான மற்ற மூவரிடமும்), 'நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஓர் அரபி மொழி (எழுத்திலக்கணம்) விஷயத்தில் கருத்து வேறுபட்டால், குறையுயரின் மொழி வழகம்லேயே அதைப் பதிவு செய்யுங்கள்! ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழி வழக்கில்தான் அருளப்பெற்றது' என்று கூறினார்கள். அம்மூவரும் அவ்வாறே செய்தனர். 
Volume :5 Book :66
___________________

4987. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 
ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள். 
எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். 
Volume :5 Book :66
__________________

4989. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார் 
(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள் 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற 'வஹீ' (வேத வசனங்)களை எழுதிவந்தீர்கள். எனவே, குர்ஆன் வசனங்களைத் தேடுங்கள்!' என்று கூறினார்கள். எனவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். இறுதியாக 'அத்தவ்பா' எனும் (9 வது அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஸைமா அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை. (அவ்விரு வசனங்களாவன:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். 
மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான். '(திருக்குர்ஆன் 09:128, 129)13 
Volume :5 Book :66
_________________

2807. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். (ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்:
அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23) 


6830. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
........................
.............................
அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, 'நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்' (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)
நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.
அறிந்துகொள்ளுங்கள்:
....................................

Volume :7 Book :86
இங்கே நாம் சொல்வது இபோது உல்க மக்கள் அனைவரும் ஒரே குரானையே அதாவது எல்லா உலகில் பயன்படுத்தப் படும் குரான்களும் ஒரு புள்ளி ,கோடு கூடமாறாமல் அப்படியே ருக்கிறது என்பது தவறு என்பதை மட்டும்தான்.  
உதுமான் மற்ற குரான்களை அழித்துவிட உத்தரவிட்டார் என்பதை இந்த ஹதிது கூறுகிறது.
_________

உதுமான் மற்ற‌ பிரதிகளை அழிக்க உத்தரவிட்டதின் காரணம் என்ன? 
பிற குரான் பிரதிகள் உதுமான் குரானில் இருந்து வேறுபட்டு இருந்திருக்க வேண்டும். இந்த ஹதிதுகளை பற்றி நிறைய விவாதிக்க முடியும் என்றாலும் நான் எனது கருத்துகளாக எதையும் கூறுவதை விட உங்களுக்கு தகவல்கள் அளித்து உங்களுக்கு சரியென்று படும் கருத்தையெ ஏற்றுக் க்ள்ளுமாறு கூறுகிறேன்.
உதுமான் குரான் ஹாஃப் குரான் என்று அழக்கப் படுகிறது இந்தியாவில் மற்றும் உலகின் பல பகுதிகளில் இப்பிரதியே பயன் படுத்தப் படுகிறது.
இன்னும் சில குரான்கள்களை அழிக்காமல் பயன் படுத்தப் படுகின்றன என்றால் இந்த உதுமான் குரானில் இருந்து வேறு பட்ட குரான்கள் இப்போதும் உலகில் பயன் படுத்தப் பட்டு வருகின்றன.அதனை பற்றிய ஆய்வு செய்த திரு ஆலன் அட்ரியம் ப்ராக்கட்(Adrian Alan Brockett) என்பவரின் ஆய்வுக் கட்டுரையும் வார்ஸ் குரான் எனப்படும் ஒரு குரான் மின் பிரதியும் உங்களுக்கு அளிக்கிறேன்.





.இந்த வார்ஸ் குரான் பற்றி ஆங்கிலத்தில் வந்த ஒரு கட்டுரையும் அதற்கு மறுப்பாக இஸ்லாமிய அறிஞர்கள் அளித்த விளக்கத்தின் சுட்டியும் அளிக்கிறேன்.



இந்த ஹாஃப் மற்றும்  வார்ஸ்  குரான்கள் பற்றியுமவைகளில் உள்ள  வித்தியாசங்கள் பற்றி ஒரு இஸ்லாமிய அறிஞர் எழுதிய கட்டுரை இது. ஆனால் இது குரான் முட்டும் என்ற இஸ்லாமிய பிரிவை சேர்ந்த அறிஞர்.(இவர்களை பற்றி தனி பதிவு இடுவேன்)



இந்த வார்ஸ் குரான் வட ஆப்பிரிக்க நாடுகளில்(அல்ஜீரியா,சுடான்,லிபியா) போன்ற நாடுகளில் இன்றும் பயன் படுத்தப் படுகிறது.இந்த வித்தியாசமான வேத மூல பிரதிகள் எல்லா மதங்களிலும் உண்டு.ஒரு கருத்து பரவும் போது அது பல வித்தியாசமான் மாற்றங்களை அடைவது வரலாற்றில் மிக இயல்பான செயல்.

யேமன் நாட்டின் சானா என்னும் இடத்தில் ஒரு வழிபாட்டு இடத்தை மராமத்து செய்த போது அங்கு பல பழைய குரான் பிரதிகள் கிடைத்தன.இது குறித்து ஒரு ஆய்வாளர் ஜெரார்ட் புய்ன் புகைப்ப்ட பிரதி எடுத்து ஆய்வு செய்கிறார்.மதக் கட்டுப்பாடு காரணமாக இது குறித்து ஒரு விஷயமும் வெளி வரவில்லை.யெமன் அரசு இது குறித்து மௌனம் சாதிக்கிறது.



மதத்தை அதில் பிறந்ததற்காகவோ அல்லது ஒரு பிரச்சாரகரின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டோ அதில் சொல்லப் பட்டது எல்லாமே சரி ,அதனை காப்பாற்ற எதையும் செய்வேன் என்ற மன்ப் போக்கை எல்லாரும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே நமது விருப்பம். மதத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் அதில் உள்ள நாகரிகமில்லாத விஷ்யங்களை ஒதுக்கி விடவுமே இப்பதிவுகளை எழுதுகிறேன்.

இப்பதிவில் கூறப்பட்டவற்ரை ஏதேனும் ஒரு பிரச்சாரகர் கூறியிருந்தால் எவரும் எங்கள் புத்தகம் சர்வ ரோஹ நிவாரணி என்றும் ,மதம் எங்கள் உயிரிலும் மேலானது என்று கூற மாட்டார்கள்.

     





Wednesday, January 19, 2011

காணாமல் போன துல்கர்னைனும் அவர் கட்டிய சுவரும்.






















தருமி அய்யா இணைய பக்கத்தில் துல்கர்னைன் மற்றும் அவர் கட்டிய சுவர் பற்றிய விவாதம் சூடு பறக்கிறது. அதை பற்றிய சிறு முன்னோட்டம்.

குரான் 18 ஆம் சூராவான குகையில் பல கதைகள் கூறப்படுகின்றன்.அதில் வசனம் 83ல் இருந்து 98வரை துல்கர்னைன் என்ற மனிதரை பற்றி கூறப்படுகிறது. மத விமர்சகர்கள் நண்பர்கள் கும்மி,தருமி அய்யா கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

1.துல்கர்னைன் என்பவர் யார்?

2. யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் என்பவர்கள் யார்?

3.துல்கர்னனை சுவர் எழுப்பி தர சொன்ன கூட்டத்தார் யார்?

4. அந்த சுவர் எங்கே இருக்கிறது?.

5. அந்த சுவரை உமர் தேடியதாக கூறப்படுவது உண்மையா?
________________

இந்த கேள்விகளுக்கு பதிலாக‌ திரு சுவனப் பிரியன் ஒரு பதிவு எழுதி உள்ளார்.

அவரின் பதிவும், பதிவை பற்றிய சில கருத்துகள்.

_______________

//குர்ஆன் தெளிவாக சொல்லி விடுகிறது அந்த சுவர் உலக முடிவு நாள் சமீபமாகத்தான் வெளிப்படுத்தப்படும். அது வரை மனிதர்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்படும். எனவே முஸ்லிம்களுக்கு அந்த சுவர் எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சியே தேவையில்லாதது//


18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.


1.சுவர் மறைத்து வைக்கப் பட்டதாக குரானில் எங்கு கூறப் பட்டு உள்ளது?.

2.இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும் போது என்பது உலக முடிவுநாளா?.குரான் பலவிதமான வாக்குறுதிகளை பற்றி கூறுகிறது. துல்கர்னைன் வாழ்ந்த காலத்தை பொறுத்தே அது என்ன வாக்குறுதி என்று பொருள் கொள்ள முடியும்.இதை பற்றிய விவாதம் இபோது அவசியமில்லை.


// தோராவிலும், பைபிளும் கூட இவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.//

தோராவிலும் ,பைபிலும் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் என்பவர்கள் நூஹின்(நோவா) மகன் யாப்பேத்தின் மக்கள் என்றும் அவர்கள் வன்முறையாளர்கள் என்றே கூறப்ப்ட்டுள்லதே தவிடா துல்கர்னைன் மற்றும் அவர் கட்டிய சுவர் பற்றி குறிப்பிடவில்லை.தோரவிலோ,பைபிளிலோ இருந்தால் மட்டும் உண்மையாகிவிடாது என்றாலும் துல்கர்னைன் மற்றும் அவர் கட்டிய சுவர் குறிப்பிடபடவில்லை என்றே நான் தேடியவரை கூறுகிறேன்.
http://wikiislam.net/wiki/Dhul-Qarnayn
தோரவின் வரலாறு ஆதமில் தொடங்கி மூஸாவோடு(ஜோசுவா ஆனால் இவர் இஸ்லாமின் தூதராக அறியப் படாதவர்) முடிந்து விடுகிறது.உங்களுக்கு நான்  தோரா மற்றும் பைபிள் புத்தகங்கள் தருகிறேன். யஃஜூஜ், மஃஜூஜ்  கூட்டத்தாரை தடுத்து இரும்பும் செம்பும் கலந்த சுவர் எழுப்பப் பட்டது.அது உலக முடிவு நாளில் தூளாக்கப் படும் என்ற விவரத்தை காண்பியுங்கள்.
http://www.scribd.com/doc/46919228/6993999-The-Torah
http://www.scribd.com/doc/46524488/Tamil-Bible-80-Old-Testament
http://www.scribd.com/doc/46524481/Tamil-Bible-90-New-Testament

//ஜனாதிபதி உமருடைய காலத்தில் அவருக்கும் இந்த செய்தி எத்தி வைக்கப்படுகிறது. அவரும் அப்துல் ரஹ்மான் என்ற தோழரின் தலைமையில் ஒரு படையை ரஷ்யாவுக்கு(காகஸஸ்) அனுப்பி உண்மையை கண்டு வரச் சொல்கிறார். ஆனால் அங்கு அப்படி எந்த சுவரையும் தங்களால் பார்க்க முடியவில்லை என்று அவர்களும் திரும்பி விடுகின்றார்கள். உமரும் இது வதந்தி என்று விட்டு விடுகிறார்//

உமர் நம்பாமல் வதந்தி என்று விட்டு விட்டார் என்று எப்படி கூறுகிறீர்கள்?

// ஒருக்கால் இவர் எகிபதியராக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.மங்கோலியாவுக்குப் பக்கத்தில் இந்த சுவர் இருப்பதாகவும் ஒரு கதை நிலவுகிறது. மெஸடோனியா என்ற நாட்டில் வாழ்ந்த அலெக்சாண்டர்தான் துல்கர்னைன் என்கிறார் பக்ருதீன் என்ற வரலாற்றாசிரியர் அரிஸ்டாட்டில்தான் துலகர்னைன் என்று சொல்வோரும் உண்டு. அரிஸ்டாட்டில் ஏசுவுக்கு 300 வருடங்கள் முன்பு வாழ்ந்ததாகவும், அலெக்சாண்டர் அவையில் மந்திரியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது//


_________________

திரு சுவன பிரியனின் கருத்துகளை இவ்வாறாக கூறிவிடலாம்.

1.துல்கர்னைன் யாரென்று சரியாக குறிப்பிட முடியாது.

2.சுவர் மறைந்து இருந்து மறுமை நாளில் வெளிப்பட்டு தூள் தூள் ஆகும்.(இதற்கு இவர் இஸ்லாமிய நூல்களில் இருந்து ஆதாரம் அளிக்க வேண்டும்)

3. இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.ஆகவே முஸ்லிம்களே ஆராயவேண்டாம்.
__________

மூன்றாவது கருத்து அவர்கள் உரிமை என்பதனால் நாம் முதல் இரு கருத்துகளை மட்டும் விவாதிப்போம். 
முதல் கருத்து

________

a) குரான் கூறும் துல்கர்னைன் என்பவர் இருந்தாரா என்பதே கேள்விக்குறி என்பதை எப்படியெல்லாம் சொல்கிறீர்கள்?.துல்கர்னை என் இறைவன் என்றும் அந்த சுவர் ஒரு அடையாளம் என்றும் கூறாமல் இருந்திருந்தால் அவரை அலெக் சாண்டராக காட்டுவதிலும் ,காகஸஸ் மலை கோட்டையை அந்த சுராக காட்டுவதிலும் சிக்கல் இருந்து இருக்காது.துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புகளை உடையவர் என்று பொருள்.அலெக் சாண்டருக்கும் இந்த பெயர் இருந்ததாக அலெக்சாண்டர் ரொமான்ஸ் என்ற புத்தகத்தில் கூறப்படுகிறது..

http://en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Qur'an

அப்படி என்றால் துல்கர்னைன் என்பவரை பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது என்று கூறுகிறார்கள்.மறுமை நாள்பவரை பொறுத்தால் தெரியும் என்கிறார்கள்.
நமக்கு மறுமை நாள் மேல் நம்பிக்கை இல்லையென்பதால் குரானின் பழைய விளக்கங்களில் என்ன கூறப்பட்டு உள்ளது என்பதை பார்ப்போம்.
இஸ்லாமிய பிரச்சாரகர்கள் குரானின் பழைய விளக்கங்களை மொழி பெயர்க்கும் வேலையை செய்ய மாட்டார்கள்.
ஏனெனில் அந்த விளக்கத்திற்கும் ,இப்போதைய விளக்கத்திற்கும் உள்ல வித்தியாசத்தை மக்கள் அறிந்து கொள்வார்கள்,சூழ்நிலைக்கு தக்கவாறு விளக்கம் சொல்வதிலும் சிக்கல் வந்துவிடும்.
திரு அல் சுயுட்டி என்ற இஸ்லாமிய அறிஞர் அலெக்சாண்டெர்தான் துல்கர்னைன் என்று கூறுகிறார்.அல்சுயுட்டின் தஸ்ஃபிரில்(Tafsir al-Jalalayn குரான் விளக்கம்) துல்கர்னைன் அலெக்சாண்டர் என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறார்.

குரன் 18:83க்கு அவர் தரும் விளக்கம் பாருங்கள்.

http://altafsir.com/Tafasir.asp?tMadhNo=0&tTafsirNo=74&tSoraNo=18&tAyahNo=83&tDisplay=yes&UserProfile=0&LanguageID=2

http://www.sunypress.edu/p-360-the-history-of-al-tabari-vol-4.aspx

ஆக்வே அலெக்சாண்டர்தான் துல்கர்னைன் என்பதற்கு 3 விஷயங்களை ஆதாரமாக கூறலாம்.

1. இக்கதை அலெக்சாண்டெர் ரொமன்ஸ் புத்தகத்திலும் கூறப்படுகிறது.தோடா மற்றும் பைபிளில் துல்கர்னைனும்,சுவரும் குறிப்பிடபடவிலலை.

2.அல் சுயுட்டியின் 18:83ன் விளக்கம்


{ وَيَسْأَلُونَكَ عَن ذِي ٱلْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُواْ عَلَيْكُم مِّنْهُ ذِكْراً }

And they, the Jews, question you concerning Dhū’l-Qarnayn, whose name was Alexander; he was not a prophet. Say: ‘I shall recite, relate, to you a mention, an account, of him’, of his affair.

 You can download Tafsir al-Jalalayn from this link and kindly see page number 846.
http://www.scribd.com/doc/47188959/Tafsir-al-Jalalayn
3.அல் த‌பரியும் அலெச்சாண்டரே துல்கர்னைன் என்ற கருத்தையே கொண்டு இரருந்தார்.

http://religionresearchinstitute.org/quran/analysis.htm
__________

Then What is the Problem?

துல்கர்னைனின் குணங்களாக குரான் கூறுவது என்ன?

1.துல்கர்னைன் குரான்    வரைரயறுத்த‌  ஓரிறை கொளகை உடையவராக இருக்கவேண்டும்.
2. சுவர் கட்டும் அளவிற்கு  உதவி செய்பவர் என்றால் அரசர்(குரான் 18:84) அல்லது படைத்தலைவராக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
3.குரான் ஒத்துக் கொள்ளும் ஓரிறை கொள்கையாளர்கள் யூதர்கள் மட்டுமே. யூதராக இருக்கும் பட்சத்தில் தோராவில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
குரானில் குறிப்பிடப் படாத ஓரிறைகொள்கை உடையவர்கள் இருந்தால் அவர்களை சேர்ந்தவர் என்று கூறலாம்.
.
கடந்த காலத்தில் சில இஸ்லாமிய அறிஞர்கள் அலெக்சாண்டர்தான் துல்கர்னைன் என்றே கூறிவந்தர்ர்கள்.அலெக்சாண்டரை ஓரிறைக் கொள்கை உடையவராக காட்ட முடியாத்தாலேயே யார் என்று தெரியவில்லை என்று இப்போது கூறப்படுகிரது..



_________________

இரண்டாவது கருத்து 

18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.

இந்த வசனத்திற்கு அவர் கொள்ளும் பொருள் சுவர் மறுமை நாள் வரை மறைந்து இருந்து,மறுமை நாளில் வெளிப்பட்டு தூளாக்கப்படும் என்பதே.

இந்த வசனம்(18:98) அப்படி கூறுவதாக எப்படி கூறுகிறார்?.

_____________ 

Friday, January 14, 2011

மத வன்முறை வரலாறு புத்தகம் 1


மதங்களை நாம் விமர்சிப்பது மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் என்பதை உணர்த்தவும் அதன் எல்லைகளை அறிந்து கொள்ளவற்கே. எல்லா மதங்களும் அடிப்படையில் ஒன்றே. இறைவனை பற்றி ஒரு கொள்கையாக்கமும் அதனை நிறுவ பல புத்தகங்களும்,அழிவில்லாப் பெரு வாழ்வை அடைய கூறப்படும் வழிமுறைகளுமாக எல்லா மதங்களும் ஒன்றே.மக்கள் வாழும் இடம் ,சூழ்நிலை காரணமாக சில வித்தியாசமான‌ நடைமுறைகள் மதங்களுக்கு உண்டு.

ஏன் மதத்தின் எல்லைகளை அறியவேண்டும் என்று கேட்கும் நண்பர்களுக்காக எல்லை மீறி வன்முறை வெறியாட்டம் ஆடிய ஒரு வரலாற்று கால கட்டத்தை பற்றி இப்பதிவு எழுதுகிறேன்.

நமக்கு கிறித்தவம் என்றாலே அன்பின் திரு வடிவம்,அமைதியின் மறு வடிவம் என்று ஒரு பிம்பம் உண்டு. ஆனால் வரலாறு அவ்விதமாக கூறவில்லை .இந்த அன்பு,அமைதி பேசும் மத வாதிகள் யூதர்கள்,பிற பிரிவு கிறித்தவர்கள், பிற மதத்தினர், மற்றும் சூனியக்காரர்கள்(அப்படி நம்பப் பட்டவர்களை) கூட்டம் கூட்டமாக பல நூற்றாண்டுகளாக கொன்று குவித்தார்கள். 

இந்த மத வன்முறைகளில் மிக கொடுமையானது ஸ்பானிஸ் மத வன்முறை(1478_1614).இதை பற்றிய ஒரு புத்தகம் அனைவரும் பதிவிறக்கம் செய்து படிக்கவும்,பகிர்ந்து கொள்ளவும்.

இன்னும் ஒரு புத்தகத்தில் சூனியக் காரர்களை எப்படி விசாரணை செய்வது ,தண்டிப்பது என்றெல்லாம் ஒரு செய்முறைன விளக்க்மே போட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் செய்வதற்கு இப்போது உள்ள கிறித்தவர்ம் எப்படி பொறுப்பாக முடியும் என்றும்,கிறித்தவ மதத்தின் கொள்கைகளுக்கு விரோதமாகவே இப்படி எல்லாம் நடந்தது என்று கூறும் நண்பர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்.
கொள்கையில் அன்பிருப்பதாக நீங்கள் நம்பும் ஒரு மத‌மே இப்படி மத அடிப்படைவாதிகளால் வழி நடத்தப்படும் வாய்ப்பு மதம் சார்ந்த அரசியலில் அதிகம் என்பதையே புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

இந்த புதகங்களை படித்து மதத்தின் மீதான‌ நம்பிக்கை எல்லை மீறும் போது 
மதவாதி மிருகமாக மாறுவான் என்பதை அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.



Thursday, January 13, 2011

மதங்கள் கூறும் கடவுளின் தன்மைகள் இருக்க முடியுமா?





இங்கு மதங்கள் என்பதை ஆபிரஹாமிய‌ மதங்களின் முக்கியமான பிரிவுகளை குறிப்பிடுகிறேன். ஆபிரஹாமிய மதங்கள் கடவுளை த்ன்மைகளை பற்றி என்ன கூறுகின்றஅன அது சாத்தியமான ஒன்றா என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.


கடவுளின் தன்மைகள்.


1.ஏகன்,தொடக்கமும் முடிவும் இல்லாதவர்,
2.எங்கும் இருப்பவர்,அனைத்தும் அறிந்தவர்.
3.இறைவன் ஆண் என்றே இம்மதத்தினர் கருதுகின்றன.
3.பிரபஞ்சம்,உயிரினங்கள்(மனிதன் உட்பட),தூதர்கள்  அனைத்தையும் படைத்தவர்
4.எதிரிறைவனையும் படைத்தவர்,அத‌னால் அவரை விட சக்தி வாய்ந்தவர்.
5.இறைவன்,எதிரிறைவன் இருவருக்கும் ஆதரிக்கும் தூதர்கள் கூட்டம் உண்டு


ஓரிறைக் கொள்கை அல்லது ஏகத்துவம் என்ற கொள்கை ஆபிரஹாமிய மதங்களில் மிக முக்கியமான் தத்துவமாகும். அதாவது ஒரே இறைவன் அவருக்கு இரத்த உறவுகளோ,சமமானவரோ கிடையாது என்பதாகும்.


கிறித்தவத்தில் மூவரில்(பிதா,குமார்ன்,ஆவி) ஏகன் என்பது மிகவும் குழப்பமான விஷயம். இதனை பிறகு பார்ப்போம்.இங்கு ஆபிராஹாமிய மதங்களின் பொதுவான ஏகத்துவ ஆராய்வோம்.


எப்படி ஏக இறைவன் என்று கூறுகிறார்கள்?


எங்கள் வேதங்களில் அவ்வாறு குறிப்பிட பட்டு உள்ளது.


சரி வேதங்களை எப்படி நம்புகிறீர்கள்?


அது ஏக இறைவனால் வழங்கப்பட்டு பாதுகாக்கப் படுவதால்.


அதாவது அவர்களிடம் உள்ள புத்தகத்திற்கு எவ்வளவு நம்பகத்தன்மை உள்ளதோ ஏகத்துவ கொள்கைக்கும் அவ்வளவு நம்பகத் தன்மை மட்டுமே இருக்கும்.


இது அவர்களின் நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் என்றே தோன்றுகிறது. நான் சொல்லுவது இதுதான் யாராவது  ஒரு இறைவன் மட்டுமே இருக்க முடியும் என்று ஏதாவது ஒரு வழியில் நிரூபிக்க முடியுமா? வேதத்தில் சொல்லி இருக்கிறது மற்றும் எனது நம்பிக்கை என்று கூறக்கூடாது.ஏன் கடவுளுக்கு குடும்பம் குழந்தை குட்டிகள் இருக்க கூடாது?


இறைவனை நம்புபவர்கள்,எதிரிறவனையும் நம்புகிறார்கள் அப்போது இது ஈரிறை கொள்கையாகிவிடாதா?


இறைவனை நம்புபவர்கள்,தூதர்களையும் நம்புகிறார்கள் அப்போது இது ஈரிறை குழுக் கொள்கையாகிவிடாதா?




மனித குலத்திற்கு தொடக்கம் முடிவு(நியாய தீர்ப்பு நாள்) என்று இருப்பதாக இம்மதத்தினர் நம்புகின்றனர். மனிதன் உலகை படைக்கும் முன்,அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? அப்போது எதிரிறைவன்,தூதர்கள்,பிரபஞ்சம் எதும் கிடையாது. இச்சூழ்நிலையில் ஒருவர் பல காலம் இருந்தார் என்பது நம்ப முடியுமா?.இதற்கு முன்பும் பல பிரபஞ்சங்கள்,எதிரிறைவன்கள் படைத்து திருவிளையாடல்கள் நடத்தி வருகின்றாரா?. இந்த உலகம்,மனிதர்கள் அவருக்கு ஒரு விளையாட்டு என்றால் மட்டுமே இக்கூற்று உண்மையாகும்.


6.மனிதர்கள் தன்னை வணங்குவதை விரும்புபவர்.
7.குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்பவர்.
8.பல வெளிப்பாடுகள்(வேதங்கள்) கொடுப்பவர்.சொல்வதைஅடிக்கடி  மாற்றுபவர்.
9.வணங்ககுபவர்களை நேசிப்பார்,வணங்காதவர்களை தண்டிப்பார்.
10.இறுதி நாளில் வணங்குபவர்களில் சில்ருக்கு மட்டும் சொர்க்கம் தந்து மற்ற அனைவருக்கும் நரகத்தின் தண்டனை கொடுக்க காத்திருக்கும் அன்பானவர்.


இந்த தன்மைகள் நமது தமிழக அரசியல் தலைவ்ர்களின் கொள்கைகளை போல் உள்ளது.


கட்சியினர் தன்னை புகழ்பாடுவதை விரும்பாத தலைவர் உண்டோ?

குடும்பத்தினர்,விசுவாசிகளிடம் மட்ட்டுமே தகவல்கள் பரிமாறப்படும்.


சூழ்நிலைக்கு தகுந்தபடி வாரிசுகள்,கொள்கைகள் மாறும்,கூட்டணி மாறும்,அதற்கான விளக்கங்களும் மாறும்.


தலைவருக்கும்,அவர் வாரிசுகளுக்கும் விசுவாசமாக  இருந்தால் பதவி இல்லையேல் கட்சியை விட்டு நீக்கி விடுவார். எதிர் கட்சினரின் மீது வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுவார்.
____________


முதலில் சொன்ன 5 தன்மைகள் குழப்பமான் விடுகதை,அடுத்த 5 தன்மைகள் எரிச்சலான உண்மை. 


___________


இந்த தன்மைகளை பற்றி கொஞ்சம் சிந்திப்போம்.

Tuesday, January 11, 2011

மதம் சார்ந்த சட்டங்கள் தேவையா?




தெரிந்த செய்தி

தற்போது பத்திரிகைகளிலும்,இணையப் பக்கங்களிலும் அதிகமாக  விவாதிக்கப்படும் ஒரு விஷயம் பாகிஸ்தானின்ப பஞ்சாப் மாநில ஆளுநர் திரு சல்மான் தஸ்ஹீர் அவருடைய மெய்க் காப்பாளாரால் கொல்லப்பட்ட செய்தி.திரு தஸீர் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்தவர்.

  ஒரு கிறித்தவ மதத்தை சேர்ந்த பெண் மற்ற(இஸ்லாமிய) பெண்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது இஸ்லாமியர்களின் இறைதூதராக கருதப்படும் திரு முகமதுவை அவமதிக்கும் வார்த்தைகளை கூறினார் என்பதால் , பாகிஸ்தானின் சட்டப்படி அவருக்கு மரண தண்டனை நீதி மன்றத்தால் விதிக்கப்பட்டது. அப்பெண்ணின் ஊரை சேர்ந்த ஒருவர் கூட இத்தணடனை தவ‌று என்று கூற முன் வ்ரவில்லை.

இத்தண்டனையை மறு பரிசீலனை செய்துவந்தார் திரு தஸீர். இது பாகிஸ்தானின் மத குருமார்களையும்னை ,அவரின் எதிரிகளையும் கோபப் படுத்தியது.இச்சூழ்நிலையில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் கோசர் மார்க்கெட் என்ற ஷாப்பிங்க் கம்ப்ளெக்ஸிற்கு, நேற்று சல்மான் தசீர் சென்றிருந்தார்.

அங்கு அவரது காரில் பாதுகாப்புக்கு கமாண்டோ மெய்பாதுகாவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் திடீரென சல்மானை நோக்கி சராமரியாக சுட்டதில், சம்பவ இடத்திலேயே தசீர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். 26 தடவைகள் அவர் சுடப்பட்டார்.

இவரை கொன்ற மெய்க் காப்பாளன் காதருக்கு மத அடிபடைவாதிகள் ஆதரவு தெரிவித்து விடுவிக்க  கோருகின்றனர்.

_______

நடந்த சூழ்நிலை.

பாகிஸ்தானின் அரசியல் கட்சிகள் மத அடிப்படை வாதிகளின் ஆதரவை பெற அங்கு ஷாரிய சட்டத்தை அமல் படுத்தினர். மத அடிப்படைவாதிகளுக்கு அரசியல், இராணுவத்தில் நல்ல செல்வாக்கு உண்டு.

மத சிறுபான்மையினரான,இந்துக்கள்,ஷியா,அஹமதியா மற்றும் கிறித்தவர்கள் இச்சட்டத்தினால் பாரபட்சமாக நடத்தப் படுகின்றனர்.

 மத அடிப்படைவாதிகள் எப்போதும்  ஜனநாயகத்தை விட இராணுவ ஆட்சிக்கே ஆதரவு அளித்து வந்துள்ளனர்.

அங்கு இந்த மாதிரி விஷயங்கள் மிக சாதாரணமான் ஒன்று.அந்த கிறித்தவ மத பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டதாலேயே வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.

ஆளுநரின் கொலையாலேயே இது பரபரப்பாக விவாதிக்கப் படுகிறது.
___________________

இந்தியாவில் எதிர் வினைகள்.


பாகிஸ்தானில் நடந்தது உலகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும் ,இந்தியாவிலும் ,குறிப்பாக தமிழ் இணையத்திலும் அதன் பாதிப்பு அதிகம்தான்.

இந்த கொலையை அனைவரும் கண்டித்தாலும்,தமிழ் இணையத்தில் இது மூன்றுவிதமாக விமர்சிக்கப் படுகிறது.

அ) மத சார்புள்ள சட்டங்களால்  அனைவரும் குறிப்பாக மத சிறுபானமையின‌ர்
பாதிக்கப்படுகின்றனர்.மத சட்டங்கள் இன்றைய நடைமுறைக்கு ஒத்துவராது, ஆகவே மத சார்புள்ள சட்டங்களே இருக்க கூடாது என்று கூறும் பதிவர்கள் உண்டு.

ஆ).இஸ்லாமியர்கள் எபோதும் இப்படிதான் அவர்கள் மத தீவிரவாதிகள்,மத்த்திற்காக எதுவும் செய்வார்கள் ஆகவே இந்தியாவின் மத சிறுபான்மையினரான அவர்கள் பெரும்பானமையினரின் சட்டத்திற்கு உட்பட்டே நடகக‌ வேண்டும் என்று கூறும் இந்துத்தவா சார்பு பதிவர்களும் உண்டு.


இ).மூன்றாவது பிரிவான் இஸ்லாமிய மத ஈடுபாடுள்ள பதிவர்களின் கருத்துதான் இங்கே வித்தியாசமானது. அவர்கள் கூறுவதை பட்டியல் இடுகிறேன்.

1. சல்மான் தஸீர் உண்மையான இஸ்லாமியர்

2.காதர் ஒரு மத விரோதி.

3.இஸ்லாமிய மத சட்டங்கள மனித நேய மிக்கவை .அவை தவறாக பயன் படுத்த படுகின்றன.ஆகவே ஷாரியா சட்டத்தை பற்றி யாரும் குறை கூறாதீர்கள்.
____________________________

அ) வில குறிப்பிட்டதுதான் எனது கருத்து ஆகவே மற்ற இரண்டு கருத்துகளையும் விவாதிப்போம்.

ஆ) வில குறிப்பிட்டது போல் இஸ்லாம் மத சட்டங்கள் மட்டுமே தவறு என்றால் மற்ற மத சட்டங்களும் இதே அளவிற்கே மனித விரோதக் கருத்துகளையே கூறுகின்றன.

நம் நாட்டின் நடந்த இரு முக்கியமான்  மதக்கொலைகள்.

1. தேசத்தந்தை மஹாத்மா காந்தி ,கோட்சேவினால் கொல்லப் பட்டார்.

2. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க் காப்பாளரால் கொல்லப்பட்டார்.

இந்த கொலையால் சீக்கியர்களுக்கு எதிராக பெரிய வன்முறை  வெறியாட்டமே நடந்தது. 

__________________

திரு சல்மான் தஸீரின் கொலைக்கும், திருமதி இந்திரா காந்தி அவர்களின் கொலைக்கும் உள்ள ஒறுமைகள்.

1.மத அடைபடை வாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் காரணமாகவே கொல்லப் பட்டனர்.

2. மெய்க் காப்பாளரால் கொல்லப் பட்டனர்.

மத க்கொலைகள் எந்த மதத்தினரால் செய்யப் பட்டாலும் தவறே.

இன்னும் நிறைய எழுதலாம். நான் சொல்லுவது இக்காலத்திற்கு மனித உரிமைகளை மதிக்க கூடிய,மத சார்பற்ற  சட்டங்கள்தான் உலகம் முழுவதும் வேண்டுமே தவிர ஏதோ ஒரு கால‌த்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில்,ஏதோ ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்காக எழுதப்பட்ட சட்டங்கள் இக்காலத்திற்கு பொருந்தாது.

மதம் என்பது நம்பிக்கை மட்டுமே அடிப்படையாக கொண்ட விஷயம்.ஆன்மீகத்தை தாண்டி மதம் அனைத்து  மனிதர்களின் வாழ்க்கைமுறையில் தலையிடும் போது எதிவினை ஆற்றியே ஆக வேண்டு.
__________________________________

இபோது மூன்றாம் கருத்துககு வருவோம்.நமது தமிழ் இஸ்லாமிய பதிவர்கள் பலர் இஸ்லாமிய சட்டமே உலகின் தலை சிறந்து என்ற நம்பிக்கை உடையவர்கள். பாகிஸ்தானில் சரியாக(?) அமல் படுத்தப் படவில்லை என்கிறார்கள்.

பல இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்கள் எப்போதும் உலகளாவிய  இஸ்லாமிய பொற்கால ஆட்சியில் மத சட்டங்களை எல்லாருக்கும் அமல் படுத்தும் பகல் கன்விலேயே உள்ளவர்கள்.

இந்த கொலை பற்றிய விவாதத்தால் இஸ்லாமிய ஷாரியா சட்டம் தவறானது,மனித விரோத போக்கு உரியது என்று கூறிவிடுவார்களோ என்று
எண்ணி காதர் இஸ்லாமின் விரோதி,திரு சல்மான் தஸீர்  உண்மையான முஸ்லிம் வீரர் என்கின்றனர்.


நாம் கேட்பதெல்லாம் ஒரே கேள்வி

ஷாரியா சட்டப்படி தேவ தூஷனத்திற்கு மரண தண்டனை என்பது உண்மையா?


இதனை இந்தியர்கள் இஸ்லாமிய சட்ட அனுகுமுறையின் படி கூறுகிறார்கள் என்றால்,பாகிஸ்தானின் மத வாதிகள் நேர் எதிடர்விதமாக அல்லவா கூறுகிறார்கள்.

யார் சரி? யார் தவறூ? இருவரையுமே ஒரே சட்ட அணுகுமறை எதிராக சிந்திக்க வைத்தால் அச்சட்டம் சரியானதா?இப்படி ஒரு குழப்பமான் சட்டத்தை வழங்கிய இறைவனின் தவறா?

திரு சலமான் அவர்களின் மத சட்டங்களுக்கு எதிரான வீர மரண‌த்தை மததியாகி என்றால் இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி.மத சட்டங்கள் இக்காலத்திற்கும்,அனைவருக்கும் பொருந்துமா என்பதை நடுநிலைமையோடு சிந்திப்போம்.

மத வி(அ)ஞ்ஞானிகள் : மௌரிஸ் புகைல் பகுதி 2




முன் பதிவில் திரு மௌரிஸ் புகைலின் வாழ்க்கை குறிப்பு அவர் எழுதிய புத்தகம்,உலத்தின் தோற்றம் பற்றிய அவர் கருத்து என்பதை பார்த்தோம்.இவரை குறித்து மத பிரச்சாரகர்கள் தலை சிறந்த விஞ்ஞானி என்றும் அவர் எப்படி இஸ்லாமை குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார் என்பதற்கு ஒரு சம்பவத்தை கூறுவார்கள்.

1981ஆம் ஆண்டு ஒரு எகிப்திய மன்னனின் மம்மி(பதப் படுத்தப் பட்ட உடல்) ப்ரான்ஸ் வந்தது.யூதர்கள் எகிப்தில் அடிமையாக இருந்த போது மூசா(மோசஸ்) என்னும் இறைத்தூதர் மூலமாக யூதர்களை எகிப்தில் இருந்து விடுவித்து அவர்களை கானான்(இபோதைய பாலஸ்தீனம்+இஸ்ரேல்) அழைத்து வந்ததாக தோரா(யூதர்களின் வேதம்),பைபிள் மற்றும் குரானில் கூறப்படுகிறது. அப்படி எகிப்தில் இருந்து வரும் போது எகிப்து மன்னர் ஃபிர் அவுன் படையோடு துர்த்தியதாகவும் ,செங்கடலை பிளந்து யூதர்களை மட்டும் பாதுகாத்த இறைவன், ஃபிர் அவுன் மற்றும் படையினரை மூழ்கடித்ததாக மூன்று புத்தகங்களும் கூறுகின்றன.
இதில் குரான் மட்டும் ஃபிர் அவுன் இறக்கும் முன் இறைவனிடம் மன்னிக்குமாறு வேண்டியதாகவும், அதற்கு அவர் உன் உடலை அத்தாட்சியாக பாதுகாப்பதாக உறுதி அளிக்கிறார்.
_________________________________________
“மேலும் இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்கவைத்தோம். அப்போது பிர் அவ்னும் அவனது படையினரும் கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார்கள். அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நானும் ஈமான் வைக்கிறேன். இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவனாக இருக்கிறேன் என்றும் கூறினான்.இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” குரான் 10: 90_92

*                       *                           *
இந்த உடலை ஆய்வு செய்யும் குழுவில் மௌரிஸ் இருந்தார் என்றும்,அது எப்படி இவ்வளவு நாட்கள் கெடாமல் இருந்தது என்று யோசித்து  அதாற்காக விடையை தோரா,பைபிள் மற்றும் குரானில் தேடியதாக கூறப்படுகிறது. குரானில் சொன்ன விளக்கம் சரி என்று பட்டதால் குரானை ஆய்வு செய்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார் என்று இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுகிறார்கள்

.*      *     *
நான் சொன்ன இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட கதை யுட்யூபில் கானொளியாக உள்ளது. பாருங்கள்.

*                          *                             *
இதற்கு முந்திய பதிவில் இவர் 1975 லேயே குரான் பற்றிய ஆய்வில் வித்தகராக ஆகிவிட்டாட் என்றும்,ஒரு புத்தகம் கூட எழுதிவிட்டார் என்று பார்த்தோம். ஆனால் புத்தகத்தில் அவர் 1975 ஆம் ஆண்டு எகிப்தில் மம்மியை பார்த்ததாக கூறுகிறார். அவர் புத்தகத்தின் 170_171 ஆம் பக்கங்களில் இருந்து
In June 1975, the Egyptian high authorities very kindly allowed me to examine theparts of the Pharaoh's body that had been covered until then. They also allowed me to was in over sixty years ago, it was abundantly clear that it haddeteriorated andfragments had disappeared. The mummified tissues had suffered greatly, at the handof man in some places and through the passage of time in others.This natural deterioration is easily explained by the changes in the conditions of  conservation from the time in the late Nineteenth century when it was discovered.
*                            *                                   *

கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்து அந்த உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதாக கூறுகிறார். கடவுள் நீருக்குள் மட்டும் தான் பாதுகாப்பார் என்று நினைக்க வேண்டியுள்ளது.
இவரப் பற்றி கூறப்படுக் கதைகளுக்கும் இவர் புத்தகத்தில் எழுதியவைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை பார்த்தோம்.  மீண்டும் அவர் புத்தகத்தில் கூறப்பட்ட குரானிய அறிவியல் தத்துவங்களை பார்ப்போம்.
_______________________

இரண்டாம் கண்டுபிடிப்பு
இந்த வசனங்கள் பிரபஞ்சத்தின் படைப்பை கூறுவதாக கூறுகிறார்.
41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.
41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
வானம் என்பதை பூமி நீங்கலான பிரபஞ்சம் என்று கொள்கிறார்கள்.
பூமி 2 நாட்கள்
மலைகள்+இத்தியாதி=4 நாட்கள்
வான‌ம 7 ஆக பிரித்தல் 2 நாட்கள்

மொத்தம் 8 நாட்கள்

முதலில் 6 நாட்கள் என்று சொன்னீர்களே என்றெல்லாம் யோசித்தால் அறிவியல் தெரியாது. இந்த ஒழுங்கு படுத்துதலும் இந்த நான்கு நாட்களுக்குள் அடக்கம் என்று (நாமாகவே)எண்ணி பார்த்தால் குழப்பம் நீங்கும்(?).

மௌரிஸ் கூறுகிறார் இந்த வசனங்களீன் படி பூமி,அதன் மீது மலைகள்,வானம் மற்றும் ஒழுங்கு படுத்துதல் என்று வருகிறது. இங்கே வரிசையாக நிகழ்வுகள் நடந்தது என்று என்று பார்த்தால் அறிவியல் தெரியாது.
வானம் புகையாக இருந்தது என்றால் பிரபஞ்ச பெருவெடிப்பு ஏற்பட்ட பின் வாயுக்களாக் இருந்த நிலை என்று கொண்டால் அறிவியல் தெரியும். பிரபஞ்சத்தில் பூமியும் தானே அடக்கம் அது படத்து மலைகளை கூட நட்டு வைத்தாயிற்று என்று சொன்னால் உங்களுக்கு அறிவியலில் நாட்டம் இல்லையென்று அர்த்தம்.அறிவியல் கூறும் வசன‌த்தின் ஒத்து வரும்  பகுதியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

இரண்டு வசன‌ங்கள்(2:29,20:4 மட்டும் பூமி பிறகு வானம் என்று குறிப்பிடுகின்றன.
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்
20:4. பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.
மௌரிஸ் கூறுகிறார்

இதுஒன்றும் பிரச்சினை இல்லை ஏனெனில் இரண்டு இடத்தில்தான் பூமி பின் வானம் என்று கூறுகிறார்கள்.  ஆனால் 9 இடங்களில் வானம் பிறகு பூமி என்று குரான் கூறுகிறது 9>2 ஆகவே குரான் சரியா இறைவனின் வார்த்தையாகும்.1) 7:54,2)10:3,3) 11:7,4) 25:59,5) 32:4,6) 50:38,7) 57:4,8)79:27_33,9) 91: 5_ 10

அவர் கூறுவதையே அப்படியே தருகிறேன்.


(page 99)
In the two passages from the Qur'an quoted above, reference was made in one of theverses to the Creation of the Heavens and the Earth (sura 7, verse 54) , and elsewhereto the Creation of the Earth and the Heavens (sura 41, verses 9 to 12). The Qur'andoes not therefore appear to lay down a sequence for the Creation of the Heavens andthe Earth.The number of verses in which the Earth is mentioned first is quite small, e.g. sura 2,verse 29 and sura 20, verse 4, where a reference is made to "Him Who created theearth and the high heavens". The number of verses where the Heavens are mentionedbefore the Earth is, on the other hand, much larger: (sura 7, verse 54; sura 10, verse 3;sura 11, verse 7; sura 25, verse 59; sura 32, verse 4; sura 50, verse 38; sura 57, verse4; sura 79, verses 27 to 33; sura 91, verses 5 to 10).In actual fact, apart from sura 79, there is not a single passage in the Qur'an that laysdown a definite sequence; a simple coordinating conjunction (wa ) meaning 'and' linkstwo terms, or the word tumma which, as has been seen in the above passage, canindicate either a simple juxtaposition or a sequence.There appears to me to be only one passage in the Qur'an where a definite sequence isplainly established between different events in the Creation.

*                                        **                                           *                                   *
பெரு வெடிப்புகொள்கை
குரான் 21:30 பெரு வெடிப்பு கொள்கை பற்றி கூறுகிறது என்கிறார் மௌரிஸ் புகைல்.
21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
காஃபிர்கள் பார்க்கவில்லையா என்றால் என்ன அர்த்தம்?. தூரத்தில் வானமும்(மேகம்) பூமியும் சேர்வது போல் தெரியும்,இது கடல் கரையில் நின்று பார்த்தால் நன்றாகவே தெரியும். குராஅன் பூமி தடடையாதாகவே கருதுகிறது மலைகள் அதற்கு ஊன்றுகோல்(பேப்பர் வெயிட்), வானம் அதற்கு மூடி என்றே குரான் கருதுகிறது.

தூரத்தில் வானமும் பூமியும் ஒன்று சேர்வது போல் பூமியும் வானமும் ஒன்று சேர்ந்து இருந்த்து என்று நம்புங்கள் என்றே கூறுகிறது.வானம் பூமிக்கி கூரை(மூடி) என்பதை கீழ்க்காணும் வசங்கள் உறுதி செய்கின்றன.
22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

50:7. மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்..

55:10. இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
வானமும் பூமியும் ஒன்றாக இணைந்து இருந்தது,பிறகு இறைவனால் பிரிக்கப் பட்டது. இந்த இணைந்து இருந்தது என்று எப்போது கூறுவோம். இரு வேறு பட்ட பொருள்கள் ஒன்றாக சேர்த்தால் கூறலாம். பிரபஞ்சத்தில் அளவில் பூமியின் அள்வு மிக சிறியது என்பது குரான் மற்றும் மௌரிஸ் கணக்கிலேயே எடுத்துக் கொள்வது இல்லை. பூமிக்காகவே வானம் என்பதையே குரான் கூறுகிறது.
வானம் புகையாக இருக்கும் போதே பூமியும் அதன் மீது மலைகளுக் இருப்பதாக 41:11 கூறுகிரது.


41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
வானம் புகை போல் ஆகும் என்று எதிர் காலத்தில் கூறுகிற‌து.
44:10. ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
பெரு வெடிப்பு கொள்கையை 21:30 கூறுவது போல் தோன்றவில்லை.
*                           *

குரானின் வானவியல்

இந்த வசனம் கோள்களை பற்றி கூறுவதாக மௌரிஸ் கூறுகிறார்.
12:4. யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது

நட்சத்திரம்=கோள்கள்கோள்களின் எண்ணிக்கை 11(ஆகும் என்று எதிர்பார்க்கிறார்கள்)
குரானின் சார்பியல் கொள்கை
இந்த வசனம் சார்பியல் கொள்கை பற்றி கூறுவதக கூறுகிறார் மௌரிஸ்.
51:47. மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
51:48. இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.

விரிப்பதில் திறமையானவர் இறைவன் என்று கூறுவதால் விரித்து விட்டார் என்று ஆகிவிடுமா.
இந்த ஒரு வசனம் தவிர விரிந்து செல்லும் பிரபஞ்சம் பற்றி வசனம் இல்லை.
வானம் என்பது பிர பஞ்சமா? வாத்தில் இருந்து மழை பெய்ய செய்கிறார் இறைவன் என்றும் கூறுகிறார்கள்.
எது எப்படியோ விரிக்கும் ஆற்றலுடையவர் அல்லா,பூமியை விரித்தார்,வானத்தை விரித்தாரா இல்லையா என்பதை இவ்வசனம் கூறவில்லை.


**
இன்னும் இவர் நோவா(நூஹ்)ன் ஜல பிரளயம் அவர் வாழ்ந்த இடத்தில் மட்டும் ஏற்பட்டது.அந்த இடத்தில் வாழ்ந்த மனிதர்கள் மிருகங்கள் மட்டுமே அந்த கப்பலில் ஏறி தப்பினார்கள் என்று கூறுகிறார்.
இவருடைய சில கருத்துகளை அவர் புத்தகத்தில் இருந்தேஎ பர்ர்த்தோம். இவர் கூறிய விவரங்களை இவ்வாறு தொகுத்து கூறிவிடலாம்.


இவர் பற்றிய விவிவரங்கள் அனைத்தும் ஆய்வு செய்து கூறியது அல்ல.குரானின் அரபி வார்த்தைகளுக்கு பொருள் மாற்றி கூறியதுதான் என்பதே.
மருத்துவரான இவர் மருத்துவரீதியாக ஏதேனும் ஆரய்ச்சி செய்யவில்லையா குரானை வைத்து என்றால் அதுவும் இல்லை.

ஏற்கெனவே அரபி புலமை பெற்றவர்களை வைத்து இந்த வசங்களை பொருள் மாற்றி கூற முடியும் என்று கண்டு அவர்கள் கூறினால் மதிப்பு இருக்காது என்று உணர்ந்து ஒரு ஐரோப்பிய மருத்துவரை கொண்டு வெளியிட செய்து விட்டார்கள் என்பதே நமது கருத்து ஆகும்.
மௌரிஸ் புகைல் பற்றி முடிந்தது.இன்னொரு குரானிய வி(அ)ஞ்ஞானி கெய்த் மூர் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.